HOME ARTICLES HISTORY MARTYRS PHOTOS LINKS ARCHIVES CONTACT  

 

 

  ARCHIVES

10.06.2009, 09.50 PM

 

நலன்புரி நிலையங்களில் 57,293 சிறுவர்கள்

இடம்பெயர்ந்து முகாம்களில் 57,293 சிறுவர்கள் இருப்பதாக அனர்த்த நிவாரண சேவை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் யு. எல். எம் ஹால்தீன் தெரிவித்துள்ளார். இவர்களில் 34 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 7894 விதவைகளும், 3100 கர்ப்பிணித்தாய்மார்களும், உள்ளனர்.

காயமடைந்தவர்கள் 11,873 போரும், ஊனமுற்றவர்கள் 3968 பேரும் உள்ளனர், மேலும் 3689 அரச உத்தியோகஸ்தர்களும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

10.06.2009, 09.30 PM

 

மக்கள் மீள்குடியமர சீன அரசு உதவி

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்துவதற்கு சீன அரசு உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மக்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு சீனா உதவிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்படுவதற்கு ஆதரவு அளிப்பதுடன் அதற்கென ஒருமில்லையன் டொலர் நிதியினை சீன அரசு வழங்கியுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் குறித்து தமது நாடு கவனித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

10.06.2009, 09.15 PM

 

வெளிநாட்டில் உள்ள புலி ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவர்

இலங்கையில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து உதவிகளை மேற்கொண்டவர்களை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்குமாறு வெளிவிவகார அமைச்சு சர்வதேச நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இவ்வாறு செயற்பட்டவர்கள் சிலர் கைதசெய்யப்பட்டுள்ளதாவும் இவர்கள் விரைவில் இலகையிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்கள், நபர்கள் குறித்த தகவல்கள் வெளிவிவகார அமைச்சிற்கு கிடைத்துள்ளது. இவர்கள் பொதுநலவாய நாடுகளில் இருந்தால் அந்த நாடுகளிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி அவர்கள் கைது செய்யப்பட்டு; இலங்கையிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.

புலிகளுக்கு உதவிபுரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இன்ரப்போல் பொலிஸாரின் உதவி பெறப்படவுள்ளது. புலிகளுக்கு ஆயுதங்களையும் நிதியினையும் வழங்குவதற்கு வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் பல நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அமைப்புக்கள் அனத்தையும் முடக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

10.06.2009, 05.20 PM

 

மன்னார் நகருக்கு செல்ல பாஸ் நடைமுறை

மன்னார் நகருக்கு செல்வோருக்கு புதிய பாஸ் நடைமுறை ஒன்றை கடற்படையினர் அமுல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மன்னார் நகருக்கு வெளியில் இருந்து வரும் மன்னார் மக்களும், வெளி மாவட்டங்களில் இருந்து மன்னார் நகருக்குள் வரும் மக்களுக்கும் இவ்வாறு பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் நகருக்குள் செல்லும் மக்கள் கோட்டைபகுதியில் அமைந்துள்ள கடற்படையினரின் சோதனை சாவடியில் தமது தேசிய அடையாள அட்டைகளை சமர்ப்பித்து இந்த பாஸை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. பின்னர் மன்னார் நகரை விட்டு செல்லும் போது இந்த பாஸினை கடற்படையினரிடம் சமர்ப்பித்து தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.06.2009, 04.50 PM

 

தேர்தலில் போட்டியிட ரெலோ தீர்மானித்துள்ளது.

யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைகளில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாவிட்டாலும் அதில் அங்கம் வகிக்கும் ரெலோ அமைப்பு தனியாகவோ அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்தோ போட்டியிடவுள்ளதாக அந்த கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வடக்கு கிழக்கை சோந்த தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படவேண்டும் என்பது அனைத்து தமிழ் மக்களின் விருப்பாக உள்ளது.

ஆரம்ப காலங்களில ஆயுத போராட்ட ரீதியிலும், பி;ன்னர் அரசியல் செயற்பாடுகளிலும் நாம் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றியே வந்திருக்கின்றோம். தவறுகளை உணர்ந்து திருந்திக்கொண்டு ஒற்றுமைப்படாவிட்டால் எமது தமிழ் இனம் ஒருபோதும் எம்மை ஏற்றுக்கொள்ளது. குறிப்பாக எமது கட்சியில் இருந்து பிரிந்து சென்று சிறிரெலோ என்ற பெயரில் இயங்கும் உறுப்பினர்களையும் இணைத்து ஓர் அணியில் நின்று செயற்படப்போவதாகவும் இதற்கான பேச்சுககள் இடம் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

10.06.2009, 04.25 PM

 

புலிகளுக்கு உதவியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

புலிகள் இயக்கத்திற்கு உதவியதாக தெரிவித்து அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 4 புலி ஆதரவாளர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் தமது குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளனர். அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் இவர்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தர்மஸ்தாபனம் என்ற பெயரில் புலிகளுக்கு பல மில்லையன் ரூபா நிதியினை சேகரித்துள்ளதாக கருணாகரன் கந்தசாமி என்பவர் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அரசின் சட்டத்தரணியான சர்லஸ் சோர்ஸ் தெரிவித்துள்ளார்.

மற்றய மூவரில் ஒருவர் அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டார் என்றும். இன்னொருவர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட பல ஆயதங்கள் கொள்வனவு செய்தார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

10.06.2009, 04.00 PM

 

வவுனியாவில் 6 புலிகள் சரணடைந்துள்ளனர்.

 
     

 

வவுனியா மேற்கு வாரிக்குட்டியூர் பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படையினரின் முகாமில் 3 பெண்கள் உட்பட 6 புலி உறுப்பினர்கள் நேற்று (09.06.2009) காலை 09.15 மணியளவில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்கள் இராசரத்தினம் நிர்மலறூபன் (வயது 30), சுப்ரமணியம் சத்யசீலன் (வயது 24), ஏ. வசந்தறாஜ் (வயது 21), இராசேந்திரன் மனோசீலா (வயது 24), கணேசலிங்கன் கார்த்திகா (வயது 20), சிதம்பரநாதன் மேகலா (வயது 20) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஆயுதங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ரி56 ரக துப்பாக்கி 05, ரி81 ரக துப்பாக்கி 01, கிருனைட் துப்பாக்கி 01, கைக்குண்டு 17 மற்றும் இராணுவ சீருடையை ஒத்த உடைகள் உட்பட பல ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

10.06.2009, 03.45 PM

 

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் தடுத்து வைப்பு

இலங்கைக்கு வந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே அவரது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவர் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் நேற்று (09.06.2009) இரவு கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வந்து இறங்கிய இவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவரை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

10.06.2009, 03.30 PM

 

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மனு நிராகரிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விடுமுறை கோரி இன்று (10.06.2009) நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். இவர்களின் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு அரச தரப்பில் இருந்து கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்வம் அடைக்கல நாதன், எஸ் கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் நாடாளுமன்றத்தி;ற்கு வருகைதராதபடியால் இவ்வாறு 3 மாதகால விடுமுறை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இந்த விடுமுறை மனுவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடாக சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கருத்து தெரிவிக்கும் போது இந்த நாட்டின் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை வழங்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நாடாழுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள ஊடகங்களுக்கு உண்மைக்கு புறம்பான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே இவர்களின் இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
 

10.06.2009, 09.45 PM

 

நாட்டின் பாதுகாப்புக்குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும்

நாட்டின் பாதுகாப்பு குறித்து நடைமுறைப்படுத்தும் திட்டங்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் உதவுமாறு பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று (09.05.2009) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்ட போதும் அவர்களில் மறைந்திருக்கும் சிலர் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இனங்காணப்பட்டு கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளளது. நாட்டின் பாதுகாப்பு குறித்து அனைவரும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என தெரிவித்த அவர் சந்தேகத்திற்கிடமானவர்கள் குறித்து பொலிஸாருக்கு உடன் அறியத்தருமாறும் கேட்டுள்ளார்.

அத்துடன் நாட்டின் தென்பகுதியில் பயங்கரவாத செய்பாடுகளில் ஈடுபட்டு தப்பியோடியவர்கள் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் இருப்பது இனங்காணப்பட்டுள்ளது. இவர்களுக்கு நாட்டின் சட்டத்திற்கமைய நடவடிக்கை எடக்கப்படும். மேலும் முகாம்களில் உள்ள இளைஞர்கள் காணாமல் போகின்றனர் என்ற செய்தியில் எதுவித உண்மைகளும் இல்லை. இது இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வன்னியில் 21 பொலிஸ் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் இவற்றில் 7 பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

10.06.2009, 09.15 AM

 

மக்களை மீள்குடியமர்த்த இந்தியா உதவி

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்கு இந்திய உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 500 கோடி ரூபா நிதியினை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது. இந்திய நாடாளுமன்றம் நேற்று (09.06.2009) கூடியபோது அங்கு உரையாற்றிய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். மேலும் இந்தியா மக்கள் மீள் குடியமர்தப்படுவதற்கு அனைத்து வகையிலும் உதவவுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சனைகளை இலங்கை அரசு நியாயமான தீர்வை வழங்கும் என்பதில் நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வாழும் சிறுபான்மையினர் சமஉரிமையுடனும் சுய கௌரவத்துடனும் வாழவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிபடையில் மனிக்பாம் முகாமிற்கு அருகில் இந்தியாவின் அனுசரணையுடன் அவசர சிகிச்சை சிலையம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு இந்தியாவின் தளவைத்தியசாலைகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
 

09.06.2009, 10.35 PM

 

யாழ்ப்பாணத்தில் புலிகள் கப்பம் கேட்டு மிரட்டல்

யாழ்ப்பாணத்தில் மறைந்து செயற்படும் புலி உறுப்பினர்களும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தனி நபர்கள் சிலரும் யாழ் மக்களை கப்பம் கேட்டு மிரட்டும் சம்பவம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதை அடுத்து நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இவர்கள் இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்மராட்சியில் உள்ள விடத்தல்பளை பகுதியில் இவ்வாறு கப்பம் கேட்டு மிரட்டிய சம்பவத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொவிக்கப்படுகிறது கார் சாரதியான இவரின் வீட்டிற்கு ஊரடங்கு அமுலில் இருந்தவேளை சென்ற இவர்கள் இவரை 50 இலட்சம் ரூபா பணம் கேட்டு துப்பாக்கி முனையில் மிரட்டியதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

09.06.2009, 10.00 PM

 

வவுனியாவில் ஆயுதக்களஞ்சியம் தீப்பற்றியுள்ளது

வவுனியாவில் அமைந்துள்ள 211வது படைப்பிரிவின் முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியம் இன்று (09.06.2009) மாலை 5.15 மணியளவில் திடீர் தீ விபத்தினால் தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது பெருந்தொகையான ஆயுங்களும் வெடிபொருட்களும் வெடித்து சிதறியுள்ளன. அரை மணிநேரம் இந்த வெடிஓசை கேட்டுள்ளது. இந்த களஞ்சியம் வவுனியா விமானப்படை முகாமிற்கும் குறித்த படைப்பிரிவினரின் முகாமிற்கும் இடையில் அமைந்திருந்ததது. இந்த வெடியோசையினால் வவுனியா பகுதியில் பதற்றம் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

09.06.2009, 09.45 PM

 

நலன்புரி நிலையங்களில் இளைஞர்கள் காணாமல்

போகின்றனர் என்ற செய்தியில் எதுவித உண்மைகளும் இல்லை

இடம்பெயர்ந்து மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களில் இளைஞர்கள் காணாமல் போவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எதுவித உண்மைகளும் இல்லை என வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் பணிகளுக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். நலன் புரிநிலையத்தில் இருந்து எந்த இளைஞரும் காணாமல் போகவில்லை இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என அவர் குறிப்பிட்டுள்ளார்.. அத்துடன் நலன்புரி நிலையங்களில் மக்கள் எதுவித அடிப்படை வசதிகளும் இன்றி இருப்பதாக வெளியான செய்தியினையும் அவர் மறுத்துள்ளார்.

முகாம்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் படையினரிடம் சரணடைந்தவர்களும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

09.06.2009, 06.45 PM

 

சிவகீதா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையவுள்ளார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இதுவைரை அவர் இருந்து வந்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து இராஜினமா செய்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்தியகுழு தலைவரும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம் பெற்ற மத்திய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட இவர் தனது நிலைப்பாட்டை தெரிவித்து இராஜினமா கடிதத்தை சந்திரகாந்தன் அவர்களிடம் சமர்ப்பித்து விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த சிவகீதா தான் எடுத்துள்ள இந்த முடிவு சுயவிருப்பத்தின் பேரில் எடுத்ததாகவும், யாருடைய அழுத்தமும் இதற்கு காரணம் அல்ல என தெரிவித்துள்ளார்.

