HOME ARTICLES HISTORY MARTYRS PHOTOS LINKS ARCHIVES CONTACT  

 

 

     ARCHIVES

 

31.05.2009, 10.15 PM

 

முல்லைத்தீவில் பொலிஸ் பயிற்சிக்கல்லூரி.

முல்லைத்தீவில் 2000ம் ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் பயிற்சிக் கால்லூரி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார். இதற்கு காணி ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை பொலிஸ் உத்தியோகத்தில் இணைக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக 1000ம் தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இடம் பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டதும் இந்த சேவைக்கு இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள போதும் தேவை ஏற்படின் அதற்கு முன்னதாக அவர்களின் பின்னணி குறித்து ஆராயப்பட்டு ஆட்சேர்ப்பு இடம்பெறும் என குறிப்பட்டுள்ளார்.

31.05.2009, 09.50 PM

 

மேலும் ஒரு நிவாரணக்கிராம் அமைக்கப்படவுள்ளது

இடம்பெயர்ந்த மக்களுக்கென மேலும் ஒரு நிவாரண கிராமத்தை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கிராமம் அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்படவுள்ள 6வது நிவாரண கிராமமாகும். வலயம் 5 என பெயரிடப்பட்டுள்ள இந்த கிராமத்தில் 2500 பேர்வரையில் தங்கவைக்க முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

31.05.2009, 09.30 PM

 

நாவலப்பிட்டியில் இன்று நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது

நாவலப்பிட்டி பெயிலி வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட நீதிமன்ற கட்டடம் ஒன்று இன்று (31.05.2009) பிரதம நீதியரசர் சரத் என்சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து உரையாற்றிய நீதியரசர் அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமையானது அக்கபூர்வமான ஒரு செயலாகும், பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு மனிதாபிமானமான உதவிகளை மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும். மேலும் இந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதே இன்றைய முக்கிய தேவையாகும். நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டதாக அரசியல் தீர்வெனான்றும் முன்வைக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, நீதி சட்ட மறுசீரமைப்பு பதில் அமைச்சர் வி. புத்திரசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

31.05.2009, 09.15 PM

 

புலிகளின் வலைப்பின்னல்கள் அழிக்கப்படவேண்டும்

புலிகளுக்கு ஆதரவினை வழங்கும் சர்வதேச வலைப்பின்னலை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் உதவிகளை வழங்கவேண்டும் என இலங்கை அரசு கேட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெறும் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட கூட்;டத்தொடரில் உரையாற்றும் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். புலிகள் இயக்கம் சர்வதேச ரீதியில் முழுமையாக தேற்கடிக்கப்படவில்லை. புலிகள் இயக்கத்தை மீள கட்டியெழுப்பும் நோக்குடன் பல நாடுகளில் மறைமுகமாக அவை செயற்படுகின்றன என அவர் அங்கு கூறினார்.

 

31.05.2009, 03.30 PM

 

இடம்பெயர்ந்த மக்களுக்கு நீர்வினியோகத் திட்டம்

இடம்பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 250,000 இற்கும் அதிகமான மக்களுக்கு நீர் வினியோகத் திட்டம் ஒன்று இன்று (31.05.2009) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்துள்ளார். 400 மில்லியன் ரூபா செலவில் யுனிசெவ் நிறுவனத்துடன் இணைந்து மீள்குடியேற்ற மற்றும் அனர்த நிவாரண சேவைகள் அமைச்சும் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது

இதற்கென மல்வத்துஓயா ஆற்றில் இருந்து நீர் பெறப்படுகிறது. இந்த ஆறு முகாமில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றுவதாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை 1 மாத காலத்திற்குள் வோட்டபோட் நிறுவனம் பூர்த்தி செய்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாள் ஒன்றிற்கு 50 இலட்சம் லீட்டர் நீர் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது. இவை இரவு பகல் எந்த நேரத்திலும் மக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த மக்களுக்கு நீர் வழங்க 39 பவுசர்கள் பயன்படுத்தப்ட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

31.05.2009, 03.00 PM

 

தேர்தலில் சில தமிழ் கட்சிகள் தனித்து போட்டியிட முடிவு

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள யாழ் மாநகரசபை, மற்றும் வவுனியா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் போட்டியிட வேண்டும் என்ற அரசாங்கத்தின் வேண்டுகோளை சில தமிழ் கட்சிகள் நிராகரித்துள்ளன. இதன் அடிப்படையில் தமிழர் விடுதலை கூட்டணி, புளொட், ஈ பி ஆர் எல் எப் பத்மநாபா ஆகிய கட்சிகளின் கூட்டான ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி, மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகளே இந்த அழைப்பை நிராகரித்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் தலைவரான வி. அனந்த சங்கரி கருத்து தெரிவிக்கும் போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் பல நெருக்கடடிகளை சந்தித்துள்ளதுடன் உடல், உளரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அவர்கள் தமது உறவுகளுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். எனவே தற்போதைய சூழ்நிலையில் தேர்தல்கள் நடத்த சாத்தியம் இல்லாதபோதும் குறித்த பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டால் அந்த தேர்தலில் போட்டியிட தமது கட்சி தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

31.05.2009, 02.40 PM

 

தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைக்கப்படுவர்

வடமாகாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைக்கப்போவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடமாகணத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாகவும் இதற்கு இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்குமாகாணம் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து அந்த மாகாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து கிழக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது போன்றே இந்த நடவடிக்கையும் என குறிப்பிட்டுள்ளார். இரண்டு இலட்சமாக உள்ள இராணுவத்தை முன்று இலட்சமாக அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

31.05.2009, 02.30 PM

 

மன்னாரில் எண்ணை அகழ்வு இடம்பெறவுள்ளது

மன்னார் கடல்பகுதியின் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் எதிர்வரும் 2010ம் ஆண்டு எண்ணை அகழ்வுகள் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேன் இந்தியா, கெயர் லங்கா ஆகிய இந்திய இலங்கை நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக குறித்த நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கேன் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்துடன் ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

31.05.2009, 09.15 AM

 

தேசிய உணவு உற்பத்தி வடபகுதிக்கும் விஸ்தரிப்பு

தேசிய உணவு உற்பத்தி நடவடிக்கைகளை வடபகுதிக்கும் விஸ்தரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு;ள்ளதாக கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கான வேலைத்திட்டங்கள் விரைவில் நடைபெறவுள்ளது. வடபகுதியில் உள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களின் விவசாய நடவடிக்கைக்கு தேவையானவற்றை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வடக்கில் பெரும்பாலான விவசாயிகள் உள்ளனர். எனவே அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த திட்டம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

31.05.2009, 08.50 AM

 

தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் திட்டம் ஒன்று அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இதன் அடிப்படையில் நாடுமுழுவதும் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு 860 பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட போட்டி பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தேசிய பாடசாலைகளுக்கு 1500 பட்டதாரி ஆசிரியர்களை வழங்குவது என்ற திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அலரிமாளிகையில் நாளை (01.06.2009) நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த ஆசிரியர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழங்கவுள்ளார்.

31.05.2009, 08.30 AM

 

ராஜீவ்காந்தியை கொலைசெய்தது புலிகளின் தவறு

புலிகள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தமையானது மிகப்பெரிய வரலாற்று குற்றம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் என் ரிவி தொலைக்காட்சி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் பொது அவர் இதனை கூறியுள்ளார். இந்த விடயம் இந்தியாவிற்கு புலிகள் மீது இருந்த அனுதாபத்தை இல்லாமல் செய்துள்ளது. இலங்கையில் தமிழர் பிரச்சனை ஆரம்பிக்கும் போது இந்தியா புலிகள் மீதும் அனுதாபம் கொண்டிருந்தது. அனைவராலும் நேசிக்கப்பட்ட இந்திய தலைவர் ஒருவரை கொலைசெய்து இந்தியாவின் சக்தியை புலிகள் குறைவாக மதிப்பிட்டுள்ளனர். இது புலிகளின் அடுத்த தவறு.

புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இறுதி கட்ட நடவடிக்கையின் போது இந்தியா இலங்கை மீது அழுத்தங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
 

30.05.2009, 09.30 PM

 

இடம்பெயர்ந்த மக்களுக்கு விசேட அடையாள அட்டை

இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்ப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் ஜனாதிபதி செயலகமும் பொலிஸ் திணைக்களமும் இணைந்து அடையாள அட்டைக்குரியவரின் விரல் அடையாளங்களுடன் கூடிய அடையாளஅட்டைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றம் மீள் குடியேற்ற அமைச்சின் செயலர் யு எல் எம் ஹால்தீன் தெரிவித்துள்ளார். முகாம்களில் உள்ள 10 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வினியோகிக்கப்படவுள்ளது. இவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

முகாம்களில் 2 இலட்சத்தி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருக்கின்றனர். இவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படும் போதும், மற்றும் வங்கி கொடுக்கல் வாங்கல்களுக்கும், இந்த அடையாள அட்டை மிகவும் உபயோகப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

30.05.2009, 09.15 PM

 

இலங்கைக்கு செல்லவிரும்புபவர்களின் விபரங்கள் சேகரிப்பு

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இலங்கையில் இந்து இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற பொதுமக்களில் அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல விரும்புபவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதனை தமிழக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். இவ்வாறு அகதிகளாக சென்ற மக்கள் தமிழகத்தின் பல முகாம்களில் தங்கவைக்கப்பட்டுளனர். இவர்கள் இலங்கையில் தமக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் பட்சத்தில் அங்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

30.05.2009, 08.30 PM

 

மக்கள் கொல்லப்பட்டமை குறித்து விசாரணைநடத்த வேண்டும்

இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் போது பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் யுத்தம் முடிவுறும் நேரத்திலேயே அதகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அரசு, புலிகள் என இரு தரப்பினரிலும் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இது சம்மந்தமாக விசாரணைகளை நத்துவது மிகவும் அவசியமான விடயமாகும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30.05.2009, 08.00 PM

 

தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும்

இலங்கைக்கு ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல்கள் நீங்கியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். எனவே இனிவரும் காலங்களில் இலங்கை அரசு நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்லவேண்டும். இலங்கை தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வொன்றை வழங்குவதே இலங்கை பிரச்சனைக்கு சரியான தீர்வாக அமையும். இதனை நடமுறைப்படுத்த இலங்கை அரசிற்கு இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

30.05.2009, 04.30 PM

 

அம்பாறையின் சில பகுதிகளில் தேடுதல்

அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (30.05.2009) அதிகாலை தொடக்கம் பகல்வரை விசேடஅதிரடிப் படையினரும் பொலிசாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் சொறிக்கல்முனை, வீரமுனை, ஆகிய பகுதிகளில் இந்த தேடுல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் புலிகள் ஊடுருவி உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது வீடுகள் சோதனையிடப்பட்டதோடு ஆள்அடையாளங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இங்கு எவரும் கைது செய்யப்படவில்லை.

30.05.2009, 04.10 PM

 

முல்லைத்தீவு மோதலில் 20ஆயிரம் பொதுமக்கள் பலி

முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது 20 ஆயிரத்தித்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக லண்டன் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முல்லைத்தீவை கைப்பற்றுவதற்கு படையினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனார். இந்த பகுதியில் 1 லட்சித்திற்கு மேலான மக்கள் தங்கியிருந்ததாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகள் மீது கனரக ஆயுதங்களை கொண்டு படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் அமைப்பின் ஆணையாளர் புலிகள் போர்களத்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்களை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது குறைந்தது 1 இலட்சம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளததகாக அந்த பத்திரிகை மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி குறித்து இலங்கை அரசு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

30.05.2009, 03.40 PM

 

யாழ் தேர்தலில் 100417 பேர் வாக்களிக்க தகுதி

யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றின் உள்ளுராட்சிசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதன் அடிப்படையில் யாழ் மாநகரசபையில் வாக்களிப்பதற்கு 10,0417 வாக்களர்கள் தகுதி பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் குகநாதன் தெரிவித்துள்ளார். இங்கு 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 67 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. யாழ் மாவட்டத்திற்க வெளியே உள்ள யாழ் மாவட்ட மக்கள் கொத்தணி வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்குகளை பதிவு செய்யமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

30.05.2009, 03.20 PM

 

புலிகளின் செயற்பாடுகளை மலேசியா கட்டுப்படுத்த வேண்டும்

புலிகளின் செயற்பாடுகளை மலேசிய அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம மலேசிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெறவுள்ள விசேட கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள சென்ற ரோகித போகொல்லாகம மலேசிய பாதுகாப்பு அமைச்சர் அகமத் சகிப் கீனை சந்தித்த பேசியபோது இதனை தெரிவித்துள்ளார். இதன் போது புலிகளின் செயற்பாடுகள் குறித்து மலேசிய பாதுகாப்பு அமைச்சருக்கு போகொல்லாக விரிவாக விளக்கியுள்ளார்.

