HOME ARTICLES HISTORY MARTYRS PHOTOS LINKS ARCHIVES CONTACT  

 

 

15.02.2009

மாகாணசபைத் தேர்தல்களில் ஐ.ம.சு. கூட்டமைப்பு அமோக வெற்றி.


15-02-2009, 05.43PM

வன்னிப் பிராந்தியம் முழுமையாக  மீட்கப்பட்டதும் தமிழ் கட்சிகளுடன் பேச்சுவாhத்தை மேற்கொள்ள  தீர்மானம்.

 

வன்னிப் பிராந்தியம் புலிப்பயங்கரவாதிகளிடமிருந்து முழுமையாக மீட்கப்பட்டதன் பின்னர் நிரந்தர சமாதானத் தீர்வொன்றினை காண்பதற்காக தமிழ் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையொன்றினை மேற்கொள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

15-02-2009, 08.45AM

மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப தயார் - திவாரட்ண.

 

முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதற்கு பாதுகாப்பு அமைச்சு தயாராகவுள்ளபோதும் அங்கு கண்ணிவெடிகள் அதிகளவில் புதைக்கப்பட்டுள்ளமையை காரணம் காட்டி உலக உணவுத்திட்ட அதிகாரிகளும், ஐ.சி.ஆர்.சி பிரதிநிதிகளும் பின்வாங்குவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரட்ண தெரிவித்துள்ளார்.


 

,d;iwa nra;jpj; jiyg;Gfs;                         

 

15.02.2009

15.02.2009

15.02.2009

15.02.2009

15.02.2009

15.02.2009

15.02.2009

15.02.2009

15.02.2009

முல்லைத்தீவில் புலிகளின் படகுகள் மீது விமானத் தாக்குதல்.

வன்னிப் பிராந்தியம் முழுமையாக  மீட்கப்பட்டதும் தமிழ் கட்சிகளுடன் பேச்சு

முப்படையினருக்கும் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு காத்தான்குடியில்

மாகாணசபைத் தேர்தல்களில் ஐ.ம.சு. கூட்டமைப்பு அமோக வெற்றி.

புத்தளம் நாயக்கர் வித்தியாலய தேர்தல் தொகுதி மறு வாக்குப் பதிவு

யாழ் குடாநாட்டு நலன்புரி முகாமில் உள்ள மக்கள் நெருக்கடிக்குள் வாழ்வதாக

இராணுவத் தளபதி சரத்பொன்சேகா வவுனியாவிற்கு விஜயம்.
மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப தயார் - திவாரட்ண.

காயமடைந்தோர் சிகிச்சையின்றி அல்லல்படும் செய்தி கவலையளிக்கின்றது

 

 

 

 

வன்னிப் பிரதேசத்திலிருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கக் கோரி யாழில் இடம்பெற்ற பேரணி (படங்கள்)

 

யாழ் மாவட்டத்தில் சுதந்திர தினம் 2009 (படங்கள்)


 

15-02-2009, 07.12PM

முல்லைத்தீவில் புலிகளின் படகுகள் மீது விமானத் தாக்குதல்.
 

முல்லைத்தீவு வடக்கு கடற்கரையில் காணப்பட்ட புலிகளின் தற்கொலைப் படகுகள் மூன்று மீது இன்று (15.02.2009) பிற்பகல் 1 மணியளவில் விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனகநாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதல் வெற்றியழித்துள்ளதாகவும் படகு முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

15-02-2009, 05.43PM

வன்னிப் பிராந்தியம் முழுமையாக  மீட்கப்பட்டதும் தமிழ் கட்சிகளுடன் பேச்சுவாhத்தை மேற்கொள்ள  தீர்மானம்.

 

வன்னிப் பிராந்தியம் புலிப்பயங்கரவாதிகளிடமிருந்து முழுமையாக மீட்கப்பட்டதன் பின்னர் நிரந்தர சமாதானத் தீர்வொன்றினை காண்பதற்காக தமிழ் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையொன்றினை மேற்கொள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈபி.டிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உட்பட ஏனைய பல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ நடவடிக்கையின் மூலம் 95சதவீதமான பகுதியினை புலிகளிடமிருந்து மீட்டுவிட்டதாகவும் எஞ்சிய பகுதிகள் இன்னும் ஒரு சில தினங்களில் விடுவிக்கப்பட்டுவிடும் எனத் தெரிவித்துள்ளார்.


ஏசியன் றிபியுன் இணையத் தளத்திற்கு அவர் வழங்கிய விசேட செவியில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் இதனை முன்னெடுப்பதற்காக பாகுபாடற்ற முறையில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

15-02-2009, 05.30PM

முப்படையினருக்கும் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது.

 

மட்டக்களப்பு காத்தான்குடி முஸ்லீம் சமூக ஒன்றியமான பாரூக்அகர் அத்தஅவியாவின் ஏற்பாட்டில் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இன்று (15.02.2009) இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது.

 

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனினால் காலை 8.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வு மாலை வரையில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.கிஸ்புல்லா, பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

 

15-02-2009, 05.05PM

வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி.

