தியாகிகள் தினம் 2009

தமிழ் பேசும் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தமது உயிரை
அர்ப்பணித்த எமது தோழர்கள், சக இயக்கப் போராளிகள், பொதுமக்களை நினைவு கூரும்
வகையில் தியாகிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளின் மேலதிக விபரங்களுக்கு.
19.06.2009, 10.30 PM
புலிகள் அமைப்பில் இருந்த சிறுவர்கள்
தமது பெற்றோர்களுடன்
தொடர்பு கொள்ள வசதிசெய்யப்பட்டுள்ளது.
புலிகள் அமைப்பில் இருந்து படையினரிடம் தஞ்சமடைந்துள்ள பெற்றோர்களுடன்
தொடர்புகொள்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில்
இவர்கள் தமது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடவும்,
கடிதம் எழுதவும் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளுடனான
யுத்தத்தின் போது பெருந்தொகையான சிறுவர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலனவர்கள் வவுனியாவில் உள்ள முகாம்களில் பாதுகாப்புடன்
தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது போர் முடிவுற்று அமைதியான சூழ்நிலை
ஏற்படும் பட்சத்தில் இவர்களின் மறுவாழ்வு குறித்து நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு
சபைத் தலைவர் ஜெகத் வெள்ளவத்த புலிகள் இயக்கத்தில் இருந்த சிறுவர்கள் மீதான
கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இவர்கள் தொலைபேசி, கடிதங்கள் மூலம் தமது பெற்றோரை தொடர்பு கொள்ள வசதிகள்
செய்து கொடுக்கப்பட்ட போதும் அவர்கள் நேரில் சந்திக்க இதுவரை அனுமதி
வழங்கப்படவில்லை. இவர்களுக்க தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டுகிறது. இங்கு
சிறுமிகள் பலரும் உள்ளனர். இவர்களுக்கென இலங்கை அரசு 4 புனர்வாழ்வு மையங்களை
அமைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
19.06.2009, 10.00 PM
இலங்கை செல்பவர்களுக்கு புதிய நிபந்தனை
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்க புதிய கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு
அகதிகள் முகாமில் தங்கியிருந்தவர்கள் இலங்கை செல்லவேண்டுமானால் மீண்டும்
முகாமிற்கு வரமாட்டேன் என கியூ பிரிவு பொலிஸாரிடம் உறுதி அளித்து
அவர்களிடமிருந்து சான்றிதழ் ஒன்றை பெற்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்க
வேண்டும் என தழிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில் 1983ம் ஆண்டு
ஏற்பட்ட இனக்கலவரத்திற்குப் பின்னர் தமிழகத்திற்கு வந்தவண்ணமுள்ளனர். இந்த
மக்கள் தமிழகத்தில் 117 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
19.06.2009, 09.50 PM
மூன்று தமிழர்கள் குற்றத்தடுப்பு
பிரிவினரால் கைது
கொழும்பில் இருவரும் மட்டக்களப்பில் ஒருவருமாக 3 தமிழர்கள் குற்ற தடுப்பு
பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்களில் இருவர் ராஜகிரிய பகுதியிலும் 15,16ம் திகதிகளிலும், ஒருவர் 17ம்
திகதி வாழைச்சேனையிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கைதான தமிழர்கள் தற்போது பொரளை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர்.
19.06.2009, 09.40 PM
மாலைதீவு ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சர்
சந்திப்பு
இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி முகமட் நஸீர் வெளிவிவகார அமைச்சர் ரோகித
போகொல்லாகமவை இன்று (19.06.2009) சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்
போது இரு நாடுகளும் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் உடன்படிக்கை
ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இதன் மூலம் பயங்கரவாதிகளின் நிதிசேகரிப்பு,
மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளையும் கட்டுப்படுத்த முடியும் என
தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து அழித்தமைக்கு மாலைதீவு
ஜனாதிபதி இலங்கை அரசிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கை
வர்த்தகர்கள் மாலைதீவில் முதலீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
19.06.2009, 09.15 PM
இணுவில் ரயில் நிலையத்தில் இருந்த மக்கள்
மனித உரிமை ஆணைக்குழுவிடம் புகார்
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களும் ரயில் பாதைகளும்
புனரமைக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் ரயில்
நிலையங்களில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு கே. கணேஸ் முன்பு
தெரிவித்திருந்தார். இதன்படி இணுவில் ரயில் நிலையத்தில் உள்ள மக்களை
எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னதாகவெளியேறுமாறு உடுவில் பிரதேச செயலர்
பணித்துள்ளாhர். இங்கு 19 குடும்பங்கள் தங்கியுள்ளன.
இந்த குடும்பங்கள் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் இந்த வபைவம் குறித்து
உடுவில் பிரதேச செயலாளருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இந்த மக்கள் வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்தில்
இருந்து இடம்பெயர்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து
ஆராய்வதாக ஆணைக்குழு அதிகாரிஒருவர் தெரிவித்துள்ளார்.
19.06.2009, 02.00 PM
இலங்கை
விடயம்குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும்
இலங்கையில்
இதுவரை காலமும் நடைபெற்று வந்த யுத்தம் நிறைவடைந்துள்ளது. எனினும் முக்கிய
பிரச்சனைகள் குறித்து உரிய தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் இலங்கையில்
வன்முறைகள் உண்டாகும் அபாயம்; உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர்
பான்கீ மூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு
தாம் சுட்டிக் காட்டியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். அத்துடன்
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் குறித்தும் விசேட கவனம்
செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதனை முகாம்களுக்கு சென்று
பார்வையிட்டுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து முகாம்களில்
தங்கியுள்ள மக்களை விரைவில் குடியமர்த்துவதாக அரசாங்கம்
தெரிவித்துள்ளமையானது மிகவும் வரவேற்கத்தக்க விடயம் என தெரிவித்துள்ளார்.
19.06.2009, 01.30 PM
கிழக்கு மக்களை அழைத்து செல்ல நடவடிக்கை
வன்னி யுத்தின் போது இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும்
கிழக்கு மாகாண மக்களை விரைவில் அங்கு அழைத்து செல்லவிருப்பதாக தேசிய
நல்லிணக்க அமைச்சின் ஊடக செயலர் யூலியன் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
இதற்கான வேலைத்திட்டங்கள் தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி
முரளிதரன் தலைமையில் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு
காரணங்களுக்காக நீண்ட காலமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில்
வசித்து வந்து தற்பொழுது முகாம்களில் உள்ள மட்டக்களப்பு, திருகோணமலை,
அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த மக்களே இவ்வாறு அழைத்து செல்லப்படவுள்ளதாக அவர்
தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் முரளிதரன் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்சவிடமும், மற்றும் பசில் ராஜபக்சவிடமும் பேச்சுக்கள் நடத்தியுள்ளதாக
குறிபப்பிட்டுள்ளார்.
19.06.2009, 01.15 PM
வெள்ளவத்தையில் தேடுதல் நடவடிக்கை
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நேற்று (18.09.2009) இரவு தேடுதல் நடவடிக்கை
ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக
வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மங்கள தெஹியதெனிய தெரிவித்துள்ளார்.
இவர்கள் தமது அடையாளங்கள், மற்றும் பதிவுகளை உறுதிப்படுத்த தவறியதன்
காரணத்தினாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இவர்களிடம்
தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
19.06.2009, 09.15 AM
தமிழினி
நீதிமன்றில் ஆஜார் படுத்தப்பட்டுள்ளார்.
புலிகளின் மகளிர் பிரிவுத் தலைவியான தமிழினி எனப்படும் சுப்பிரமணியம்
சிவகாசி நேற்று (18.06.2009) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
குற்ற புலனாய்வுப்பிரிவு திணைக்களத்தினர் கொழும்பு பிரதான நீதவான்
நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். இவர் வவுனியாவில் உள்ள அகதி முகாம்
ஒன்றில் இருந்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் 1991ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளார். 1993ம் ஆண்டு
நடைபெற்ற பூனகரி இராணுவமுகாம் தாக்குதலில் முக்கிய பங்குவகித்துள்ளதாக
குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவரை தடுப்பு காவலில் வைது
மேலதி விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு குற்றதடுப்பு
பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
19.06.2009, 08.45 AM
13வது திருத்த சட்டம்
நடைமுறைப்படுத்தப்படும்
அரசாங்கம்
13வது திருத்த சட்டத்தின் ஊடான மாகாண சபை நிர்வாக முறையை
ஏற்றுக்கொண்டுள்ளதாவும் அதனை வடக்கு கிழக்கில் அமுல் படுத்தவதற்கு
உறுதியுடன் உள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் அனுர பிரியதர்சன
யாப்பா தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (18.06.2009)
இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்
போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்
குறித்து இன்னமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. காணி விடயத்தில்
யுத்தம் நடைபெறும் போது பேச்சுக்கள் நடத்தப்பட்டது. இப்பொழுது அவ்வாறானதொரு
பிரச்சனை இருக்காது என கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டம் அரசியல் அமைப்பின் ஒருபகுதி எனினும் இதனை பாராளுமன்றம் ஏற்றுக்
கொண்டுள்ளது. எனவே வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும். மாகண
சபை நிர்வாக முறையில் மத்திய அரசும், மாகாணஅரசும் சில அதிகாரங்களும், ஒத்து
இயங்கும் சில அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அரசுடன் அங்கம்வகிக்கும் சில கட்சிகள் 13வது திருத்த சட்டத்தை
எதிர்க்கிறார்களே என அமைச்சரிடம் கேட்டபோது பலதரப்பட்ட கருத்துக்களை
தெரிவிப்பது அவரவர் விருப்பம். ஆனால் அரசாங்கம் தமது முடிவில் உறுதியாகவே
உள்ளது என தெரிவித்துள்ளார். உலகில் அனைத்து விடையங்களும் மாற்றத்திற்கு
உள்ளாகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
18.06.2009, 10.15 PM
மட்டக்களப்பில்
மக்கள் மீள்குடியேற்றம்.
மட்டக்களப்பு மாவட்தத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பெரியபுல்லுமாலை,
மற்றும் வெலிக்காகண்டி ஆகிய பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில்
தங்கியிருந்த மக்கள் இன்று (18.06.2009) அவர்களின் சொந்த இடங்களுக்கு
அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் 78
குடும்பங்களை சேர்ந்த 174 பேர் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செங்கலடி பதுளை வீதியிலுள்ள ஏனைய கிராமங்களில் மீள் குடியேற்றப்பணிகள்
நிறைவடைந்து வரும் நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த 165 குடும்பங்களை
சேர்ந்த 534 பேர் மீள் குடியேற்றப்படாமல் உறவினர் நண்பர் வீடுகளிலும்
சவுக்கடி முகாமிலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
18.06.2009, 09.45 PM
ஏ9 வீதியூடான போக்குவரத்திற்கு 5 பஸ்கள்
யாழ்ப்பாணத்திற்கான
ஏ9 வீதியூடான தரைவழி போக்குவரத்திற்கென யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
மேற்கொண்டிருந்த ஜனாதிபதியின் சிரெஸ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
பசில் ராஜபக்ஷவினால் 5 பஸ்கள் இன்று (18.06.2009) வடபிராந்திய போக்குவரத்து
சபையிடம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இந்த பஸ்கள்
வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏ9 பாதை திறக்கப்படும் போது
போக்குவரத்தை மேற்கொள்ளும் வகையில் இந்த பஸ்கள் தயார் நிலையில் இருக்க
வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியினூடான போக்குவரத்திற்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ் 43
மில்லியன் ரூபா பெறுமதியான பஸ் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனை
மயிலிட்டி உயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த உபகரண
தொகுதியை கொண்டு யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபட 10 பஸ்வண்டிகள்
உருவாக்கப்படவுள்ளது. யாழ் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் 86 பஸ்
வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக போக்குவதத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
18.06.2009, 09.20 PM
பிரச்சாரத்திற்கு முகாம்களுக்கு
செல்லவேண்டியதில்லை
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான உள்ளுராட்சி தேர்தலில்
மனுக்களை தாக்கல் செய்வதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தயாராகி
வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல்களுக்கான பிரச்சாரங்களை
மேற்கொள்வதற்கு நலன்புரி நிலையங்களுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. அரச
திணைக்களத்தில் இன்று (18.06.2009) இடம்பெற்ற அமச்சரவை முடிவுகளை
அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்த கருத்து
வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தல்களில் எந்த ஒரு கட்சியும் அரசுடன்
இணைந்து கொள்ளலாம். முகாம்களை பொறுத்தவரையில் அங்கு கிளிநொச்சி,
முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மகளே இருக்கின்றனர். தேர்தல் நடைபெறும்
பிரதேசத்திற்கும் முகாம்களில் உள்ள மளுக்கும் தொடர்புகள் அரிதாகவே
காணப்படுகின்றன. எனவே முகாம்களுக்கு செல்லவேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை.