30.05.2009, 03.05 PM

 

அம்பாறையில் புலி உறுப்பினர் சரண்

அம்பாறை அக்கரைப்பற்று பகுதியில் நேற்று (29.05.2009 )மாலை புலி உறுப்பினர் ஒருவர் படையினரிடம் சரணடைந்துள்ளார். இவர் ஆலையடி வேம்பைச் சேர்ந்த சோமசுந்தரம் சசிதரன் (கௌரிகாந்த்) (வயது 25) என தெரிவி;க்கப்படுகிறது. இவர் அக்கரை பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வை;க்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

30.05.2009, 09.30 AM

 

இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கு விசேட திட்டம்

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பகுதியில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் வாக்களிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பலர் புத்தளத்தில் உள்ளனர். இவர்கள் விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கு சம்மந்தப்பட்ட கிராம சேவகர்கள் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்களை யூன் மாதம் 4 திகதி தொடக்கம் 11ம் திகதிவரை மேற்கொள்ள முடியும் என சுமணசிறி குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகர சபைக்கு 23 உறுப்பினர்களும், வவுனியா நகரசபைக்கு 11 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

30.05.2009, 09.10 AM

 

முகாம்களில் உள்ள முதியவர்கள் வெளியேற அனுமதி.

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் பெயர் விபரங்களை முகாம்களுக்கு வெளியே பார்வைக்கு வைக்க திட்டமிட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் பி. எஸ். எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் முகாம்களுக்கு வெளியே இருக்கும் முதியவர்களின் உறவினர்கள் அவர்களை அழைத்து செல்வதற்கு இலகுவாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளியே உள்ள உறவினர்கள் தமது விண்ணப்பத்தை அரச செயலகத்தின் ஊடக சமர்ப்பித்து முதியவர்களை அழைத்து செல்ல முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நலன்புரி நிலையங்களில் உள்ள முதியவர்களை வெளியேற அனுமதிப்பது தொடர்பாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியயேற்ற அமைச்சும் வவுனியா அரச செயலகமும் கூடி ஆராய்ந்துள்ளன. இதனை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

30.05.2009, 08.55 AM

 

யாழ்தேவி ரயில் தாண்டிக்குளம் வரை செல்லவுள்ளது

யாழ்தேவி ரயில் எதிர்வரும் யூன் மாதம் 6ம் திகதி தாண்டிக்குளம் வரை செல்லவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து தாண்டிக்குளம் வரையான ரயில் ஓடுபாதையும் சமிக்ஞை கட்டமைப்புக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயணமானது 2 தசாப்த காலத்தின் பின்னர் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தினத்தில் ஓமந்தை புகையிரத நிலைய புனர்நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வடக்கின் தோழன் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுவரும் யாழ்ப்பாணத்திற்கான 159 கிலோமீட்டர் நீளமான ராயில் பாதை எதிர்வரும் வருடத்தில் பூர்தியடையவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். இதந்த வேலைத்திட்டத்திற்கு 14 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

30.05.2009, 08.25 AM

 

உள்ளுராட்சித்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடும்

யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் சென்று வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார். அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தலிலும் மட்டக்களப்பு உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

 

30.05.2009, 08.05 AM

 

இந்தியாவிற்கு மகிந்த ராசபக்ச  நன்றி தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கிய இந்தியாவி;ற்கு ஜனாதிபதி மகிந்த ராசபக்ச நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வெளிவரும் த வீக் என்ற ஆங்கில வாரப்பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையில் 3 தசாப்த காலங்களுக்கு மேலாக இடம்பெற்றுவந்த மோதல்கள் நிறைவடைந்துள்ளது. எனவே பலகாலங்களாக இருந்துவரும் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தீர்வானது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13வது திருத்தச் சட்டத்தின்படி அமையவுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

29.05.2009, 09.55 PM

 

தயா மாஸ்டர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளரான தயாமாஸ்டர் இன்று (29.05.2009) காலை புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். கொழும்பின் பிரதான நீதவான் நிஷாந்த கப்புஆராச்சியின் வாசஸ் தலத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இவரிடம் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

29.05.2009, 09.30 PM

 

காயமடைந்த 47பேர் வைத்தியசாலையில் மரணம்

வன்னி மோதல்களின் போது காயமடைந்த பொதுமக்கள் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்களில் இதுவரை 47 பேர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் அடிப்படையில்

13.01.2009 – 15 பேர் மரணமடைந்துள்ளனர் (சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை)
19.02.2009 – ஒருவர் மரணமடைந்துள்ளார் (சடலம் அடையாளம் காணப்படவில்லை)
17.04.2009 – கெ. தேவன், கெ. மதியாபரணம், வேலாஜி ஆகிய 3பேர் மரணமடைந்துள்ளனர்
19.04.2009 - இ. கந்தையா என்பவர் மரணமடைந்துள்ளார்.
04.05.2009 – திருஞானசெல்வம் என்பவர் மரணமடைந்துள்ளார்
07.05.2009 – அருளானந்தம் சிவராஜா என்பவர் மரணமடைந்துள்ளார்.
14.05.2009 – மு. கந்தையா என்பவர் மரணமடைந்துள்ளார்.
18.05.2009 – சின்னையா மாயக்கிருஸ்னன், யசோதரா மூர்த்தியம், சிவராஜ் பாபு, சின்னத்தம்பி தவச்செல்வி, நாiகாய ஜெயராசா, ஆகிய 5 பேர் மரணமடைந்துள்ளனர்.

22.05.2009 – கெ. இராயப்பு, மனோன்மன், கோபிதாசன், உட்பட 5 பேர் மரணடைந்துள்ளனர். (2 சடலம் அடையாளம் காணப்படவில்லை)
23.05.2009 – ஆர். கமலராஜ், கனகம்மா, கெ. ராஜேஸ்வரி, செல்வரட்ணம், பிரித்திகா, எஸ். செல்வராணி, மெய்யாத்தா, சீமான், ஆகிய 8 பேர் மரணமடைந்துள்ளனர்.

27.05.2009 – ஆறுமுகம், சிவக்கொழுந்து ரெஜினா, இராமநாதன், குமாரசாமி, சிரிஸ்கந்தராஜா கலைலட்சுமி, கந்தப்பு செல்லம்மா, தில்லையம்பாள் இராஜேந்திரன், ஆகிய 7 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்த சடலங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் மன்னார் வைத்தியசாலையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டு பின் அரச செலவில் மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் தெரிவித்துள்ளார்.

29.05.2009. 09.00 PM

 

பணம்பெற்ற ஊடகவியலாளர் தொடர்பில் விசாரணை

புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்ட தென்பகுதி ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இயங்கிவரும் இந்த ஊடகங்கள் மாதாந்தம் புலிகளிடம் பணம் பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கள ஊடகவியலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல சாட்சியங்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களை படையினரிடம் சரணடைந்த தயா மாஸ்டரும் கூறியுள்ளார்.

 

29.05.2009, 05.20 PM

 

அம்பாறையின் பல பகுதிகளில் தேடுதல்

அம்பாறையின் பலபகுதிகளில் இன்று (29.05.2009) காலை 6 மணிதொடக்கம் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் நற்பிட்டிமுனை, கல்முனை, சம்மாந்துறை சுற்றுவட்டப்பகுதி, மற்றும் மட்டக்களப்பின் எல்லை கிராமங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் சிறு சிறு குழுக்களாகவுள்ள புலிகளை தேடி அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை அடுத்து புலிகள் குறித்த பகுதிக்குள் ஊடுருவுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

29.05.2009, 05.16 PM

 

கே. பியின் இலங்கைக்கான உள்ளுர் முகவர் கைது

புலிகள் இயக்கத்தின் சர்வதேச இணைப்பாளர் கே.பி எனப்படும் குமாரன் பத்மநாதனின் இலங்கைக்கான உள்ளுர் தொடர்பாளர் உருமாறன்; இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி முகாமில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவர் தொடர்பாக முகாமில் உள்ள பொதுமக்கள் படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்கு கொடுத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கே. பியின் முன்ணணி முகவராக செயற்பட்டு வந்துள்ளார். புலிகளுக்கு கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள், மற்றும் இராணுவ தளபாடங்களுக்கு கே. பியுடன் இரகசிய தொடர்புகளை கொண்டிருந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகள் சிலவற்றை பேசக்கூடிய இவர் 19 தடவை கட்டுநாயக்கா விமானநிலையத்தினூடாக பயணம் செய்துள்ளார். சிலதடவை சட்டவிரோதமாக படகுகளில் நாட்டிற்குள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

29.05.2009, 03.45 PM

 

நலன்புரி நிலையங்களுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்குள் தொண்டு நிறுவனங்களின் வாகனங்கள் செல்வதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மெரிஒகாமே தெரிவித்துள்ளார். முன்பு இந்த முகாம்களுக்குள் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே இது குறித்து இலங்கை அரசுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டது. பெரிய முகாம்களாகையால் அங்கு வாகனங்கள் இன்றி மக்களுக்கு சேவையாற்றுவது கடினம் என இலங்கை அரசிற்கு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வாகனங்கள் தொடரணிகயா செல்லல் மற்றும் நிறுவன கொடிகளை பயன்படுத்தல் போன்றவை இல்லாது வாகனங்கள் முகாமிற்குள் செல்வதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

29.05.2009, 03.20 PM

 

வாகரையில் 3 புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரண்

மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் நேற்று (28.09.2009) 3 புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் சிறு சிறு குழுக்களாக உள்ள புலி உறுப்பினர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினரிடம் இவர்கள் தமது ஆயுதங்களுடன் தஞ்சமடைந்துள்ளனர்.

கொண்டையன் கேணியை சேர்ந்த கணபதிப்பிள்ளை அமரசிங்கம் (புகளேந்தி), வாகனேரியை சேர்ந்த பரமக்குட்டி சாமுவேல் (சரண்), முள்ளிவெட்டுவானைச் சேர்ந்த செல்லப்பா சிவானந்தன் (ராகுலன்) என தெரிவிக்கப்படுகிறது. இவர்களிடம் இருந்து ரி56 துப்பாக்கிகள் 03, கைக்குண்டுகள் 03, கிளைமோர் 01, வெடிக்கவைக்கும் கருவிகள் 03, டோர்ச் லைட் 01, என்பன மீட்கப்பட்டுள்ளது.

29.05.2009, 03.00 PM

 

மட்டக்களப்பில் ஒருவர் காணாமல் போயுள்ளார்

மட்டக்களப்பு ஜயங்கேணியில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவிலும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் ஐயங்கேணியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இராமலிங்கம் பத்மஸ்ரீ என தெரிவிக்கப்படுகிறது. இவர் கடந்த 23ம் திகதி இரவு 7.30 மணியளவில் சகோதரியின் வீட்டிற்கு செல்வதாககூறிச் சென்றவர் இதுவரை வீடுதிரும்பவில்லை என இவரது மனைவியான பத்மஸ்ரீ ஜெயதீபா தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

 

29.05.2009, 08.30 AM

 

நாட்டை அபிவிருத்தி செய்ய  ஒன்று படவேண்டும்.