 

வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றியினைப் பெற்றுள்ளது. மத்திய மாகாணத்தில் கண்டி தேர்தல் தொகுதியிலும், மஸ்கலிய தேர்தல் தொகுதியிலும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியுள்ளது. இந்த மாகாணத்தில் நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் பாரிய வாக்கு வித்தியாசத்தில் ஐ.ம.சு.கூட்டமைப்பு வெற்றிபெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் ஐ.ம.சு.கூ 18 ஆசனங்களையும், ஐ.தே.க 12 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

 

மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஐ.ம.சு.கூட்டமைப்பு பாரிய வாக்கு வித்தியாசத்தில் 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இங்கு ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களைப் பெற்றுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் ஐ.ம.சு.கூட்டமைப்பு 7 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 3 ஆசனங்களையும் வெற்றி கொண்டுள்ளது. மத்திய மாகாணத்தின் 3 மாவட்டங்களிலும் ஜேவிபி எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. இங்கு ஐ.ம.சு.கூட்டமைப்பு 24 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 9 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இங்கு ஜேவி.பி 1 ஆசனத்தினைப் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

 

15-02-2009, 03.50PM

புத்தளம் நாயக்கர் வித்தியாலய தேர்தல் தொகுதி மறு வாக்குப் பதிவுக்குட்படுத்தப்படும் - தயானந்த திஸ்ஸாநாயக்க

 

வடமேல் மாகாண புத்தளம் தொகுதியில் அமைக்கப்பட்ட நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வாக்கு மோசடிகளை அடுத்து குறித்த தொகுதிக்கான தேர்தலினை தேர்தல்கள் செயலகம் இரத்துச் செய்துள்ளது.

 

புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதனை இரத்துச் செய்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தத் தொகுதிக்கான மறு வாக்குப் பதிவு நடவடிக்கை தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

15-02-2009, 08.50AM

யாழ் குடாநாட்டு நலன்புரி முகாமில் உள்ள மக்கள் நெருக்கடிக்குள் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பி வந்தவர்களில் யாழ் குடாநாட்டு நலன்புரி முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு முன்வருமாறு அரச சார்பற்ற நிறுவனங்களை அரசாங்க அதிபர் கோரியுள்ளார்.


குடாநாட்டிற்குள் வந்தவர்கள் மிருசுவில் தேவாலயம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, மற்றும் குருநகரில் உள்ள பழைய மேல் நீதிமன்ற விடுதி ஆகிய வற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மிருசுவில் தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு தொகுதியினர் அருகிலுள்ள கொடிகாமம் நகரை அண்டிய பாடசாலைகளில் குடியமர்த்தப்படுகின்றனர். இவர்களின் உணவுத் தேவைக்கான பொருட்கள் வழங்கப்படாது அவர்கள் நெருக்கடிக்குள் வாழ்வதாக தெரியவருகின்றது. சிறு குழந்தைகளுக்கான பால்மாக்கள் இல்லாத நிலையில் போசாக்கற்ற நிலையில் குழந்தைகள் காணப்படுவதாகவும், மாற்றுத் துணிகள் இன்றி அவர்கள் அல்லல் படுவதாகவும் அங்கு சென்று திரும்பிய மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

15-02-2009, 08.47AM

இராணுவத் தளபதி சரத்பொன்சேகா வவுனியாவிற்கு விஜயம்.
 

இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் சரத்பொன்சேகா தலைமையிலான உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று நேற்று (14.02.2009) வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 


கொழும்பின் பல உயர் அதிகாரிகளுடன் விசேட விமானம் மூலம் அங்கு சென்ற இராணுவத் தளபதி வன்னி மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன். முல்லைத்தீவிலிருந்து வரும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, காயமடைந்து வருபவர்களுக்கு முன்னுருமை அடிப்படையில் சிகிச்சை அளிப்பது போன்றவை தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 

15-02-2009, 08.45AM

மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப தயார் - திவாரட்ண.

 

முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதற்கு பாதுகாப்பு அமைச்சு தயாராகவுள்ளபோதும் அங்கு கண்ணிவெடிகள் அதிகளவில் புதைக்கப்பட்டுள்ளமையை காரணம் காட்டி உலக உணவுத்திட்ட அதிகாரிகளும், ஐ.சி.ஆர்.சி பிரதிநிதிகளும் பின்வாங்குவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரட்ண தெரிவித்துள்ளார்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கு உட்பட்ட மக்களே வசித்து வருகின்றனர் அவர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக 40 லொறிகளில் 420 மெற்றித் தொன் உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

15-02-2009,08.42AM

முல்லைத்தீவில் காயமடைந்தோர் சிகிச்சையின்றி அல்லல்படும் செய்தி கவலையளிக்கின்றது - உப்புல் குணசேகர
 

முல்லைத்தீவில் காயமடைந்துள்ள பொதுமக்கள் சிகிச்சையின்றி அல்லல் படுவதாக கிடைக்கும் செய்திகள் தொடர்பில் வைத்தியர் என்ற ரீதியில் தாம் கவலை அடைவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் உப்புல் குணசேகர தெரிவித்துள்ளார்.