 

09.06.2009, 06.30 PM

 

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட பயிற்சிகள்

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ள மாணவர்களில் க பொ த உயர்தரம், மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட கல்வி நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்துள்ளார். குறித்த மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் வகையில் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென கொழும்பில் இருந்து நன்கு தேர்ச்சி பெற்ற 700 ஆசிரியர் குழுவை வவுனியா அனுப்ப தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குழு கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் வழிகாட்டலில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர்கள் வாரா வாரம் தேர்தெடுக்கப்பட்டு அனுப்பப்படவுள்ளனர். இதன் முதல்கட்டமாக கொழும்பு டி எஸ் சேனநாயக்க கல்லூரி, இசிபதனா கல்லூரி ஆகிய பாடசாலை ஆசிரியர்களை கொண்ட குழு வவுனியா சென்றுள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

09.06.2009, 05.30 PM

 

அவசரகாலச் சட்டம் மேலும் ஒருமாதகாலம் நீடிப்பு

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாம் இன்று (09.06.2009) நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளது. இத்திட்டமானது 95 மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டியுள்ளது. இதற்கு ஆதரவாக 102 வாக்குகளும், எதிராக 07 வாக்குகளும் கிடைத்துள்ளன. அரசாங்கமும் அரசாங்கத்துடன் இணைந்த கட்சிகளும் ஆதரவாக வாக்களித்துள்ளன. எதிராக தமிழ் தேசய கூட்டமைப்பினர் வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பின் போது ஐக்கயதேசியக்கட்சி சபையில் இருந்து வெளியேறிவிட்டது.

09.06.2009, 05.15 PM

 

புலிகளின் சர்வதேச கட்டமைப்பு குறித்து விசாரணை

புலிகளின் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான கட்டமைப்புக்கள் மற்றும் சொத்துக்கள் குறித்து சர்வதேச புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு சர்வதேச புலனாய்வுப் பிரிவினர் தமது நாட்டு புலனாய்வு உதவியை நாடியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில் அந்த அமைப்பின் சர்வதேச தொடர்பாளராக செய்ற்பட்டு வந்த குமாரன் பத்மநாதன் என்பவர் புலிகள் அமைப்பின் சொத்துக்கள் தொடர்பில் சர்வதேச புலனாய்வு துறையினருக்கு தெரியப்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்மநாதன் தற்பொழுதும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் நிதி சேகரிப்பல் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு புலிகளின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட சொத்துக்கள் குறித்து ஆராய்வதற்கு சர்வதேச புலனாய்வு பிரிவினர் முன்வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

09.06.2009, 03.30 PM

 

இலங்கைக்கு எதிராக இந்திய மண்ணில் பிரச்சாரம் செய்யும்

இலங்கையர்களின் வீசா இரத்துசெய்யப்படவேண்டும்.

இந்தியாவில் இலங்கைக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இலங்கையை சேர்ந்தவர்களின் விசாவை இத்து செய்வதுடன் அவர்கள் உடனடியாக இலங்கைக்கு நாடுகடத்தப்படவேண்டும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் இருக்கும் இலங்கையர்கள்pல அந்த நாட்டுக்கு எதிராக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் புலி ஆதரவாளர்களே. இவர்கள் புலிகளுக்கு ஆதரவாகவே பேசிவருகின்றனர். இந்தியாவுடன் நட்புறவை பேணிவரும் இலங்கை ஒர்; ஜனநாயகநாடு, எனவே இந்தியாவில் இருந்தகொண்டு இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு அந்த நாட்டில் உள்ளவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இலங்கையில் இருந்துகொண்டு அவர்கள் இவ்வாறு செயற்படலாம்.

இந்தியர்கள் வெளிநாடு ஒன்றில் இருந்துகொண்டு இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதை இந்தியா விரும்பாது. ஆவ்வாறு நடக்கும் பட்சத்தில் குறித்த நாடு இந்தியாவிற்கு இராஜதந்திர தூரோகம் மேற்கொள்வதாகவே கருதுவோம். எனவே இந்தியா தனது ஸ்திரத்தனை;மையை சீர்குலைக்கும் இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

09.06.2009, 03.20 PM

 

யசூசி அகாசி நலன்புரி நிலையங்களுக்கு விஜயம்

யப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று (09.06.2009) வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு சென்ற அவர் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை பார்வையிட்டுள்ளார். அங்கு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக ஆராய்த அவர் மக்களி;ன் குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டுள்ளார். இவரின் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

09.06.2009, 09.25 AM

 

மன்னார் முசலிப் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றம்

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மன்னார் முசலிப்பிரதேச செயலாளர் பகுதியில் 7 கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் இரண்டாம் கட்டமாக இன்று (09.06.2009) குடியமர்த்தப்படவுள்ளனர். ஜனாதிபதியின் சிரெஸ்ட ஆலோசகரும் வடக்கின் அபிவிருத்தி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தலமையில் இந்திட்டம் நடைபெறவுள்ளது. 561 குடும்பங்களை சேர்ந்த 2120 பேர் இவ்வாறு குடியமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 கிராம சேவகர் பிரிவுகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு பாடசாலைகள், அரச அலுவலகங்கள், கூட்டுறவு நிலையங்கள், வீதிகள், என்பன புனரமைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பகுதிக்கான மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மீள் குடியமரும் மக்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான உலர் உணவு உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படவுள்ளது.

09.06.2009, 08.50 AM

 

கப்படன் அலி கப்பல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது

கப்டன் அலி கப்பல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பலில் உள்ள பொருட்கள் எவையும் இறக்கப்படமுடியாது எனவும் கப்பல் உடனடியாக இலஙகை எல்லையை விட்டு வெளியே செல்லவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கான முடிவுகளை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் எடுத்து வரப்பட்ட பொருட்கள் இறக்கப்படாமலேயே திருப்பி அனுப்பப்படுவதானது கவலை அளிக்கும் விடயம் என குறித்த கப்பலில் பொருட்களை அனுப்பிய ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு மற்றும் அதியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த இந்த கப்பல் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்ததை அடுத்து கடற்படையினர் அந்த கப்பலை கைப்பற்றினர்.

09.06.2009, 08.30 AM

 

வெற்றிடமான பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள்

பாராளுமன்றத்தில் வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு புதிய நாடாடுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (09.06.2009) பாராளுமன்றம் கூடும் போது சபாநாயகர் டபிள்யு ஜே எம் லொக்கு பண்டார முன்னிலையில் தமது சத்தியப்பிரமாணங்களை மேற்கொண்டு பதவிகளை ஏற்கவுள்ளதாக ஆழும் கட்சியின் பிரதம கொறடா தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன் அடிபடையில் முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடங்கொடவின் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலிமாவட்ட உறுப்பினர் சமிந்த வீரக்கொடியும், ஐக்கய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிக் அலுவிகாரவின் பதவிக்கு மாத்தளை மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான நந்தமித்ர ஏக்கநாயக்கவும், தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக்கு தமிழரசு கட்சியின் உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம்ஸ் தங்கதுரையும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

 

08.06.2009, 10.20 PM

 

முகாம்களில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை மேற்கொண்டு;ள்ளது. இதன் முதற்காட்டமாக வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் இரண்டு அலுவலகங்களை திறப்பதற்கு பணியகம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது அலுவலகம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலும் இரண்டாவது அலுவலகத்தை வடக்கு மாகாணத்தின் வன்னியிலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற விரும்புபவர்களுக்கு அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

08.06.2009, 10.00 PM

 

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் பேருக்கு தொழில் பயிற்சி

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சிகள் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 5 ஆயிரம் பேருக்கு இவ்வாறு தொழில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்மாவட்ட அரச செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் கே. கணேஸ் தலமையில் இது தொடர்பாக நாளை (09.06.2009) இடம்பெறவுள்ள கூட்டத்தில் யாழ் மாவட்டத்தின் தொழில் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன. உலக கனேடிய பல்கலை கழகம் என்ற அமைப்பு இதற்கு அனுசரணை வழங்கவுள்ளது.

08.06.2009, 09.40 PM

 

ஐரோப்பிய தேர்தலில் தேவஆதித்ய வெற்றி

ஐரோப்பிய யூனியன் பாரளுமன்ற தேர்தலில்; இலங்கையில் பிறந்த நிறஞ்சன் தேவஆதித்திய என்பவர் 80 ஆயிரம் மேலதி வாக்குகளால் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார். இவர் பிரிட்டனின் சிறந்த அரசியல்வாதியாக செயற்படுகின்றார். குறித்த தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளரான ஜனனி என்பவரை தோற்கடித்துள்ளார்.

08.06.2009, 09.15 PM

 

கைத்தொழில் அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

கைத்தொழில் அமைச்சர் குமார வெலகம இன்று (08.06.2009) காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, மருதனார் மடத்தில் உள்ள சீமெந்து தொழிற்சாலை அலுவலகம், குருநகரில் உள்ள சீநோர் நிறுவனம் என்பவற்றை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன் போது சீநோர் நிறுவன இயக்குனர் சபைத் தலைவரும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருமான கே. கணேஸ் தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் சிநோர் மீன்பிடி நிறுவனத்தை புனரமைக்க 30 இலட்சம் ரூபாவை வழங்கவுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இயங்காதிருக்கும் ஐஸ் தொழிற்சாலை மீண்டும் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

 08.06.2009, 05.15 PM

 

புதிய நீதியரசர் பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் புதிய நீதியரசருக்கான பதவியேற்பு வைபவம் இன்று (08.06.2009) காலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையின் 32வது நீதியரசராக அசோக்க டி சில்வா ஜனாதிபதி முன்னிலையில் புதிய நீதியரசராக பதவியேற்றுள்ளார். முன்பு நீதியரசராக இருந்த சரத் என் சில்வா ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

08.06.2009, 04.50 PM

 

யசூசி அகாசி மீண்டும் இலங்கை வருகை

இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி ஆகாசி இன்று (08.06.2009) இரவு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் 4 நாட்கள் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி, உளிட்ட பல உயர் அதிகரிகளையும், எதிர்க்கட்சியினைரயும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள் குடியேற்றம், அபிவிருத்தி, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பு என்பன குறித்தும் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது. இவர் நாடு திரும்புவதற்கு முன் ஊடகவியலாளர் சந்திப்போன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக யப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

08.06.2009, 04.30 PM

 

இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வினை

வழங்கவேண்டும் உள்த்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவிப்பு

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டிய அதிகாரப் பகிர்வு குறித்து விரைவில் முடிவெடுக்க வேணடும் என இந்திய உள்த்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று (07.06.2009) சந்தித்து பேசியதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் பாதுகாப்பு நிலைவரம், இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை, அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு செய்யப்படவேண்டிய உதவிகள், மீள்குடியேற்றம், அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய அதிகார பகிர்வுகள் குறித்தும் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்படவேண்டும், வீடுகளை இழந்தவர்களுக்கு அதனை மீள அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வேலைத்திட்டங்களில் இலங்கை அரசு விரைந்து செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

08.06.2009, 04.10 PM

 

கப்டன் அலி கப்பல் திருப்பி அனுப்பப்படவுள்ளது.

கப்டன் அலி கப்பல் நிவாரணப் பொருட்கள் இறக்கப்படாமலேயே திருப்பி அனுப்பப்படவுள்ளதாக ஏ எப் பி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கப்பல் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என தெரிவித்து நிவாரண பொருட்களுடன் இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்ததை அடுத்து கடற்படையினர் இதனை கைப்பற்றியுள்ளர். கப்பலில் நடத்தப்பட்ட சோதனையின் போது சட்டவிரோத பொருட்கள் எவையும் இருக்கவில்லை எனவும் நிவாரணை பொருட்களே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கப்பலை பொருட்கள் எதனையும் இறக்காது நாட்டை விட்டு செல்லுமாறு அதிகாரிகள் பணித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

08.06.2009, 03.45 PM

 

சரணடைந்த புலி உறுப்பினர்கள் சர்வதேச மனிதாபிமான

சட்டங்களுக்கு அமைவாக நடத்தப்படவேண்டும்

சரணடையும் புலி உறுப்பினர்களை சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக பேணப்படவேண்டும் என வாழைச்சேனை மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் கணேசராஜா இன்று (08.06.2009) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 28ம் திகதி வாகரை பகுதியில் படையினரிடம் சரணடைந்த கொண்டையன் கேணியை சேர்ந்த கணபதிப்பிள்ளை அமரசிங்கம் (புகளேந்தி), வாகனேரியை சேர்ந்த பரமக்குட்டி சாமுவேல் (சரண்), முள்ளிவெட்டுவானைச் சேர்ந்த செல்லப்பா சிவானந்தன் (ராகுலன்) ஆகியோர் தொடர்பான மனுக்களை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை அடுத்து அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர் படுத்தாது இந்த மனுவை சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 29ம் திகதி இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.