அனைவரும் ஒரு கொடியின்கிழ் ஒன்றுபடுவதற்கான வாய்ப்பு நாட்டிற்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (28.05.2009) இடம்பெற்ற மறைந்த அமைச்சர் ரெஜி ரணதுங்கவின் முதல்ஆண்டு நினைவுநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். எனவே அனைவரும் நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதற்கு அணிதிரள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. நாடு இரண்டாக துண்டாடப்படும் அபாயம் தற்பொழுது நீங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

29.05.2009, 08.00 AM

 

தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

யாழ் மாநகரசபை, மற்றும் வவுனியா நகரசபை ஆகிவற்றில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், பத்மநாபா ஈ பி ஆர் எல் எப் அகிய 3 கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கூட்டணியின் தலைவர் வி, ஆனந்தசங்கரி இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் யாழ்ப்பாண மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகியவற்றிற்கான உள்ளுராட்சி தேர்தலுக்கான அறிவிப்பை அரசாங்கம் விடுத்துள்ளது. ஜனநாயக நாட்டில் தேர்தல்கள் மக்களின் தெரிவு என்பன முக்கியம் வாய்ந்தவை. இருப்பினும் எமது மக்களின் ஒரு பகுதியினர் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளனர். இவர்கள் முகாம்களிலும் வைத்தியசாலையிலும் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வழ்கின்றனர். இவற்றை கருத்தில் கொண்டு சிறிது காலமேனும் தேர்தலை ஒத்தி வைப்பது அவசியம் என கருதுகின்றோம். வடக்கில் ஜனநாயகம் மிளிரவேண்டும். எனினும் யுத்தம் முடிவடைந்து சிறுது நாட்களில் தேர்தல் நடத்துவது பொருத்தமற்றது. இதனால் தேர்தலை ஒத்திவைக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.

 

28.05.2009, 11.00 PM

 

பிரபாகரன் கொல்லப்பட்டமை மரபணு பரிசோதனை மூலம்

நிரூபிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவிப்பு

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டமை மரபணு பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இன்று (28.05.2009) தெரிவித்துள்ளார். பிரபாகரனினதும் அவருடைய மகன் சாள்ஸ் அன்ரனியினதும் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது இது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இராணுவ வைத்திய பிரிவின் விசேட குழுவும், தடய அறிவியல் துறை அதிகாரிகளும் பரிசோதனையை நடத்தி இதனை உறுதி செய்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

28.05.2009, 10.40 PM

 

பிரபாகரனின் பெற்றோர் படையினரால் மீட்பு

பிரபாகரனின் தந்தையான திருவேங்கடம் வேலுப்பிள்ளை (வயது 77), மற்றும் தாயாரான வேலுப்பிள்ளை பார்வதி (வயது 71) அகிய இருவரும் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுடன் வந்த இவர்கள் வவுனியாவில் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் இருந்தபோது படையினரால் இனங்காணப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இவர்கள் தற்பொழுது படையினரின் பாதுகாப்பில் உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

28.05.2009, 10.30 PM

 

முகாம்களில் மரக்கறி வகைகளுக்கு தட்டுப்பாடு

வவுனியாவில் உள்ள நலன்புரி நலையங்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, மா, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இருப்பினும் இங்குள்ள மக்களுக்கு மரக்கறி வகைகள், மிளகாய்த்தூள், வெங்காயம், கிழங்கு, குழந்தைகளுக்கான பால்மா போன்றவை மக்களுக்கு உடனடி தேவையாக உள்ளதாக அவர் தெரிவித்தார். எனவே உதவிகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த பொருட்களை மக்களுக்கு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

28.05.2009, 10.10 PM

 

அமெரிக்க காங்கிரஸ்குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரசின் உறுப்பினர் தலைமையிலான குழு இன்று (28.05.2009) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கும் மற்றும் வடக்கின் அடடிப்படை வசதிகளை மீள்கட்டியெழுப்புவதற்கும் உதவி வழங்கவுள்ளதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் வடக்கில் உள்ள நலன்புரி நிலையங்களை பார்வையிட்டுள்ளனர்.

28.05.2009, 09.45 PM

 

இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி

ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் இலங்கை சமர்ப்பித்த பிரேரணை வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 47 உறுப்பு நாடுகளில் இலங்கை சமர்ப்பித்த பிரேரணைக்கு ஆதரவளித்த இந்தியா, சீனா உள்ளிட்ட 29 நாடுகளிற்கு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம இலங்கை சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளார். இன்று (28.05.2009) வெளிவிவகார அமைச்சில் இது தொடர்பாக விபரிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

28.05.2009, 09.30 PM

 

முகாமில் இருந்து தமிழினி இனங்காணப்பட்டுள்ளார்.

புலிகளின் பெண்கள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தமிழினி எனப்படும் சுப்பிரமணியம் சிவாதை நலன்புரி நிலையம் ஒன்றில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் புதுமாத்தளனில் இருந்து மக்கள் வெளியேறும் போது அவரது தாயார், மற்றும் உறவினர்களுடன் இவரும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் 1991ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இந்துள்ளார் எனவும் இவரிடம் விசேட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

28.05.2009, 05.45 PM

 

மட்டக்களப்பில் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் நேற்று (27.05.2009) இரவு 09.00 மணியளவில் ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் ஆட்டோ சாரதியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான சந்திரேசன் வரதராஜன் (வயது 38) என தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் இருந்த சமயம் கறுப்பு நிற வாகனம் ஒன்றில் வந்த சிலர் தம்மை பொலிஸார் என தெரிவித்து இவரை பலவந்தமாக இழுத்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

28.05.2009, 05.00 PM

 

அமெரிக்காவின் இலங்கைக்கான புதிய தூதுவர் நியமனம்

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக பெட்ரிக்கா புட்டினிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இலங்கை தூதுவர் ரொபேட் ஓ பிளேக் தெற்காசிய விவகார பிரதி ராஜாங்கச் செயலாளராக பதவிஉயர்வு பெற்றதை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் பெட்ரிக்கா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாலைதீவு தூதுவராகவும் செயற்படவுள்ளார்.

பெட்ரிக்கா ஈராக், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் அமெரிக்க ராஜதந்திர அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

28.05.2009, 04.30 PM

 

வெள்ளவத்தை பகுதியில் இரு யுவதிகள் கைது

கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (27.05.2009) மாலை 6 மணிதொடக்கம் 10 மணிவரை தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது இரு தமிழ் யுவதிகள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் தமது ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்தவும் பொலிஸ் பதிவினை மேற்கொள்ளவும் தவறியமையினாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

28.05.2009, 04.10 PM

 

பின்லாந்தில் இலங்கைக்கு உதவி வழங்கும் ஐநாவின் மாநாடு

இலங்கையில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ள மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நிதிவழங்குவது தொடர்பான ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நிதி வழங்கல் நிறுவனங்களின் மாநாடு பின்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் 2ம் திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்லாந்து தலைமை வகிப்பதோடு 2 பில்லியன் யூரோக்களையும் வழங்கியுள்ளது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அமைப்பின் அங்கத்துவ நாடுகளான 21 நிதிவழங்கல் நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவி திணைக்களமும் கலந்து கொள்கின்றன.

இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகளுக்கான உதவிச் செயலர் ஜோன் கோம்ஸ் பங்குபற்றவுள்ளார். இதன் போது பாகிஸ்தானில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி புரிவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

 

28.05.2009, 03.55 PM

 

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஐ சி ஆர் சி நிவாரணம்

வவுனியா மனிக்பாம் 3ம் 4ம் பிரிவுகளில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு உலருணவுப்பொருட்கள், மற்றும் சமயல் பாத்திரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் என்பன சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் இன்று (28.05.2009) வினியோகிக்கப்படுவதாக கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடகத் தொடர்பாளர் சரசி விஜேரட்ண தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை நேற்று அரம்பிக்கப்பட்டு இன்றும் தொடர்வதாக அவர் கூறியுள்ளார்.

மன்னர் வவுனியா ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் இடம்பெயர்ந்த மக்களுக்கென புதிய விடுதி வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஐ சி ஆர் சி உதவிகளை மேற்கொண்டுள்ளது. இதனால் இங்கு மேலதிகமாக 500 படுக்கை வசதிகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த மக்களுக்காக புதிய களவைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு;ள்ளது. இது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த வைததியசாலையில் வெளிநாட்டு சத்திரசிகிச்சை வைத்திய குழு சேவையாற்றவுள்ளது. இந்த வைத்தியசாலையை எங்கு அமைப்பது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

28.05.2009, 03.30 PM

 

முகாம்களில் ஒசுசல கிளைகள் திறக்கப்படவுள்ளது.

வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் அரச ஒசுசல மருந்தகங்களை திறக்கவுள்ளதாக சுகாதரர அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார். மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்கமுடியும். இந்த முகாம்களில் மொத்தமாக 5 மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மருந்தகங்களை அடுத்த இரு வாரங்களுக்குள் நிர்மாணிக்குமாறு அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரஞ்சித் மலிகஸ்பேயிடம் நேற்று (27.05.2009) பணிப்புரை வழங்கியுள்ளார். அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இடம்பெயர்ந்த மக்களுக்கென 5 இலட்சம் பெறுமதியான மருந்துப் பொருட்களை அமைச்சரிடம் நேற்று கையளித்துள்ளார்.

மருந்தகங்களை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களை தெரிவு செய்வது குறித்து நலன்புரி நிலையங்களுக்கான தகுதி வாய்ந்த அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி. ஏ சந்திரசிறியுடன் அமைச்சர் கலந்துரையாடியுள்ளார். செட்டிக்குளம் பகுதியில் மருந்துப் பொருட்களை களஞ்சியப்படுத்த களஞ்சியசாலை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

28.05.2009, 09.00 AM

 

ஊவா மாகாணசபை இன்று கலைக்கப்படவுள்ளது.

ஊவா மாகாணசபையை இன்று நள்ளிரவு 12 மணியுடன் கலைக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிப்பான ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்தாக ஊவா மாகாணசபை முதலமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்திருந்தார். இங்கு தேர்தல் நடத்தும் நோக்கிலேயே இந்த சபை கலைக்கப்படுகிறது. இதற்கான காலஎல்லை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்வரை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு இறுதியாக 2004ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கான 34 ஆசனங்களில் 21 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு பெற்றிருந்தது. 12 ஆசனங்களை எதிர்க்கட்சியும், மலையக மக்கள் முன்னணி 1 ஆசனத்தையும் பெற்றிருந்தது.

28.05.2009, 08.45 AM

 

யாழ்ப்பாணத்திற்கு கப்பல் மூலம் பொருட்கள்

கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கோதுமை மா மற்று சீனி என்பன கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் கே. கணேஸ் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருக்கான நிதி சேகரிக்கப்படாத போதிலும் யாழ் மக்களின் உணவு தேவையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதன் போது 750 மெற்றிக் தொன் சீனியும் , 1000 மெற்றிக் தொன் மாவும் கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

28.05.2009, 08.00 AM

 

ஐநாசபையில் இலங்கை சமர்பித்த பிரேரணை வெற்றி

ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கியநாடுகள் மனிதஉரிமை ஆணைக்குழுவில் கடந்த இரு தினங்களாக இலங்கை தொடர்பான அவசரமாநாடு இடம்பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் நேற்று (27.05.2009) இலங்கை சமர்ப்பித்த பிரேரணை வெற்றி பெற்றுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இது இலங்கைக்கு கிடைத்த வரலாறு காணத ஓர் வெற்றியாகும். இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அனத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கவுள்ளதா இந்த அமர்வின்போது தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த சர்வதேச சமூகம் உதவிகளை வழங்கவேண்டும், மற்றும் பயங்கவாதம் தோற்கடிக்கப்பட்டமை குறித்து சர்தேச சமூகம் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் அடங்கிய பிரேரணை இலங்கை அரசினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இது 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா, அல்ஜீரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பூட்டான், பங்களாதேஷ், நிக்கரகுவா, பொலிவியா, பாகிஸ்தான், நேபாளம், தென்னாபிரிக்கா, இந்தோனேசியா, உப்பட்ட 29 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. பிரிட்டன், பிரான்ஸ், சுவிஸ், நெதர்லாந்து, ஜேர்மனி, மெக்சிக்கோ, சிலி, இத்தாலி, கனடா உட்பட 12 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன. இந்த வாக்கெடுப்பில் 6 நாடுகள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

27.05.2009, 09.15 PM

 

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பகுதியில் தாக்குதல்

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் இன்று (27.05.2009) படையினரின் கொமாண்டோக்கள் புலிகளின் குழு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 11 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை அடுத்து நடத்தப்பட்ட தேடுதலின் போது புலி உறுப்பினர்களின் 11 சடலங்கள் உட்பட ரி56 ரக துப்பாக்கி 05, 15 கிலோக்கிராம் கிளைமோர் குண்டு 20, கைக்குண்டு 02, மிதிவெடிகள் 03, மற்றும் மருந்துப்பொருட்கள் பலவும் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

27.05.2009, 09.00 PM

 

இராமநாதன் நிவாரண கிராமத்தில் வங்கிக்கிளை

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் இராமநாதன் நிவாரணக்கிராமத்தில் இலங்கை வங்கி கிளை ஒன்றை நேற்று (26.05.2009) திறந்துள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் அமீர் அலி மற்றும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். இந்த வங்கி வவுனியாவில் உள்ள பிரதான இலங்கை வங்கியுடன் இணைந்ததாக இயங்கவுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள மற்றய முகாம்களிலும் நடமாடும் வங்கிக் கிளைகளை திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27.05.2009, 08.40 PM

 

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு அடையாளஅட்டை

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு விசேட அடையாள அட்டை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது குழந்தைகள் உட்பட அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது. புலிகள் இந்தியாவிற்குள் ஊடுருவக் கூடும் என்று புலனாய்வுத் துறையினர் எச்சரித்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் முகாம்களில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் 117 முகாம்களில் தங்கியுள்ளனர்.