அங்கு காயமடைந்துள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அழைத்துவரப்படும் பட்சத்தில் அவர்களுக்கு வேண்டிய அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க தாம் தயாராகவிருப்பதாக தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைப்பதற்கு வசதியாக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் மனிதாபிமான ரீதியில் வழிவிடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவர் மருத்துவர்கள் என்ற ரீதியில் அரசியல் ரீதியாக தாம் செயற்பட முடியாது எனத் தெரிவித்துள்ளார். மாறாக நோயாளர்கள் அனைவருக்கும் கிசிச்சை அழிக்க வேண்டியது எமது கடமையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

14-02-2009, 04.40PM

வவுனியாவில் பயணிகள் பஸ் வண்டி மீது கிரனைட் தாக்குதல்.
 

வவுனியா புளியங்குளம் பகுதியில் பயணிகள் பஸ் வண்டியொன்றினை இலக்கு வைத்து இன்று (14.02.2009) காலை கிரனைட் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

இந்த தாக்குதலில் ஒரு சிவிலியன் உயிரிழந்தும் 13 பேர் காயமடைந்தும் உள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த அனைவரும் வவுனியா அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு தற்போது அங்கு தகுந்த சிகிச்சை அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

14-02-2009, 04.25PM

புலிகளின் தற்கொலை படகுகள் மீது விமானத் தாக்குதல்.

 

முல்லைத்தீவு கரையோரப் பகுதியில் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் மீது இன்று (14.02.2009) காலை விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனகநாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

முற்பகல் 10.40 மணியளவில் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அது வெற்றியழித்துள்ளதனை விமானிகள் உறுதி செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

14-02-2009, 04.10PM

மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைத் தேர்தலின் வாக்களிப்பு பணிகள் நிறைவடைவு.
 

மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு 2579 வாக்களிப்பு நிலையங்களில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

 

 

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு பணிகள் மாலை 4 மணியளவில் நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இன்று (14.02.2009) நண்பகல் 12 மணி வரையிலான காலப் பகுதியில் 50 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதாகவும் தேர்தல் சட்டத்தினை மீறிய 15 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. கடந்த காலத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இத்தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொற்றிக்கோ தெரிவித்துள்ளார்.
 

14-02-2009, 02.43PM

புலிகளின் பிடியிலிருந்து மேலும் 541 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர்.
 

புலிகளின் பிடியிலிருந்து தப்பிய 541 பொதுமக்கள் சிறிய படகொன்றினைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் முனைப் பகுதியை வந்தடைந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

நேற்று (13.02.2009) மாலை வந்தடைந்துள்ள இவர்களுக்கான சுகாதார வசதிகள் மற்றும் உணவு என்பன வழங்கப்பட்டு உரிய நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

 

14-02-2009, 02.30PM

76 குடும்பங்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்தன.
 

புலிகளின் அடக்குமுறைப் பிரதேசத்திலிருந்து நேற்றயதினம் (13.02.2009) 76 குடும்பங்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.


ஓமந்தைச் சோதனைச் சாவடி ஊடாக இவர்கள் அனைவரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திருப்பதாகவும் இவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
 

14-02-2009, 11.14AM

ஓமந்தை முதல் ஆணையிறவு வரை 20 பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானம்.
 

வடக்கில் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு 20 புதிய பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக வவுனியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார்.


வவுனியா ஓமந்தை முதல் ஆணையிறவு வரையான பிரதேசங்களில் இந்த புதிய பொலிஸ் நிலையங்கள் அமையவுள்ளதாகவும் கிழக்கு வன்னி என்ற பெயரில் பிரதான பொலிஸ் தொழில்பாட்டுப் பிரிவொன்றை அமைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு பொறுப்பாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தீபால் தல்பதாதுவை நியமிக்க ஆலோசித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

14-02-2009, 10.57AM

பிரிட்டிஷ பிரதமரின் நியமனத்தினை அரசு நிராகரித்துள்ளமை வரவேற்கத்தக்கது - டளஸ் அழுகுபெரும
 

பிரபாகரனை பாதுகாப்பதற்காக பிரித்தானியா முயற்ச்சிக்கின்றது அதற்காகவே இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் ஆராயவெனத் தெரிவித்து விசேட பிரதிநிதி ஒருவரை நியமித்திருப்பதாக அமைச்சர் டளஸ் அழகுபெரும தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் கோல்டன் பிறவுணினால் நியமிக்கப்பட்ட விசேட பிரதிநிதியின் நியமனத்தினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை வரவேற்கத் தக்கதாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (13.02.2009) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் அரசாங்கத்தினை வெற்றி பாதைக்கு இட்டுச் செல்வதற்கு மக்கள் தீர்மானித்துவிட்டனர் சுயாதீனமாக மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு இதனை நிரூபித்துள்ளது. நாம் 64 ஆசனங்களைப் பெற்று வெற்றி பெறுவது நிச்சயம் எனத் தெரிவித்துள்ளார்.

 

14-02-2009, 10.43AM

விபரங்களை பதிவு செய்யாத தொலை பேசிகளின் இணைப்பினை துண்டிப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரை.