08.06.2009, 03.20 PM

 

ஏ9 வீதியூடாக பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதி

கொழும்பில் இருந்து ஏ9 வீதியூடாக அனைத்து பொருட்களையும் யாழ் குடாநாட்டிற்கு எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ் வர்த்தகர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேசியதை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் 11ம் திகதி வர்த்தகர்களுக்கு சொந்தமான 120 லொறிகளில் யாழ்ப்பாணத்திற்கு பொருட்கள் எடுத்து செல்லப்படவுள்ளது.

இந்த பொருட்கள் அனுராதபுரத்தில் லொறிகளும் படையினரால் சோதனையிடப்பட்டு சீல் வைக்கப்படும் பின்னர் முகமாலை பகுதியில் லொறிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் இந்த சீல்கள் விலக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
 

08.06.2009, 10.30 AM

 

இ.பெயர்ந்த மாணவர்கள் பரீட்சையில் தோற்ற நடவடிக்கை

இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மாணவர்களில் 1000 பேர் வரையில் இம்முறை கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாணவர்கள் பரீட்சையில் தோற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஒரு கட்டமாக பரீட்சையில் தோற்றவுள்ள இந்த மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென ஆட்களை பதிவுசெய்யும் ஆணையாளருடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு விசேட திட்டம் ஒன்று நடடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை பரீட்சையின் போது தேசிய அடையாள அட்டை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டள்ளது. கடவுசீட்டும் சமர்ப்பிக்க முடியும், இது சம்மந்தமாக நாட்டின் அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அடையாள அட்டைகளோ, அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்களோ ஏற்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

08.06.2009, 10.05 AM

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை நிராகரிப்பு

யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைகளுக்கான உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ் கட்சிகள் இணைந்து செயல்ப்படவேண்டும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வேண்டுகோளை ஏற்க முடியாது என தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர் வி. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தன்னை சந்திப்பு பேசியதாக அவர் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இது தொடர்பில் முன்வைத்துள்ள பிரேரணைகளை தாம் நிராகரிப்பதாகவம் தற்போது அவர்களுடன் இணைந்து செயற்படுவதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என கருதுவதாலேயே இவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியை படையினர் மீட்கும் நிலையில் உள்ளபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் புலிகள் மீது அழுத்தங்களை கொடுத்து மக்களை விடுவிக்கச் செய்யுமாறு கோரியதாகவும், அவர்கள் அவ்வாறு செயற்பட்டிருந்தால் பல மக்களின் உயிர்களையும் உடமைகளும் இழக்கப்படுவதை தடுத்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

07.06.2009, 10.15 PM

 

வவுனியா பம்பை மடுவில் தேடுதல்

வவுனியா பம்பைமடு பகுதியில் படையினர் நேற்று (06.06.2009) தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன் போது கைக்குண்டு 02, கையடக்க தொலைபேசி 01, மற்றும் பல பொருட்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

07.06.2009, 10.00 PM

 

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும்

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியில் தீர்வைக்காண்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியாக இருக்கின்றார் என்பதனை வெளிப்படுத்த அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க செனட் சபை உறுபினர் ரஸ் பெய்ங்கோல்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட் சபையில் கடந்த 4ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது. இலங்கையில் அமைதி ஏற்படவும், தமிழர்கள் உட்பட அனைத்து மக்களும் மரியாதையுடன் நடத்தப்படுவதற்கும் நிதியுதவியினை வழங்கும் நாடுகள் தீவிரமாக செயல்ப்படவேண்டும் அத்துடன் இலங்கையில் நிரந்தர தீர்வொன்றை எட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
 

07.06.2009, 05.30 PM

 

ஜனாதிபதி மியன்மாருக்கு விஜயம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மியன்மாருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மியன்மாரில் 2008ம் ஆண்டு ஏற்பட்ட நர்க்கிஸ் புயலில் பாதிக்கப்பட்டு மீள புனரமைக்கப்பட்ட கிராமம் ஒன்றை ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கிராமத்தின் நிர்மாணப்பணிகளுக்கென இலங்கை பிக்குமார் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

07.06.2009, 05.10 PM

 

இடம்பெயர்ந்த மக்களுக்கு வைத்திய சேவை

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இடம்பெயர்ந்த மக்களுக்கு வைத்திய சேவையினை மேம்படுத்தும் நோக்கில் மேலதிகமாக 15 தாதியர்கள் எதிர்வரும் 11ம் திகதி வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அஜித் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தொற்றுநோய் பிரிவில் விசேட பயிற்சி பெற்ற தாதியர்கள் சிலர் அனுராதபுரம் வைத்தியசாலையில் இருந்து வவுனியா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் எதிர்வரும் 10 திகதி வவுனியாவிற்கு செல்லவுள்ளனர். வவுனியா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று (06.02.2009) இடம்பெற்ற வைத்தியர்களுக்கான சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் பசுபதிராஜா பவானி, பிராந்திய சுகாதார பணிப்பாளர் மகேந்திரன், வடமாகாண சுகாதார திட்டமிடல் அதிகாரி கார்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

07.06.2009, 04.40 PM

 

கப்டன் அலி கப்பல் விடுவிக்கப்படும்

கப்டன் அலி கப்பல் விடுவிக்க இருப்பதாக பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த கப்பலில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கடற்படைஅதிகாரிகள் மனிதாபிமான பொருட்கள் மாத்திரமே இருக்கின்றது என உறுதிப்படுத்தும் பட்சித்தில் அக்கப்பல் விடுவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற சோதனை நடவடிக்கைகளின் போது எதுவிதமான சட்டவிரோத பொருட்களும் மீட்கப்படவில்லை. எனவே இது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக அவர் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபினமான உதவிப் பொருட்களை கொண்டு வந்ததாக கூறி பிரான்சில் இருந்து வந்த கட்படன் அலி கப்பல் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்ததை அடுத்து கடற்படையினர் அதனை கைப்பற்றினர்.

07.06.2009, 04.00 PM

 

புலிகள் வழங்கிய காணி அதிகாரம் ஏற்றுகொள்ள முடியாது

வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது அவர்களால் வழங்கப்பட்ட காணி அதிகாரங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் இவர்களால் வழங்கப்பட்ட காணிகள் மீள சுவீகரிக்கப்படவுள்ளது. மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் பெறுமதி வாய்ந்த காணிகளை புலிகள் தமது உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புலிகளின் முகாம்கள், பயிற்சி முகாம்கள், கடற்படைத்தளங்கள், விமான நிலையங்கள், ஓடுபாதைகள், மற்றும் நிர்வாக கட்டிடங்கள் என்பன அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படவுள்ளது.

 

07.06.2009, 11.00 AM

 

திருகோணமலையில் மக்கள் மீள்குடியேற்றம்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, உப்பாறு ஆகிய பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்று (07.06.2009) மீள் குடியமர்த்தப்படவுள்ளனர். இந்த பகுதியில் ஏற்பட்ட யுத்த அனர்த்தம் காரணமாக 1990ம் ஆண்டு மக்கள் வெளியேறி கிண்ணியாவின் பல பகுதிகளில் வாழ்கின்றனர். அரசாங்கத்தின் மீள்குடியேற்றும் இந்த நடவடிக்கைக்கு கிண்ணியா பிரதேச செயலாளர் எம். முபாரக் தலைமை தாங்கவுள்ளார்.

07.06.2009, 10.45 AM

 

நலன்புரி நிலையங்களில் 3 புலிகளின் உளவுப்

பிரிவினர் தங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா முகாமில் இருந்து புலிகளின் சர்வதேச உளவுப் பிரிவின் நோர்வே கிளையின் உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவேகானந்தன், ஆனந்தராஜா, சாமி அகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நோர்வேயில் உள்ள புலிகளின் வலையமைப்பின் உறுபினர்கள் எனவும் முள்ளி வாய்க்கால் பகுதியில் இருந்து நோர்வே அதிகாரிகளுக்கு இவர்களே தகவல்களை வழங்கி வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீட்டு தரும்படி அவர்களின் பெற்றோர் நோர்வே அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கையை அடுத்தே இவர்கள் முகாம்களில் இருந்தமை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நோர்வே பிரஜா உரிமை பெற்ற மேலும் 3 பெண்கள் நலன்புரி நிலையங்களில் இருப்பதாக நோர்வே தரப்பினர் இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளனர்.

 

07.06.2009, 09.00 AM

 

பொஸன் பண்டிகை கொண்டாடப்படுகிறது

பொஸன் பண்டிகை இன்று (07.06.2009) பௌத்த மக்களினால் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் விசேட நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. இத்தினத்தில் பக்தர்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இத்தினத்தில் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பொஸன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பௌத்த பக்தி கீத நிகழ்வு ஒழுங்கு செய்யபப்பட்டுள்ளது. இந்தனை கேணல் கீர்த்தி கொஸ்தாவின் தலைமையிலான 511வது படைப்பிரிவினரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தின் பலாலி சேவை பிரிவினரும் இணைந்து ஒழுங்கு செய்துள்ளனர். இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், 511வது படைப்பிரிவினர் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் சிங்களம் மற்றும் தமிழில் பக்தி கீதங்கள் இசைக்கப்படவுள்ளது.

07.06.2009, 08.45 AM

 

தேசிய யுத்தவீரர் தினம் இன்று

தேசிய யுத்தவீரர்கள் தினம் இன்று (07.06.2009) நினைவு கூரப்படுவதாக  இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார  தெரிவித்துள்ளார். இதங்கான நிகழ்வுகள் சிறி ஜெயவர்தன புரக்கோட்டை பாராளுமன்ற விளையாட்டு அரங்கில் பிற்பகல் இடம்பெறவுள்ளது. நாட்டிற்காக உயிர் நீத்த 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இதன்போது நினைவு கூரப்படுவதாக அவர் கூறினார்.

07.06.2009 08.30 AM

 

வன்முறையை தூண்டும் செய்திகளை வெளியிடக்கூடாது

ஊடகங்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் செய்திகளை விடுத்து இனங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடுமாறு தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (06.06.2009) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுவதன் மூலம் மீண்டுமொரு பயங்கரவாத அமைப்பு உருவாகலாம். செய்திகள் ஆத்திரத்தை தூண்டும் வகையில் இருக்கக்கூடாது எனவே நிதானமாக செய்திகள் வெளியிடப்படவேண்டும் என ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களுக்கு ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. மோதல் இடம்பெற்ற பகுதிகளில் மிதிவெடிகள் அகற்றப்பட்டதும் அங்கு மக்கள் மீள் குடியமர்த்தப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

06.06.2009, 09.55 PM

 

இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி குறித்து புதிய

செயலணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கென புதிய செயலணி ஒன்று நேற்று (05.06.2009) அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலணிக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த தலமை தாங்குகின்றார். இதில் பிரதிக் கல்வியமைச்சர் சச்சிதானந்தமும் உறுப்பினராக உள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த தலைமையிலான உயர்மட்டக்குழு நேற்று வவுனியா சென்று இடம்பெயர்ந்த மாணவர்களின் நிலை குறித்து ஆராய்ந்துள்ளது. அமைச்சரின் தலைமையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் இதற்கான மாநாடு இடம்பெற்றுள்ளது. இதில் கல்வி அமைச்சர் சுசில்பிரேம் ஜெயந்த, அமைச்சர் ரிசாட்பதியுதீன், பிரதிஅமைச்சர் சச்சிதானந்தன், மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டின் போது இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கல்வி, மற்றும் அதில் உள்ள குறைபாடுகள் குறித்து இந்த செயலணி ஆராய்ந்து நடவடிக்;கை எடுக்கவுள்ளது.

இங்கு நிலவும் பிரச்சனைகள் குறித்து வவுனியா மாவட்ட கல்விப்பணிப்பாளர் திருமதி ரஞ்சினி ஒஸ்வோல்ட் விளக்கியுள்ளார். இதற்கு பதிலளித்த அமைச்சர் இந்த பிரச்சனைகள் குறுகிய காலத்தில் நிவர்த்தி செய்யப்படும்; வவுனியாவில் உள்ள 17 பாடசாலைகளில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் 6வது நிவாரண கிராமத்திற்கு மாற்றப்படவுள்ளனர். அதன் பின்னர் 17 பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கை வழமைபோல இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

06.06.2009, 09.30 PM

 

இடம்பெயர்ந்த மக்களுக்கு மியன்மார் உதவி

இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு மியன்மார் அரசாங்கம் முன்வந்துள்ளது. இதன் முதற்கட்டமாக 50ஆயிரம் அமெரிக்க டொலர் நிதியினை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளதாக மியன்மார் தூதரகம் தெரிவித்துள்ளது. இது இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கே செலவு செய்யப்படவுள்ளதாக தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

06.06.2009, 09.10 PM

 

மன்னாரில் மக்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மக்களை 2ம் கட்டமாக மீள்குடியமர்த்தும் பணிகள் இடம்பெறவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 561 குடும்பங்களை சேர்ந்த 2120 பேர் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை எதிர்வரும் 9ம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

06.06.2009, 06.45 PM

 

மூதூர் மக்கள் அகதி அந்தஸ்தை இழக்கலாம்

யுத்தம் காரணமாக திருகோணமலை மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிளிவெட்டி நலன்புரி நிலையங்களுக்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் தமது அகதி அந்தஸ்தினை இழக்க நேரிடலாம் என கிழக்கு மாகாண மீள் குடியேற்ற இணைப்பதிகாரி அருணாசலம் செல்வேந்திரன் அறிவித்துள்ளார்.