27.05.2009, 08.25 PM

 

புலிகள் சரணடைவதற்கு மேலும் கால அவகாசம்

படையினரிடம் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைவாக பராமரிப்பதற்கும், புனர்வாழ்வழிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மீதமுள்ள புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது இராணுவ முகாமிலோ சரணடைய முடியும் என அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

27.05.2009, 08.10 PM

 

கொழும்பில் உள்ள கனேடிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

கொழும்பில் உள்ள கனேடியடிய தூதரகத்தின் முன்பாக இன்று (27.05.2009) சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புலிகள் இயக்கத்திற்கு கனடா அரசு ஆதரவுஅளிப்பதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் புலிகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன் சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.

27.05.2009, 07.45 PM

 

விமானநிலையத்தில் ஒருவர் காணாமல்போயுள்ளார்.

கட்டுநாயக்கா விமானநிலையப்பகுதியில் நேற்று (26.05.2009) அதிகாலை 2.15 மணிக்கு ஒருவர் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தியின் செயலாளரும் உறவினருமான தவராஜசிங்கம் சுபாஸ் (வயது 23) என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் வசித்துவரும் இவர் இந்தியா சென்றுவிட்டு மீண்டும் கொழும்பு திரும்பும் போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

27.05.2009, 04.15 PM

 

வடக்கில் உள்ள மாவட்டங்களுக்கு மின்சாரம்

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கும் மின்சார வசதி செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கென பல வெளிநாடுகளுடன் பேச்சுக்கள் நடத்தப்படுவதோடு அவற்றின் உதவிகளும் பெறப்படவுள்ளன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மோதல்களின் போது சேதமடைந்த உபமின்நிலையங்கள், மின்மாற்றிகள், மின்கோபுரங்கள் என்பன புனரமைக்கப்படும் வேலைத்திட்டம் ஒருவார காலமாக இடம்பெற்று வருவதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் நாட்டின் உதவியுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மின்சார வசதி அற்ற இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படவுள்ளது.

27.05.2009, 03.45 PM

 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 32 பேர் மரணம்

புதுமாத்தளன் பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டு மன்னார்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 32 பேர் இதுவரை மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணங்கள் செப்ரி சீமியா மற்றம் போசாக்கின்மை ஆகியவற்றால் நிகழ்ந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

27.05.2009, 03.20 PM

 

சரணடைந்த சிறுவர்களுக்கு புனர்வாழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகள் இயக்கத்திலிருந்தும், தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் மறுவாழ்வு திட்டம் குறித்த கூட்டம் ஒன்று நேற்று (26.05.2009) இடம் பெற்றுள்ளது. இதனை யுனிசெவ், சேவ் த சில்ரன், மற்றும் வன்முறைகள் அற்ற அமைதிப்படை, ஆகிய அமைப்புக்கள் கலந்துகொண்டுள்ளன. இந்த கூட்டத்தில் குறித்த சிறுவர்கள், அவர்களின் பெற்றோர், சிறுவர் நன்னடத்தை திணைக்களம், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இங்கு 5 பெண்கள் உட்பட 30 பேர் புனர்வாழ்வு திட்டதின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் பாடசாலை சென்று கல்வி கற்க விருப்பம் தெரிவித்துள்ளதோடு ஏனையோர் தொழில்பயிற்சி பெற விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கான தொழில் பயிற்சிகள் சர்வோதய பண்ணையில் வழங்க ஏற்பாடாகியுள்ளது.

27.05.2009, 03.00 PM

 

கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் அரசு உதவி

வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் மனிதாபிமான பணிகளுக்கு ஜப்பான் அரசு 160 மில்லியன் ரூபாய்களை நன்கொடையாக வழங்கவுள்ளதாக ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படவுள்ளன. இந்த பணிகளை டெனிஷ், ஹலோ ரெஸ்ட் ஆகிய தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ளன.

மன்னாரில் இந்த பணிகளுக்கென ஜப்பான அரசு 50 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது. கண்ணவெடி அகற்றும் பணிககென யப்பான் அரசு இதுவரை 240 மில்லியன் ரூபாய் நிதியினை வழங்கியுள்ளதாக ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
 

27.05.2009, 08.30 AM

 

குமாரன் பத்மநாதனை கைது செய்ய நடவடிக்கை

புலிகளின் சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இலங்கை, இந்திய அரசுகள் கேட்டுக்கொடதற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தாய்லாந்து, அவுஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகள் மேற்காள்ளப்பட்டு வருகிறது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலையிலும், ஆயுதக்கடத்தல்களிலும் குமரன் பத்மநாதனுக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

27.05.2009, 08.10 AM

 

பௌத்தசாசன பாதுகாப்பு சபை முகாம்களுக்கு செல்கிறது

இலங்கை பௌத்த சாசன பாதுகாப்பு சபையின் தலைவர் சங்கைக்குரிய கலாநிதி வலமிட்டியாவ குசல தெம்மதேரர் தலைமையில் அந்த அமைப்பைச் சேர்ந்த 500 பிக்குமார் இன்று (27.05.2009) இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களுக்கு செல்லவுள்ளனர். இந்த அமைப்பினால் சேகரிக்கப்பட்ட பொருட்களை வழங்கும் நோக்கிலும் மற்றும் அங்குள்ள மக்களுக்கு ஆசி வழங்கும் நோக்கிலும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைப்பு சேகரித்த பொருட்களில் உலர் உணவுப் பொருட்கள், ஆடைகள், மருந்துப் பொருட்கள் என்பன அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27.05.2009, 07.50 AM

 

இலங்கையின் அபிவிருத்திக்கு ரஷ்யா உதவி

இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ரஷ்யா அனைத்து உதவிகளையும் வழங்கவுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி திரு. மித்திரி மெத்வடோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நேற்று (26.05.2009) தொலைபேசியில் உரையாடிய போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். நாட்டில் பயங்கரவாதம் உருவகுவதற்கு காரணமாக உள்ள சக்திகளை அழிப்பதற்கு ரஷ்யா தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கிடையான சுற்றுலாத்துறை, கூட்டுறவு, நட்புறவு என்பவற்றை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேசி லெவ்லோவா இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

27.05.2009, 07.30 AM

 

அவசரகால சட்டம் நீக்கப்படப் போவதில்லை

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (26.05.2009) உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார். யுத்தம் நிறைவடைந்தாலும் பயங்கரவாதிகள் சிலர் மக்கள் மத்தியில் மறைந்து இருக்கின்றனர். பங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகள் இன்னமும் முடியவில்லை. தற்கொலை குண்டுதாரிகள் மறைந்துள்ளதோடு ஆயுதங்களும் மீட்கப்பட்டு வருகின்றது. எனவே இந்த சட்டத்தை நீக்கவேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

26.05.2009, 09.30 PM

 

இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்படுவர்

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அங்கு திருப்பி அனுப்பிவைக்கப்படவுள்ளதாக உட்துறை அமைச்சா ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று (25.05.2009) தனது பதவியை ஏற்றததை அடுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் புலிகள் இந்தியாவிற்குள் ஊடுருவும் சாத்தியங்கள் அதிகம் உள்ளன. இதனை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

26.05.2009, 09.00 PM

 

வட மாகாணத்தில் தேர்தல் நடத்த ஏற்ற சூழல் இல்லை

வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி அங்கு சாதரண சூழ்நிலை ஏற்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படவேண்டும் என ஜே வி பி தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் பெரும்பாலான மக்கள் முகாம்களிலேயே உள்ளனர். இதனால் அங்கு தேர்தல் நடத்துவது சிறந்ததாக இருக்காது. மக்கள் முகாம்களில் இருக்கும் போது தேர்தல்களை நடத்துவதானது அவர்கள் தமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் போகும் சாத்தியங்கள் உள்ளது என ஜே வி பியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் அனுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

26.05.2009, 08.45 PM

 

யாழ்ப்பாணத்தில் வயோதிபர் வெட்டிக்கொலை

யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியில் இன்று (26.05.2009) காலை வயோதிபரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இவர் 70 வயது மதிக்கத்தக்கவர் எனவும் இவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் வயலில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு பொதுமக்கள் கொடுத்த தகவலை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

26.05.2009, 05.14 PM

 

புலிகளின் கோரிக்கையை பாதுகாப்பு செயலர் நிராகரிப்பு

ஜனநாயக நீரோட்டத்தில் இணையப்போவதாக புலிகள் தெரிவித்துள்ளனர். புலிகளின் சர்வதேச இணைப்பாளராக கருதப்படும் செல்வராசா பத்மநாதன் பி பி சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாவும் எனவே தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதற்கு வன்முறை அற்ற ஜனநாயக வழியில் இணையப்போவதாக தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்ச ஜனாநாய வழியில் இணையப்போவதாக புலிகள் தெரிவித்துள்ள அறவிப்பினை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். பல வருடகாலம் வன்முறைகளில் ஈடுபட்ட புலிகள் ஜனநாய ரீதியில் செயற்படுவார்கள் என தான் கருதவில்லை என தெரிவித்துள்ளார். பிபிசி செய்தி சேவைக்கு வழங்கி செவ்வியில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். தமிழ் மக்களை பிரதிநித்துவப் படுத்துவதற்கு நாட்டில் பல தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளன. புலிகள் அதற்கு தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

26.05.2009, 05.00 PM

 

இலங்கையில் முதலீடு செய்ய பலநாடுகள் ஆர்வம்.

இலங்கையில் 30 வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்ததை அடுத்து இங்கு முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச சந்தைப்படுத்தல் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (26.05.2009) இடம்பெற்ற அமர்வின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது இலங்கைக்கு கிடைத்த பெருவெற்றியாகும். இதற்கென அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

26.05.2009, 04.45 PM

 

கிழக்குமாகாணத்தில் புலிகள் சரணடைய விருப்பம்

கிழக்கு மாகாணத்தில் மறைந்துள்ள புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைவதற்கு தமது உதவியை நாடியுள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் சிறு சிறு குழுக்களாக காடுகளில் மறைந்திருக்கும் புலி தலைவர்கள் தன்னுடன் தொடர்பு கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் சரணடையும் பட்சத்தில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

26.05.2009, 04.30 PM

 

மாணவர்களுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கான பொதுப் பரீட்சைகள் யாவும் 3 மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் நேற்று (25.05.2009) இடம்பெற்ற இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி தொடர்பான விசேட கூட்டத்தின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை, கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை, மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பன பிற்போடப்பட்டுள்ளது. கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலர் நிமல் பண்டா, மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், மற்றும் வலய கல்வ அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

26.05.2009, 04.00 PM

 

ஏஞ்சியுள்ள புலி உறுப்பினர்கள் சரணடைய வேண்டும்

புலிகள் இயக்கம் நாட்டில் அழிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள மறைந்து வாழும் புலி உறுப்பினர்கள், மற்றும் புலி ஆதரவாளர்கள் சரணடையுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்கள் அருகில் உள்ள இராணுவமுகாம் அல்லது பொலிஸ் நிலையத்தில் சரணடைய முடியும். இதற்கு மூன்றாம் தரப்பினர் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

26.05.2009, 03.20 PM

 

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் மீள்குடியமர்த்தப்படுவர்

இந்தியாவிற்கு அகதிகளாக சென்று முகாம்களில் தங்கியுள்ள இலங்கை மக்களை அழைத்து வரும் நடவடிக்கை வடக்கு மாகாணத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சனைகள் தீர்கப்பட்டதை அடுத்தே மேற்கொள்ளப்படவேண்டும் என இலங்கைக்கான பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் பி எம் ஹம்சா தெரிவித்துள்ளார். சென்னையில் இலங்கை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை அகதிகளுக்கான பதிவுகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையில் பிரஜா உரிமை இல்லாத 22000ம் இலங்கை அகதிகளுக்க பிரஜாஉரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்ரெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்படுவர் என தெரிவித்துள்ளார்.