எதிர்கட்சியினர் முகாம்களுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற
குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் இந்த கருத்து அமைந்துள்ளது.
18.06.2009, 06.30 PM
இலங்கை அகதிகள் தமிழகம் சென்றுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தமிழ் நாடு தனுஸ்கோடி அருகில் உள்ள
3வது மணல் திட்டில் இருந்து இவர்கள் இன்று (18.06.2009) மீட்கப்பட்டுள்ளதாக
இந்திய கரையோர காவல்ப்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இலங்கையின்
மன்னார் பேசாலை பகுதியில் இருந்து புறப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மணல் திட்டில் இறக்கி விடப்பட்டு 24 மணித்தியாலங்களின் பின்னரே
இந்திய கரையோர காவற் படையினரால் மீட்கப்பட்டு தனுஸ்கோடி பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
18.06.2009, 06.10 PM
வவுனியாவில் பொலிஸாரினால் 3 பேர்
சுட்டுக் கொலை
வவுனியா நெலுக்குளம் பகுதியில் இன்று (18.06.2009); அதிகாலை 05.25 மணியளவில்
பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் சோதனை
நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த
மூன்று பேரையும் சோதனை செய்ய முற்பட்ட வேளை இவர்கள் பொலிஸார் மீது தாக்குதல்
நடத்தியுள்ளனர். இதனை அடுத்து பொலிஸர் நடத்திய தாக்குதலில் இவர்கள்
கொல்லப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவர்களிடம் இருந்து ஆயுதங்கள்
சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18.06.2009, 05.40 PM
மட்டக்களப்பில் ஆயுதங்கள் மீட்பு
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் நேற்று (17.06.2009) ஆயுதங்கள்
மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரகசிய தகவல் ஒன்றை
அடுத்து அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட பொலிஸார்
பாதுகாப்பாக புதைத்;து வைக்கப்பட்ட நிலையில் இருந்த இந்த ஆயுதங்கள்
மீட்கப்பட்டுள்ளது. இதில் ஆர்பிஜி குண்டுகள் 5, கைக்குண்டுகள் 5, ரி56 ரக
துப்பாக்கிகளுக்கான ரவைகள் 194, உட்பட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
18.06.2009, 05.25 PM
புலிகள் வன்முறைகளை கைவிட்டுள்ளனரா?
லண்டன்ரைம்ஸ்
புலிகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை அமைக்கப்போவதாக புலிகள்
இயக்கத்தின் சர்வதேச தெர்புகளுக்கு பொறுப்பாக இருந்த செல்வராசா பத்மநாதன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் வன்முறைகளை கைவிடுவது தொடர்பில் எதுவித கருத்தும்
வெளியிடவில்லை என லண்டனில் வெளியாகும் ரைம்ஸ் பத்திரிகை செய்தி
வெளியிட்டுள்ளது. புலிகள் சர்வதேசத்தின் மத்தியில் வன்முறைகளுடனான
போராட்டத்தை எவ்வாறு நடத்த முடியும் என அந்த பத்திரிகை கேள்வி
எழுப்பியுள்ளது. நாடு கடந்த அரசாங்கமானது ஜனநாயக வழியிலேயே அமைய வேண்டும்.
செல்வராசா பத்மநாதன் தமது போரட்டம் புதிய பரினாமத்தை அடைந்துள்ளதாக
தெரிவித்தமை குறித்து கருத்து வெளியிட்ட குறித்த பத்திரிகை இவ்வாறு செய்தி
வெளியிட்டுள்ளது.
18.06.2009, 05.00 PM
பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு
இவ்வருடம் இடம் பெறவுள்ள கல்வி;ப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை மற்றும் 5ம்
ஆண்டு புலமைப்பரில் பரீட்சை என்பன நடைபெறவுள்ள திகதிகள்
அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் படி ஓகஸ்ட் மாதம் 11ம் திகதி ஆரம்பிக்கப்படும்
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 5ம்
திகதி முடிவடையவுள்ளன. அத்துடன் 5ம் அண்டு புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும்
ஓகஸ்ட் மாதம் 23ம் திகதி நடைபெறவுள்ளது.
18.06.2009, 04.50 PM
இடம்பெயர்ந்த மக்கள் குறித்து கூட்டம்
வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை
உடனடியாக நிவர்த்தி செய்வது தொடர்பான கூட்டம் ஒன்று நேற்று (17.06.2009)
இடம் பெற்றுள்ளது. மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர்
ரிசாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் குறித்த மக்களின்
சுகாதாரம், மற்றும் மலசலகூடவசதிகள், மற்றும் பல சேவைகள் குறித்து விரிவிhக
ஆராயப்பட்டுள்ளது. ஆனர்த்த நிவாரண சேவைகள் மீள்குடியேற்ற அமைச்சில்
இடம்பெற்ற இந்த கூட்டத்தில் யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி பீல்
டூ மெல்லொ, சமாதான செயலகத்தின் துணைச் செயலர் ராஜீவ் விஜேசிங்க, அமைச்சின்
செயலாளர் யூ எல் எம் ஹால்தீன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
18.06.2009, 09.00 AM
யாழ், வவுனியா தேர்தலுக்கான வேட்புமனு
தாக்கல் இன்று
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைகளில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத்
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் இன்று (18.06.2009) முதல்
ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்
25ம் திகதி பகல் 12 மணிவரை வரை இந்த வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியும்
என தெரிவிக்கப்பட்டள்ளது. இதன் பின்னர் தேர்தல் நடைபெறும் திகதி
அறிவிக்கப்படும் என தேர்தல் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
18.06.2009, 08.45 AM
மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வரவுள்ளார்.
மலைதீவு
ஜனாதிபதி முகமட் நஸீர் இன்று (18.06.2009) பிற்பகல் இலங்கை வரவுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இவர் இலங்கையில் இரண்டு நாட்கள் தங்கியிருப்பார்.
மேலும் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவை நாளை சந்தித்து பேச்சு
நடத்தவுள்ளார். இந்த விஜயத்தின் போது அனுராதபுரம் செல்லும் இவர் அங்கு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
18.06.2009, 08.20 AM
வடமாகணத்திற்கு தொலைதொடர்பை விஸ்தரிக்க
நடவடிக்கை
வடக்கு மாகாணத்தில் தொலைபேசி வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசு நடவடிக்கை
எடுத்துள்ளது. வடக்கின் அபிவிருத்தி மற்றும மீள் குடியேற்றத்திற்கு
பொறுப்பான செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரெஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற
உறுப்பினருமான பசில் ராஜபக்ச தொலைபேசி நிறுவனங்களின் நிறைவேற்று
அதிகாரிகளுடன் இது தொடர்பாக சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இந்த சநதிப்பை அடுத்து வடக்கில் பாதுகாப்பு உறுதி
செய்யப்பட்டதும் அங்கு தொலைபேசி கட்டமைப்புக்களை விஸ்தரிப்பதாக குறித்த
தொலைபேசி நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.
தொலைபேசி நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்வது
குறித்தும் அவற்றின் அபிவிருத்தி திட்டத்தினை நடைமுறை படுத்துவதற்கு
தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளது. இலங்கை தெலைத்தொடர்பு ஒழுங்கு
படுத்தல் ஆணைக்குழு இதனை ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதற்கென கொக்காவில்
பிரதேசத்தில் 175 அடி உயரமான பொது தொடர்பாடல் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரம்
ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தினூடாக
வானோலி, தொலைபேசி தெடர்பாடல்களுக்கு பயன்படுத்தவுள்ளதாக தொலைத்தொடர்பு
ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த காரியப்பெரும
தெரிவித்துள்ளார்.
18.06.2009, 08.00 PM
யாழ் அபிவிருத்தி குறித்து விசேட கூட்டம்
யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி மற்றம் மீள் குடியேற்றம் தொடர்பில் ஆராயும்
கூட்டம் ஒன்று இன்று (18.06.2009) இடம்பெறவுள்ளது. இதற்கென வடக்கு
மாகாணத்தின் மீள்குடியேற்றம் மற்றும அபிவிருத்திகளுக்கான செயலணியின்
தலைவரும் ஜனாதிபதியின் சிரெஸ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழு
இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17.06.2009, 10.00 PM
கே.பிஐ கைது
செய்ய துரித நடவடிக்கை
புலிகளின்
சர்வதேச தொடர்பாடல்களுக்கு பொறுப்பான கே. பி எனப்படும் செல்வராசா
பத்மநாதனின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் திட்டத்தினை அவரின்
கனவு உலகத்திலேயே கட்டுப்படுத்துவோம் என வெளிவிவகார அமைச்சர் ரோகிக
போகொல்லாகம தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்று (17.06.2009) இடம்
பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர்
இதனை குறிப்பிட்டுள்ளார்.
செல்வராசா பத்மநாதனை கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளது.
17.06.2009, 09.50 PM
தாபால் மூலவாக்களிப்புவிண்ணப்ப திகதி
நீடிப்பு
வவுனியா நகரசபை தேர்தலில் தபால் மூலம் வாக்களி;க்க விரும்புபவர்களுக்கான
விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்
அடிப்படையில் எதிர்வரும் 25ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என வவுனியா உதவி
தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்துள்ளார். முன்னர் 14ம் திகதி
வரையே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள குறித்த தேர்தல்களில் வாக்களிக்க
தகுதி பெற்ற மக்களும் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 26ம் திகதிவரை
மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திகதி முன்னர்
இம்மாதம் 10ம் திகதி என அறிவிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.
17.06.2009, 09.30 PM
தமிழர்களுக்கு சமஅந்தஸ்து
வழங்கப்படவேண்டும்
தமிழ்
மக்களுக்கு இலங்கை அரசு சமஅந்தஸ்து வழங்க வேண்டும் என புதிதாக
பதவியேற்றுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பெட்ரிக்கா புட்டீனிஸ்
தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற யுத்தத்தினால் பெருமளவான தமிழ் மக்கள்
பாதிப்படைந்துள்ளனர். இவர்களது உரிமைகள் உறுதிப்படுத்த இலங்கை அரசு திடமான
நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். ஐக்கய இலங்கைக்குள்
தமக்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்பதை தமிழ் மக்கள் உணரும் வகையி;ல் அரசின்
நடவடிக்கைள் இருக்க வேண்டும். சர்வதேச சமூகத்தின் ஆதரவு குறித்து இலங்கை
அரசு திருப்தி அடைய வேண்டும். சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த
சந்தர்ப்பத்தை இலங்கை அரசு பயன்படுத்தி கொள்ளவேண்டும் என குறிபிட்டுள்ளார்.
புலிகள் தனிநாடு கோரி 30 வருடங்களாக போராடி வந்தனர். இருப்பினும் அவர்களை
இலங்கை இராணுவத்தினர் தோற்கடித்து விட்டனர். இந்த நடவடிக்கையின் போது இடம்
பெயர்ந்த சுமார் 3 இலட்சம் வரையான மக்கள் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த முகாம்களுக்கு தெண்டு நிறுவனங்கள் சென்று பணியாற்றக்கூடிய வகையில்
அனுமதி அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
17.06.2009, 09.10 PM
இந்திய தூதுவர் முகாம்களுக்கு விஜயம்
இந்திய தூதுவர் ஆலோக் பிரசாத், மற்றும் துணை தூதுவர் விக்ரம்
ஆகியோர் நேற்று (16.06.2009) இடம்பெயர்ந்து மக்கள் தங்கியுள்ள நலன்புரி
நிலையங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இதில் நலன்புரி நிலையங்களுக்கு
பொறுப்பான மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறியும் கலந்து கொண்டதாக
தெரிவிக்கப்படுகிறது. இதன் போது ஆனந்த குமாரசாமி நலன்புரி நிலையத்தில் உள்ள
இந்திய வைத்தியசாலையையும் பார்வையிட்டுள்ளனர்.