மூதூர் கிழக்கு பகுதி உயர் பாதுகாப்பு வயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினால் அந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 750 குடும்பங்களை சேர்ந்த 2500 பேர் கந்த 3 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 11 முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மாகாண ஆழுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்திற்கு இடமளிக்கப்படமுடியாது. இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரிடம் தெரிவிக்கப்படும் எனவும் ஆழுநர் தெரிவித்துள்ளதாக செல்வேந்திரன் குறிப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் கிரிமுட்டி, பாலச்சோலை, மாவடிவேம்பு, ஆகிய முகாம்களிலிருந்து 102 குடும்பங்களை சேர்ந்த 493 பேரை கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் 6 குடும்பங்களை சேர்ந்த 27 பேர் மட்டுமே சென்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

06.06.2009, 06.20 PM

 

யாழ்ப்பாணத்தில் ஆயுத கிடங்கு தீப்பற்றியுள்ளது

யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் படையினரின் ஆயுதக் கிடங்கு தீப்பற்றியுள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்தாகவும் அவர் மேலும் கூறினார்.

06.06.2009, 5.45 PM

 

சட்டத்தில் பௌத்தம் சிங்களம் என்று எதுவும் இல்லை

பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இன்று (06.06.2009) தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுகின்றார். இவர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மநாட்டின் போது நீதியில் சிங்களம், பௌத்தம் என ஒன்றும் இல்லை. எல்லா இனமும் சமயமும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் ஓர் இனவாதியாக செயற்படவில்லை ஓர் இலங்கையனாக மட்டுமே இருந்தேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு ஏற்ற நீதி மற்றும் சமூக கட்டமைப்புகள் மூலம் சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு வழங்காவிட்டால் ஆயுதப்போராட்டத்திற்கு பதில் வேறொரு கிளர்ச்சி வெடிக்கும் சாத்தியங்கள் உள்ளதாக கூறினார். எனினம் சரியான முறையில் தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை சந்திக்க நேரிடலாம் என குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தச் சட்டம் பெரியதொரு ஆய்வோ அல்லது யோசனையோ செய்து இயற்றப்படவில்லை. இந்திய அரசியல் அமைப்பை கொண்டு அது இயற்றப்பட்டது. இந்தியாவில் இது ஏற்புடையது எனினும் இலங்கையில் அது ஏற்புடையதல்ல. பொலிஸ் அதிகாரத்தை பரவலாக்கினால் பொலிஸ்மா அதிபர் அதிகாரம் அற்றவராகவே இருப்பார். மாகாணங்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்து விட்டு அவர் வெறுமனே இருக்க வேண்டும். இது போல் காணி விவகாரமும் உயர்வானது. எனவெ 13வது திருத்த சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளது. இலங்கையில் மாகாணங்களுக்கு உரிய எல்லைகள் சரியாக வரையறுக்கப்படவில்லை இது இல்லாமல் எதனையும் செய்ய முடீயாது. சகல மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும்.

நலன்புரி நிலையங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களை சுதந்திரமாக நடமாட இடமளிக்க வேண்டும் இல்லையேல் சர்வதேசத்தின் அவமதிப்பை பெற நேரிடும் என அவர் கூறியுள்ளார்.

 

06.06.2009, 05.10 PM

 

அம்பாறையில் இரு புலிஉறுப்பினர்கள் பலி

அம்பாறை மாவட்டம் குடும்பிக்குளம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் புலிகளின் குழுஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் இதன் போது 2 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தொவித்துள்ளது. புலிகளை தேடி அழிக்கும் பணியில் ஈடுபடப்டுள்ள விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் மறைந்திருந்த புலிகளை சுற்றிவளைத்தபோது படையினர் மீது இவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து படையினரும் தாக்குதல் நடத்தியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த மோதலை அடுத்து நடத்தப்பட்ட தேடுதலின் போது புலிகளின் சடலம் 02, ரி56ரக துப்பாக்கி 01, உணவுப்பொருட்கள் ஒரு தொகுதி, மற்றும் பல பொருட்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

06.06.2009, 04.45 PM

 

மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் படையினர் தேடுதல்

மட்டக்களப்பு உன்னிச்சை காட்டுப்பகுதியில் படையினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன் போது புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகுதி ஆயுதங்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2 கிலோக்கிராம் எடையைகொண்ட கிளைமோர் குண்டுகள் 05, ரி56 ரகத் துப்பாக்கி 01, கைக்குண்டுகள் 10, ஆர் பி ஜி குண்டு 01, என்பன மீட்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

06.06.2009, 04.20 PM

 

நீண்டநாள் வெற்றி கொண்டாட்டம் பாதகமானது

இலங்கையில் புலிகளுடனான யுத்தத்தில் கிடைத்த வெற்றியினை நீண்ட நாட்களுக்கு கொண்டாடும் செயற்பாடானது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்கி மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் 15 உறுப்பு நாடுகளுடனான சந்திப்பை அடுத்து நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டின் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். வெற்றிக் கொண்டாட்டங்களை மேற்கொள்வதை விட நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் கஸ்டங்களை பகிர்ந்து கொள்வதே தற்போது அவசியமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட 3 இலட்சம் வரையிலான மக்களுக்கு மனிதாபிமான முறையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். சிறுபான்மை மக்களது உரிமைகளை புரிந்து அதற்கு ஏற்ற வகையில் தீர்வுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குறித்து உலக நாடுகள் விடுத்துவரும் கோரிக்கைகளை இலங்கை அரசு சமாதானமாக அணுகவேண்டும். எந்த ஒரு இடத்திலும் மனிதஉரிமை மீறப்பட்டால் அல்லது குற்றம் சுமத்தப்பட்டால் அங்கு நியாயமான பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டியது அவசியமான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
 

06.06.2009, 09.45 AM

 

யாழ்தேவி ரயில் தாண்டிக்குளம் வரை பயணம்

யாழ்தேவி ரயில் வவுனியா ரயில் நிலையத்திற்கு அடுத்துள்ள தாண்டிக்குளம் ரயில் நிலையம் வரை பயணிக்கின்றது. இதன் அடிப்படையில் இன்று (06.06.2009) காலை 6.10 மணியளவில் இந்த ரயில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புற்றபட்டுள்ளது. இது இன்று பிற்பகல் தாண்டிக்குளத்தை சென்றடையும். இந் நிகழ்வானது 20 வருடங்களின் பின்னர் இடம்பெறுவது குறிப்பிடத்க்கது.

யாழ்தேவி ரயில் முதன்முதல் 1956ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டு சென்றது. பின்னர் புலிகளின் தாக்குதல் காரணமாக 1990ம் ஆண்டு யூலை 13ம் திகதி இந்த ரயில் பயணம் கொழும்பில் இருந்து வவுனியா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து கொழும்பு யாழ் ரயில் சேவை முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த ரயில் சேவையை மீள ஆரம்பிக்கும் நோக்கில் அதற்கான வேலைத்திட்டங்கள் கடந்த மார்ச்மாதம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வவுனியாவில் இருந்து யாழ் காங்கேசன்துறை வரையிலான 159 கிலோமீட்டர் தூரமான பழுதடைந்துள்ள ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் 2010 ம் ஆண்டு நிறைவடையும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். புனரமைக்கப்படவுள்ள பகுதியில் 5 பிரதான ரயில் நிலையங்களும், 4 உப ரயில் நிலையங்களும், 16 ரயில் தரிப்பிடங்களும் உள்ளன அத்துடன் இந்த ரயில் பாதையில் அமைந்துள்ள மதகுகள், பாலங்கள் என்பனவும் புனரமைக்கப்படவுள்ளது. இதற்கென 14 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று ஓமந்தை ரயில் நிலையத்தின் மீள் புனரமைப்பு பணிகள் போக்குவரத்து பிரதி அமைச்சர் லயனல் பிரேமசிறியின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

06.06.2009, 09.30 AM

 

கப்டன்அலி கப்பலில் உள்ள பொருட்களை இலங்கை அரசுடன்

இணைந்து மக்களுக்கு வழங்க விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஐரோப்பாவில் உள்ள தமிழ் மக்களினால் அனுப்பப்பட்டதாக கூறப்படும் பொருட்களை எடுத்து வந்த கப்டன் அலி கப்பல் தற்பொழுது கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதில் பயணம் செய்த இலங்கை கோர்நிறுத்த கணக்காணிப்பு குழுவில் உறுப்பினரகா இருந்தவரும் ஐஸ்லாந்து நாட்டை Nர்ந்தவருமான கிருஸ்டன் வுட்மன் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கப்பல் சம்மந்தப்பட்ட ஆவணங்களின் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. அத்துன் கப்பலில் வந்தவர்கள் மிகவும் நன்றாக நடத்தப்படுகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டமானது மனிதாபிமான அடிப்படையிலான உதவியே என இந்த திட்டத்தின் தலைவரான அர்ஜூனன் எதிர்வீரசிங்கம் தெரிவித்துள்ளார். இந்த மினிதாபிமான உதவிப் பொருட்களை மக்களுக்கு வழங்கும் பணியினை இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக பிபிசி மேலும் தெரிவித்துள்ளது.

06.06.2009, 09.10 AM

 

இலங்கை யுத்தம் குறித்து விசாரணை

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என ஐநா மனிதஉரிமை ஆணைக்குழுவின் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது. இந்த யுத்தத்தின் போது அரசு, புலிகள் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கோரிக்கை விடுத்திருந்தார். இது சம்மந்தமாக சர்வதேச விசாரணைகள் தேவை என தெரிவித்துள்ள அவர் இதற்கான ஏற்பாடுகளையும் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.

இவரின் கோரிக்கையை இலங்கக்கான ஐ.நா தூதுவர் தயான் ஜயதிலக நிராகரித்துள்ளார். உலகில் போர்களின் போது தோல்வியடைந்தவர்களே இப்படியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இலங்கை படையினர் நாட்டின் எல்லைக்குள் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு எதிராக மட்டுமே யுத்தத்தை மேற்கொண்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

06.06.2009, 08.50 AM

 

அம்பாறையில் புலிஉறுப்பினர் சரணடைந்துள்ளார்.

அம்பாறை மத்தியமுகாம் பகுதியில் நேற்று (05.06.2009) மாலை 04.30 மணியளவில் புலி உறுப்பினர் ஒருவர் படையினரிடம் சரணடைந்துள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சின்னக்கடாபி என அழைக்கப்படும் குறித்த பகுதியின் பொறுப்பாளரான இவர் தனது குடும்பத்தினருடன் இவ்வாறுசரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான பொலிஸ் குழு இவர்களிடம் விசாரணை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

06.06.2009, 08.30 AM

 

பிரதம நீதியரசரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

பிரதம நீதியரசர் சரத் என்சில்வாவரின் பதவிக்காலம் இன்று (06.06.2009) முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரின் பதவி காலம் முடிவடைவததையிட்டு உத்தியோக பூர்வமாக கலந்துகொள்ளும் நிழ்வு இன்று இடம்பெறுகின்றது. இதன் அடிப்படையில் குறித்த பகுதயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதியை திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் 40 வருட சட்டத்துறை அனுபவங்களை கொண்டவரும், கடந்த 10 வருடங்கள் பிரதம நீதியரசராக சேவையாற்றுகின்றார். இவர் மன்றாடி தலைமை அதிகாரியாகவும், மேல் முறையீட்டு நிதிமன்ற நீதிபதியாகவும், பணியாற்றியுள்ளார்.

 

05.06.2009, 10.10 PM

 

புல்மோட்டை தளவைத்தியசாலை இடமாற்றம்

புல்மோட்டையில் இயங்கிவந்த இந்திய தளவைத்தியசாலை வவுனியா செட்டிக்குளம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கப்பல் மூலம் அழைத்துவரப்படும் காயமடைந்த நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்குடன் இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டது. தற்பொழுது அந்த நடவடிக்கை நிறைவடைந்ததை அடுத்து செட்டிக்குளம் பகுதியில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு மேலதிக மருத்துவ சேவையினை வழங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

05.06.2009, 09.45 PM

 

கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் அரசு உதவி

வடக்கு மாகாணத்தில் உள்ள கண்ணிவெடிகள், மற்றும் மிதிவெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் 1.4 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இதற்கான இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (04.06.2009) ஜனாதிபதி செயலகத்தில்; இடம்பெற்றுள்ளதாக யப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசகரும், வடக்கின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ச முன்னிலையில் வடக்கில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் டனிஸ் டெமினிங் குரூப், மற்றும் ஹலோ ட்ரஸ்ட் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் யப்பான் தூதுவர் குயினோ டக்காசி இந்த ஒப்பத்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார்.