 

26.05.2009, 09.30 AM

 

நாட்டில் பிரிவினை கோரும் சக்திகள் அழிக்கப்படும்

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதைப்போல நாட்டில் பிரிவினை கோரும் சக்திகளும் தேசத்துரோக சக்திகளும் நாட்லிருந்து இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இவை நீண்டகால திட்டத்தில் உள்ளடக்கப்படும். ஜனாதிபதி இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளார். இனிவரும் காலங்களில் நாட்டில் பயங்கரவாதம் வழர்ச்சியடைவதற்கு இடமளிக்கப்படமாட்டாது. புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்டுளமையால் அவர்கள் மீண்டும் ஒன்றுகூடக்கூடிய சாத்தியங்கள் எவையும் இல்லை.

புலிகளுக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள குமாரன் பத்மநாதன் தான் தலைவர் என்ற கருத்துடன் புலிகளை மீண்டும் வழர்பதற்கு முனைந்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க படையினர் தயாராக உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

26.05.2009, 08.50 AM

 

சிறிலங்கா சுதந்திரகட்சியின் விசேட கூட்டம்

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அகில இலங்கை செயற்குழு உறுப்பினர்களும், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் கலந்துகொள்ளம் கூட்டம் ஒன்று இன்று (26.05.2009) அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலமை தாங்குகின்றார். பயங்கரவாதம் அழிக்கப்பட்டதை அடுத்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் எதிர்காலம் குறித்து ஆராய்வதே இந்த கூட்டத்தின் நோக்கமாகும்.

26.05.2009, 08.30 AM

 

பிரபாகரனின் சொகுசு வாழ்கை பற்றி அறியப்பட்டுள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த உண்மை நிலையை தமிழ் இளைஞர்கள் அனைவரும் அறிந்துள்ளதாக அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். பிரபாகரன் சொகுசு வாழ்கை வாழ்ந்துகொண்டு தமிழ் மக்களை துயரத்தில் தள்ளியதை அனைவரும் அறிந்துள்ளனர். இந்த மக்களுக்கு அரசியல் கட்சிகள் பெரிதும் உதவிகளை மேற்கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் புதிய நாடு ஒன்று மலர்ந்துள்ளது. மிக கொடுரமான பயங்கரவாத இயக்கத்தை அழிக்க ஜனாதிபதியினாலும் முப்படையினராலும் முடிந்துள்ளது என அவர் மேலும் கூறினார்.

 

25.05.2009, 10.05 PM

 

வடமாகாணத்தின் உள்ளுராட்சித் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.

யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகிய மாவட்டங்களில் உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அழைப்பினை இன்று (25.05.2009) வர்தமானி மூலம் தெரிவிக்கவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மகாணசபைகள் அமைச்சர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் யூன் மாதம் 17ம் திகதி தொடக்கம் 24ம் திகதிவரை அரசியல் கட்சிகள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ம் திகதிக்கும் 17ம் திகதிக்கும் இடையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வடமாகாணம் முழுவதுமாக கடந்த 1998ம் ஆண்டு இறுதியாக உள்ளுராட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டது. பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலை நடத்துவதன் மூலம் வடபகுதி மக்கள் இழந்த ஜனநாயக உரிமையை பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

25.05.2009, 09.45 PM

 

இடம்பெயர்ந்த 76 வயோதிபர்கள் மன்னார் வயோதிபரில்லத்தில்

மன்னார் தாழ்வுப்பாடு பிரதான பீதியில் உள்ள பட்டித்தோட்டம் வயோதிபர் இல்லத்தில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 76 வயோதிபர்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் கண்பார்வை இழந்தவர்கள், நடக்க முடியாதவர்கள், மற்றும் சுகயீனமுற்றவர்கள் இருக்கின்றனர். இவர்களில் 04 பேர் மரணமடைந்துள்ளனர். 07 வயோதிபர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள வயோதிபர்களை பராமரிப்பதற்கு மன்னாரில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவி புரிவதாக இல்லத்தை நடத்திவரும் அருட் சகோதரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

25.05.2009, 09.30 PM

 

இடம்பெயர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை

மேற்கொள்ளவென விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது

இடம்பெயர்ந்து வவுனியா மாவட்டத்தில் தங்கியுள்ள மக்களின் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கென குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள மக்களுக்கு விசேட சேவைகளை வழங்கும் நோக்கில் வவுனியா அரச அதிபர் திருமதி பி. எஸ். எம் சார்ள்ஸ் தலைமையில் இன்று (25.05.2009) இடம் பெற்ற கூட்டத்தின் போது முடிவெடுக்கப்பட்டு;ள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கான உணவு, அத்தியாவசிய நலன்புரி சேவைகள், கல்வி, குடிநீர் என்பவற்றை வழங்குவதற்கான பொறுப்பு இந்த குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிவாரண கிராமத்திற்கு ஒரு கிராமசேவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளிக்கள அதிகாரிகளும் அவர்களுக்கு உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

25.05.2009, 09.05 PM

 

புலிகளுடன் செயற்பட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இடம்பெயாந்து வந்து முகாம்களில் உள்ள மக்களில் 9100 பேர் வரையில் தாம் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், மற்றும் வெலிக்கந்த, வவுனியா ஆகிய பகுதிகளில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இதில் புலிகளினால் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட சிறுவர்கள் அம்பேபுஸ்ஸவில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

 

25.05.2009, 04.30 PM

 

இடம்பெயர்ந்த மக்கள் குறித்து விசேட மாநாடு

செட்டிக்குளம் நலன்புரி நிலையத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள் பற்றி ஆராயும் மாநாடு இன்று (25.05.2009) வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் திருமதி பி;. எஸ். எம் சார்ள்ஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் அனைத்து திணைக்களத்தலைவர்கள் உட்பட பாதுகாப்பு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டின் போது திணைக்கள தலைவர்கள் நலன்புரி நிலையத்தின் செயற்பாடுகள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

25.05.2009, 04.00 PM

 

இந்தியாவும் சீனாவும் இலங்கைக்கு ஆதரவு

இந்தியா சீனா ஆகிய நாடுகள் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறவுள்ள மனிதஉரிமை மீறல் தொடர்பான மாநாட்டில் இந்தியா மற்றும் சீனா இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளன. ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை பேரவையில் அரசாங்கமும், புலிகளும் யுத்த குற்ற செயல்களை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் பாலஸ்தீனம், டார்பூர், லெபனான், மியன்மார், கொங்கோ ஆகிய நாடுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

25.05.2009, 03.40 PM

 

இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு விசேட திட்டங்கள்

இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கென விசேட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த ஊடகம் ஒன்றிற்கு இன்று (25.05.2009) கருத்து தெரிவித்துள்ளார். இந்த முகாம்களில் 60 ஆயிரம் வரையிலான மாணவர்கள் தங்கியிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாணவர்களுக்கு பாடசாலை புத்தகமும், இலவச சீருடைகளும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் இவை எதிர்வரும் 3 வார காலத்தில் பூர்த்தி அடையும் என கூறினார்.

25.05.2009, 03.20 PM

 

வடக்கு கிழக்கில் 30 பாடசாலைகள் புனரமைப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 30 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். இந்த பாடசாலை அதிபர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று இன்று (25.05.2009) கொழும்பில் நடைபெறுகின்றது. இதற்கென 1050 மில்லியன் ரூபா நிதியினை ஆசிய அபிவருத்தி வங்கி வழங்கவுள்ளது.

இதன் முதல்கட்டமாக வடக்கில் 17 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அவையாவன வவுனியா சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம், ஓமந்தை மகாவித்தியாலயம், புத்தூர் சோமஸ்கந்த வித்தியாலயம், சுன்னாகம் ஸ்கந்தவரோதயம் வித்தியாலயம், கரவெட்டி விக்னேஸ்வர வித்தியாலயம், தென்மராட்சி வரணி மகாவித்தியாலயம், யாழ் விக்டோரியா வித்தியாலயம், மன்னார் புனித அன்னம்மாள் மத்திய மகாவித்தியாலயம், முருகன் மகாவித்தியாலயம் என தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கில் தெஹியந்த கண்டிய மெதகம மகாவித்தியாலயம், தம்பிலுவில் மத்திய மாகவித்தியாலயம், தம்பலகாமம் சிராஜ் முஸ்லீம் மகா வித்தியாலயம், பதவி சிறி புர பலுகஹ வங்குவ மகாவித்தியாலயம், முதலை குடா மகாவித்தியாலயம், பேத்தாளை விபுலானந்த வித்தியாலயம் ஆகியன தெரிவு செய்யப்பட்டள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

 

25.05.2009, 09.55 AM

 

ஜனாதிபதியின் கருத்திற்கு ஐநா செயலர் பாராட்டு

அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்த கருத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கி மூன் பாராட்டியுள்ளார். பான்கிமூனின் இலங்கை விஜயத்தை அடுத்து இலங்கை அரசும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. இதில் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூய அரசியல் தீர்வொன்றை எட்டுவது என்பதில் இருதரப்பினரும் ஓர் இணைக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

இது சம்மந்தமாக தமிழ் அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதில் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. இதன் மூலம் நிரந்தர தீர்வு ஒன்றை எட்டி நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடக்கில் உள்ள மக்களின் இயல்பு வாழ்கையை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் பொறுப்பு ஜனாதிபதியிடமும், அரசாங்கத்திடமும் உள்ளது. இதன் முதல் கட்டமாக வடக்கில் மகாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான அனைத்து வேலைதிட்டங்களும் நடைபெற்று வருகிறது என அவர் மேலும் கூறியுள்ளார்.

 

25.05.2009, 08.45 AM

 

வடமாகாணத்தில் உள்ளுராட்சி தேர்தல் நடத்த திட்டம்

வடமாகாணத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான விசேட கூட்டம் இன்று (25.05.2009) மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சில் நடைபெறவுள்ளது. அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் குறித்த அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கின்றனர். இந்த கலந்துரையாடலின் போது எட்டப்படும் முடிவு குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு உடனடியாக அறிவிக்கப்படும் என தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல் ஒன்றை விரைவில் வடமாகாணத்தில் நடத்துவதே அரசின் நோக்கமாகும். இதன் அடிப்படையில் யாழ் மாநகரசபை உட்பட 32 உள்ளுராட்சி மன்றங்களிலும் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.

25.05.2009, 08.30 AM

 

இலங்கையில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புலிகள் இயக்கம் வளர்சிஅடைவதற்கான சாத்தியங்கள் இல்லை என பாதுகாப்பு செயலர் கேட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புலிகளின் சிரெஸ்ட தலைவர்கள் அனைவரும் பலியாகியுள்ளமையினால் அந்த அமைப்பு முழுமையாக தோல்வியடைந்துள்ளது. புலிகளின் ஆயுதங்களும் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் எவ்வாறான கருத்தை வெளியிட்டு வந்தாலும் அந்த அமைப்பு நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து புலிகளை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை ஜனாதிபதியிடம் இருந்தது. முறையான திட்டமிடல் ஒன்றின் மூலமே புலிகள் தோற்கடிக்கப்படனர்.

புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு எனவே அந்த அமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக பேசுவதாக தெரிவித்த சில சர்வதேச அமைப்புக்கள் காலப்போக்கில் பிரபாகரனுக்கும் புலி உறுப்பினர்களுக்கும் சார்பாக பேச ஆரம்பித்தன. முப்பது வருட பயங்கரவாதத்தை அழித்தமையால் ஜனாதிபதி, முப்படையினர், உட்பட தனக்கும் உயிர் அச்சுறுத்தல் எதிர்காலத்திலும் இருக்கலாம் என பாதுகாப்பு செயலர் மேலும் கூறியுள்ளார்.