 

உரிய விபரங்கள் சமர்ப்பிக்கப்படாத சிடிஎம்ஏ மற்றும் கையடக்க தொலைபேசிகளின் இணைப்பினை துண்டிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.


சிடிஎம்ஏ மற்றும் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களின் விபரங்களை திரட்டுவதற்காக இலங்கை தொலைத் தொடர்பு ஆணைக்குழு வெளியிட்டிருந்த சுற்றறிக்கைக்கு அமைய எதிர்வரும் ஏப்பிரல் 30ம் திகதிக்கு முன்னர் தகவல்களை பதிவு செய்து கொள்ளாத தொலைபேசிகளின் இணைப்பினை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

14-02-2009, 10.35AM

பொதுமக்களுடன் புலிகள் அமைப்பின் 9 உறுப்பினர்களும் தப்பி வந்துள்ளனர் - றிசாட் பதியுதீன்.
 

புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள பொதுமக்களுடன் 9 புலி உறுப்பினர்களும் வந்துள்ளனர் என மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த சேவைகள் நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு நீதி அமைச்சின் ஊடாக புனர்வாழ்வளிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் கருத்து வெளியிடும்போது அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் புலி உறுப்பினர்களை நலன்புரி நிலையங்களில் மக்களோடு தங்க வைக்க முடியாது எனவே குடும்பங்களின் அனுமதியுடன் அவர்களை பிரித்து புனர்வாழ்வு நிலையங்களில் தங்க வைத்து வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளார். தப்பி வரும் புலி உறுப்பினர்களை பொலிஸார் ஊடாக சிறை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்காது மாறாக நீதி அமைச்சின் ஆலோசனையுடன் புனர்வாழ்வளித்து வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

14-02-2009, 10.02AM

புதுக்குடியிருப்பு பிரதேசத்தினுள் இராணுவத்தினர் பிரவேசித்துள்ளனர் தே.பா.ஊ மையம் தகவல்.
 

முல்லைத்தீவினை புலிகளிடமிருந்து மீட்கும் இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டு வரும் படையினர் நேற்று (13.02.2009) அதிகாலை புதுக்குடியிருப்பு நகருக்குள் நுளைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.


புலிகளின் முக்கிய நகரமாக கருதப்படும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை மீட்பதற்கான உக்கிர தாக்குதல்களை படையினர் மேற்கொண்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் குருவில்குளம், அடம்பன்குளம், குப்பிளான்குளம், புதுக்குடியிருப்பு தெற்கு, மற்றும் புதுக்குடியிருப்பு மேற்கு பகுதிகளிலும் மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த மோதல்களில் படையினருக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் அதனை பதில் தாக்குதல் மேற்கொண்டு படையினர் முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


மோதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 12 கிலோ நிறையுடைய கிiளேமார் குண்டுகள் 45, 7.5 மற்றும் 2.5 கிலோக் கிராம் நிறையுடைய கிளைமோர் குண்டுகள் 23, நிலக்கண்ணிகள் 11, கிரனைட் குண்டுகள் 15, 81 மில்லி மீற்றர் ரக மோhட்டார் குண்டுகள் 25, மாருதி சுசுகி ரக வாகனம் 01, ரிப்பீட்டர் ரக துப்பாக்கி 01, என்பன உள்ளிட்ட பல இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

14-02-2009, 09.20AM

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் - எல்.கே.அத்வானி.
 

இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டியது அவசியம் என பா.ஜ.க வின் தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். அப்பாவித் தமிழ் மக்கள் தாக்கப்படுவதனை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ள அவர் இலங்கையிப் பிரச்சினை விடயத்தில் இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கையினை எடுக்கத் தவறிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.


டில்லியில் நேற்று (13.02.2009) இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு மேலும் கருத்து வெளியிட்ட அவர் தமிழர்களின் நலன் காக்கப்படவேண்டும், போர் நிறுத்தம் ஒன்று ஏற்படு;த்தப்படவேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் இடம்பெறுகின்றது. எனினும் இதனை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்படவேண்டும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும், பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காணப்படவேண்டும் இதற்கான அனைத்து ஒத்துழைப்பினையும் பா.ஜ.க வழஙங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

13-02-2009, 0357PM

ஐ.சி.ஆர்.சியின் தலைவர் போகல்லாகமவை சந்தித்துள்ளார்.

 

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவருக்கும் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

பொதுமக்களுக்கு பாதுகாப்பிற்கு முன்னுருமை அழிப்பதன் மூலம் அரசிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இடையிலான உறவினை மேம்படுத்த முடியும் என குழுவின் தலைவர் இந்தச் சந்திப்பில் தெரிவித்துள்ளார். குறிப்பாக மனிதாபிமான பணிகளை மேற்கொள்ளும் போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகி;ன்றது.

 

13-02-2009, 03.25PM

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு.

 

கடந்த இரு மாத காலம் வழங்கப்படாதுள்ள சம்பளத்தினை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் நேற்று (12.02.2009) முதல் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

தொழிற்சாலையின் வாயிலில் கூடியுள்ள ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஆரம்பமான இந்த் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்வதாக தெரியவருகின்றது.

 

13-02-2009, 03.11PM

மட்டு. உருமலைச்சோனையில் ஒருவர் சுட்டுக்கொலை.