05.06.2009, 09.25 PM

 

அனைத்து சமூகங்களுக்கும் சமனான பாதுகாப்பு

இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் சமமான பாதுகாப்பு சட்டரீதியாக வழங்கப்படவேண்டும் என பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். இவர் ஓய்வுபெறும் சந்தர்ப்பத்தில் நீதி அமைச்சில் இன்று (05.06.2009) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இவர் உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறும் முன் கலந்துகொள்ளும் நிகழ்வொன்று நாளை தம்புள்ளயில் நடைபெறவுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள நீதவான் நீதிமன்றத்தை இவர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

05.06.2009, 09.00 PM

 

இடம்பெயர்ந்து 58070 மாணவர்கள் வவுனியாவில்

இடம்பெயர்ந்து வந்து வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களில் 58 ஆயிரத்தி 70 மாணவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 5 நலன்புரி நிலையங்களிலும், 18 பொது இடங்களிலும் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கு என 1969 ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கதிர்காமர் கிராமத்தில் 4450 மாணவர்களும், அனந்தகுமாரசாமி கிராமத்தில் 12000ம் மாணவர்களும், இராமநாதன் கிராமத்தில் 14000ம் மாணவர்களும், அருணாச்சலம் கிராமத்தில் 10850 மாணர்களும், வலயம் 4இல் 7500 மாணவர்களும் தங்கியுள்ளனர் அத்துடன் நலன்புரி நிலையங்களில் 9270 மாணவர்களும் தங்கியுள்ளனர்.
 

05.06.2009, 04.45 PM

 

கல்வி அமைச்சர் வவுனியாவிற்கு விஜயம்

கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த இன்று (05.06.2009) வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. இந்த மாணவர்களுக்கென அமைச்சர், பாடசாலை சீருடை, தளபாடங்கள், மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பவற்றை வழங்கியுள்ளார். இந்த மக்களின் நிலை குறித்து மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கல்வி அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளார்.

05.06.2009, 04.30 PM

 

யாழ்தேவி ரயில் தாண்டிக்குளம் வரை செல்லவுள்ளது.

யாழ்தேவி ரயில் 20 வருடங்களின் பின்னர் தாண்டிக்குளம் வரைபயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை (06.06.2009) 5.45 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பயணித்து மீண்டும் தாண்டிக்குளத்தில் இருந்து கொழும்பிற்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளை ஓமந்தை ரயில் நிலையம் புனரமைக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ரயில் சேவையானது கட்டம் கட்டமாக யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கப்படவுள்ளது.

05.06.2009, 04.10 PM

 

நலன்புரி நிலையங்களில் 6 வெளிநாட்டவர்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட 6 வெளிநாட்டவர்கள் இதுப்பது தெரியவந்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளாhர். இதன் அடிப்படையில் 3 அவுஸ்திரேலியர்களும், மற்றும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒருவரும், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவரும், நோர்வே நாட்டை சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தார்களா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் கூறினார்.

05.06.2009, 03.50 PM

 

அங்கவீனமடைந்த படையினருக்கு அன்பளிப்பு

புலிகளுடனான யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த 200 படை வீரர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று (04.06.2009) முச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றதாக அரச தகல் தணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர் மேவின் சில்வா, பாதுகப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, உதவி பாதுகாப்பு செயலர் வில்லி கமகே, ரணவிரு அதிகார சபைத் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னான்டோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

05.06.2009, 09.45 AM

 

ஐநா பாதுகாப்புச்சபை ஐநா செயலர் பான்கிமூன் சந்திப்பு

ஐக்கியநாடுகளின் பொதுச் செயலர் பான்கி மூனிற்கும் ஐக்கியநாடுகளின் பாதுகாப்பு சபைக்கும் இடையில் இன்று (05.06.2009) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது இலங்கை விவகாரம் தெடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையின் பாதுகாப்பு, மற்றும் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. கடந்த 2ம் திகதி நடைபெற்ற ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இந்த சந்திப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

05.06.2009, 09.20 AM

 

மட்டக்களப்பில் ஒருவர் சுட்டுக் கொலை

மட்டக்களப்பு புதூர் பகுதியில் நேற்று (04.06.2009) மாலை 06.35 மணியளவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரான இராமலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 26) (மறவன்) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது வீட்டிற்கு வந்த ஆயததாரிகள் இவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த இவர் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

05.06.2009, 08.30 AM

 

கப்டன் அலி கப்பல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக பிரவேசித்த கப்டன் அலி என்ற கப்பல் நேற்று (04.06.2009) மாலை பாணந்துறை கடற்பரப்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல் தற்பொழுது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் டி. கே பி தஸநாயக்க தெரிவித்துள்ளார். இதில் பயணம் செய்தவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது கப்பலில் 884 மெற்றிக் தொன் உணவு, மற்றும் மருந்துப்பொருட்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கப்பல் சிரிய நாட்டு கொடியுடன் வந்தாக பிபிசி தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த கப்பலின் தலைவராக இலங்கையின் முன்னாள் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் ஐஸ்லாந்து நாட்டின் பிரஜை ஒருவர் இருந்துள்ளதாக பிபிசி மேலும் தெரிவித்துள்ளது.
 

05.06.2009, 08.00 AM

 

தமிழ் பிரமுகர்கள் ஜனாதிபதியை சந்திப்பு

இந்துமத தலைவர்களும், தமிழ் வர்த்தகர்களும் அலரிமாளிகையில் நேற்று (04.06.2009) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன் போது நாட்டை முழுமையாக பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். நாட்டில் சிறுபான்மை என்று எவரும் இல்லை என கூறிய ஒரே தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே என தெரிவித்துள்ளனர். நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச்சென்று நாட்டில் இன மத பேதங்களை இல்லாமல்செய்து நாட்டில் வறுமையை ஒழிக்கும் திட்டத்திற்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். இதில் 800 இற்கும் மேற்பட்ட இந்துமத தலைவர்களும், தமிழ் வர்த்தகர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

 

04.06.2009, 10.30 PM

 

புலி ஆதரவாளர்களின் கப்பல் படையினரால் மீட்பு

பிரான்சில் இருந்து புறப்பட்டு வந்து இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த கப்டன் அலி என்ற புலிஆதரவாளர்களின் கப்பலை இன்று (04.06.2009) அதிகாலை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கையின் கொழும்பு பகுதிக்கு 160 கிலோமீட்டர் தொலைவில் இந்த கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பதில் ஊடகப்பேச்சாளர் கொமான்டர் மகேஸ் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இந்த கப்பலில் 15 மாலுமிகள் இருந்துள்ளனர்.

இந்த கப்பல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து வருகின்ற போர்வையில் அத்துமீறி நுழைந்துள்ளதாக மகேஸ் கருணாரத்ன மேலும் தெரிவித்துள்ளார். முன்னர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்துக் கொண்டு பிரித்தானியாவில் இருந்து வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்ட வணங்கா மண் என்ற கப்பலின் பொருட்களும் பிரான்சில் வைத்து இந்த கப்பலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல் மே மாதம் 7ம் திகதி பிரான்சில் இருந்து புற்பட்டுள்ளது.

04.06.2009, 10.05 PM

 

யாழ்ப்பாணத்தில் 24 மணிநேர மின்சாரம்

யாழ்மாவட்டத்திற்கு 24 மணித்தியாலங்கள் மின்சாரத்தை வழங்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் டபிள்யு. டி. எ. செனவிரத்ன தெரிவித்துள்ளார். கடந்த கால அசாதாரண சூழ்நிலையால் பாதிப்படைந்திருந்த மின்சாரக் கட்டமைப்புக்களுக்கான வேலைத்திட்டங்கள் கடந்தவாரம் நிறைவடைந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார். யாழ் மாவட்டத்தில் இருந்து வந்த மின்வெட்டுக்கள் இனி வரும் காலங்களில் இருக்கமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

04.06.2009, 09.40 PM

 

ஐநா மனிதஉரிமை மாநாடு நடத்தப்படமை தவறு

ஐக்கியநாடுகள் மனிதஉரிமை சபையில் இலங்கை தொடர்பில் விசேட மாநாடு நடத்தப்படைமை தவறான செயல் என மனிதஉரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இதனை ஐக்கிய நாடுகள் சபையின் அணையாளரிடமும் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். ஊடகவியலாளர்களை கொழும்பில் இன்று (04.06.2009) சந்தித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த இதனை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிநாடுகள் மனித உரிமைசபையில் உரையாற்றும் போது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தெளிவு படுத்தப்பட்டுள்ளது. தேசிய பிரச்சனை தொடர்பில் அரசு நேர்த்தியாக செயற்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

4.06.2009, 09.25 PM

 

தேர்தலின் போது அடையாள அட்டை அவசியம்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைகளுக்கான தேர்தலின் போது வாக்காளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட எதேனும் ஒரு அடையாள அட்டைகளை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டின் 14காம் இலக்க விசேட சட்டத்தின் கீழ் இந்தனை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, வாகன அனுமதி பத்திரம், ரயில் பருவச்சீட்டுடனான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை என்பவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாத வாக்காளர்கள் கிராமசேவகர் ஊடாக தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையினை பெறவேண்டும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

04.06.2009, 05.00 PM

 

மட்டக்களப்பில் கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார்

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் கடத்தப்பட்ட பாதணி உற்பத்தி நிரலயத்தின் உரிமையாளரான கலந்தர் லெப்பை அஜ்மத் (வயது 38) என்பவர் இன்று (04.06.2009) விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் நேற்று அவரது வீட்டில் வைத்து வாகனம் ஒன்றில் வந்தவர்களால் கடத்தப்டிருந்தார்.

இவரின் இந்த கடத்தல் சம்பவத்தை கண்டித்தும் அவரை விடுவிக்க கோரியும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை, வர்த்தகநிலையங்கள், சந்தைப்பகுதி அரச அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் என்பன மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

04.06.2009, 04.30 PM

 

நலன்புரி நிலையங்களில் உள்ள மதகுருமார்களை

விடுவிக்கும் படி பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை

நலன்புரி நிலையங்களில் உள்ள கத்தோலிக்க மதகுருமாரை விடுவிக்குமாறு யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் பாதுகாப்பு அமைச்சிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முகாம்களில் அருட்தந்தைகளான பிரான்சிஸ் ஞானரான்; குருஸ், எட்டன் ரெஜினோல்ட், அல்பிரட் விஜய கமலன், எட்வேட் செல்வராஜா மரியதாஸ்,அந்தோனிப்பிள்ளை அன்ரன் அமல்ராஜ், அன்ரனி ஸ்ரிபன், ஆகியோர் தங்கியுள்ளனர். இவர்களை முகாம்களுக்கு வெளியே செல்ல அனுமதித்து அவர்கள் தம் பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், மன்னார் மறைமாவட்டங்களை சேர்ந்த இவர்கள் வன்னி மறைமாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு சேவை செய்து வந்துள்ளனர். பின்னர் இடம்பெற்ற அசம்பாவித்களை அடுத்து அங்கிருந்து வெளியேறமுடியாது போனது. இவர்கள் மக்கள் இடம்பெயாந்து படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும்போது அவர்களுடன் இணைந்து வந்து தற்பொழுது முகாமக்களில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

04.06.2009, 04.10 PM


திருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு

திருகோணமலை கண்ணாடிபுரம் பகுதியில் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சடலம் நேற்று (03.06.2009) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலின்படி மீட்கப்பட்டதாகவும் இந்த சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


04.06.2009, 03.30 PM

 

மட்டக்களப்பு மாவட்ட  அரச அதிபர் வீட்டில் கொள்ளை

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வீட்டில் நேற்று (03.06.2009) பகல் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆயுததாரிகள் சிலர் முகங்களை மூடியவாறு அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பணம், நகை உட்பட 15 இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச அதிபர் அலுவலகம் சென்ற நிலையில் வீட்டில் இருந்த அவரது மனைவியையும், உறவினர் ஒருவரையும் மிரட்டி அறை ஒன்றில் வைத்து பூட்டிவிட்டு அவர்களிடம் இருந்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

04.06.2009, 03.15 PM

 

இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் உள்ள மாணவர்களுக்கு கல்வி

இடம்பெயர்ந்து கொடிகாமம் இராமாவில் பகுதியில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (05.06.2009) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இங்குள்ள 720 மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை அரம்பிக்கப்படுகிறது. இந்த முகாம்களுக்கு அருகில் தற்காலிக வகுப்பறைகளை அமைப்பதற்கு யுனிசெவ் நிறுவனம் நிதியுதிவி வழங்கியுள்ளதோடு இதற்கான தளபாடங்களை வலிகாமம் கல்வி வலயம் வழங்கியுள்ளதாகவும் தொவிக்கப்படுகிறது. நாளை அரம்பிக்கப்படவுள்ள இந்த நிகழ்வின் போது யாழ் மாவட்ட அரச அதிபர், தென்மராட்சி வலய கல்வி அதிகாரிகள், யுனிசெவ் நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

04.06.2009, 02.50 PM

 

மட்டக்களப்பில் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் நேற்று ஐ03.06.2009) நள்ளிரவு ஒருவர் வெள்ளை வானில் வந்தவர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாதணி தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான கலந்தர் லெப்பை அஜ்மத் (வயது 38) என தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் நள்ளிரவு உறக்கத்தில் இருந்த வேளை அங்கு வாகனத்தில் வந்ந சிலர் இவரை பலவந்தமாக கடத்தி சென்றுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

04.06.2009, 02.30 PM

 

திருகோணமலை மாவட்டத்தில் மீள்குடியேற்றம்

திருகோணமலை மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பணிகள் இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் புனர்வாழ்வு புனரமைப்பு செயலகத்தின் உதவி திட்ட பணிப்பாளர் எ. எல். எம். சரீஸ் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், சேருவில, ஈச்சிலம் பற்று ஆகிய பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவடத்தில் தங்கியிருந்தவர்கள் இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இந்த பகுதியில் இருந்து 6554 குடும்பங்களை சேர்ந்த 19356 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 751 குடும்பங்களை சேர்ந்த 2586 பேர் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவடத்தின் செங்கலடி, கிரான் ஆகிய பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கியுள்ள 998 குடும்பங்களை சேர்ந்த 4013 பேரும் மீள குடியமர்த்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

04.06.2009, 02.00 PM

 

முதியவர்களை அழைத்து செல்வதில் புதிய நடைமுறை

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள வயோதிபர்களை அவர்களது உறவினர்கள் அழைத்து செல்வது தொடர்பில் புதிய நடைமுறை அமுலாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பொறுப்பான வடபிராந்திய பொலிஸ்மா அதிபரின் அனுமதியுடனேயே இந்த வயோதிபர்கள் விடுவிக்கப்படுவர்.

இதன் அடிப்படையில் 7 பக்கங்களை கொண்ட விண்ணப்பப் படிவம் பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வின்னப்பத்தில் முதியவரின் பெயர், பிறந்ததிகதி, பால், வயது, தேசிய அடையாள அட்டை இலக்கம், கடைசியாக வசித்த முகவரி, நிரந்தர முகவரி, தற்போது தங்கியுள்ள முகாமின் பெயர், பிரிவு, இலக்கம், வீட்டு இலக்கம் என்பன குறிபப்பிடப்படவேண்டும். அத்துடன் வெளியே பெறுப்பேற்பவரின் பெயர், பால், தேசிய அடையாள அட்டை இலக்கம், வயது, முகவரி, தொலைபேசி இலக்கம், கிராமசேவகரின் பெயரும் இலக்கமும், தொழில், தொழில் புரியும் முகவரி, என்பன குறிப்பிடப்படவேண்டும். வதியும் இடத்தை உறுதிப்படுத்த நீர், மின், கட்டண பில், அல்லது வங்கி கணக்கு புத்தகம் என்பன சமர்ப்பிக்கப்படவேண்டும் அல்லது வாக்காளர் இடாப்பின் போட்டா பிரதி ஒன்றில் சமாதான நீதவானால் உறுதிப்படுத்தப்பட படிவம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

கிராம உத்தியோகத்தரின் அறிக்கையில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பவர் குறித்த கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் கால எல்லையையும், அவரை நன்கு அறிவேன் எனவும் உறுதிப்படுத்த வேண்டும். இதனை சரி எனவும் உண்மை எனவும் பிரசே செயலாளர் உறுதிப்படுத்த வேண்டும்.

அடுத்து நலன்புரி நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரியின் அறிக்கை இடம்பெறும், விண்ணப்பதரி வதியும் இடத்தையும், வயதையம் உறுதிப்படுத்தி கையொப்பமிடவேண்டும். அத்துடன் நல்புரி நிலயத்தில் உள்ள வயோதிபருடனான உறவுமுறை, அவருடன் செல்வதற்கான சம்மதத்தையும் தெரிவித்து பொலிஸ் அதிகாரி முன் கையொப்பமிடவேண்டும். இதற்கு இரு சாட்சி கையொப்பங்களும் பெறப்படும்.

அடுத்து நலன்புரி நிலையத்தில் இருந்து செல்ல சிபார்சு செய்கிறேன் என அரசாங்க அதிபர் அல்லது மேலதிக அரசாங்க அதிபர் கையொப்பமிட்டு இலச்சினை பொற்றிக்க வேண்டும். இறுதியில் வடபிராந்திய பொலிஸ்மா அதிபர் அனுமதி வழங்கியதும் வயோதிபர் தனது உறவினர்களுடன் செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

 

04.06.2009, 09.15 AM

 

யசூசி அகாசி மீண்டும் இலங்கை வரவுள்ளார்.

ஜப்பானின் இலங்கைக்கான விசேடதூதுவர் யசூசி ஆகாசி எதிர்வரும் 8ம் திகதி 18வது தடைவையாக மீண்டும் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு படையினரால் முழுமையாக விடுவிக்கப்பட்டதை அடுத்து இவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல்தடவை என குறிப்படப்பட்டுள்ளது. யசூசி ஆகாசி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் போது இலங்கை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக ஜப்பானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

04.06.2009, 08.45 AM

 

உள்ளுராட்சி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று

யாழ் மாநகரசபை வவுனியா நகரசபைகளுக்கான உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (04.06.2009) வெளியிடப்படும் என மேலதிக தேர்தல் ஆளையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 18ம் திகதி தொடக்கம் 25ம் திகதி பகல் 12.00 மணிவரையும், சுயேட்சை குழுக்கள் எதிர்வதும் 18ம் திகதி தொடக்கம் 24ம் திகதி நண்பகல் 12 மணிவரையும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. இந்த வேட்பு மனுக்களை யாழ்ப்பாணம், மற்றும் வவுனியா அரச செயலகங்களில் ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2008ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின்படியே இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரசபையில் வாக்களிப்பதற்கு 100,417 பேரும் வவுனியா நகரசபையில் 24 626 பேரும் தகுதி பெற்றுள்ளனர். யாழ் மாநகரசபைக்கு 23 உறுப்பினர்களும் வவுனியா நகரசபைக்கு 12 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்த தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன.

 

03.06.2009, 10.15 PM

 

கொழும்பை அண்டிய பகுதிகளில் தேடுதல்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொலிஸாருடன் இணைந்து படையினர் மற்றம் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் கொழும்பு, வெல்லம்பிட்டிய, கிருலப்பனை, நாவல, நுகேகொட, நாரஹேன்பிட்ட, களனி, ஆகிய பகுதிகளில் இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள், நிறுவனங்கள், என்பன சோதனையிடப்பட்டுள்ளன. இந்த தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. விசாரணை முடிந்ததும் நீதிமன்றத்தில் ஒப்படைப்பபது, மற்றும் விடுதலை செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

03.06.2009, 09.50 PM

 

இலங்கை செல்லுமாறு மக்களை நிர்பந்திக்கக்கூடாது

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததை அடுத்து அங்கிருந்து அகதிகளாக வந்த மக்களை மீண்டும் இலங்கைக்கு செல்லுமாறு மத்திய அரசு நிர்ப்பந்திக்கக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளன் தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள தொலைக்காட்சி ஒன்றிற்கு நேற்று (02.06.2009) வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

03.06.2009, 09.30 PM

 

இலங்கையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்

இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட நாட்டின் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்கவுள்ளதாக இடர் முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நேற்று (02.06.2009) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை பேரவையின் 11வது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் வடக்கு மக்களுக்கும் பெற்று கொடுக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்த மக்களுக்கான அரசியல் தீர்வை மிக விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். இலங்கையில் நடைமுறைப்படுத்தவுள்ள அரசியல் தீர்வானது எந்த ஒரு நாட்டின் மூலமாக பெற்றதாக இருக்காது. வேறு நாட்டின் தீர்வு குறித்து பேசுவதற்கு காலஅவகாசம் போதாதுள்ளது. எனவே எமது நாட்டிற்குரிய ஒரு தீர்வையே நாம் காணவேண்டும். இதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவினை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

03.06.2009, 05.15 PM

 

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

பயங்கரவாதிகளை தோற்கடித்த படையினரை கௌரவிக்கும் வெற்றி விழா இன்று (03.06.2009) காலி முகத்திடலில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். புலிகளை தோற்கடித்து படையினர் பெற்றவெற்றியானது நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும். என குறிப்பிட்டுள்ளார் தமிழ் மொழியில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அன்பர்களே. இது நம் எல்லோருடைய தாய்நாடு. இந்த நாட்டில் எல்லோரும் ஒரு தாய் மக்களாக சகோதரர்கள் போல் வாழ வேண்டும். இங்கே எதுவித பேதமும் இருக்க முடியாது. புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல. விடுதலை புலிகளின் பிடியில் இருந்து அப்பாவி சகோதர தமிழ் மக்களை பாதுகாக்க எமது படைவீரர்கள் உயிர் நீத்தார்கள் அவர்கள் செய்த சேவையை மறக்க முடியாது. புலிகளை தோல்வியடையச் செய்து நாம் பெற்ற வெற்றி இந்த தேசத்தின் வெற்றி . நீங்கள் பெற்று தந்த பெரு வெற்றி, எமது நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் வெற்றி.; அன்பான படைவீரர்களே இப்போது பயங்கரவாதிகளுடன் செய்த யுத்தம் முடிந்துவிட்டது இனி நாம் எமது தமிழ் மக்களுடைய உள்ளங்களை வெற்றி கொள்ள வேண்டும் அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்கள் பயம் சந்தேகம் இன்றி வாழவேண்டும். அதுதான் நம் எல்லோயுடைய கடமை என தெரிவித்துள்ளார்.

03.06.2009, 04.45 PM

 

கல்முனை கல்வி வலயத்தில் பகிஸ்கரிப்பு

கல்முனை கலவி வலயத்திற்கு உட்பட்ட தமிழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இன்று (03.06.2009) கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை பகிஸ்கரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கல்வி வலயத்தில் கடந்த 1ம் திகதி தொடக்கம் நடமுறைக்கு வந்துள்ள ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளது. இந்த பகிஸ்கரிப்பானது கடந்த 1ம் திகதி தொடக்கம் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர்களின் கோரிக்கைக்கு வலயகல்வி அலுவலகம் வாய்மூலம் உறுதி அளித்துள்ள போதும். எழுத்து மூலம் உத்தரவாதம் தரும்வரையில் இந்த போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.

03.06.2009, 04.00 PM

 

இலங்கை தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்கப்படவுள்ளது. இது உத்தியோகபூர்வமான விவாதம் அல்ல என தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையி;ல் ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு சபை உறுப்பினர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்கி மூனுக்கும் இடையில் நடைபெறவுள்ளதாக ஐநாவுக்கான துருக்கியின் தூதுவர் பகி இல்கின் தெரிவித்துள்ளார். ஐநா பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பு துருக்கியிடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐநா பாதுகாப்பு சபையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனா இலங்கை விவகாரத்தில் அண்டை நாடுகளோ, சர்வதேச சமுதாயமோ தலையிடக்குடாது என தெரிவித்துள்ளது. மனிதாபிமான உதவிகளை வேண்டுமானால் வழங்கலாம். இலங்கை பிரச்சனையை இலங்கையே பர்த்துக் கொள்ளும் என சீனா தெரிவித்துள்ளது.
 