17.06.2009, 05.00 PM
மூதூர்
மக்கள் கட்டாயமாக அழைத்து செல்லப்படவில்லை
திருகோணமலையின் மூதூர்கிழக்கு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு
கிரிமுட்டி அகதி முகாமில் தங்கியிருந்த அகதிகள் கட்டாயத்தின் பேரில்
திருகோணமலை கிளிவெட்டி முகாமிற்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அவர்களின் சுய
விருப்பத்தின் பேரிலேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண
முதலமைச்சரின் மீள் குடியேற்ற இணைப்பாளரான அருணாச்சலம் செல்வேந்திரன்
கூறியுள்ளார். இந்த கிரிமுட்டி முகாமில் இருந்து மூதூர் கிழக்கை
வசிப்பிடமாக கொண்ட 58 குடும்பங்களை சேர்ந்த 225 பொதுமக்கள் நேற்று
(16.06.2009) கிளிவெட்டி முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் உதவியுடன் இந்த மக்கள் வலுகட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக
வெளியான தகவல் குறித்து கருத்து தெரிவிக்கும் போது செல்வேந்திரன்
மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.
17.06.2009, 04.40 PM
கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு
கடிதம்
கச்சதீவு
பகுதியில் இலங்கை கடற்படையினர் முகாம் அமைக்கவிருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி பிரரமர்
மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்திய மத்திய அரசு கவனிக்க
வேண்டும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தீவிர கண்காணிப்பு
நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும்.
இதனை மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கச்சதீவில்
இலங்கை கடற்படையினர் முகாம் அமைத்தால் அது தமிழக மீனவர்களை பாதிக்கும் என
அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு பலமுறை மத்திய
அரசிற்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து
தெரிவித்த போதும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் புலிகள் இயக்கம் மீண்டும்
வளரவிடாது தடுக்கும் நோக்கில் இலங்கை படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
17.06.2009, 04.15 PM
பாடசாலைகளில் உள்ள மக்கள் இடமாற்றம்
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள
மக்கள் வவுனியா பகுதியில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு மாற்றப்பட்டு
வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காமினி
மகாவித்தியாலத்தில் இருந்த மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. மேலும் தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின்
ஆரம்பப்பிரிவு, கோவில் குளம் இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளில் இருந்து
இடம் மாற்றப்பட்டு வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கையினை ஆரம்பிக்கும் நோக்கில் அங்கு ஏற்பட்டுள்ள
இட நெருக்கடியை போக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த
மாத இறுதியில் இந்த மக்கள் பாடசாலைகளில் இருந்து முற்றாக இடமாற்றப்படுவர்
என கல்வி திணைக்களத்திற்கு இது சம்மந்தமான அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்ட வலயம் 5 நலன்புரி நிலையத்தில் மக்கள் தங்கவைக்கப்பட்டு
வருவதாகவும், மேலும் ஒரு நலன்புரி நிலையத்தினை அமைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
வவுனியா பாடசாலை மாணவர்கள் பொது கட்டடங்களிலும் தனியார் கல்வி
நிலையங்களிலும், கோயில் மண்டபங்களிலும் தமது கல்வி செயற்பாடுகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
17.06.2009, 03.50 PM
புலிகளும் அரசும் சமஸ்டி தீர்வை
ஏற்கவில்லை
இலங்கை
அரசாங்கமும் புலிகளும் சமஸ்டி முறையிலான ஓர் தீர்வை ஏற்றுக் கொள்ளவில்லை என
நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை;கான முன்னாள் சமாதான
தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் பிபிசி ஹார்ட் டோக் நிகழ்ச்சிக்கு கருத்து
தெரிவித்துள்ளார். இதன் காரணத்தினாலேயே இறுதி கட்டத்தில் இருந்த சமாதான
பேச்சுக்கள் முறிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில்
மனிதாபிமான பணிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டுமென்றால் இடம்பெயர்ந்த மக்கள்
இருக்கும் முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என கூறினார்.
குறித்த முகாம்களுக்கு மனிதாபிமான அமைப்புக்கள் செல்வதற்கான அனுமதியை
பெறுவது தொடர்பாக பேச்சுக்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
17.06.2009, 09.30 AM
ஏ9 வீதியூடாக பொருட்கள் எடுத்து
செல்லப்படும்
ஏ9 வீதியூடாக பொருடக்களை எடுத்து செல்லவதற்கு தனியார் வர்த்தகர்களுக்கு
இன்று (17.06.2009) தொடக்கம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு
தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அனுராதபுரத்தில் சேதனைக்கு
உட்படுத்தப்பட்ட 40 லொறிகள் நேற்று வவுனியாவிற்கு
அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் இன்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 40 லொறிகள்
வவுனியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு
இந்த லொறிகளை அனுப்பி வைக்கும் வைபவம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருட்கள் தரைவழியில் எடுத்து செல்லப்படுவதால் யாழ்பாணத்தில் பொருட்களின்
விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்கு 1000ம்
லொறிகளில் உணவுப் பொருட்களும், அத்தியாவசிய பொருட்களும் எடுத்து வரப்பட்டால்
அங்குள்ள மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என
சுட்டிக்காட்டப்படுகிறது.
17.06.2009, 09.10 AM
ஊவா மாகாணசபை வேட்பு மனு தாக்கல் இன்று
ஊவாமாகாண தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் அனைத்து
வேலைத்திடங்களும் பூர்தியடைந்துள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இன்று (17.06.2009) தொடக்கம் எதிர்வரும் 24ம் திகதி
நண்பகல் 12 மணிவரை வேட்பு மனு தாக்கல் இடம்பெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம்
மேலும் குறிப்பிட்டுள்ளது. இதில் சுயேட்சை குழுக்கள் எதிர்வரும் 23ம் திகதி
நண்பகல் 12 மணிவரை வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, மொனறாகலை ஆகிய மாவட்டங்களில் வேட்பு மனுக்கள்
ஏற்றுக் கொள்ளப்படும். இந்த தேர்தலில் ஐக்கமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு,
ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சுயேட்சைக்குழுக்கள்
என்பன இதில் போட்டியிடவுள்ளன. அரசாங்கத்துடன் இணைந்து பல கட்சிகள்
போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17.06.2009, 08.45 AM
வவுனியா அபிவிருத்தி குறித்து விசேட
கூட்டம்
வடக்கின்
வசந்தம் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் கூட்டம்
ஒன்று நேற்று (16.06.2009) வடக்கின் மீள் குடியேற்றம் அபிவிருத்தி செயற்குழு
தலைவரும் ஜனாதிபதியின் சிரெஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில்
ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றுள்ளது. வடமாகாணத்தின் மீள் குடியேற்றம்
அபிவிருத்தி தொடர்பான செயலணியின் முதலாவது மாவட்ட கூட்டத்தில் 180 நாட்களில்
வவுனியா மாவட்டத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது குறித்து பசில்
ராஜபக்ச விளக்கமளித்துள்ளார். இதில் கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம்,
குடிநீர்; வினியோகம், விவசாயம், வீதி அபிவிருத்தி, பொது வசதிகள், மின்சாரம்,
போக்குவரத்து, என்பன குறித்து விரிவிhக ஆராயப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்
அமைச்சர் ரிசாத் பதியுதீன், வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ், வடமாகாண
ஆளுநர் டிசான்தால, நிவாரண கிராமங்களுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி மேஜர்
ஜெனரல் ஜகத் சந்திரசிறி, தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்
சிவநாதன் கிசோர் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது வவுனியா நகரில் புதிதாக அமைக்கப்பட்ட இளைஞர் சேவை மன்றத்தின்
புதிய கட்டடத்தையும் பசில் ராஜபக்ஷ திறந்து வைத்தார்.
16.06.2009, 10.30 PM
இடம்பெயர்ந்த மக்கள் குறித்து அரசு கவனம்
எடுக்கவில்லை
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் உள்ள சுமார் 3 இலட்சம்
மக்களின் நலன்கள் குறித்து அரசாங்கம் போதிய கவனம் எடுக்கவில்லை எனவும்
அம்முகாம்களில் இருந்து காணாமல் போகும் இளைஞர்களின் எண்ணிக்கை அச்சம் தரும்
அளவுக்கு அதிகரித்துள்ளது எனவும் “இன்போர்ம்” (“ஐNகுழுஅயவழைn அழnவைழச”)
அமைப்பின் பணிப்பாளர் சுனிலா அபயசேகர தெரிவித்துள்ளார்.
இவர் கனடா – ரொறென்ரோவைத் தளமாகக் கொண்டு இயங்கும் “றியல் நியூஸ் நெட்வேர்க்”
(சநயட நெறள நெவறழசம) எனும் ஊடகத்துக்கு அளித்த பேட்டியிலேயே இதனைத்
தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவித்ததாவது முகாம்களில் உள்ளவர்களை உரிய
விதத்தல் பதிவு செய்யும் நடைமுறை இல்லாததால் இவர்களை சில குழுக்களால்
இலகுவாகக் கொண்டு செல்;ல முடிகின்றது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
வவுனியா மெனிக்பாரம் முகாமிலிருந்து கடந்த வாரம் 17 வயதுக்குட்பட்ட 200
இளைஞர்கள் கூட்டிச்செல்லப்பட்டுள்ளனர் எனவும் அரசு இவர்கள் குறித்த
விவரங்களை வெளியிடவில்லை, இவர்களது பெற்றோர் மிகவும் அச்சத்துடன்
காணப்படுகின்றனர்; எனவும் குறிப்பிட்டுள்ளார்.
16.06.2009, 10.00 PM
வடக்கு தேர்தலுக்கென விசேட குழு நியமனம்
யாழ்ப்பாணம் மநகரசபை மற்றும் வவுனியா நகரசபைகளில் நடைபெறவுள்ள தேர்தல்களில்
ஜக்கய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வெற்றி பெறச்செய்யும் நோக்கில் விசேஷட
குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பிரமர் ரட்ணசிறி
விக்கிரமநாயக்க தலைமையில் உருவாக்கப்பட்டள்ளது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
மியன்மாருக்கான விஜயத்தினை மேற்கொள்வதற்கு முன்னர் இந்த குழுவை
நியமித்துள்ளார். இக் குழுவில் அமைச்சர்களான நிமல் சிறீபால டி சில்வா,
மைத்திரிபால சிறிசேன, சசில் பிரேம் ஜெயந்த, தினேஸ் குணவர்த்தன, டாக்டர்
ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க அகியோரும் நாடாழுமன்ற உறுப்பினர்களான பசில்
ராஜபக்ச அகியோரும் அங்கம் வகிக்கின்றனர். சட்ட சிக்கல்களை எதிர்நோக்கும்
பொருட்டு சிரேஸ்ட சட்டத்தரணி சுமித் விஜேசிங்கவும் இந்த குழுவில்
நியமிக்கப்பட்டுள்ளார். பல தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள்
சுதந்திர கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
16.06.2009, 05.30 PM
முகாம்களில்
உள்ளமாணவர்களுக்கு விசேட கல்வி
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில்
உள்ள உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு பரீட்சை நடத்துவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வி அமைச்சர் சுசில்
பிரேம் ஜெயந்தவின் பணிப்பின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. இந்த மாணவர்களை பரீட்சைக்கு தயார்ப்படுத்தவென மகிவும் தேர்ச்சி
பெற்ற ஆசிரியர்கள் அங்கு அனுப்பப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் முதல் கட்டமாக கொழும்பு றோயல் கல்லூரி, மற்றும் சேனநாயக்க கல்லூரி
என்பவற்றில் இருந்து ஆசிரியர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
கல்வி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக பரீட்சைகள் ஆணையாளர் தலைமையிலான குழு
ஒன்று அடுத்த வாரமளவில் வவுனியாவிற்கு செல்லவுள்ளது. ஐந்தாமாண்டு புலமை
பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடி நடவடிக்கைகளை
மேற்கொள்ளும் நோக்கிலேயே இந்தக்குழு அங்ங்கு செல்கின்றது.