 

மட்டக்களப்பு உருமலைச்சோலை கிராமத்தில் சூளைத் தொழிலாளி ஒருவர் நேற்று (12.02.2009) இரவு ஆயுததாரிகளினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் யோகராசா ரஜினிகாந் (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

13-02-2009, 03.15PM

மேலும் 2030 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர்.

 

புலிகள் மீதான தாக்குதலினை இராணுவத்தினர் அதிகரித்துள்ளதனை அடுத்து புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வருவது அதிகரித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

 

இதற்கு அமைய கடந்த 48 மணி நேரப் பகுதியினுள் 2030 பேர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்துள்ளதாக மையம் குறிப்பிட்டுள்ளது. விஸ்வமடுப் பகுதியை 1230 பேரும், கேவில் பகுதியை 27 பேரும், புதுமட்டுவான் பகுதியை 398 பேர் வந்தடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 


 

இதேவேளை புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் மக்களுக்கான சுகாதார வசதிகளை ஏற்படுத்த தொண்டர் அமைப்பு ஒன்றினை உருவாக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று முதல் இவர்களை வவுனியா, செட்டிக்குளம், திருகோணமலை வைத்தியசாலை ஆகியவற்றில்p பணியில் ஈடுபடுத்த எண்ணியுள்ளதாவும் தெரிவித்துள்ளது.

 

13-02-2009, 02.51PM

மாகாணசபைத் தேர்தல்களுக்கான பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிப்பு.

 

நாளை நடைபெறவுள்ள வடமேல் மத்திய மாகாணசபைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையாக பூர்த்தியடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

நாளை காலை 7 மணிக்கு வாக்களிக்கும் பணிகள் ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் முடிவடையும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. குறித்த மாகாணங்களுக்கு அரச ஊழியர்களும் மேலதிக பாதுகாப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்லினை நியாயமான முறையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தினையும் தாம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

13-02-2009, 02.30PM

டெஸ்பிறவுணின் நியமனத்திற்கு இலங்கை அரசு எதிர்ப்பு.

 

இலங்கையின் தற்போதய நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு பிரிட்டிஷ் பிரதமர் கோல்டன் பிறவுணினால் நியமிக்கப்பட்டுள்ள பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு செயலர் டெஸ்பிறவுணின் நியமனத்தினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

 

இந்த நியமனத்தின் அரசு ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என இன்று (13.02.2009) காலை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

 

13-02-2009, 11.59AM

போரை நிறுத்த பிரித்தானியா தூதுவரை நியமித்துள்ளது.
 

இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்துவதற்காக இங்கிலாந்தின் முன்னாள் இராணுவ அமைச்சர் டெஸ்பிறவுணி என்பவரை பிரித்தானியா விசேட தூதுவராக நியமித்துள்ளது.


இவர் இலங்கையில் யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்தவும், அரசியல் தீர்வினை காணவும், மனிதாபிமான பணிகளை முன்னெடுக்கவும் செயற்படுவார் என பிரித்தானிய பிரதமர் கோல்டன் பிறவுண் தெரிவித்துள்ளார். இதற்காக இலங்கை அரசு, அனைத்துலக தலைவர்கள், சர்வதேச தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோருடன் டெஸ்பிறவுணி பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13-02-2009, 11.21AM

முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலும் ஒரு பகுதியை அரசு பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்கு கரையோரப் பகுதியில் 12 கிலோ மீற்டர் நீளமுடைய பிரதேசத்தினை பாதுகாப்பு வலயமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புலிகளிடம் சிக்கியுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்காக வாய்ப்புக்கள் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

வெள்ளாம் வாய்க்கால், கரையாம் முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவவன் பொக்கனை, புதுமாத்தளன் ஆகிய கிராமங்கள் இந்த பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

13-02-2009, 10.35AM

புலிகளின் பிடியிலிருந்து மேலும் 822 பேர் தப்பி வந்துள்ளனர்.
 

புலிகளின் அடக்குமுறைப் பிரதேசத்திலிருந்து மேலும் 822 பொது மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

நேற்று (12.02.2009) மாலை 4 மணியளவில் இவர்கள் அனைவரும் ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியினை வந்தடைந்துள்ளதாகவும் இவர்களுக்கு வேண்டிய உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டதன் பின்னர் பாதுகாப்பான நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மையம் குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை நேற்று மாலை 6 மணி முதல் இன்று (13.02.2009) காலை 6 மணி வரையான காலப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து 546 பொது மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பி வந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

13-02-2009, 10.19AM

மேலும் 397 நோயாளர்கள் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

 


 

முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளம் பகுதியிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் 397 நோயாளர்கள் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 
கிறீன் ஓசன் கப்பல் மூலம் இவர்கள் அனைவரும் நேற்று (12.02.2009) இரவு 7 மணியளவில் திருகோணமலைத் துறை முகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

 


இதேவேளை புதுமாத்தளம் பகுதியிலிருந்து கடந்த வியாழக்கிழமையும் 240 நோயாளர்கள் கடல்மார்க்கமாக திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

13-02-2009, 10.02AM

புலிகள் ஆயுத நடவடிக்கையினை கைவிட்டு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முன்வரவேண்டும் பிரதீபா பட்டேல்
 

இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கு போர் நிறுத்தம் அவசியம் என இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தையொன்றின் மூலம் தீர்வைக்காண அனைவரும் முன்வரவேண்டும் என இந்திய ஜனாதிபதி பிரதீபாபட்டேல் தெரிவித்துள்ளார்.
 