03.06.2009, 09.45 AM

 

தேசிய வெற்றியின் விசேட நிகழ்வு இடம்பெறுகின்றது

கொழும்பு காலிமுகத்திடலில் இன்று (03.06.2009) நாட்டின் தேசிய வெற்றியை கொண்டாடும் விசேட நிகழ்வு இடம்பெறுகின்றது. இதில் மாபெரும் இராணுவ பேரணி ஒன்று நடைபெறவுள்ளது. இரண்டாவது உலக்ப்போரின் பின்னர் இலங்கையில் கொட்டாடப்படும் முதலாவது மிகப்பெரிய இராணுவப் பேரணி இதுவாகும்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன் நாட்டு மக்களுக்கு விசேட உரைஒன்றையும் நிகழ்த்தவுள்ளார். முப்படையினரும் இதன் போது பங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதற்கான உத்தியோகபூர்வ பத்திரங்களை ஜனாதிபதியிடம் வழங்கவுள்ளனர். மேலும் கலச்சார நிகழ்வுகளும் கடற்படையினரும் விமானப்படையினரும் சாகசங்களும் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வையொட்டி விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

03.06.2009, 09.30 AM

 

அமெரிக்கா பயங்கரவாத்திற்கு ஆதரவாக  செயற்படவில்லை

அமெரிக்க அரசாங்கம் இலங்கையுடன் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதாக அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரம சூரிய தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஒருபோதும் பங்கரவாத்திற்கு ஆதரவாக செயற்படவில்லை. இதன் அடிப்படையில் அமெரிக்காவின் குற்றபுலனாய்வு பிரிவு, மற்றும் பாதுகாப்பு திணைக்களம் என்பன புலிகளுக்கு எதிராக செயற்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் புலிகளுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்ட தமிழர் புனர்வாழ்வு கழகமும், தமிழ்மன்றம் என்பன அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

03.06.2009, 09.10 PM

 

கல்முனைப்பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு கல்முனை பாண்டிருப்பு பகுதியில் நேற்று (02.06.2009) காலை விசேட அதிரடிப்படையினரும், படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன் போது இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள மக்கள் பாண்டிருப்பு மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டு ஆள்அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து 10.30 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது குறித்த இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸ்நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

02.06.2009, 10.50 PM

 

புலிகள் அழிக்கப்பட்டதை அடுத்து ஜனநாயம் உருவாகியுள்ளது

புலி பயங்கரவாதம் அழிக்கப்பட்டதை அடுத்து நாட்டில் ஜனநாயகம் உருவாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (02.06.2009) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் சர்வதேசநாடுகளுடன் நட்புறவுகளை பேணக்கூடியதாக உள்ளது. நலன்புரி நிலையங்களில் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இவர்களை விரைவில் மீள்குடியமர்த்துவதற்கான வேலைத்திட்டக்கங்களை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

02.06.2009, 10.35 PM

 

வவுனியா மாவட்டம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (02.06.2009) காலை இடம்பெற்ற விசேட கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கென ஒவ்வொரு பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும் 10 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. ஏனைய மாட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் வவுனியா மாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும். இந்த வேலைத்திட்டங்கள் இரு வாரகாலத்தில் ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் வவுனியா அரச அதிபர், மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

02.06.2009, 10.05 PM

 

வன்னியில் இருந்து 276,785 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வன்னியில் இருந்து இடம்பெயாந்து 2 இலட்சத்து 76 ஆயிரத்து 785 பேர் வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை ஆகிய பகுதிகளில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 2 ஆயிரத்து 317 பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வவுனியாவில் 29 நலன்புரி நிலையங்களில் 2 இலட்சத்து 56 ஆயிரத்து 287 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மனிக்பாம் பகுதியில் உள்ள 6 நலன்புரி நிலையங்களில் மட்டும் 2 இலட்சத்து 16 ஆயிரத்து 361 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மனிக்பாம் தவிர்ந்த ஏனைய பாடைசாலைகள் உள்ளிட்ட நலன்புரி நிலையங்களில் 39 ஆயிரத்து 924 பேர் தங்கியுள்ளனர். 72 ஆயிரத்து 934 பேர் மனிக்பாம் வலயம் 2 எனப்படும் நலன்புரி நிலையத்தில் மாத்திரம் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 11 நலன்புரி நிலையத்தில் 11 ஆயிரத்து 86 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் 6 ஆயிரத்து 892 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் 398 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் மன்னார் வைத்தியசாலையில் 1539 பேரும், அனுராதபுரம் பதிவிய வைத்தியசாலையில் 413 பேரும், பொலன்னறுவ வைத்தியசாலையில் 83 பேரும், மகரகம வைத்தியசாலையில் ஒருவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 57 பேரும், கண்டி வைத்தியசாலையில் 29 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக அந்த புளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

02.06.2009, 09.30 PM

 

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு அரசு கண்டனம்

இலங்கையின் ஊடகவியலாளரும், உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளருமான போத்தல ஜெயந்த தாக்கப்பட சம்பவம் குறித்து அரசாங்கம் கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகத்துறை அமைச்சில் இன்று (02.06.2009) இடம்பெற்ற செய்தியாளர் மநாட்டில் கலந்துகொண்ட ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் பத்திரிகையாளர் தாக்கப்படும் சபவங்களை அரசு ஒபோதும் அனுமதிக்கமாட்டாது. இந்த சம்பவம் தெடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

02.06.2009, 09.10 PM

 

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்

இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கு கொழும்பு புறக்கோட்டை வர்த்தக சங்கத்தினரும், இந்துமாமன்றமும், கொழும்பு பகுதியில் உள்ள பொதுமக்களும் இணைந்து நிவாரணப்பொருட்கள் வழங்கியுள்ளதாக இலங்கை இந்துமாமன்ற உதவிச் செயலாளர் நவரட்ணசாமி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான குழந்தைகளுக்கான பால்மா உட்பட பால்மாவகைகள், ஊட்டச்சத்துள்ள உணவுகள், பானங்கள், உடைகள், படுக்கை விரிப்புக்கள், பெண்களுக்கான சுகாதார பொருட்கள், பாடசாலை மணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், என்பன வழங்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் அனைத்தும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளபப்பட்ட போதும் அவர்களின் சில தேவைகள் கவனிக்கப்படவேண்டிய நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

02.06.2009, 05.15 PM

 

தேசிய விழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள முப்படையினரை கௌரவிக்கும் தேசிய நிகழ்வை முன்னிட்டு இன்றும் (02.05.2009) நாளையும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் சில பிரதான வீதிகளும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை இன்று இரவு 10 மணியில் இருந்து குறித்த வைபவம் முடிவடையும் வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சிகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வையொட்டி ரயில் சேவையிலும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி மருதானை தொடக்கம் பம்பலப்பிட்டிவரையான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது இன்று நள்ளிரவு தொடக்கம் நாளை பிற்பகல் 4 மணிவரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

02.06.2009, 04.45 PM

 

அடெல்பாலசிங்கத்தை கைதுசெய்ய நடவடிக்கை

அடெல்பாலசிங்கத்தை கைது செய்வது குறித்து இலங்கை அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் புலிகளின் அரசியல் ஆலோசகரான மறைந்த அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியாவார். அவுஸ்திரேலியாவை பிறப்பிடமாக கொண்ட இவர் ஒரு மருத்துவ தாதியுமாவார்.; அண்மையில் பிரிட்டனின் நாடாளுமன்றத் தொகுதி உள்ளிட்ட பல முக்கிய பிரதேசங்களில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது அதன் பின்னணியில் இருந்து அடெல் செயற்பட்டுள்ளதாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயற்பட்டவர் எனவும் சிறுவர்களை புலிகள் அமைப்பில் இணைத்தமை மற்றும் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பணிகளை மேற்கொண்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு இவர்மீது சுமத்தியுள்ளது. இததன் காரணத்தினால் அடெல் கைதுசெய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

02.06.2009, 04.15 PM

 

மோதல்களின் போது கொல்லப்பட்ட பொதுமக்கள்

தொடர்பில் ஐநா அலட்சிய போக்கை கடைப்பிடிக்கவில்லை

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவலையீனமாக செயற்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்கி மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்கள் தொடர்பில் ஐக்கயநாடுகள் சபை அலட்சியப்போக்கை கடைப்பிடிப்பதாக சர்வதேச நாடுகள் குற்றம் சுமத்தியிருந்தன. பொதுமக்கள் கொல்லப்பட்ட எண்ணிக்கை ஐக்கியநாடுகள் சபையினால் குறைத்து வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்களை ஐக்கியநாடுகள் சபை முற்றாக நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

02.06.2009, 03.45 PM

 

தமிழ்வாணியை விடுவிக்க நடவடிக்கை

வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரித்தானிய குடியுரிமை பெற்ற தமிழ் யுவதியான தமிழ்வாணி ஞானகுமார் (வயது 26) விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மோதல்கள் நடைபெற்ற போது புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மருத்துவப்பணியில் இவர் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் படையினரால் மீட்கப்பட்டபோது அவர்களுடன் சேர்ந்து வந்ததுள்ளார். இவரை விடுவிப்பதற்கு கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் தற்பொழுது வவுனியாவில் உள்ள ராமநாதன் நலன்புரி நிலையத்தில் தங்கியிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். முகாமில் உள்ள தமிழ்வாணியை சென்று பார்வையிட்டுள்ளதாகவம். அவர் தனது உறவினர்கள், மற்றும் நண்பர்களுடன் நலமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

02.06.2009, 10.05 AM

 

இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படவுள்ளது

வடமாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ள மாணவர்களுக்கான சீருடைகள், மற்றும் பாடசாலை உபகரணங்களை அனுப்பிவைக்கும் பணி இன்று (02.06.2009) தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் 30 ஆயிரம் சீருடைகளும், 75 மில்லியன் பெறுமதியான பாடபுத்தகங்கள், மற்றும் பாடசாலை உபகரணங்களும் அனுப்பிவைக்கப்படவுள்ளன. மேலும் பாடசாலை தளபாடங்கள், ஆசிரியர்களுக்கான உடைகள் என்பனவும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவை 25 லொறிகள் மூலம் பொலிஸாரின் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள மாணவர்களுக்கு கல்விப்பணிப்பாளர்கள் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

02.06.2009, 09.30 AM

 

இடம்பெயர்ந்த மக்களுக்கு விசேட அடையாள அட்டை

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கு இன்று (02.06.2009) தொடக்கம் விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இங்குள்ள பொதுமக்கள் தம்மை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ்திணைக்களம், மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு என்பன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

இந்த அடையாள அட்டையானது 10வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கம் வழங்கப்படுவதோடு அதனை வைத்திருப்பவரின் புகைப்படம், பெயர், முகவரி, தொழில் உட்பட கைவிரல் அடையாளமும் விசேடமாக பொறிக்கப்படவுள்ளது. இந்த அடையாள அட்டையில் மாற்றம் எதனையும் ஏற்படுத்த முடியாதவாறு கணனி தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்படவுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் யு எல் எம் கால்தின் தெரிவித்துள்ளார். இதன் முதற் கட்டமாக 60 ஆயிரம் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளது.

இந்த அடையாள அட்டை வங்கி கொடுக்கல்வாங்கல், நிவாரணப்பணிகள், மற்றும் மீள்குயேற்றப்பணிகளுக்கு மிகவும் தேவையான ஒன்று என கால்தீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

02.06.2009, 08.15 AM

 

பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு புனர்வாழ்வு

வடக்குமாகாணத்தில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ள பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கென புனர்வாழ்வு நிலையங்கள் அமைத்து அதில் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கதிட்டமிட்டுள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் ஆணையாளர் சரத் அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். நலன்புரி நிலையங்களில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் இங்கு 300ற்கும் அதிகமான சிறுவர்கள்; இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

வடமாகாணத்தின் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தியத்துடனும், பொலிஸ் திணைக்களத்துடனும் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

02.06.2009, 08.00 AM

 

பொலிஸாருக்கு தமிழ் மொழி பயிற்சிகள்.

பொலிஸாருக்கு தமிழ் மொழிபயிற்சிகளை வழங்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் தாம் விரும்பிய மொழியில் புகார்களை செய்யக்கூடிய வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் அடிப்படை உரிமையாகும். இந்த திட்டத்தித்தின் முதற்கட்ட வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

 

01.06.2009, 10.15 PM

 

வில்பத்து காட்டுப்பகுதியில் படையினர் தேடுதல்.

வில்பத்து காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கும் புலிகளை தேடி அழிக்கும் நடவடிக்கை ஒன்றை படையினர் மேற்கொண்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. குறித்த கட்டுப்பகுதியில் சிறு சிறு குழுக்களாக மறைந்துள்ள புலிகளை சரணடையுமாறு ஒலிபெருக்கிகள் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அவர்களிடம் இருந்து எந்தவிதமான பதில்களும் கிடைக்காததை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த காட்டு பகுதியில் இனந்தெரியாதவர்களின் நடமாட்டம் இருப்பதாக குறித்த கட்டுப்பகுதியை அண்டிய கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் பலர் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

01.06.2009, 10.00 PM

 

அரசியல் தலைவர்கள் பாரிய தவறு இழைத்துள்ளனர்.