16.06.2009, 05.10 PM
தனி ஈழம் என்பதற்கு நாட்டில் இடம் இல்லை
இலங்கையில் தனி ஈழம் என்ற கருத்தை இனிவரும் காலங்களில் நாட்டில் அனுமதிக்க
முடியாது என அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். புலிகளின் சர்வதேச
தொடர்பாடல்களுக்கு பொறுப்பான குமாரன் பத்மநாதன் சர்வதேச தமிழீழ அரசு ஒன்றை
உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது
அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் காரணமாக பல நாடுகள் பிளவு
பட்டுள்ளன. எனினும் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையில் அவ்வாறானதொரு
சாத்தியம் அற்றுப் போயுள்ளது. இதனை இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள்
ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.
16.06.2009, 04.40 PM
ஜனாதிபதி நாடு திரும்புகின்றார்.
மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று
(16.06.2009) நாடுதிரும்பவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் பல உயர்மட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி பேச்சுக்களை
நடத்தியுள்ளார். இதன் போது இருநாட்டு சுற்றுலாத்துறை, மற்றும் சமய மற்றும்
கலாச்சார அபிவிருத்திகள் குறித்து விரிவிhக கலந்துரையாடப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சுற்றுலாத்துறை தொடர்பான உடன்படிக்கை ஒன்றும்
கைச்சாத்திடப்பட்டுள்ளது. மியன்மாரில் இருந்து இலங்கை வருபவர்கள் வீசாக்களை
பெறுவதற்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
16.06.2009, 04.15 PM
வெள்ளவத்தை பகுதியில் ஒருவர் கைது
வெள்ளவத்தை பகுதியில் இன்று (16.06.2009) ஒருவர் பயங்கரவாத தடுப்பு
பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ்
அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இவர் புலிகளின்
வைத்தியத்துறை பொறுப்பாளருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தாகவும்
புலிகளுக்கு வழங்குவதற்கென 24,94,500 பெறுமதியான மருந்து பொருட்களை
வைத்திருந்ததன் காரணத்தினாலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மருந்து
பொருட்கள் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. இவர்
முன்பும் பல தடவைகள் புலிகளுக்கான பொருட்களை வழங்கி வந்துள்ளமை விசாரணைகளில்
இருந்து தெரிய வந்துள்ளது.
16.06.2009, 04.00 PM
மட்டக்களப்பு முகாம்களில் உள்ள மக்கள்
அனுப்பிவைப்பு
திருகோணமலை மூதூர் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து மட்டக்களப்பு
மாவட்டத்தின் கிரிமுட்டி பகுதியில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த மக்கள்
திருகோணமலை கிளிவெட்டி முகாமிற்கு இன்று (16.06.2009) அழைத்து
செல்லப்பட்டுள்ளனர். மூதூர் கிழக்கு பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினாலேயே அவர்கள் இவ்வாறு இடைத்தங்கல்
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது 58
குடும்பங்களை சேர்ந்த 224 பேர் 10 பஸ்களில் வெருகல் பகுதியால் அழைத்து
செல்லப்பட்டுள்ளனர்.
மூதூர் கிழக்கு பகுதயில் இருந்துஇடம் பெயர்ந்து 750 குடும்பங்களை சேர்ந்த
2500 பேர் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பின் 11முகாம்களில்
தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள
முகாம்களை மூடி அங்குள்ள மக்களை அனுப்பி வைக்குமாறு கிழக்கு மகாண ஆழுநர்
மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16.06.2009 09.20 AM
கிழக்கு
மகாணத்தை சேர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்படுவர்
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள
மக்களில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களை முதல் கட்டமாக
மீள்குடியமர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வன்னிக்கு சென்று
பின்னர் வன்னி நிலைப்பரப்பு படையினரால் மீட்கப்பட்டபோது இடம்பெயர்நது வந்து
நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களே இவ்வாறு மீள் குடியமர்த்துவதற்கு
அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் கண்ணிவெடிகள் அகற்றும்
பணிகள் நிறைவடைந்ததும் அந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அடுத்த
கட்டமாக மீள் குடியமர்த்தப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி
மியன்மாரில் இருந்து வந்ததும் கிழக்குமாகாணத்தின் மீள் குடியேற்றம் குறித்து
இறுதி முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16.06.2009, 09.00 AM
தெஹிவளை பகுதியில் இளைஞர் கைது
தெஹிவளை பகுதியில் நேற்று (15.06.2009) இளைஞர் ஒருவர் கொழும்பு குற்ற
தடுதப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் சிரெஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவர் அலரிமளைகை மீது குண்டு தாக்குதல் நடத்தப்படும் எனவும், வெள்ளவத்தையில்
உள்ள தனியார் வங்கி ஒன்றில் 1 கோடியே 30 இலட்சம் ரூபா கொள்ளை சம்பவம்
இடம்பெறவுள்ளதாகவும் அதனை தட்டுத்து நிறுத்துமாறும் தொலைபேசி ஊடக
பொலிஸாருக்கும், பொதுமக்கள் சிலருக்கும் தகவல் வழங்கியதை அடுத்தே இவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இரு அழைப்புக்கள் குறித்தும் விசாரணை செய்த பொலிஸார் இரு அழைப்பும்
ஒரே இலக்கத்தில் இருந்து வந்துள்ளமையை கண்டு பிடித்துள்ளனர். இவரிடம்
தற்பொழுது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
15.06.2009, 11.00 PM
மீள்
குடியேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
இலங்கையில்
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை மீள் குடியமர்த்தும்
வேலைதிட்டத்திற்கு இலங்கை அரசு முக்கியத்துவம் கொடுத்து செயற்படும் என
இந்தியா எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம்.
கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.
அவுட் லுக் எனும் சஞ்சிகையில் இருந்து இலங்கையில் யுத்தம் முடிவுக்கு
வந்துள்ளது. இலங்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு
முனைப்புடன் செயற்படுகின்றது என்பதை இந்தியாவால் எவ்வாறு உறுதிபட
கூறமுடியும் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்
மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பதிலளிக்கையில் நாடாழுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இது
சம்மந்தமாக கூறியுள்ளார். அவசரமான தேவை என்ற அடிப்படையில் இடம்பெயர்ந்த
மக்கள் மீள் குடியமர்த்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஆயிரக்கணக்கில் இடம் பெயர்ந்துள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்
குடியமர்தப்படுவதற்கு இந்தியா நிதி உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது
என அவர் தெரிவித்துள்ளார்.
15.06.2009, 10.45 PM
தற்காலிக நாடுகடந்த அரசு
உருவாக்கப்படவுள்ளது கே.பி
தற்காலிக
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை அமைக்கும் வேலைத்திட்டங்களை
மேற்கொள்ளவுள்ளதாக புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்கு பொறுப்பான கே. பி
எனப்படும் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி
வெளியிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவில் உள்ள சட்டத்தரணியான
விஸ்வநாதன் உருத்திரகுமார் தலைமையிலான செயற்குழு மேற்கொள்ளவுள்ளதாக அவர்
இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த
நடவடிக்கைக்கு உலகில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஆதரவு தரவேண்டும்
என அவர் கேட்டுள்ளார்.
ஜனநாய ரீதியில் அமைக்கப்படவுள்ள இந்த அரசானது சர்வதேச ரீதியில் தமிழ்
மக்களது அபிலாசைகளை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார். அதே நேரம்
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்நாட்டு செயல் திட்டங்களை
மேற்கொள்வார்கள் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரு
செற்பாடுகளிலும் ஒரு இணக்கப்பாடு இருக்கும் என அவர் தனது அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
15.06.2009, 10.25 PM
தென்கொரிய கப்பல்கள் இலங்கை வந்துள்ளன.
தென்கொறியாவின் இரண்டு யுத்தக்கப்பல்கள் இன்று (15.06.2009) கொழும்பு
துறைமுகத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல்கள் இரு
நாட்டு நட்புறவை வலுப்படுத்தும் வகையில் வந்துள்ளதாக கடற்படையின் உயர்
அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவை இரண்டு நாட்கள் கொழும்பில்
தங்கியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதில் சொய் யங் என்ற கப்பல் நவீன
ஆயுதங்களை கொண்டதெனவும், ஹெய் சொன் எனப்படும் மற்றயது உதவி யுத்த கப்பலாகும்.
இந்த கப்பல்களில் இடம் பெயர்ந்த மக்களுக்கென ஒரு தொகுதி பொருட்கள்
கொண்டுவரப்பட்டுள்ளதாக தென்கொரிய தூதரகம் தெரிவித்துள்ளது.
15.06.2009, 09.50 PM
இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில்
தலையிட முடியாது
இலங்கையின்
பாதுகாப்பு விடயத்தில் இந்தியா தலையிட முடியாது என இந்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசிய போது அவர் இந்த கருத்தை
தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இலங்கையில் இராணுவ
முகாம்களை அமைப்பது அந்த நாட்டின் பாதுகாப்பு விடயங்களை கருத்தில் கொண்டே
மேற்கொள்ளப்படுகின்றது. வடக்கு கிழக்கை இணைப்பது குறித்து இந்திய அரசு
இலங்கை அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
15.06.2009, 04.15 PM
மட்டக்களப்பில் இராணுவ முகாம் நீக்கம்
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் கும்புறுமுனை அமைந்திருந்த
படையினரின் முகாம் மற்றும் சோதனை சாவடி என்பன இன்று (15.06.2009) முற்றாக
அகற்றப்பட்டுள்ளது. இது மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருந்த முக்கிய
முகாம்களில் ஒன்றாக அமைந்திருந்தது. 2002ம் ஆண்டு அரசுக்கம் புலிகளுக்கும்
இடையில் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததை அடுத்து
இந்த முகாமிற்கு அருகில் சோதனை சாவடி அமைக்கப்பட்டது. இந்த சோதனை சாவடியில்
படையினரும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த வீதியால் செல்பவர்களும் வாகனங்களும் இதுவரை பலத்த சோதனைக்கு
உள்ளாக்கப்பட்டிருந்தது. இந்த வீதியால் செல்லும் வாகனங்கள் பதிவுகளை
மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. கிழக்கு மாகாணம் படையினரால்
முற்றாக கைப்பற்றப்பட்டதை அடுத்து அகற்றப்படும் மிகப்பெரிய முகாம் இதுவாகும்.
15.06.2009, 04.00 PM
பத்மநாதனை
கைது செய்வதற்கு நடவடிக்கை
புலிகள் இயக்கத்தின் சர்வதேச தொடர்பாளராக கருதப்படும் குமாரன் பத்மநாதனை
கைது செய்வதற்கு இலங்கை அரசு சர்வதேச நாடுகளின் உதவியை நாடியுள்ளதாக த
கிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவர் புலிகள் இலங்கையில்
அழிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடுகளை மேற்கொண்டு
வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி
புலிகளின் தலைவர் பிரபாகரன் கே. பத்மநாதனை சர்வதேச தொடர்பாடலுக்கனா
செயலகத்தின் பொறுப்பாளராக நியமித்துள்ளார். இவரை கைது செய்யும் நோக்கில்
இவர் தொடர்பான பல முக்கிய தகவல்களை உலக நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக
வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
15.06.2009, 03.45 PM
மட்டக்களப்பில் 3பேர் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் நேற்று (14.06.2009) 3 போர்
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த
பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது இவர்களை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவர்களிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கி 03, அதற்கான மகசின்கள் 05, ரவைகள்
86 என்பன மீட்கப்பட்டுள்ளது. இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட்டு
வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
15.06.2009, 03.20 PM
வவுனியா செட்டிக்குளத்தில் துப்பாக்கி
சூட்டு சம்பவம்
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்று (14.06.2009) இரவு துப்பாக்கி
சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து
வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15.06.2009, 03.15 PM
சாவகச்சேரி பகுதியில் பெண் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் நேற்று (14.06.2009) பெண் ;ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் தேடுதல்
நடத்திய படையினர் குறித்த பெண்ணை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகறிது. இந்த
பெண் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போது 4 கைக்குண்டுகள்
மீட்கப்பட்டுள்ளதாக சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர
தெரிவித்துள்ளார்.