இலங்கையில் தமிழர்கள் போரில் சிக்கி உயிரிழக்கின்றமை இந்தியாவிற்கு கவலை அழிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் புலிகள் அமைப்பு ஆயுதங்களை கீழே வைத்து பேச்சு வார்த்தையொன்றினை மேற்கொள்ள முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 

நடப்பு மக்களவையின் கூட்டத்தில் நேற்று (12.02.2009) கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைய அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு காணப்படுவதனை இந்தியா வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் அகதிகளாவது கவலையழிக்கிறது. எனவே இவைகள் அனைத்தும் நிறுத்தப்பட பேச்சு வார்த்தையொன்று அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

13-02-2009, 09.38AM

இராணுவத்தின் பதில் தாக்குதலில் இருவர் பலி.
 

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்திப் பகுதியில் நேற்று (12.02.2009) முற்பகல் 11.30 மணியளவில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்திய புலி உறுப்பினர்கள் இருவர் இராணுவத்தின் பதில் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

உயிரிழந்தவர்களில் ஒருவரிடம் யாழ் பல்கலைக்கழக அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உயிரிழந்தவர்களில் ஒருவர் அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த சிவலிங்கம் வைகுந்தவாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

 

இந்தச் சம்பவத்தில் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார் சடலங்களை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்;. குறித்த சடலங்களிலிருந்து தலா ஒவ்வொரு சையினட் குப்பி மற்றும் பிஸ்டல் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

13-02-2009, 09.21AM
புலிகளைப் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் அரசு தடை செய்ய வேண்டும் பா.உறுப்பினர் விமல் வீரவங்ச.

 

வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகள் என தம்மை அடையாளப் படுத்திக் கொண்டு புலிகளின் அரசியல் பிரதிநிதிகளாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவங்ச தெரிவித்துள்ளார்.


பத்தரமுல்லையில் நேற்று (12.02.2009) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் புலிப் பயங்கரவாதிகளை இராணுவ நடவடிக்கை மூலம் வெற்றி பெறும் இறுதித் தருணத்தில் ஐ.நாவும் அதனுடைய ஏனைய அமைப்புக்களும் பொதுமக்களை காரணம் காட்டி புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்த வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனும் அவரது சகாக்களும் தப்பிப்பதற்காக பொதுமக்களை பலிக்கடாவாக்கும் புலிகளை சர்வதேசம் தண்டிக்க வேண்டுமே தவிர காப்பாற்ற முயலக்கூடாது. புலிகள் வன்னியில் தமிழ் மக்களை படுகொலை செய்யும் போது வாய்மூடி மௌனிகளாக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இலங்கை அரசு தடைய செய்ய வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

12-02-2009, 02.58PM

ஒரு தொகுதி மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தனர்.

 

புலிகளின் பிரதேசத்திலிருந்து ஒரு தொகுதி பொதுமக்கள் படகு மூலம் தப்பி யாழ் பருத்தித்துறை கடற்கரையினை வந்தடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.


இவர்களில் 5 ஆண்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவதாக தெரிவித்துள்ள அவர் விசாரணைகளின் பின்னர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

12-02-2009, 02.53PM

குண்டு கண்டெடுக்கப்பட்டதனை அடுத்து பதற்றம்.

 

நீர்கொழும்பில் மேஜர் நிமல் லன்ஷா தலைமையில் இடம்பெறவிருந்த அலுவலகத் திறப்பு விழாவில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

நீர்கொழும்பு நகரில் இன்று (12.02.2009) இடம்பெறவிருந்த அலுவலக திறப்பு விழா நிகழ்வில் உள்ளுர் தயாரிப்பிலான குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதன் காரணமாக இந்த பதற்ற நிலை தோன்றியிருப்பதாக தெரியவருகின்றது.

 

12-02-2009, 02.25PM

பஸ் ஊழியர்கள் சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

தனியார் பஸ் ஊழியர்களுக்கு எதிர்வரும் 15ம் திகதி முதல் சீருடை மற்றும் பற்றுச்சீட்டு என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறித்த திகதிக்கு பின்னர் சீருடையின்றி சேவையிலீடுபடும் தனியார் பஸ்களின் சேவை அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யபடும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


இதேவேளை தனியார் பஸ்களில் தற்காலிகமாக பணிபுரியும் ஊழியர்களுக்கு சீருடைகள் வழங்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ள தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண ஊழியர்கள் அனைவரும் தமது காரியாலயத்திற்கு வருகை தந்து சீருடைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

 

12-02-2009, 02.10PM
தேர்தலுக்காக பாடசாலைகளை மூடிவிட அமைச்சு தீர்மானம்.