முன்னைய அரசியல் தலைவர்கள் சிங்கள மொழியினை அரச கரும மொழியாக அமுல்படுத்தியதன் மூலம் பாரிய தவறை புரிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். நேற்று (31.05.2009) அம்பாறையில் இலங்கை போக்குவரத்து சபையின் டயர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்துவைத்து பேசுகையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

1958ம் ஆண்டு காலஞ்சென்ற பிரதமர் எஸ். டபிள்யு ஆர். டி பண்டாரநாயக்கா இலங்கை போக்குவரத்து சபையினை ஆரம்பித்து வைத்தார். இது நாட்டிற்கு அவரால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சேவையாகும். ஆனால் அவர் சிங்களமொழியை அரச கரும மொழியாக்கியதன் மூலம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ்மக்களை தனிமைப்படுத்த ஊன்றுகோலாக அமைந்துள்ளது. அத்துடன் ஆங்கில மொழியை முக்கிய மொழிகளில் இருந்து அகற்றியதன் மூலம் இலங்கை சர்வதேச சமூகத்துடன் இணையவிருந்த வாய்ப்பும் இல்லாமல் போயுள்ளது. என அமைச்சர் குறிப்பிட்டுளார். இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், இ. போ. சபை தலைமை அதிகரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

01.06.2009, 09.45 PM

 

ஊடகவியலாளர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளரான போத்தில ஜேயந்த இன்று (01.06.2009) மாலை சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இவர் நுகேகொட அம்பதெனிய பகுதியில் வைத்து இன்று மாலை 5.15 மணியளவில் வாகனம் ஒன்றில் கடத்தப்பட்டு தாக்குதல் நட்டத்தப்பட்ட பின் முன்னேரிய வைத்தியசாலை பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் தற்பொழுது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ளது.

01.06.2009, 09.30 PM

 

மணவர்களின் கல்வி தொடர்பில் விசேட கவனம்

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதன் அடிப்படயில் எதிர்வரும் 5ம் திகதி கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த வவுனியா முகாம்களுக்கு சென்று மாணவர்கள் கல்வி நடவடிக்கையின் போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து ஆராயவுள்ளார். அத்துடன் வவுனியா மாவட்ட பாடசாலை அதிபர்களுடன் சந்திப்பொன்றையும் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இடம்பெயர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கான சீருடைகள், 15 ஆயிரம் மாணவர்களுக்கான தளபாடங்கள், 500 ஆசிரியர்களுக்கான தளபாடங்கள் என்பவற்றையும் அமைச்சினூடாக வழங்கவுள்ளார்.

01.06.2009, 09.00 PM

 

மன்னாரில் கோணாறு பகுதியில் மீள்குடியேற்றம்

மன்னார் கோணாறுபண்ணையில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் இன்று (01.06.2009) மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் 35 குடும்பங்களை சேர்ந்த 150பேர் வரையில் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீள்குடியெற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மன்னர் மாவட்ட அரச அதிபர், பிரதேசசெயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

1990ம் ஆண்டு இந்த மக்கள் இடம்பெயர்நது வேறு இடங்களில் தங்யிருந்தனர். இதன்போது 50 மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

01.06.2009, 04.50 PM

 

முல்லைத்தீவு கிளிநொச்சிக்கு கட்டளை அதிகாரிகள்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு புதிய கட்டளை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் கிளிநொச்சிக்கான கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சரணகுணதிலக, முல்லைத்தீவிற்கான கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

 

01.06.2009, 04.30 PM

 

போரூட்  தலைவர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்

இலங்கையில் பணியாற்றிய போரூட் நிறுவனத்தின் தலைவரான நோர்வேயை சேர்ந்த ரான்வி டிவிட்டின்ஸ் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமையினால் இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு முரணாக செயற்பட்டார் என்ற காரணத்தினால் வெறியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் இராணுவ வெற்றிகளை கொண்டாடும் தேசிய தினத்தில் குறித்த நிறுவனத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடியை அகற்றுமாறு பணித்தமை, மற்றும் தேசிய விடுமுறை தினத்தன்று போரூட் பணியாளர்களுக்கு விடுமுறை வழங்க மறுப்பு தொவித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.

01.06.2009, 04.15 PM

 

முதியவர்கள் வெளியேறுவதற்கான பொறுப்பு பொலிஸாரிடம்

வவுனியாவில் இடம்பெயர்ந்து வந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அவர்களது உறவினர்களுடன் செல்வதற்கான அனுமதியை வழங்கும் பணி தற்பொழுது வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்பு இந்த பணியினை படையினர் மேற்கொண்டு வந்தபோதும் கடந்த வாரம் இது பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 2000 முதியவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் தனியானவர்கள், குடும்பங்குளுடன் இருந்தவர்கள், குடும்பத்தை பிரிந்து வாழ்பவர்கள் என பல தரப்பட்டோர் அடங்குகின்றனர். மேலும் முகாம்களில் பல முதியவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதியவர்களை அழைத்து செல்வதற்கு பலரும் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

01.06.2009, 03.30 PM

 

வவுனியாவில் 4 புலிஉறுப்பினர்கள் சரண்

வவுனியா ஆசைக்குளம் பகுதியில் நேற்று (31.05.2009) பகல் 01.30 மணியளவில் 4 புலிஉறுப்பினர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள் சர்வந்தன் செந்தூன் (தீலன்) வயது 22, விஜயதாஸன் பார்த்தீபன் (அரியநாதன்) வயது 22, ராசன்னை பிரதீபன் (ஆர்திகன்) வயது 21, தருணன் கமலதாஸன் (சிறானின்) வயது 22 என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் சரணடைந்துள்ளனர். இவர்களிடமிருந்து ரி56 ரக துப்பாக்கி 03, கைக்குண்டு 02, சைனட் வில்லை 01, என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

01.06.2009, 03.00 PM

 

மட்டக்களப்பு வாகரையில் தேடுதல்

மட்டக்களப்பு வாகரை பகுதியில் நேற்று (31.05.2009) பொலிஸார் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன் போது ரி56 ரக துப்பாக்கி 01, அதற்கான மகசீன் 01, ரவைகள் 30, எம் பி எம் ஜி ரவைகள் 776 என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாபப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 

01.06.2009, 10.45 AM

 

பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று நியமனம்

தேசிய பாடசாலைக்கான பட்டதாரி ஆசிரியர்களின் நிமனங்கள் வழங்கும் வைபவம் இன்று (01.06.2006) காலை 9 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இதன் அடிப்படையில் 860 பேருக்கு இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது. வடக்கு, கிழக்கு, மலையம் உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு 1500 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த நியமனங்களை வழங்கவுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

01.06.2009, 10.20 AM

 

ஐக்கியநாடுகள் சபையின் உதவிவழங்கும் மாநாடு இன்று

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கும் மாநாடு இன்று (01.06.2009) பின்லாந்தில் நடைபெறவுள்ளது. இலங்கை, மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகிளில் இடம்பெயாந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள நிதிவழங்குவது தொடர்பாக இதில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் நிதிவழங்கும் 21 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவி திணைக்களமும் இதில் கலந்துகொள்ளவுள்ளன. மேலும் மனிதாபிமான உதவிகளுக்கான தலைமை பதவியை ஏற்றுள்ள பின்லாந்து 2 மில்லியன் யூரொ நிதியினை மிதாபிமான உதவிகளுக்கு வழங்கியுள்ளது.

இந்த கூட்டத்தில் ஐக்கியநாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவி செயலர் யோன் ஹோம்ஸ் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

01.06.2009, 09.30 AM

 

கொழும்பில் சிலபாடசாலைகள் மூடப்பட்டுள்ளது

காலி முகத்திடலில் நடைபெறவுள்ள தேசிய வெற்றி விழாவினை முன்னிட்டு கொழும்பில் உள்ள 21 பாடசாலைகள் இன்று (01.06.2009) தொடக்கம் எதிர்வரும் 03ம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் றோயல் கல்லூரி, தேஸ்ரன் கல்லூரி, மஹாநாம கல்லூரி, யசோதரா மகளிர் கல்லூரி, பொல்லேங்கொட மாமனிய வித்தியாலயம், கொழும்பு தெற்கு டபிள்யூ. சேனநாயக்க கல்லூரி, லும்பினி மகாவித்தியாலயம், மாளிகாவத்தை பரோன் ஜயதிக்க வித்தியாலயம், அசோக்க வித்தியாலயம், கொம்பனி வீதியில் உள்ள ஹொலிரோஸ் வித்தியலயம், சிங்கள வித்தியாலயம், தமிழ் வித்தியாலயம், ஹரிபுத்திர வித்தியாலயம், டி. பி ஜயா மாகா வித்தியாலயம், அலி இக்பால் வித்தியாலயம், இஸ்பத்தான வித்தியாலயம், பொரளை சுசமயவர்த்தன வித்தியாலயம், பொரளை பண்டாரநாயக்க வித்தியாலயம், கெசல்வத்த அலி இஸ்லாம் மகாவித்தியாலயம், மாலபே ராகுல வித்தியாலயம், பத்தரமுல்ல ஸ்ரீ சுபித்தினி வித்தியாலயம், மாலபே ஆண்கள் வித்தியாலயம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

01.06.2009, 09.05 AM

 

காலி முகத்திடலில் தேசிய வெற்றிவிழா கொண்டாட்டம்

காலி முகத்திடலில் இராணுவ பேரணியும், நாட்டின் வெற்றியை கொண்டாடும் தேசிய விழாவும் எதிர்வரும் 3ம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமைதாங்கவுள்ளார். இந்த விழாவிற்கான அனைத்து வேலைதிட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வைபவத்தில் பிரதமர், அமைச்சர்கள், பாதுகாப்பு செயலர், முப்படையினர், பொலிஸ்மா அதிபர், சிவில்பாதுகாப்புப்படை பணிப்பாளர் நாயகம் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த வைபவத்தின் ஊர்வலங்கள் இன்றும் (01.06.2009) நாளையும் நடைபெறவுள்ளது. முப்படையினர், பொலிஸ், மற்றும் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் தேசிய வெற்றி என்ற இந்த பேரணியில் கலந்துகொள்ளவுள்ளனர். ஆயுதபலத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்த பேரணி அமையும். இந்த நிகழ்வை பர்வையிட வரும் மக்களுக்கு விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

01.06.2009, 08.45 AM

 

நாடு பூராகவும் வாக்காளர் பட்டியல் பரிசீலனை

வாக்காளர் பட்டியலின் 2009ம் அண்டிற்கான பரிசீலனை செய்யும் பணிகள் இன்று (01.06.2009) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது எதிர்வரும் 30 திகரிவரை நடைபெறவுள்ளது. நாடுமுழுவதும் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் ஊடக இந்த பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த நடவடிக்கையின் போது தகுதியற்ற பதிவுகள் இரட்டை பதிவுகள் நீக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


 

குமுறும் மலையகம்

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்

அறிக்கைகள்

துண்டுப்பிரசுரங்கள்

எங்கள் சின்னம்

 

அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகள்

 

தேர்தல் திணைக்களத்தால்

03 ஜுலை 2008 இல் வெளியிடப்பட்டது

 

 

 

 

அவுஸ்;திரேலியாவில வெளிவரும் உதயம் மாத இதழில் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவர்கள் எழுதிய 13வது அரசியல் யாப்பு திருத்தம், அதன் அமுலாக்கம் குறித்த கட்டுரை தொடர்
 

 

கூட்டமைப்பு ( DTNA )

 

21 மே 2009

இந்திய வெளியுறவு செயலர் பாதுகாப்பு ஆலோசகருடன் டிரிஎன்ஏ சந்திப்பு
 


இனப்பிரச்சினை

 

10 நவம்பர் 2006
இனப்பிரச்சினைக்கான

அரசியற் தீர்வு தொடர்பாக

எமது கட்சியின் விளக்கம்
 

இணைத் தலைமை


ஜெனீவா பேச்சு


மத நிறுவனங்கள்


 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரேரணைகள்
 

Proposal for the Political Solution to the Ethnic Conflict in Srilanka
EPRLF seeks merger of Sri Lanka's north-east Indo-Asian News Service 30 March 2007

Indian backing proposals styled on the Indo-Lanka Accord The Island, March 26, 2007  

Moderate Tamils' constitutional proposal  Hindustan Times 23 March 2007

FRATERNAL PAGE

LSSP demands 13th Amendment be implemented
 

 

தோழர் றொபேட்
50வது பிறந்தநாள் நினைவு
 

மார்கழி 13
ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல்
khh;fop 13

<gpMh;vy;vt; kPJ jhf;Fjy;

 

Appeal to the leaders of  Political Parties and the People of  Tamil Naad 14 October 2008

 

 

 

மட்டக்களப்பு மாவட்ட உள்ள+ராட்சி தேர்தல்கள்- 2008
 

வாக்களிப்பு மற்றும் கட்சிகளுக்குக் கிடைத்த ஆசனங்கள்
 

மட்டக்களப்பு மாநகர மேயர் பத்மினி 13.03.2008 அன்று அளித்த செவ்வி
 

 

கிழக்கு மாகாணசபை தேர்தல் ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் வழங்கிய (14.03.2008) செவ்வி

 

 

 
     
 

 'ehk; kf;fSf;fhfg; NghuhLtnjd;gJ vk;kPJ Rkj;jg;gl;l flikNa jtpu vkf;F toq;fg;gl;l mjpfhuky;y"  Njhoh; f.gj;kehgh