புலிகளின் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளனர். இதில் கடுமையான குற்றங்களை புரிந்தவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஏனையோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும். கிழக்கு மாகாணத்திலும் இது போன்ற நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

 

24.05.2009, 10.50 PM

 

பிரபாகரன் கொல்லப்பட்டதாக புலிகள் இயக்கம் அறிவிப்பு

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 17ம் திகதி அன்று கொல்லப்பட்டதாக அந்த இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பத்மநாதன் இன்று (24.05.2009) பி பி சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளார் என இலங்கை அரசு அறிவித்ததை அடுத்து புலிகள் சார்பு ஊடகங்களும், ஆதரவாளர்களும் பிரபாகரன் கொல்லப்படவில்லை என தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையிலேயே இவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். இவருடன் மேலும் பல தளபதிகளும் படையினருடனான மோதலில் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளமையினால் எதிர்வரும் காலங்களில் ஜனநாயக அகிம்சை வழியில் மக்களின் உரிமைகளுக்காக தமது இயக்கம் போராடப்போவதாக அவர் மேலும் பி பி சி தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.

24.05.2009, 10.30 PM

 

வடக்கில் உள்ள வைத்தியசாலைகள் புனரமைக்கப்படவுள்ளது

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சுகாதார சேவைகள் வழங்கும் நோக்கில் வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் புனரமைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் புலிகளினால் சேதமாக்கப்பட்ட கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய பகுதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில்; மீள்குடியேற்றத்திற்கு அமைவாக அந்த மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

வவுனியா முகாம்களில் உள்ள மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்க வைத்தியர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு மேலும் வைத்தியர் குழுக்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளனர் இங்கு இரவு நேரங்களிலும் சிகிச்சை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

24.05.2009, 09.45 PM

 

வவுனியாவில் சக்திவாய்ந்த குண்டுகள் மீட்பு

வவுனியா ஸ்கந்தபுரம் பகுதியில் இன்று (24.05.2009) காலை 07.40 மணியளவில் சக்திவாய்ந்த 15 குண்டுகள் குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள கட்டுப்பகுதியில் இந்த குண்டுகள் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அந்த பகுதியில் தேடுதல் நடத்தியபோது இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவை வாகனங்களில் பெருத்தக்கூடியவாறு 10 மற்றும் 9 கிலோக்கிரம் நிறைகளில் தயாரிக்கப்பட்டிருந்தாக அவர் மேலும் கூறியுள்ளார்.

 

24.05.2009, 04.30 PM

 

இடம்பெயர்ந்த மக்கள் விரைவில் மீள் குடியமர்த்தப்படுவர்

இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு அவர்களை சொந்த இடங்களில் மீள் குடியமர்த்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இதற்கென மோதல்கள் இடம்பெற்ற பகுதியில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் மிக துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பணிகள் நிறைவடைந்ததும் மக்கள் கட்டம் கட்டமாக அங்கு மீள் குடியமர்த்தப்படுவர் என் அவர் கூறியுள்ளார்.

 

24.05.2009, 04.10 PM

ஐநா செயலர் பான்கிமூன் நாடு திரும்பியுள்ளார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கி மூன் இன்று (24.05.2009) நாடு திரும்பியுள்ளார். விசேட விமானத்தின் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விமான நிலையத்தில் வைத்து ஐநா செயலரை சந்திப்பதற்கு முயற்சி மேறகொண்ட போதும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

24.05.2009, 03.30 PM

 

கந்தளாயில் மொறவௌ பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

கந்தளாய் மொறவௌ சாந்திபுரம் பகுதியில் நேற்று (23.05.2009) மாலை கந்தளாய் பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். கைக்குண்டு 04, ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 126, மற்றும் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

24.05.2009, 03.15 PM

 

இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இலங்கையில் நடைபெறும் பிரச்சனைக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கு தீர்வுகாணவேண்டும் என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்தறை அமைச்சாராக புதிதாக பதவியேற்றுக்கொண்ட இவர் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது எனவே அங்குள்ள அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டிய நேரம் வந்துள்ளது. இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டதாக அனைத்து சமூகத்தினருக்கும் சமனான அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும்.

இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்தும் நடவடிக்கையில் இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா செயல்ப்படும். அவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்புவதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என கூறியுள்ளார்.

 

24.05.2009, 02.05 PM

 

ஏ9 வீதியின் புனரமைப்பு வேலைகள் முடிவடைந்துள்ளது.

பொதுமக்களின் பாவனைக்கு ஏ9 வீதியை திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பீ. பீ ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இந்த வீதியின் புனரமைப்பு வேலைகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளது. இந்த வீதியை பொதுமக்களின் பாவனைக்கு விடுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அனுமதி கிடைத்ததும் பொதுமக்களின் பாவனைக்கு விடப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

தற்பொழுது படையினரின் வாகனங்களும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களுமே செல்கின்றன. மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இந்த வீதி புனரமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

24.05.2009, 09.30 AM

 

ஜனாதிபதிக்கு விசேட விருதுவழங்கி கௌரவிப்பு

ஜனாதிபதிக்கு விஸ்வ கீர்த்தி ஸ்ரீ திரிசிங்களதீஸ்வரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. தலதாமாளிகையில் எண்கோண மண்டபத்தில் நேற்று (23.05.2009) இடம்பெற்ற நிகழ்வொன்றில் மல்வத்த அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு இந்த விருதினை வழங்கி கௌரவித்துள்ளனர். இந்த விருதினை பெற்ற முதலாவது இலங்கை தலைவர் என்ற பெருமையும் ஜனாதிபதிக்கு உரித்தாகியுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி நாடு தற்பொழுது ஒன்றுபட்டுள்ளது. இதனை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு எந்தஒரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்படமாட்டாது என nதிவித்துள்ளார். நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு பொதுமக்களிடமும் மகாசங்கங்களிடமும் உள்ளன என குறிப்பிட்டார்.

24.05.2009, 09.00 AM

 

வடபகுதி மக்களுக்கு ஜனநாயக உரிமை வழங்கப்படும்

வடபகுதி மக்கள் இழந்திருந்த ஜனநாயக உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கென வடக்கில் மாகாணசபை தேர்தலையும், உள்ளுராட்சி சபைத் தேர்தலையும் விரைவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கு மாகாண மக்கள் தமது அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்தின் மத்தியவங்கியின் ஆளுநர் திருமதி தரிஷா பட்நாகஸசை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்த போது இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த திருமதி தரிஷா பட்நாகஸ் சமாதானம் மலர்ந்துள்ள இலங்கைக்கு அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தமது அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

24.05.2009, 08.45 AM

 

இடம்பெயர்ந்த மக்கள் சமைத்து உண்ண நடவடிக்கை

இடம் பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தமக்கு தேவையான உணவை தாமே சமைத்து உண்ணக்கூடியவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. முன்பு இவர்களுக்கு தேவையான உணவு பொதிகளில் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கை தற்பொழுது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் யு எல் எம் கால்தீன் தெரிவித்துள்ளார்.

 

23-05-2009, 10.00 PM

பான்கிமூன் ஜனாதிபதியை கண்டியில் சந்தித்துள்ளார்.

கண்டியில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கியநாடுகள் சபையின் செயலர் பான்கி மூனுக்கும் இடையில் இன்று (23.05.2009) மலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இதன்போது வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துவது, மற்றும் இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதாகவும் அத்துடன் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்தவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஐநா பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொண்டு நிறுவனங்களையும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு சென்று உதவிகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என பான்கிமூன் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி பாதுகாப்பு சிக்கல்கள் நீக்கப்பட்டதும் இது குறித்து விரிவாக ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்.

23-05-2009, 09.45 PM

அம்பாறையில் புலி உறுப்பினர்கள் சரணடைந்துள்ளனர்.

அம்பாறை அக்கரைப்பற்று பகுதியில் நேற்று (22.05.2009) காலை 2 புலி உறுப்பினர்கள் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் இருந்து தப்பித்து வந்துள்ள இவர்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் இவ்வாறு சரணடைந்துள்ளனர். இவர்கள் ஆலையடிவேம்பு மகாசக்தி கிராமத்தை சேர்ந்த க. கபிலன் (வயது 19), திருக்கோயில் கன்னியன்தீவை சேர்ந்த பார்த்தீபன் (வயது 26) என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

23-05-2009, 09.00 PM

யாழ் குடாநாட்டில் உள்ள புலிகள் சரணடையவேண்டும்

யாழ்குடாநாட்டில் மறைந்து உள்ள புலி உறுப்பினர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட்டு படையினரிடம் சரணடைய வேண்டும் என யாழ் இராணுவத் தளபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கென அவர்களுக்கு 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. யாழ் மக்களின் சமாதான வாழ்கையை சீர்குலைக்கும் நோக்கில் வன்முறைகளை புரிவதற்கு தயாராக இருக்கும் புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு, தங்குமிடம், உணவு, மற்றும் பலவசதிகளை கொடுத்து உதவுவது மிகப்பெரிய குற்றமாகும். புலி உறுப்பினர்கள் உங்கள் உறவாக, அல்லது நண்பராக இருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள படையினரிடம் சரணடைவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும்படி யாழ் இராணுவத்தளபதி பொது மக்களிடம் கேட்டுள்ளார்.

எதுவித பயமோ, அல்லது சந்தேக இல்லது அவர்களை சரணடைய செய்யலாம். அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதோடு சரணடைய செய்யும் உங்களுக்கும் மன்னிப்பு வழங்கப்படும். அன்றி புலனாய்வுத் தகவலின் படி அவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்கள் குற்றவாளியாக கருதப்படுவதோடு பாதுகாப்பளித்ததற்காக நீங்களும் குற்றவாளியாக கருதப்படுவீர்கள் என அவர் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

23-05-2009, 08.40 PM

வவுனியாவில் தற்கொலை அங்கி மீட்பு

வவுனியா இலமுறிப்புக்குளம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நேற்று (22.05.2009) பிற்பகல் 5.30 மணியளவில் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன் போது தற்கொலை அங்கிகள் 03, ரி56 ரகதுப்பாகி ரவைகள் 18, மைக்ரோ பிஸ்ரல் ரவைகள் 36, கைக்குண்டு 01, 40 மில்லி மீட்டர் கிருனைட் லோஞ்சர் குண்டு 10, 40 மில்லிமீட்டர் கிருனைட் லோஞ்சர் துப்பாக்கி 01, மின்சார டெட்டனேட்டர் 03, சீருடை 02 என்பன மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

23-05-2009, 04.00 PM

ஐநா செயலர் பான்கிமூன் வவுனியாவிற்கு விஜயம்

இலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கிமூன் வவுனியாவிற்கு இன்று (23.05.2009) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது இடம்பெயாந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டுள்ளார். இந்த மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் விரிவாக ஆராய்ந்துள்ளார். இந்த மக்களுக்கான நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் அரசசார்பற்ற பிரதிநிதிகளுடன் அவர் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

23-05-2009, 03.40 PM

மக்களை விரைவில் குடியமர்த்துமாறு பிரித்தானியா தெரிவிப்பு

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இது குறித்து பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபாட் விடுத்துள்ள அறிக்கையில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இலட்சக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

23-05-2009, 03.20 PM

இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து செய்தி

இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்துள்ளார். மன்மோகன் சிங் இரண்டாவது தடவையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றதை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள வாழத்து செய்தியில்இதனை குறிப்பிட்டுள்ளார்.இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.