15.06.2009, 02.50 PM
வவுனியாவில் இருந்து ஓமந்தை வரையான ரயில்
சேவை
எதிர்வரும் செப்ரெம்பர் மாதமளவில்
நடைபெறும்
வவுனியாவில் இருந்து ஓமந்தை வரையான யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும்
செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தொவித்துள்ளது.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் படி வவுனியாவில் இருந்து ஓமந்தை வரையான ரயில்
பாதை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு யாழ்ப்பாணம் ரயில் சேவை மீண்டும் 20 வருடங்களின் பின்னர்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக வவுனியாவில் இருந்து
தாண்டிக்குளம் வரை ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில்
இருந்து வவுனியா வரையான ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகளை பிரதேச மக்கள்
பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஓமந்தை ரயில்
நிலையத்தை காலை மக்களும், யாழ் ரயில் நிலையத்தை ஹம்பாந்தோட்ட மக்களும்
மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் கொழும்பு வரையான ரயில் சேவையின்
அனைத்து வேலை திட்டங்களும் எதிர்வரும் 2010ம் ஆண்டுடன் நிறைவடையவுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
15.06.2009, 09.05 PM
புலிகளின்
மேலும் ஒரு நீர்மூழ்கி கப்பல் மீட்பு
மோதல்கள்
இடம்பெற்ற முல்லைத்தீவு வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் 8வது விசேட படையினர்
புலிகளின் நீர் மூழ்கி கப்பல் ஒன்றை மீட்டுள்ளனர்.படையணிக்கு கிடைத்த விசேட
தகவல் ஒன்றின் அடிப்படையில் இது மீட்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பகுதியில்
தேடுதல் நடத்திய படையினர் 4 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்ட இந்த நீர்மூழ்கி
கப்பலை மீட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இது
வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியின் கடற்கரையில் இருந்து சில மீட்டர்கள் தூரத்தில்
கடலிற்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல் முன்பு
புலிகளினால் பாவனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாhக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
15.06.2009, 08.40 AM
நலன்புரி நிலையங்களில் மலசல கூட பற்றாக்குறை
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு குளியலறை,
மற்றும் மலசல கூட பற்றாக்குறை நிலவுவதாக ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த முகாம்களுக்கு மொத்தமாக 6 ஆயிரம் வரையான மலசல கூடங்கள் தேவைப்படுகின்றது.
எனினும் முகாம்களில் 3 ஆயிரம் வரையான மலசல கூடங்களே அமைக்கப்பட்டுள்ளன. இது 50
பேருக்கு 1 என்ற அடிப்படையில் இருப்பதாக ஐக்கியநாடுகள் சபை வெளியிட்டுள்ள
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள மீள் குடியேற்ற மற்றும்
அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மலசல கூடங்களை அமைக்கு
பணியினை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இங்கு தேவைக்கு ஏற்ற வகையில் இவை அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தொண்டு நிறுவனங்கள் முகாம்களுக்கு சென்று பணியாற்றுவதற்கு அரசாங்கம் தடை
விதிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
14.06.2009

14.06.2009, 10.10 PM
தமிழ்
தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படும் சாத்தியம்
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்படும் சர்தர்ப்பங்கள் அதிகம்
உள்ளதாக கூட்டமைப்பை சார்ந்தவர்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அடுத்து வரும் பாராளுமன்ற அமர்வின் போது இது வெளிவரலம் என
தெரிவிக்கப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் முடிவுகள் சில கனிஷ்ட
உறுபப்பினர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை என சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவர்களின் கருத்துக்களுக்கு தமிழ் தேசயக் கூட்டமைப்பின் தலைமை
முக்கியத்துவம் கொடுப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,
மற்றும் வவுனியா பகுதியில் தேர்தல்கள் ஆரம்பமாகும் நிலையில் இந்தியாவில்
என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன்
கிசோர் தலைமையிலான குழுவினர் அரசாங்கத்துன் இணைது கொள்ளவுள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பை விடுத்து சுதந்திர குழுவாக
இயங்கவுள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14.06.2009, 09.40 PM
கிழக்கு மாகாணத்தில் மீன்பிடி தடை
நீக்கம்
கிழக்கு
மாகாணத்தில் மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள்
முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரெஸ்ட ஆலோசகரும், பாராளுமன்ற
உறுப்பினருமான பசில் ராஜபக்ச இன்று (14.06.2009) தெரிவித்துள்ளார். இதன்
அடிப்படையில் நாளை காலை தொடக்கம் திருகோணமலையின் எந்த பகுதியிலும் 24
மணிநேரமும் மீன் பிடியில் ஈடுபடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுநாள்வரை இருந்துவந்த 6 மணிக்கு பின்னர் மீன்பிடிக்கவேண்டும் என்ற
நிலைப்பாடும், மேலதிக இயங்திரம் பொருத்தக்கூடாது என்ற தடை உத்தரவுகள்
நிறுத்தப்படுகின்றது.இதன் அடிப்படையில் 15 தொடக்கம் 25 வரையான குதிரை வலு
கொண்ட இயந்திரங்களை பொருத்தமுடியும் என தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு
புதிய மீன்பிடி உபகரணங்கள் வழங்கவுள்ளதாவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
திருகோணமலையின் மூதூர் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் அங்குள்ள
மீனவர்களை சந்தித்து கலந்துரையாடியபோது இந்த தகவலலை வெளியிட்டுள்ளார்.
14.06.2009, 09.15 PM
திருகோணமலையில் ஆயுதங்கள் மீட்பு
திருகோணமலை தோணித்தோட்டம்மடு பகுதியில் நேற்று (13.06.2009) விசேட பொலிஸ்
பிரிவு ஒன்றும் படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை
மேற்கொண்டுள்ளனர். இதன் போது ரி56 ரக துப்பாக்கி 210, லைட் மெசின் கண் 12,
பழுதடைந்த சொட் கண் 01, எம் பி எம் ஜி பெரல் 12, 303 ரவைகள் 01 என்பன
மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14.06.2009, 04.20 PM
ஏ9 வீதி கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதன்
பின்னரே
பொதுமக்களின் பாவனைக்கு திறந்து
விடப்படும்.
வவுனியா தொடக்கம் முகமாலை வரையிலான ஏ9 வீதியின் இரு பக்கங்களிலும் உள்ள
கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டதன் பின்னரே அதனை மக்கள் போக்குவரத்திற்கு
அனுதிக்க முடியும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி
அமைச்சர் ரி. பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இது எப்போது நடைபெறும் என
திட்டவட்டமாக கூறமுடியாது. இங்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரெ
அரசாங்கம் இதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார். இந்த
பகுதியில் பொதுமக்களுக்கு அனர்த்தம் ஏற்படின் அதற்கு அரசாங்கமே பெறுப்பு
கூறவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
14.06.2009, 03.50 PM
ஓய்வூதியம்
பெறுவோரின் விபரம் திரட்டப்படுகிறது
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த ஓய்வூதியத்தை
பெறுபவர்களின் விபரங்கள் திரட்டப்படவுள்ளதாக ஓய்வூதிய திணைக்களம்
தெரிவித்துள்ளது. வடமாகாணத்தில் மொத்தமாக 18 ஆயிரம் போர் ஓய்வூதியம் பெற
தகுதி பெற்றுள்ளதாக ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் கே. ஏ திலகரத்ன
தெரிவித்துள்ளார். இவர்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில்
1400 ஓய்வூதியம் பெறுவோர் அடையாளம் காணப்பட்டு;ள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் ஓய்வுதியம் பெறுவோர் அங்கு நடைபெற்ற மோதல்கள் காரணமாக
வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதுடன், நாட்டின் பல பாகங்களிலும் நலன்புரி
நிலையங்களிலும் இடம்பெயர்ந்து உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இனங்காணப்பட்டு ஓய்வூதியங்கள்
வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
14.06.2009, 03.20 PM
திருகோணமலை
மூதூர் மக்கள் மீள்குடியேற்றம்
திருகோணமலை மூதூர் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து மட்டக்களப்பு
மாவட்டத்தில் தங்கியிருக்கும் மக்கள் மீள குடியமர்த்தப்படவுள்ளனர். இதில்
56 குடும்பங்களை சேர்ந்த 226 பேர் எதிர்வரும் 16ம் திகதி இவ்வாறு அழைத்து
செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை மூதூர் கிழக்கு பிரதேசம்
பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு
கிருமுடிட்டி முகாமில் இருக்கும் இவர்கள் திருகோணமலை கிளிவெட்டி முகாமில்
தங்கவைக்கப்பட்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14.06.2009, 03.00 PM
மட்டக்களப்பில்
ஆயுதங்கள் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை தோணிதாண்டமடுவில் நேற்று (14.06.2009)
புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்கள்
மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ரி56 ரக துப்பாக்கி 210, ரி
பீட்டர் ரக துப்பாக்கி 01. 303 ரக துப்பாக்கி 01, என்பன மீட்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
14.06.2009, 02.40 PM
மட்டக்களப்பில் ஒருவர்
கடத்தப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி பகுதியில் கடந்த 8ம் திகதி இரவு ஒருவர்
கடததப்பட்டுள்ளார்.இவர் இராசையா ஜெகநாதன் (வயது 21) என பொலிஸ்
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினத்தில் வீட்டிலிருந்து
தேவை ஒன்றிற்காக சென்ற வேளை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இவரை கடத்தி
சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14.06.2009, 09.00 AM
ஓமந்தையில்
இருந்து மாங்குளம் வரை மின்சாரம்
புலிகளிடம் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட ஓமந்தை பகுதியில் இருந்து
மாங்குளம் வரையான பகுதிக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு மின் சக்கதி எரிசக்தி
அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இரு பகுதிகளுக்கும் இடையேயான 36
கிலோமீட்டர் தூரத்திற்கு இவ்வாறு மின்சாரம் வழங்கப்படவுள்ளது. இதன் முதற்
கட்டமாக புலிகளினால் சேதமாக்கப்பட்ட மின் கம்பிகள் மற்றும் ரான்போமர்களின்
வேலைகள் நடைபெற்று வருவாதக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 20
வருடங்களுக்கு மேலாக மின்சாரம் இல்லாது காணப்பட்டது.
14.06.2009, 08.35 AM
நலன்புரி நிலையங்களில் விற்பனை
நிலையங்கள் திறப்பு
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களில் வர்த்தக அமைச்சினால்
அமைக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் நாளை (15.06.2009) திறந்து
வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் 33 மினி கோப்
சிற்றிகளும், 9 லக்சதோஸ விற்பனை நிலையங்களும், அரசாங்க விற்னை நிலைய
கூட்டுஸ்தாபனத்தின் கிளை ஒன்றும், சதோச கிளை ஒன்றும் திந்து
வைக்கப்படவுள்ளது. மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களுக்கு
மேலதிகமாக மலிவான விலையில் இந்த நிலையங்களின் ஊடகா பொருட்கள்
வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் அமைச்சர்களான
நிமால் சிறிபால டி சில்வா, மற்றம் பந்துல குணவர்த்தன ஆகியோர்
கலந்துகொள்ளவுள்ளனர்.
இங்கு அரசாங்க மருந்தாக்கற் கூட்டுஸ்தாபனத்தின் கிளை ஒன்றும் திறந்து
வைக்கப்படவுள்ளது. நலன்புரி நிலையங்களை அண்டிய பகுதியில் மீன் விற்பனை
நிலையங்களை திறக்குமாறும் அத்தியாவசிய சேவைகள் அணையாளர் சம்ந்தப்பட்ட
அதிகரிகளிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.
13.06.2009, 10.30 PM
பாடசாலையில்
உள்ள மக்கள் முகாம்களுக்கு மாற்றம்
வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து யாழ்ப்பாணம் நெல்லியடி மகாவித்தியாலயம்
மற்றும் சாவகச்சேரி மகிளிர் கல்லூரிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள்
கொடிகாமம் இராமாவில் பகுதியில் அமைந்துள்ள முகாம்களுக்கு எதிர்வரும் 20 ம்
திகதி மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான நிதியினை இந்திய
அரசாங்கமும், யுனிசெவ் அமைப்பும் வழங்கியுள்ளன. இந்த பாடசாலைகளில் இருந்த
மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள முகாமக்களில் தங்கியிருக்கும் மக்களில்
2871 பேர் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர்களில் க. பொ.