 

வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களை முன்னிட்டு பாடசாலைகள் சிலவற்றினை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

எதிர்வரும் 14ம் திகதி குறித்த மாகாணங்களில் அமைந்துள்ள அரசாங்க பாடசாலைகள் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களாக செயற்படவுள்ளதாகவும் அதற்காக நாளையதினம் முதல் பாடசாலையினை மூடுவதற்கு எண்ணியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த பாடசாலைகளின் செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வழமைபோன்று ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

12-02-2009,  11.49AM

மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதனை புலிகள் நிறுத்த வேண்டும் முதலமைச்சர் சந்திரகாந்தன்.

 

ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்புவதற்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ வழங்கியுள்ள சந்தர்ப்பத்தினை புலிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

 

தோல்வியின் விழிம்பில் உள்ள புலிகள் இனியும் வீராப்பு பேசி அங்குள்ள அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதனை விடுத்து ஆயுதங்களை அரச படைகளிடம் கையளித்துவிட்டு சரணடைவதே தமிழ் மக்கள் மீது அவர்கள் பற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதனை எடுத்துக் காட்டுவதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

குறுகிய நிலப்பரப்பினுள் ஒடுக்கப்பட்டிருக்கும் புலிகள் அங்குள்ள மக்களை அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவேண்டும் இதுவே தமிழ் மக்களுக்காக புலிகள் மேற்கொள்ளும் குறைந்த பட்ச உதவியாக அமையும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

 

12-02-2009, 11.45AM

8859 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர்.

 

கடந்த இரு நாட்களுக்குள் புலிகளின் அடக்குமுறைப் பிரதேசத்திலிருந்து 8859 பொதுமக்கள் தப்பி வந்திருப்பதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு கடந்த ஜனவரி 1ம் திகதி முதல் இதுவரையில் 30 ஆயிரம் பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியினை வந்தடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

 

இவ்வாறு அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ள மக்களின் உணவுத் தேவைக்காக தெரண சரண எனும் நிவாரணத்திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் உணவுப் பொதிகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு நேற்றயதினம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

கடந்த இரு தினங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, தர்மபுரம், விசுவமடு, குப்பிளான்குளம், பகுதிகளிலிருந்து மக்கள் இராணுவ முன்னரங்கப் பகுதிகளை வந்தடைந்துள்ளனர். கடந்த 9ம் திகதி மட்டும் 6 ஆயிரத்து 599 பேர் முல்லைத்தீவு விசுவமடு, சுதந்திரபுரம், மற்றும் தர்மபுரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வெகு விரைவில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

12-02-2009, 11.40AM

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிடவேண்டும் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை.

 

இலங்கையில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் எனவே இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா உடனடியாக தலையிட்டு தீர்வு காண்பதற்கு முயற்ச்சிக்க வேண்டும் என கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் லோரன்ஸ் கேனான் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அங்கு அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதனை ஐ.நா உட்பட்ட பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன. இந்த நிலையில் இந்தியா இனப்பிரச்சினையில் தலையிடவேண்டியது அவசியம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியிடம் தொலைபேசி ஊடாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

 

இதேவேளை இலங்கையின் வடபகுதி தமிழ் மக்களின் நலன்குறித்து இந்தியா அக்கறையுடன் உள்ளதாகவும் அப்பாவி மக்களின் பாதுகாப்பு முக்கியமானது என்பதனை தாம் தெளிவாக வலியுறுத்தியுள்ளதாகவும் பிரணாப்முகர்ஜி தெரிவித்துள்ளார்.

 

12-02-2009, 11.29AM

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் சடலங்கள் மீட்பு.

 

வவுனியா சமயபுரம், கணேசபுரம் பகுதிகளிலிருந்து உருக்குலைந்த நிலையில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டிருந்த ஓமந்தை நாம்பன்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் சதானந்தன் (வயது 31), மற்றும் சரவணமுத்து சத்தியநாதன் (வயது 26) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் குறித்த இரு சடலங்களும் எரியூட்டப்பட்டுள்ளதாகவும் தற்போது அவை வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

12-02-2009, 09.21AM

நலன்புரி நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட  தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்.
 

புலிகளினால் நலன்புரி நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலினை காரணம் காட்டி சிவிலியன்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்க கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

 

நலன்புரி நிலையத்தினுள் புலிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தற்கொலைக் குண்டுத் தாக்குதலினை வன்மையாக கண்டிப்பதாக மன்னிப்புச்சபையின் இலங்கை நிபுணர் யொலென்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார். எனினும் இதனைக் காரணம் காட்டி சிவிலியன்கள் மீது படையினர் அழுத்தம் கொடுப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆயுத போராட்டங்களின் போது ஒரு தரப்பினரின் யுத்தக் குற்றங்களை காரணம் காட்டி தமது யுத்த குற்றங்களை நியாயப்படுத்த முடியாதென்பதனை சகலரும் நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களை சர்வதேச சட்டங்களுக்கு அமைய பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கை இராணுவத்தினருக்கு உண்டு எனக் குறிப்பிட்டுள்ள அவர் சுயாதீPனமாக ஊடகவியலாளர்கள் சம்பவம் இடம்பெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படாமையால் உண்மைத் தகவல்களை அறிந்து கொள்வது கடினமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