23-05-2009, 03.10 PM

செரந்தி ராஜபக்ச நலன்புரி நிலையங்களுக்கு சென்றுள்ளார்

ஜனாதிபதியின் பாரியாரும் முதல் பெண்மணியுமான செரந்தி ராஜபக்ச நேற்று (22.05.2009) இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள செட்டிக்குளம் முகாமிற்கு விஜயம் செய்துள்ளார். அங்கு இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்;. மேலும் அவர்களுக்கு சிறு பொருட்களும் வழங்கியுள்ளார். இவரின் வருகையை முன்னிட்டு வவுனியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

23-05-2009, 12.30 PM

இடம்பெயர்ந்த சிறு பிள்ளைகளுக்கு பால்மா பைக்கட்டுகள்



வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் தங்கியுள்ள குடும்பங்களில் 5 வயதுக்குட்பட்ட 250 பிள்ளைகளுக்கான பால்மா பைக்கட்டுக்களை நேற்று (22.05.2009) தோழர் கங்கா தலைமையில் சென்ற பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் யாழ் பிராந்திய தோழர்கள் வழங்கியுள்ளனர். கட்சிகள், பொது அமைப்புக்கள் நலன்புரி நிலையங்களுக்கு சென்று அவர்களின் தேவைகள் பிரச்சினைகளை அறிந்து உதவிகளை வழங்குவதற்கான அனுமதி இன்னும் கிடைக்காமையால் இந்த பால்மா பைக்கட்டுக்கள் யாழ் அரசாங்க அதிபர் திரு. கே. கணேஷ் திட்டப்பணிப்பாளர் திரு. பிரதீபன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. தென்மராட்சியில் பாடசாலைகளில் தங்கியிருந்த வன்னியிலிருந்து வந்த மக்கள் நலன்புரிநிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ள அதேவேளை சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அவ்வாறு மாற்றப்படவில்லை எனவும் இதனால் இங்கு தங்கியுள்ள மக்களுக்கு பற்றாக்குறைகள் சற்று அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அங்கு 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பால்மாவிற்கான தேவை இருப்பதாக இந்த பாடசாலையில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் நலன்களை கவனித்துவரும் அரச அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய அங்குள்ள சிறுவர்களுக்கு பால் மா பைக்கட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியுதவியை இங்கிலாந்தில் உள்ள கட்சி தோழர்கள், ஆதரவாளர்கள் சிலர் முன்வந்து வழங்கியிருந்தனர்.

23-05-2009, 08.30 AM

ஐநா செயலர் இன்று நலன்புரி நிலையங்களுக்கு விஜயம்

ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயம் பான்கி மூன் இன்று (23.05.2009) வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களை பார்வையிடவுள்ளார். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இடர் முகாமை த்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

பான்கிமூன் நேற்று இரவு 11.30 மணியளவில் ஐநா சபைக்கு சொந்தமான பிரத்தியோக விமானத்தில் இலங்கை வந்துள்ளார். இடம்பெயாந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகளை கண்டறியும் நோக்கிலேயே அவர் இங்கு வந்துள்ளதாக ஐநா செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இன்று அவர் கண்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம ஆகியோரையும் சந்தித்து பேசவுள்ளார்.

23-05-2009, 08.10 AM

தென் இந்திய கரையோர பாதுகாப்பு அதிகரிப்பு

புலிஉறுப்பினர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவக்கூடும் என்றநோக்கில் தென்னிந்தியாவின் கரையோர பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்த நிலையில் இந்தியாவி;ற்குள் நுழையக்கூடும் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கென பெருமளவான கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கரையோர காவல்படையினரும், கடற்படையினரும் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

23-05-2009, 08.00 AM

புலிகளின் தலைவர் சிறுவர்படையணியிலேயே தங்கியிருந்தார்.

யுத்தத்தில் வெற்றியை பெற்றுக்கொண்டிருக்கும் போது சர்வதேச சமூகம் விடுத்த யுத்தநிறுத்த கோரிக்கையையும், மற்றும் சர்வதேச நாணய நிதியம் வழங்குவதாக தெரிவித்த 1.9 பில்லியன் டொலர் நதியுதவி நிறுத்தப்படும் என அமெரிக்க அரசு விடுத்த எச்சரிக்கையையும் ஜனாதிபதி புத்திசாதுரியத்துடன் உதாசினம் செய்துள்ளார் என வோஸ்யி யேர்ணல் என்னற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவிவந்த சிவில் யுத்தமானது புலிகள் அழிக்கப்பட்டதுடன் நிறைவுக்கு வந்துள்ளது. புலிகள் அமைப்பு சிறுவர்களையும் பெண்களையும் தற்கொலை குண்டுதாரிகளாக உபயோகித்து வந்துள்ளது. புலிகளின் தலைவர் சிறுவர் படையணியிலேயே பெரிதும் தங்கியிருந்தார் என அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

23-05-2009, 07.45 AM

புலிகளின் 300 சடலம் முல்லைத்தீவில் அடக்கம்

புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலம் உட்பட 300 புலி உறுப்பினர்களின் சடலங்கள் முல்லைத்தீவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். படையினரின் இறுதி தகாக்குதலில் கொல்லப்பட்ட புலிகள் இயக்கத்தின் தலைவர் உட்பட அந்த இயக்கத்தின் பல முக்கியஸ்தர்களது சடலங்கள் படையினரால் மீட்கப்பட்டிருந்துது. இந்த சடலங்கள் பெரிதும் பழுதடைந்த நிலையில் இருந்ததினால் அவற்றை உடனடியாக அந்த பகுதியிலேயே அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் புலிகளன் தலைவரது சடலம் கடந்த 20ம் திகதி அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

22-05-2009, 10.55 PM

இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாமில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேம்படுத்தப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக வவுனியா மாவட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் வி. ஆர். எஸ் ஒஸ்வோர்ட் இன்று (22.05.2009) காலை அரசசார்பற்ற நிறுவனங்களை சந்தித்து இது குறித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து வவுனியா வலய கல்விப்பணிப்பாளர் தகவல் தருகையில் சென்றவாரம் வன்னியில் இருந்து வந்த மாணவர்களுக்கனா பாடசாலைகளை ஆரப்பித்து வைத்துள்ளோம். மேலும் அதிகளவான மக்கள் இடம்பெயாந்து வந்துள்ளனர். இவர்கள் இராமநாதபுரம் பகுதியில் குடியமர்தப்படுகின்றனர். இவர்களுக்கான பதிவுகள் முடிவடைந்து தற்காலிக முகாம்களில் குடியமர்தப்பட்டவுடன் இவர்களுக்கான கல்வி நடவடிக்கையினை ஆரம்பிக்கவுள்ளோம். இதன் அடிப்படையில் இராமநாதபுரத்தில் உள்ள முகாம் ஒன்றில் 170 தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு அதில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் இதற்கான நிதியினை அரசசார்பற்ற நிறுவனங்களிடம் கேட்டுள்ளோம். அவர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

22-05-2009, 10.30 PM

அமெரிக்க இராஜாங்க செயலர் ஜனாதிபதியுடன் பேச்சு

அமெரிக்க இராஜாங்க செயலர் கிலாரி கிளின்டனும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பேச்சு நடத்தியுள்ளனர். இந்த உரையாடலானது தொலைபேசி மூலம் நேற்று (21.05.2009) இடம்பெற்றதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இதன் போது இலங்கையில் நிரந்தர தீர்வொன்றினை முன்வைக்கவேண்டும் என கிலாரி கிளின்டன் ஜனாதிபதியை கேட்டுள்ளார். மேலும் இடம்பெயாந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியமத்துதல், இலங்கையில் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள், மற்றும் இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

22-05-2009, 09.45 PM

இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியமர்த்தப்படவேண்டும்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலர் கொபிஅனான் இலங்கை அரசை கேட்டுள்ளார். இதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை நிவர்தி செய்து கொள்வதுடன் தீர்கமான சமாதான முடிவொன்றையும் எட்ட முடியும் என கூறியுள்ளார். இவை தவறும் பட்சத்தில் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளர்.


22-05-2009, 07.30 PM

 

பிரபாகரனின் மரணத்தில் நக்கீரன் பத்திரிகை

செய்திருக்கும் மிகப்பெரிய புகைப்பட மோசடி


பிரபாகரன் உயிரிழந்த செய்தியினை இலங்கை அரசு ஆதாரங்களுடன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. புலிகளின் இரண்டாம் நிலை தளபதியாகவிருந்த அமைச்சர் முரளிதரன் (கருணாஅம்மான்)  அண்மையில் புலிகள் இயக்கத்திலிருந்து தப்பி இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் புலிகள் இயக்க முக்கியஸ்தர் தயாமாஸ்டர் ஆகியோரும் பிரபாகரனின் உடலை அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளமை புகைப்பட ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்களும், புலிகள் சார்பான ஊடகங்களும் இவையாவும் பொய்யான செய்தி பிரபாகரன் உயிரோடு வந்து அதிசயத்தை ஏற்படுத்துவார் என பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வெளியாகும் நக்கீரன் எனும் புலனாய்வுப் பத்திரிகை பிரபாகரன் உயிரோடுதான் உள்ளார் என புதிய செய்தி ஒன்றை பிரபாகரனின் அட்டைப்படத்தோடு வெளியிட்டுள்ளது. எதுவிதமான ஆதாரத்தையும் வெளியிடமுடியாத நக்கிரன் பத்திரிகை தனது இறப்பு பற்றிய செய்தியை சிரித்தபடி தொலைக்காட்சியில் பார்ப்பது போன்ற படம் ஒன்றையும் ஆதாரமாக வெளியிட்டுள்ளது. இந்த செய்தியினை புலிகள் சார்பு ஊடகங்களும்
புலிகளின் தமிழ் வின் இணையத்தளம்  தீபம் தொலைக்காட்சி என்பன முக்கியத்துவம் கொடுத்து நேற்றைய (21.05.2009) தினம் செய்தி வெளியிட்டிருந்தன.

நக்கீரன் பத்திரிகையில் வெளியான புகைப்படம் 02.03.2003 புலிகளின் தமிழ் நெற் இணையத்தளத்தில் வெளியானதாகும். பிரபாகரன் பாலசிங்கத்துடன் உரையாற்றுகின்ற படைத்தை மாற்றம் செய்து புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்பதை நிரூபிக்க முற்பட்டுள்ளனர். இதன் மூலம் நக்கிரன் பத்திரிகையின் புலனாய்வு தரத்தை கேலிக்குள்ளாக்கியுள்ளது.

இது போன்ற புகைப்பட மோசடியினை அம்பலப்படுத்தி தேனீ இணையத்தளம் 2004ம் ஆண்டு ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதே புகைப்படத்தை தற்போது நக்கிரன் பத்திரிகை பிரபாகரன் உயிரோடு உள்ளர் என்பதை நிரூபிக்க பயன்படுத்தி உள்ளது.

புலிகளின் தலைவரின் குரலைகூட வெளியில் கொண்டுவர முடியாத நலையில் தான் புலிகளின் பிரச்சார ஊடகங்களும் ஆதரவாளர்களும் உள்ளனர். இந்த நிலையில் ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு தமிழ் மக்களை எந்த அளவிற்கு முட்டாள்கள் என்று கருதுகிறார்கள் என்பதை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்
 

 

22-05-2009, 05.15 PM

 

வடக்கின் அபிவிருத்திக்கு ஐநா ஒத்துழைப்பு

வடக்கு மகாணத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண ஒத்துழைப்பு வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார். இன்று (22.05.2009) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளாhர். இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணப்பணிகள் குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துளார்.

 

22-05-2009, 04.35 PM

இராணுவத்தளபதி கிளிநொச்சி விஜயம்

இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று (22.05.2009) கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். பயங்கரவாத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்ததற்காக கிளிநொச்சியில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே அங்கு சென்றுள்ளார். இந்த நிகழ்வில் நாட்டை மீட்டெடுக்க போரில் ஈடுபட்ட படையினர் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வில் இராணுவத்தளபதி விசேட உரைஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்.

 

22-05-2009, 03.50 PM

மூதூர் மக்கள் கட்டைபறிச்சானில் மீள்குடியேற்றம்

திருகோணமலை மூதூர் பகுதியில் இருந்து இடம்பெயாந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ள மக்கள் கட்டைபறிச்சான் தில்லங்கேணி பகுதியில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக கிழக்குமாகாண மீள் குடியேற்ற இணைப்பாளர் இ. செல்வேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசஅதிபர் தலமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 200 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர். இதற்கென கட்டைபறிச்சான் பகுதியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புக்களை நிர்மாணிக்கும் பணியினை திருகோணமலை மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

 

22-05-2009, 03.20 PM

விஜய் நம்பியார் வவுனியா முகாமிற்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயம் பான்கி மூனின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு நேற்று (21.05.2009) சென்று பார்வையிட்டுள்ளார். இவரை வரவேற்ற மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களின் கல்வி, சுகாதாரம், மற்றும் நிவாரணப்பணிகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.இந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் விழங்கப்படும் அடிப்படை வசிதிகள் குறித்து முகாம்களில் உள்ள பொதுமக்களிடம் நம்பியார் கேட்டு அறிந்துகொண்டுள்ளார்.