த உயர்தர பரீட்சையில் 63 மாணவர்களும், ஐந்தாமாண்டு புலமை பரிசில்
பரீட்சையில் 154 மாணவர்களும் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13.06.2009, 10.00 PM
புலிகள் சரணடைய செஞ்சிலுவை சங்கம் உதவி
படையினரிடம் சரணடைய விரும்பும் புலி உறுப்பினர்களுக்கும் படையினருக்கும்
இடையில் நடுவர்களாக செயற்பட தயாராக இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் சரணடைய விரும்பும் புலி உறுபப்பினர்கள்
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை தொடர்பு கொள்ள முடியும் என செஞ்சிலுவை சங்கம்
தெரிவித்துள்ளது. இவர்கள் தமது விருப்பங்களை தெரிவிக்கும் பட்சத்தில் அது
தொடர்பான விபரங்களை பொலிஸார் மற்றும் படையினரிடம் சமர்ப்பித்து
சரணடைவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் என செஞ்சிலுவை
சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச
மனிதநேய சட்டங்களை இலங்கை அதிகாரிகள் கடைப்பிடித்து வருகிறார்கள் என்பதை
உறுதிப்படுத்துவது போன்ற உதவிகளையும் மேற்கொள்ளவுள்ளதாக
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒருதலை பட்சமாக தடுத்து வைத்தல் சட்ரீதியற்ற முறையில் நடத்தப்படுதல்,
கைதுகள் போன்றன நடைபெறாமல் பாதுகாப்பு தரப்பினர் உறுதி செய்யவேண்டும் என
செஞ்சிலுவை சங்கம் கேட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களும், அந்த அமைப்பிற்கு உதவிகளை புரிந்த
மக்களும் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்துள்ளனர். இவ்வாறு
சரணடைந்தவர்களில் 5000ம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களிற்கு
அரசின் அனுமதியுடன் செஞ்சிலுவை சங்கத்தினர் சென்று பார்வையிட்டுள்ளதாக அந்த
அறிக்கையி;ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் மார்ச் மாதம் தொடம் மே மாதம் வரையான காலப்பகுதியில் 135
இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 6700 புலி உறுப்பினர்களை
பார்வையிட்டுள்ளோம். அவர்களை சந்தித்து கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான
பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களை
சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளதாகவும் அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு நிமித்தம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் உள்ளவர்கள் எவ்வாறு
நடத்தப்படுகிறார்கள், என்ன நிலையில் உள்ளார்கள், என்பன தொடர்பில் 1989ம்
ஆண்டுமுதல் தாம் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்
இலங்கை அரசுடன் உடன்படிக்கை ஒன்றையும் கைச்சாத்திட்டுள்ளோம் என அந்த
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
13.06.2009, 09.40 PM
பொலிஸ்மா அதிபர் மன்னாருக்கு விஜயம்
பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்கிரமரத்ன இன்று (13.05.2009) பகல் 12.45
மணியளவில் மன்னாருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது விடத்தல்
தீவு பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை சென்று
பார்வையிட்டுள்ளார். இந்த பொலிஸ் நிலையம் அண்மையில் புலிகளிடமிருந்து
குறித்த பகுதி கைப்பற்றபட்டதை அடுத்து அமைக்கப்பட்டிருந்தது. இங்கு நிலவும்
குறைபாடுகள் குறித்து ஆராயும் நோக்கில் அவரது விஜயம் அமைந்திருந்தது.
இங்கு உரையாற்றிய போது மடு, முழங்காவில், விடத்தல்தீவு, சிலாவத்துறை,
இலுப்பைகடவை ஆகிய இடங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தலா 2 சி டி எம் ஏ
தொலைபேசிகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் மன்னார் பொலிஸ்
நிலையத்திற்கு பஸ் ஒன்றும் வழங்கப்படவுள்ளது. பொலிஸார் தமிழ் மொழியை கற்க
வேண்டும்;. எதிர்காலத்தில் 1 இலட்சம் தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில்
இணைக்கப்படவுள்ளனர். பொலிஸார் அனைரும் மனித உரிமை சட்டங்கள் குறித்தும்
தேர்தல் சட்டங்கள் குறித்தும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என
வலியுறுத்தியுள்ளார்.
13.06.2009, 04.30 PM
ஜனாதிபதி
மியன்மாருக்கு விஜயம்
ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ இன்று (13.06.2009) மியன்மாருக்கு செல்கின்றார். அங்கு
இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு
நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள்
பூர்தியடைவதை முன்னிட்டு இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மியன்மாரில் 2008ம் ஆண்டு ஏற்பட்ட நர்க்கிஸ் புயலில் பாதிக்கப்பட்டு மீள
புனரமைக்கப்பட்ட கிராமம் ஒன்றை ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது
அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கிராமத்தின்
நிர்மாணப்பணிகளுக்கென இலங்கை பிக்குமார் நிதியுதவி வழங்கியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
13.06.2009, 04.10 PM
முசலி பிரதேசத்தில்
மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு
விசேட அடையாள அட்டைகள் வினியோகம்.
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவினில் மீள் குடியமர்த்தப்பட்ட மீனவ
தொழில் புரியும் மக்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக முசலி
பிரதேச செயலர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் 39
நீர்த்தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச
செயலர் எஸ். கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முசலி பகுதியில் உள்ள குடிநீர்
கிணறுகளில் இருந்து பௌசர்கள் மூலம் நீரை எடுத்து இந்த தாங்கிகளில்
நிரப்புவதாக கூறியுள்ளார்.
இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு கடற்படையினர் பெரிதும் உதவிகளை மேற்கொண்டு
வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி வங்காலை பகுதியில் உள்ள
முசலி பிரதேச மீனவர்களின் படகுகள் எடுத்துவருவதற்கு இவர்கள் பெரிதும்
உதவிகளை மக்களுக்கு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13.06.2009, 03.45 PM
முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு மீட்டல்
வகுப்புக்கள்
வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள மாணவர்களில் காபோத உயர்தர பரீட்சைக்கு
தோற்றும் மாணவர்களுக்கு துரித மீட்டல் வகுப்புக்களை ஒரே இடத்தில் நடத்தும்
நோக்கில் 50 கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட வலயக் கல்விப்
பணிப்பாளர் திருமதி ரஞ்சினி ஒஸ்வேட் இன்று (13.06.2009) தெரிவித்துள்ளார்.
கதிர்காமர், ஆனந்தகுமாரசாமி, இராமநாதன், அருணாசலம், அகிய நிவாரண
கிரமங்களிலும் 8 நலன்புரி வலயங்களிலும் உள்ள 1500 உயர்தர பரீட்சைக்கு
தோற்றும் மாணவர்களுக்கு இந்த மீட்டல் வகுப்புக்கள் நடைபெறவுள்ளது.
இந்த கூடாரங்கள் எதிர்வரும் 15ம் திகதி நலன்புரி நிலையங்களுக்கு பொறுப்பான
மேஜர் ஜெனரல் சந்திரசிறியினால் திறந்து வைக்கப்படவுள்ளது. அத்துடன் துரித
மீட்டல் வகுப்புக்களையும் அன்றைய தினம் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக ரஞ்சினி
மேலும் கூறியுள்ளார்.
இந்த கூடாரங்களை அமைப்பதற்கான பொருட்களை மேஜர் ஜெனரல் சந்திரசிறி பெற்றுக்
கொடுத்துள்ளார். இதனை அடுத்து இந்த கூடாரங்களை அமைக்கும் வேலைகள் நேற்று
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கூடாரங்கள் கதிர்காமர் நிவாரணக் கிராமத்திலேயே
அமைக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு டி எஸ் சேனநாயக்கா கல்லூரி, திகோணமலை
மற்றும் வவுனியா தெற்கு கல்விவலய ஆசிரியர்களின் உதவியுடன் இந்த வகுப்புக்கள்
நடைபெறவுள்ளன.
இதேவேளை ஐந்தாமாண்டு புலமை பரீட்சைக்கு தோற்றும் சுமார் 3500 மாணவர்களுக்கு
அவர்கள் இருக்கும் நலன்புரி நிலையங்களிலேயே எதிர்வரும் 20ம், 21ம்
திகதிகளில் விசேட வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளதாக வவுனியா வலய
கல்விப்பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
13.06.2009, 09.15 AM
முகாம்களில்
உள்ள மக்கள் விடுவிக்கப்படவேண்டும்
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில்
தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அதிகாரிகள் அனுமதி அளித்தால் வெளியே சென்று
வாழ்வதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் கியுமன்
ரைட்ஸ் வோச் தெரிவித்துள்ளது. இது தொட்பாக குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள
அறிக்கையில் இந்த மக்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படவேண்டும். இந்த
முகாம்களில் இருந்து 10 வயது தொடக்கம் 60 வயதிற்கு உட்பட்ட மக்கள் எவரும்
வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
13.06.2009, 08.45 AM
ஜோஜ் மாஸ்டர் நீதிமன்றில் ஆஜர்
பiயினரிடம் சரணடைந்த புலிகள் அமைப்பில் மொழிபெயர்பாளராக இருந்த ஜோர்ஜ்
மாஸ்டர் நேற்று (12.06.2009) மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
குற்ற தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் இவரை நீதிமன்றத்தில்
ஆஜர்ப்படுத்தியுள்ளனர். குற்ற தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் இவர் 3
மணிநேர வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13.06.2009, 08.10 AM
சத்தியமூர்த்தி உட்பட 3 பேர் நீதிமன்றில்
ஆஜர்
யுத்தம் நடைபெற்ற இறுதி கட்டத்தின் போது புலிகளின் பகுதிகளில் பணிபுரிந்த
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய
டாக்டர் சத்தியமூர்த்தி, புலிகளின் மருத்துவரான கந்தசாமி துரைகேதீஸ், அவரது
தாதியான ஆறுமுகம் ஜெயலக்ஸ்மி ஆகியோர் நேற்று (12.06.2009) நீதிமன்றத்தில்
அஜர்படுத்தப்பட்டுள்ளனர். புலிகளுக்கு உதவியதாகவும், படையினரின் மனிதாபிமான
நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளுக்கு தவறான கருத்துக்களை வழங்கினர்கள்
என்றும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சத்தியமூர்த்தி
நீதிமன்றத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் தடுப்பு காவலிற்கு
அனுப்பப்பட்டுள்ளார்.
13.06.2009, 08.20 AM
ஏ.சி.
சாந்தனுக்கு 2வருட சிறைத்தண்டனை
பிரித்தானியாவில் உள்ள தமிழரான அருணாச்சலம் கிருஸ்ணகுமார் (வயது 52) (ஏ. சி
சாந்தன்) என்பவருக்கு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் லண்டனில் உள்ள ஓல்ட்
பெய்லி நீதிமன்றம் இரண்டுவருட சிறைத்தண்டணை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
பிரித்தானியாவில் 2000மாம் ஆண்டில் இருந்து தடைசெய்யப்பட்ட புலிகள்
இயக்கத்திற்கு ஆயுத தளபாடங்கள் குறித்த ஆவணங்களை வழங்கிய காரணத்திற்காக
இவருக்கு இந்த தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர இவர் புலிகளுக்கு
நதிசேகரித்தமை, பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான புலிகளுடன்
இணைந்து செயற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
புலிகளின் முகவர் அமைப்பான கனடாவில் இயங்கிய உலக தமிழர் இயக்கம் போன்று
பிரித்தானியாவில் இயங்கிய பிரித்தானிய தமிழர் கழகத்திற்கு
BTA (BRITISH TAMIL ASSOCIATION) கிருஸ்ணகுமாhரே தலைமைவகித்துள்ளார்.
கிருஸ்ணகுமாரும் குறித்த அமைப்பின் நிதியாளரான இலங்கை தமிழர் கோல்டன்
லம்பேட் (வயது 30) அகிய இருவரும் 2007ம் ஆண்டு ஜுன் மாதம் பயங்கரவாத தடை
சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.
12.06.2009, 10.15 PM
சிறுவர்கள்
அம்பேபுஸ்ஸ நிலையத்திற்கு அனுப்பிவைப்பு
அக்கரைப்பற்று நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இரண்டு சிறுவர்கள்
அம்பேபுஸ்ஸ சிறுவர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள்
இருவரும் பாதுகாப்பு தரப்பினரிடம் தஞ்சமடைந்ததை அடுத்து அவர்களால்
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் புலிகள் அமைப்பில்
இருந்து தப்பித்துவந்து அதிரடிப்படையினரிடம் சரணடைந்த செல்வராஜா ஆனோஜன் (வயது
17) மற்றும் புலிகள் அமைப்பில்லாத ஆயுதக்குழு ஒன்றை சேர்ந்த கோமாரி
பகுதியில் வசிக்கும் பாலகிருஸ்ணன் சந்திரமோகன் (வயது 15) என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
12.06.2009, 09.45 PM
இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்க
விண்ணப்பிக்கும்
திகதி எதிர்வரும் 26ம் திகதிவரை
நீடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை பகுதிகளில் நடைபெறவுள்ள
தேர்தல்களில் அந்த பிரதேசத்திற்கு உட்பட்ட வாக்களார்கள் வேறு இடங்களில்
இருந்தாலும் தாம் வசிக்கும் பிரதேசங்களில் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க
முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை
பூர்த்தி செய்து தற்போது வசிக்கும் பிரதேச செயலர் மற்றும் கிராமசேவர்களின்
சான்றிதழுடன் வேட்புமனு அறிவிக்கும் தினத்தில் இருந்து ஒருவார காலத்திற்குள்
தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவர்கள் தேர்தல் ஆணையாளர். தேர்தல் செயலகம், சரணமாவத்த, இராஜகிரிய என்ற
முகவிரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இடம்பெயர்ந் மக்களின் வசதி கருதி அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை
ஏற்றுக்கொள்ளும் திகதி எதிர்வரும் 26 ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக
அவர் மேலும் கூறினார். கொழும்பு, ஹம்பகா, புத்தளம், களுத்துறை, வவுனியா,
அனுராதபுரம், குருநாகல், ஆகிய மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களில்
யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட வாக்காளர்கள் தமது வாக்களர் பெயர் பட்டியலை
பரிசோதிக்க முடியம். இதற்கான விண்ணப்பங்களையும் அங்கு பெற்றுக்கொள்ள
முடியும் என தெரிவித்துள்ளார்.
12.06.2009, 06.15 PM
பிரபாகரனின்
மரணச்சான்றிதழ் கோரப்பட்டுள்ளது
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரண சான்றிதழ் கொழும்பு உயர்
நீதிமன்றத்தினால் கோரப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்
லக்ஸ்மன் கதிர்காமரின் படுகொலை வழக்கினை விசாரண செய்த கொழும்பு
உயர்நீதிமன்ற நீதவான் குமுதினி விக்கிரமசிங்க இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளார். இந்த கொலை வழக்கில் பிரபாகரன் முதலாவது குற்றவாளியாக
கருதப்படுகின்றார். இவர் மரணம் அடைந்ததை அடுத்தே நீதிபதி மரண சான்றிதழை
சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பிரபாகன் உட்பட பல புலிகளின் சிரெஸ்ட
தலைவர்களும் இந்த கொலை வழங்கில் சம்மச்தப்பட்டுள்ளனர்.
12.06.2009, 06.00 PM
புலிகள் இயக்கம் தடைசெய்யப்படமாட்டது
ஆவுஸ்திரேலியா
புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என தெரிவித்து அதனை தடைசெய்யும்
முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. புலிகள்
இயக்கத்தை தடை செய்வது குறித்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடக்கம்
அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினரும்,அரச அதிகாரிகளும் ஆராய்துள்ளனர்.
புலிகள் இயக்கம் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட நிலையில் அது குறித்த
பரிசீலனை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் இந்த நிலை
குறித்து இலங்கை அரசு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில்
இருப்பதற்கு புலிகளுக்கு அனுமதி வழங்கினால் அவர்கள் வழர்ச்சி அடைவதற்கு
ஏதுவாக இருக்கம் என இலங்கை தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.
12.06.2009, 05.40 PM
இலங்கையில் 660,000 மக்கள்
இடம்பெயர்ந்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெயர்ந்த நிலையில் 6 இலட்சத்து 60 ஆயிரம் மக்கள் உள்ளதாக
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான மனித உரிமைகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த தொகையானது மிகவும் அதிகமாக உள்ளது. இவர்கள் மிகவிரைவில் மீள்
குடியமர்த்தப்பட்டவேண்டிய நிலையில் உள்ளனர். இந்த மக்களின் மீள்
குடியேற்றத்திற்கு தனியார் துறையினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என
ஐக்கியநாடுகளின் அகதிகளுக்கான மனித உரிமைகள் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான
பிரதிநிதி எமிட் ஒவ்காட் தெரிவித்துள்ளார்.
12.06.2009, 05.15 PM
தோமஸ் வில்லியம் இன்று பதவியேற்றுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தோமஸ் வில்லியம்
தங்கத்துரை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இந்த வைபவம் இன்று
(12.06.2009) பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஜே எம் லொக்குபண்டார முன்னிலையில்
இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
கனகசபை பத்மநாதன் காலம்சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர்
நியமிக்கப்பட்டுள்ளார். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில்
போட்டடியிட்ட இவர் விருப்பு வாக்கின் அடிப்படையில் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.
12.06.2009, 04.50 PM
முகாம்களில் செய்தி சேகரிக்க வழிகாட்டி
இடம்பெயர்ந்த
மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களில் செய்திகள் சேகரிப்பதற்கு இலகுவாக
வழிகாட்டி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஸன
யாப்பா தெரிவித்துள்ளார். இது செய்தியாளர்கள் அங்கு சென்று செய்திகளை
திரட்டுவதற்கு இலகுவாக அமையும் என குறிப்பிட்டார். இது தொடர்பில் அரச தகவல்
திணைக்கள பணிப்பாளருக்கு விளக்கப்படவுள்ளது. செய்தியாளர்கள் நலன்புரி
நிலையங்களுக்கு சென்று அங்குள்ள பொதுமக்களுடன் கருத்துக்களை
பரிமாறிக்கொள்வதற்கு ஏதுவாக அமையும் என அவர் கூறியுள்ளார்.
12.06.2009, 04.30 PM
வைத்திய சாலையில் இருந்து ஒருவர்
தப்பியோட்டம்
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து மன்னார் பொது வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வைததியசாலை
தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவர் சுரேந்திரன் (வயது 32) என
தெரிவிக்கப்படுகிறது. படையினர் பாதுகாப்பு கடைமையில் ஈடுபட்டிருந்த சமயம்
இவர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைத்திய சாலையில் இருந்து சிறுவர்கள் உட்பட 06பேர் இதுவரையில் தப்பி
சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 757 பேர் சிகிச்சை பெற்று
வருவதுடன் இங்கு சிகிச்சை பெற்றுவந்த 47பேர் மரணமடைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
12.06.2009, 03.30 PM
மட்டக்களப்பில்
பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (11.06.2009) பகல் பெண் ஒருவர்
கடத்தப்பட்டுள்ளார். இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் சேவா லங்கா
நிறுவனத்தில் பணிபுரியும் வெல்லாவெளியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான
நல்லதம்பி ராஜேஸ்வரி (வயது 33) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்
வேலைநிமித்தம் வீட்டிலிருந்து காக்காச்சிவட்டை பகுதிக்கு செல்லும் போது
வாகனம் ஒன்றில் வந்த சிலர் இவரை கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸாரிடமும், கொழும்பில் உள்ள சேவாலங்கா தலைமை
காரியாலயத்திற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வானில் வந்தவர்களில் இந்த பெண் குறித்து விசாரித்தவர் தமிழில் சரளமாக
உரையாடியதாகவும் இந்த பெண் கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாகவும்
விசாரணைககளில் இருந்து தெரியவந்துள்ளது.
12.06.2009, 03.10 PM
பிரான்ஸ் அரசின் தளவைத்தியசாலை
நிறைவுக்கு வரவுள்ளது
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள நலன்புரி நிலையத்தில் செயற்பட்டு
வந்த பிரான்ஸ் அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கிவந்த 100 கட்டில்களை கொண்ட
தற்காலிக வைத்தியசாலையின் பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக பிரான்ஸ்
தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளதாக ஏ எப் பி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த
வைத்தியசாலையில் இடம்பெயர்ந்து வந்த 2500 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன் 250 இற்கும் மேற்பட்ட சத்திர சிகிச்சைகளும்
மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்கில் 45 நாட்களுக்கு
மாத்திரம் அமைக்கப்பட்ட இந்த வைத்தியசாலை நிறைவுக்கு வருவதாக அவர்
தெரிவித்துள்ளார். வைத்தியசாலையின் பணிகள் நிறைவடைந்த போதும் சர்வதேச
நிவாரண முகவர் நிலையங்கள் ஊடகா பிரான்ஸ் அரசு இடம்பெயர்ந்த மக்களுக்கு
உதவிகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
12.06.2009, 09.15 AM
மக்களை
விரைவில் மீள்குடியமர்த்துவது சந்தேகமே. ஐநா
மோதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள
நலன்புரி நிலையங்களில் நீண்ட நாட்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை தோன்றலாம்
என இலங்கையில் பணிபுரியும் ஐக்கிநாடுகள் சபையின் அதிகாரியான மார்த்கட்ஸ்
பிபிசிக்கு தெரிவித்துள்ளார். இலங்கை அரசு அறிவித்துள்ள ஆறுமாதகாலத்தில்
அல்லது இவ்வருட இறுதிக்குள் இந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீள்
குடியமர்த்துவது என்ற நிலைப்பாட்டினை இலங்கை இராணுவம் கொண்டிருக்கவில்லை என
அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் 6 மாத காலத்திற்குள் இந்த மக்களை குடியமர்த்தவுள்ளதாக
ஐக்கியநாடுகள் சபையிடம் தெரிவித்துள்ள போதும் இது தொடர்பாக மாறுபட்ட
கருத்துக்களே தமக்கு கிடைப்பதாக அவர் கூறினார். இதன் அடிப்படையில் நலன்புரி
நிலையங்களில் உள்ள கூடாரங்களை நிரந்தர கட்டடமாக மாற்றுமாறு உள்ளுர்
அதிகாரிகள் ஐநா சபையிடம் கேட்டுவருகின்றனர். மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள்
பெருந்தொகையான மக்கள் ஆறு மாதகாலத்தில் தமது சொந்த இடங்களில் மீள
குடியர்த்தப்படுவர் என தமக்கு தோன்றவில்லை என தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் மீள் குடியமர்த்தும் வரையில் அவர்களின் வசதிகளை அதிகரிக்கும்
நோக்கிலேயே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண
மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளதாக அவர்
கூறினார்.
12.06.2009, 08.40 AM
இந்திய பிரதமரை சந்திக்க நேரம்
ஒதுக்கப்படவில்லை
இந்தியா
சென்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை
சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை
செயலர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து வந்த
ஊடகவியலாளர் சிலரை சந்தித்த போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். தமிழ்
தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலர் டெல்லி வந்துள்ளனர்
முன்பும் பலதடைவை இவ்வாறு வந்து இந்திய தலைவர்களிடம் பேச்சு நடத்தியுள்ளனர்
என கூறியுள்ளார். இவர்களின் இந்திய வருகையை முன்னிட்டு இலங்கை அரசு
எந்தவிதமான பீதியும் அடைய தேவையில்லை.
மேலும் இலங்கையின் பிரச்சனைக்கு அந்த நாடுதான் தீர்வு திட்டத்தினை
முன்வைக்க வேண்டும். இது அந்த நாட்டின் உள்வவகாரம் ஆகையால் இவ்வாறான
தீர்வுதான் முன்வைக்கப்படவேண்டும் என இந்தியா வலியுறுத்த முடியாது. இலங்கை
ஜனாதிபதி எந்த முடிவு எடுத்தாலும் அதனை இந்தியா வரவேற்கும். இலங்கையில்
தீர்வுத் திட்டத்தை முன்வைப்பது இந்தியாவினதோ அல்லது பிற நாடுகளினதோ வேலை
கிடையாது.