 

22-05-2009, 02.45 PM

இலங்கை தமிழ் மக்களுக்கு சமஉரிமை வழங்கப்படவேண்டும்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு சமஉரிமை வழங்கப்படுவதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சென்னையில் நேற்று (21.05.2009) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அரசு வழங்கியுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

22-05-2009, 09.15 AM

 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள்

இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவினருடன் சந்திப்பு

ஜனநாயக தமிழ் தேசிய
கூட்டமைப்ப சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் திரு.ரி.சிறீதரன் புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், ஆகியோர் நேற்று (21.05.2009) காலை 11மணியளவில் இந்திய இல்லத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.எம்.கே.நாராயணன், இந்திய வெளியுறவுச்செயலர் திரு.சிவ்சங்கர்மேனன் ஆகியோரைச் சந்தித்துள்ளனர். இவர்களுடன் இந்திய உயர்ஸ்தானிகர் திரு.அலோக் பிரசாத், இந்திய உயர்ஸ்தானிகராலய அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் சியாம் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் போது இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய வீடுகளில் கூடியவிரைவில் குடியமர்த்த உதவுமாறும் வடகிழக்கில் மீண்டும் சரியான ஜனநாயகமும், பன்முகத்தன்மையும் நிலைநிறுத்தப்படவும், அர்த்தமுள்ள அரசியல் தீர்வு எட்டப்படவும் பங்களிப்பு செய்யுமாறும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கோரப்பட்டது.
மேலும் விபரம்
 

22-05-2009, 09.00 AM

 

முப்படையினரை கௌரவிக்கும் பேரணி இன்று

நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் பேரணி இன்று (22.05.2009) பகல் 1 மணியளவில் இடம்பெறவுள்ளது. இதன் அடிப்படையில் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி மகிந்தராஜபக்ச, பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்ச, முப்படையினர் ஆகியோருக்கு நாட்டின் கௌரவம் வழங்கப்படவுள்ளது. பொரள்ளை கம்பல் பூங்காவில் ஆரம்பிக்கும் இந்த பேரணி ஊர்வலமாக சென்று பாராளுமன்ற வழாகத்தில் முடிவடையவுள்ளது. அங்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது. படையினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புபவர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள முடியும் என நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அனைவருக்கும் பகிரங்க அழைப்பொன்றை விடுத்துள்ளார்.
 

22-05-2009, 08.40 AM


இந்தியாவின் உதவியுடன் வவுனியாவில் வைத்தியசாலை

இந்தியாவின் உதவியுடன் வைத்தியசாலை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயாந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் நோக்கில் இந்த வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 100 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வகையில் இந்த வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது. இந்த வைத்தியசாலைக்கு தேவையான மருந்துப் பொருட்களுடன் இந்திய வைத்தியர் குழு ஒன்றையும் இந்திய அரசு இன்று (22.05.2009) இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென இந்தியா 500 கோடி ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக இந்த வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது.
 

22-05-2009, 08.20 AM


நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் முன்வரவேண்டும்

பயங்கரவாத்தில் இருந்து மீட்கப்பட்ட நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்பக்ச தெரிவித்துள்ளார். பலரது அபர்ப்பணிப்பும் தியாகமும் இந்த வெற்றிக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது. மாவிலாறு தொடக்கம் முல்லைத்தீவு வரையான மனிதாபிமான நடவடிக்கையில் 6261 படையினர் உயிர் நீத்துள்ளனர். 29,551 பேர் காயமடைந்துள்ளனர் இவர்களில் 2556 பேர் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளனர். நேற்று ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளார்.

 

21-05-2009, 11.15 PM

 

ராஜீவ் காந்தியின் நினைவு தினம் கொண்டாடப்படுகிறது

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 18வது நினைவு தினம் இன்று (21.05.2009) அனுஷ்டிக்கப்படுகிறது. இவர் கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி தமிழக்கத்தின் சிறிபெரும்பதூரில் தேர்தல் பிரச்சாரம் நடத்தப்பட்ட போது புலிகளின் தற்கொலை குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டார். ஜனாதிபதி பிரதீபா பட்டேல், துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவியும் ராஜீவ்காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி மற்றும் ராஜீவின் மகனும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல்காந்தி, ராஜீவின் மகளான பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதரா, அமைச்சர் ஏ. கே அந்தோனி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, கேரள காங்கிரஸ் தலைவர் கே. எம். மணி, மற்றும் பலர் டெல்லியில் உள்ள அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

21-05-2009, 11.00 PM

 

கிழக்கு மாகாணத்தில் பொலிஸ்சேவைக்கு ஆட்சேர்ப்பு

கிழக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்ளும் நேர்முகப்பரீட்சை நேற்று (21.05.2009) பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்றுள்ளது. இதில் பல இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துண்டுப்பிரசுரம் மற்றும் ஒலிபெருக்கி மூலம் இதற்கான அறிப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கல்வித்தகமை, வயதெல்லை என்பவற்றை கொண்டு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

21-05-2009, 10.40 PM


புலிகளின் அணிகள்மீது படையினர் தாக்குதல்

திருகோணமலை கடவான காட்டுப்பகுதியில் புலிகளின் அணிஒன்றின் மீது படையினர் இன்று (21.05.2009) பிற்பகல் 2.30 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் போது புலிகளின் முக்கிய உறுப்பினர்களான சத்யன் மாஸ்டர், காந்தன், ஓவியன் உட்பட 10 புலி உறுபினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை அடுத்து நடத்தப்பட்ட தேடுதலின் போது 10 புலி உறுபினர்களின் சடலம், ரி56 ரக துப்பாகி 07, எம்16 ரக துப்பாக்கி 01, கைக்குண்டு 08, 7 கிலோகிராம் கிளைமோர் 01, ரெடியோ தொடர்பாடல் உபகரணம் 01 என்பன படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பெரியபுல்லுமலை காட்டுப்பகுதியில் நேற்று (20.05.2009) காலை புலி உறுப்பினர் சிலருக்கும் படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் 5 புலி உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினருக்கும் குறித்த காட்டுப்பகுதியில் மறைந்திருந்த புலி உறுப்பினர்களுக்கும் இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோதலை அடுத்து நடத்தப்பட்ட தேடுதலின் போது புலிஉறுப்பினர்களின் 05 சடலங்கள், ரி56 ரகதுப்பாகி 02, கைக்குண்டு 01, மிதிவெடி 11, கையடக்க தொலைபேசிகள் 02, மற்றும் இராணுவ தளபாடங்களும் படையினரல் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பகுதியில் நேற்று முன்தினம் (19.05.2009) விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் 3 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலை அடுத்து நடத்தப்பட்ட தேடுதலில் புலிகளின் 3 சடலங்களும், ரி56 ரக துப்பாக்கி 03, கைக்குண்டு 03, உட்பட மருந்துப்பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

21-05-2009, 10.20 PM

ஜனாதிபதிக்கு விசேட விருது வழங்கப்படவுள்ளது

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு விசேட விருது ஒன்று வழங்கவேண்டும் என அகில இந்திய பயங்கரவாத தவிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஞாபகார்த்த விருது வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து அழிப்பதற்கு அரசியல் ரீதியாக சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியதன் காரணமாக இவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

 

21-05-2009, 09.45 PM

வடக்கு மாகாணத்தை 180 நாட்களில் மீளகட்டியெழுப்பவேண்டும்

ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்று (21.05.2009) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு செயலணியின் தலைவர் பரில் ராஜபக்ச தலைமை தாங்கியுள்ளார். இந்த செயலணி வடக்கு மாகாணத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கென ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய பசில் ராஜபக்ச வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பு முக்கிய கவனத்தில் கொள்ளப்படவேண்டும். 180 நாட்களில் வடக்கு மாகாணம் மீள கட்டியெழுப்பப்படவேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் வடக்கு மாகாண அபிவிருத்தியுடன் சம்மந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலர்கள் கலந்துகொண்டனர்.
 

21-05-2009, 05.20 PM

 

கட்டுநாயக்கா பகுதியில் யுவதி ஒருவர் கைது

கட்டுநாயக்கா உயர்பாதுகாப்பு வலயத்தில் நேற்று (20.05.2009) இரவு யுவதி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வடமாகாணத்தை சேர்ந்தவர் எனவும் இவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

21-05-2009, 05.00 PM

லண்டன் பௌத்த விகாரை மீது தாக்குதல்

லண்டனில் உள்ள பௌத்த விகாரை ஒன்றின்மீது புலி ஆதரவாளர்கள் சிலர் நேற்று (20.05.2009) தாக்குதல் நடத்தியுள்ளதாக லன்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் விகாரைக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கும்பலொன்று திடீரென தாக்குதல் நடத்தியதாகவும் சம்பவ இடத்திற்கு வந்த லண்டன் பொலிஸார் குறித்த கும்பல் மீது தடியடி நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

21-05-2009, 04.45 PM

முப்படையினரை கௌரவிக்கும் விழா நாளை

பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட முப்படைவீரர்களை கௌரவித்து நன்றிதெரிவிக்கும் தேசிய விழா நாளை (22.05.2009) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்ற திடலில் நடைபெறவுள்ளது. இதற்கென சிறிலங்கா சுதந்திரக்கட்சி இவ்வாரத்தில் பல செயல் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. இதனடிப்படையில் இன்று படையினருக்கு வாழ்த்த தெரிவிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிகழ்விற்கு கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த தலைமை தாங்குகின்றார்.

மேலும் எதிர்வரும் 23ம் திகதி படையினரின் குடும்பங்களுக்கு உதவும் வேலைத்திட்டமும், 24ம் திகதி சர்வமத வழிபாடும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

குமுறும் மலையகம்

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்

அறிக்கைகள்

துண்டுப்பிரசுரங்கள்

எங்கள் சின்னம்

 

அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகள்

 

தேர்தல் திணைக்களத்தால்

03 ஜுலை 2008 இல் வெளியிடப்பட்டது

 

 

 

 

அவுஸ்;திரேலியாவில வெளிவரும் உதயம் மாத இதழில் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவர்கள் எழுதிய 13வது அரசியல் யாப்பு திருத்தம், அதன் அமுலாக்கம் குறித்த கட்டுரை தொடர்
 

 

கூட்டமைப்பு ( DTNA )

 

21 மே 2009

இந்திய வெளியுறவு செயலர் பாதுகாப்பு ஆலோசகருடன் டிரிஎன்ஏ சந்திப்பு
 


இனப்பிரச்சினை

 

10 நவம்பர் 2006
இனப்பிரச்சினைக்கான

அரசியற் தீர்வு தொடர்பாக

எமது கட்சியின் விளக்கம்
 

இணைத் தலைமை


ஜெனீவா பேச்சு


மத நிறுவனங்கள்


 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரேரணைகள்
 

Proposal for the Political Solution to the Ethnic Conflict in Srilanka
EPRLF seeks merger of Sri Lanka's north-east Indo-Asian News Service 30 March 2007

Indian backing proposals styled on the Indo-Lanka Accord The Island, March 26, 2007  

Moderate Tamils' constitutional proposal  Hindustan Times 23 March 2007

FRATERNAL PAGE

LSSP demands 13th Amendment be implemented
 

 

தோழர் றொபேட்
50வது பிறந்தநாள் நினைவு
 

மார்கழி 13
ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல்
khh;fop 13

<gpMh;vy;vt; kPJ jhf;Fjy;

 

Appeal to the leaders of  Political Parties and the People of  Tamil Naad 14 October 2008

 

 

 

மட்டக்களப்பு மாவட்ட உள்ள+ராட்சி தேர்தல்கள்- 2008
 

வாக்களிப்பு மற்றும் கட்சிகளுக்குக் கிடைத்த ஆசனங்கள்
 

மட்டக்களப்பு மாநகர மேயர் பத்மினி 13.03.2008 அன்று அளித்த செவ்வி
 

 

கிழக்கு மாகாணசபை தேர்தல் ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் வழங்கிய (14.03.2008) செவ்வி

 

 

 
     
 

 'ehk; kf;fSf;fhfg; NghuhLtnjd;gJ vk;kPJ Rkj;jg;gl;l flikNa jtpu vkf;F toq;fg;gl;l mjpfhuky;y"  Njhoh; f.gj;kehgh