இந்தியா இலங்கைக்கு இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பேசப்பட்டு
வருகிறது இது விரைவில் அமுல்ப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
12.06.2009, 08.30 AM
யாழ்தேர்தலுக்கான கட்டுப்பணம்
செலுத்தப்பட்டது
யாழ்மாநகர சபை தேர்தலில் போட்டியிடவென சுயேட்சை குழு ஒன்று நேற்று
(11.06.2009) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல் செயலகத்தில் 2009ம் ஆண்டுக்கான தேர்தலுக்கு
முதலில் கட்டுப்பணடம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மேலதிக விபரங்கள்
பாதுகாப்பு கரணங்களுக்காக வெளியிடப்படவில்லை. இதனை தொடர்ந்து தேர்தலில்
போட்டியிடும் சுயேட்சை குழுக்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்துவார்கள் என
யாழ் தேர்தல் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
11.06.2009, 10.10 PM
மியன்மார்
இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கென மியன்மார் அரசாங்கம்
இன்று (11.06.2009) இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில்
50 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியினை மியன்மார்
நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யு நியாவின் இலங்கையின் மியன்மாருக்கான
தூதுவர் நியூட்டன் குணரட்ணவிடம் கையளித்துள்ளார்.
இடம் பெயர்ந்த மக்களுக்கு இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த
நிதியுதவி வழங்கப்படுவதாக மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை அழித்து சமாதான வழியில் செல்லும் இலங்கைக்கு வாழ்த்துக்களை
தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
11.06.2009, 09.35 PM
களனி பல்கலைக்கழகம் தற்காலிகமாக
மூடப்பட்டுள்ளது
களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அந்த பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு இடையில்
இன்று (11.06.2009) காலை மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 5 இற்கும்
மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது வீதியில்
சென்றுகொண்டிருந்தவர்களும் வாகனங்களும் தாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை
அடுத்து அந்த வீதியூடான போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொலிஸார் பாதுகாப்பு
கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து களனி பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மறு அறிவித்தல்
வரை மூடப்பட்டுள்ளது. எனினும் ராகமையில் அமைந்துள்ள மருத்துவ பீடம் வழமைபோல்
நடைபெறும் என பல்கலைகளக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11.06.2009, 09.15 PM
புலிகளின் சர்வதேச முக்கியஸ்தர்களான கே.
பி என்பவருக்கும்
தவா இளையதம்பி என்பவருக்கும் இடையில்
முறுகல்
புலிகளின் சர்வதேச தொடர்பாளரும் நிதி கட்டுப்பாட்டாளரகாகவும் கூறப்படும்
குமாரன் பத்தமநாதனுக்கும் கனடாவில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கப்பம்
அறவிட்ட தவா இளையதம்பி என்பவருக்கும் இடையில் புலிகளின் கனேடிய சொத்துக்கள்,
மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் குறித்து பிணக்கு ஏற்பட்டுள்ளதாக
ரொறொன்ரேவில் வெளியான அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
தவா இளையதம்பி புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய நண்பர் எனவும்
கனடாவில் மக்களிடம் இருந்து கப்பமாக அறவிடப்பட்ட நிதிக்கு இவரே பொறுப்பாக
இருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு
ஜே அன்பின்ஞ் பகுதியில் நோபிக்ஸ் சொப்பிங் சென்டர் என்ற பெயரிலான வர்த்தக
கட்டட தொகுதியினை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்
கொழும்பு கறுவாக்காடு பகுதியில் பல வீடுகளையும், கொழும்பில் வைத்திய நிலையம்
ஒன்றையும், ரொறொன்ரோவில் காற்றாடி மின் உற்பத்தி நிலையம் ஒன்றையும் கொள்வனவு
செய்திருந்தார்.
11.06.2009, 6.10 PM
மட்டக்களப்பில்
சட்டவிரோத கடைகள் உடைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபை பகுதியில் சட்டவிரோதமாக
அமைக்கப்பட்ட கடைகள் இன்று (11.06.2009) காலை உடைக்கப்படுவதாக
தெரிவிக்கப்படுகிறது. திருக்கொண்டியாமடு தொடக்கம் அக்கரைப்பற்று வரையான 99
கிலோமீட்டர் பாதையை அகலமாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்படுவதாக காத்தான் குடி நகரசபை தலைவர் யூ எல் முபின்
தெரிவித்துள்ளார். இந்த வீதி புனரமைப்பிற்கு ஜப்பான் அரசு 3600 மில்லியன்
ரூபா நிதியினை வழங்கியுள்ளது. இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் யாவும்
எதிர்வரும் 2011ம் ஆண்டு நிறைவடையும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை
தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணசபை சுகாதார அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா முன்னிலையில்
பொலிஸார், மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் இந்த
வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
11.06.2009, 05.50 PM
மட்டக்களப்பில் 3 பேர் பொலிஸாரால் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் 3 பேர்
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஒருதொகை ஆயுதங்கள்
மீட்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் வழங்கிய தகவல்களின் படி
ரி56 ரக துப்பாக்கி 3, அதற்hகான மகசீன் 5, ரவைகள் 90, என்பன
மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் இருவர் பயங்கரவாத
தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
11.06.2009, 05.30 PM
யாழ்
ரயில்நிலையத்திலுள்ள மக்கள் வெளியேற உத்தரவு
யாழ்ப்பாணத்தின்
ரயில் நிலையப்பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மற்று ரயில் நிலைய
விடுதிகளிலும் இடம்பெயாந்து வந்து தங்கியிருக்கும் மக்கள் எதிர்வரும் 20ம்
திகதிக்கு முன்னர் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என யாழ் அரச அதிபர் கே.
கணேஸ் அறிவித்துள்ளார். யாழ் கொழும்பு இடையேயான ரயில் போக்குவத்தை
ஏற்படுத்தும் நோக்கில் அங்கு திருத்த வேலைகள் மேற்கொள்ளவென இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களுக்கு வேறு இடங்களில் தங்குவதற்கு அரசு
வசதிகள் எதனையும் செய்து கொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
1990ம் ஆண்டு காலப்பகுதியில் வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்து
இடம்பெயர்ந்து வந்த மக்களே இவ்வாறு தங்கியிருந்துள்ளனர். குறித்த வலிகாமம்
வடக்கு பகுதி தற்பொழுது உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
11.06.2009, 05.10 PM
உலக மொழிகளில் தமிழ் 15வது இடம்
சர்வதேச நாடுகளில் பேசப்படும் மொழிகளில் தமிழ்மொழி 15வது இடத்திற்கு
தரப்படுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் தெரிவித்துள்ளது.
1996ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சர்வதேச மொழி உரிமை பிரகடனத்தின் படி
மொழியின் வரலாறு, அதன் எல்லை, அங்கிகரிப்பு என்பவற்றை கொண்டு மொழி
தரப்படுத்தப்படுகின்றது. உலகில் 6800 மொழிகள் தற்பொழுது பேசப்படுகின்றது.
இதில் 2261 மொழிகள் எழுத்துக்களை கொண்டுள்ளது. ஏனையவை பேச்சு வழக்கில்
மாத்திரம் உள்ளன. ஆசிய நாடுகளில்; 2200 மொழிகளும், ஐரோப்பாவில் 230
மொழிகளும், ஆபிரிக்காவில், 2000ம் மொழிகளும், பசுபிக் பிராந்தியத்தில் 1300
மொழிகளும், பேசப்படுகிறது.
11.06.2009, 04.45 PM
ஜெயலலிதா ஈழத்தமிழரை தேர்தல் காலத்திலேயே
ஆதரித்தார்.
தேர்தல்
காலங்களில் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ஜெயலலிதா முன்னுரிமை
கொடுப்பதாக தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். திராவிட
முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதனை
குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழர்களுக்கென தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட
அனைத்துக்கட்சி மாநாடு மற்றும் மனித சிங்கிலி போராட்டம், அனைத்து கட்சிகளின்
இந்திய பிரதமருடனான சந்திப்பு என்பவற்றில் ஜெயலலிதா கலந்துகொள்ளவில்லை.
இருப்பினும் தேர்தல் காலத்தில் மாத்திரமே தான் ஈழக் கொள்கையை ஆதரிப்பதாக
தெரிவித்திருந்தார் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
11.06.2009, 09.30 AM
ஏ9 வீதியூடாக பொருட்கள் எடுத்து
செல்லப்படுகிறது
யாழ்ப்பாணத்திற்கு ஏ9 வீதியூடாக இன்று (11.06.2009) ஒரு தொகுதி
அத்தியாவசியப்பொருட்கள் 120 லொறிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இதுவரை
8 தடைவைகள் யாழப்பாணத்திற்கு ஏ9 வீதியூடாக பொருட்கள் எடுத்து
செல்லப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் 20 தொடக்கம் 25 வரையான லொறிகள் மூலமே
எடுத்து செல்லப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான லொறிகள் பொருட்களை எடுத்துச்
செல்வது இதுவே முதல் தடவையாகும். பல அமைப்புக்களும், யாழ் வர்த்தகர்களும்
தமக்கான பொருட்களை தருவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று யாழ் வர்த்தக சங்கத்தினர் நடத்திய கூட்டத் தொடரின்
போது கொண்டுவரப்படும் பொருட்கள் நாவற்குழி களஞ்சியத்தில் இறக்கப்பட்டு
பின்னர் அங்கிருந்து யாழ் வர்த்தகர்கள் கையேற்பது என
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
11.06.2009, 09.00 AM
வடக்கில் அபிவிருத்திகுறித்து அறிய
மத்தியநிலையம்
வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி தொடர்பான தகவல்களை
பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஊடகத்துறை அமைச்சு மத்தியநிலையம் ஒன்றை
ஆரம்பித்துள்ளது. இந்த நிலையத்தின் ஊடாக அபிவிருத்தியை சீரான முறையில்
முன்னெடுத்து செல்வதுடன், அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த தகவல்களை
பெறமுடியும் என ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
11.06.2009, 08.40 AM
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ்
மக்களுக்கு சேவை செய்ய
முடியாவிட்டால் தமது பதவிகளில் இருந்து
விலக வேண்டும்
தமிழ்தேசிய
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய
முடியாவிட்டால் தமது பாராளுமன்ற பதவிகளில் இருந்து விலகிக்கொள்ளுமாறு தமிழர்
விடுதலை கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழ்
அரசியல் தலைவர்களினதும், தமிழ் மக்களினதும் பெருமையை ஊதாசீனம் செய்யவேணடாம்
என தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் அவர் கேட்டுள்ளார். எந்த ஒரு பாராளுமன்ற
உறுப்பினரும் தனது சலுகைகளை சொந்த தேவைக்காக முறைகேடான முறையில் பயன்படுத்த
முடியாது.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் இருந்து விடுமுறை பெற்று
இந்தியாவிற்கு சென்று அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு உண்மைக்கு புறம்பான
பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்துள்ளனர். இவர்களின் இந்த செயற்பாடுகளினால்
அங்குள்ள அரசில் தலைவர்கள் உண்மை நிலை புரியாது இலங்கைக்கு எதிராக
செயற்படுவதுடன் அங்கு பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர். இவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டனர் என
ஆனந்தசங்கரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான காரணங்கள் எதுவும் இல்லாது விடுமுறை பெற்றுகொள்வதற்கு தமிழ் தேசிய
கூட்டமைப்பினர் முயற்சித்தால் அவர்கள் மீது சட்டநடவடிக்கை
மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து
அவர்களுக்கு உதவுவதே இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய பொறுப்பாகும்
எனவும் அவர் குறிப்பிட்டு;ளார்.
11.06.2009, 08.20 AM
யசூசி அகாசி ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
இலங்கை
வந்துள்ள யப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று (11.06.2009) ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து பேச்சுநடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்
நேற்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர்
ரோகித்த போகொல்லாகம ஆகியோரை சந்தித்து பேச்சுநடத்தியுள்ளார். அத்துடன்
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நலையங்களுக்கு சென்ற அவர்
அரசாங்கம் மக்களுக்கு மேற்கொண்டுள்ள அடிப்படை வசதிகளை தாம் வரவேற்பதாக
தெரிவித்துள்ளார்.
11.06.2009, 08.05 AM
தேர்தலில் போட்டியிட அனைத்து
கட்சிகளுக்கும் அனுமதி
யாழ்
மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைகளில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை
தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளுக்கும் அனுமதி
வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட தாம்
தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்ததை அடுத்து அதற்கு பதலளிக்கும்
வகையில் கொழும்பில் நேற்று (10.06.2009) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து
தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன அரசின் இந்த
முடிவை தெரிவித்துள்ளார்.