12-02-2009, 09.15AM

சர்வதேசத்தின் உதவியினை பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன
 

வன்னியிலிருந்து இடம்பெயரும் தமிழ் மக்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு சர்வதேசத்தின் உதவியினைப் பெற்றுக் கொள்ள எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


வன்னியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அந்;த மக்கள் புலிகளினால் படுகொலை செய்யப்படும்போது மௌனம் சாதிக்கின்றார் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்;த்தன குற்றம் சாட்டியுள்ளார். கிருலப்பனையில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11.02.2009) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் புலிகளின் பகுதிகளில் உள்ள மக்கள் இன்னும் சில தினங்களுக்குள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்து விடுவர் என்ற நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தப்பி வரும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தி புலிகள் கொலை செய்கின்றனர். இவர்களை எவ்வாறு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என வர்ணிப்பது. அரசாங்கம் எப்போதும் பொதுமக்களை பாதுகாப்பதற்கே முன்னுருமை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

12-02-2009, 09.02AM

இரு தரப்பினரும் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் - ஐ.நா

 

மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இரு தரப்பினரும் யுத்த நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.


இராணுவ நடவடிக்கைகளில் அப்பாவி பொதுமக்கள் பலியாவது தொடர்பில் தாம் ஆழ்ந்த கவலை அடைவதாக ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் ரொன் றெட்மன் தெரிவித்துள்ளார். மக்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு அருகில் மேற்கொள்ளப்படும் கண்மூடித்தனமான மோதல்களை நிறுத்துமாறு அரசாங்கத்தையும், புலிகளையும் கோரியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் சிக்கியுள்ளனர். இவர்களில் 13 ஆயிரம் பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதியான வவுனியாவிற்குள் வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
 

11-02-2009, 4.21PM

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் பொதுமக்களை பாடசாலைகளில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு.
 

புலிகளின் அடக்குமுறைப் பிரதேசத்திலிருந்து தப்பி வரும் பொதுமக்கள் தற்காலிகமாக 5 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட கல்வி வலயப் பணிப்பாளர் ரஞ்சன் ஒஸ்வேல் தெரிவித்துள்ளார்.


செட்டிக்குளம் மகாவித்தியாலயம், நெல்லுக்குளம் மகாவித்தியாலயம், பூந்தோட்டம் மகாவித்தியாலயம், காமினி மகாவித்தியாலயம், முஸ்லீம் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 வார காலத்திற்கு தற்காலிகமாக இங்கு தங்க வைக்கப்படும் இவர்கள் மெனிக்பாமில் அமைந்துள்ள நிரந்த நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என கல்வி வலயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இடவசதி குறைவாக காணப்படும் சந்தர்ப்பத்தில் ஏனைய பாடசாலைகளிலும் மக்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

11-02-2009, 3.38PM

பா.உ மனோகணேசனின் வாகனத் தொடரணி மீது தாக்குதல்.
 

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பயணித்த வாகனத் தொடரணி மீது நேற்று (10.02.2009) மாலை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பத்தின பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அக்கரைப்பத்தின நகரில் இடம்பெறவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொள்ளச் சென்ற வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவத்தில் மனோகணேசனுக்கு எவ்வித பாதிப்புக்களும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளனர். எனினும் அவரின் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
 

11-02-2009, 3.19PM

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப் படுகின்றன - திஸ்ஸஅத்தநாயக்க

 

வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களின் பிரச்சார நடவடிக்கைகளில் அரச சொத்துக்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.


புத்தளம் பிரதேசத்தில் நேற்று (10.02.2009) மாலை இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸஅத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இம்முறை கூட்டணி அமைத்துள்ளமையினால் மாகாணசபைத் தேர்தல்களில் வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.
 

11-02-2009, 3.10PM
மேலும் 1971 பேர் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ளனர் தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தகவல்

 

 

புலிகளின் பிடியிலிருந்து மேலும் 1971 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நேற்று (10.02.2009) மாலை வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 


 

596 குடும்பங்களைச் சேர்ந்த இவர்களில் 523 ஆண்களும், 575 பெண்களும், 881 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் விசாரணைகளின் பின்னர் பாதுகாப்பான நலன்புரி முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

11-02-2009, 2.58PM

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளவர்கள் தொடர்பான தகவல்களை அதிகாரிகள் வெளியிட வேண்டும் - ஆனந்தசங்கரி.
 

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளவர்கள் தொடர்பான தகவல்களையும், அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம் குறித்த விபரங்களையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் வெளியிடவேண்டியது அவசியம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வன்னியில் புலிகளிடமிருந்து தப்பி வவுனியா வந்துள்ள பொதமக்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக பிற நாடுகளிலிருந்து அவர்களது உறவினர்கள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டவண்ணம் உள்ளனர். தமது உறவினர்கள் உயிருடன் உள்ளனரா? எங்கே இருக்கின்றார்கள் என்பது போன்ற தகவல்களை அறிந்துகொள்வதற்கு மிகவும் ஆவலாக உள்ளனர். அப்பாவி மக்களை விடுவிக்குமாற ஐரோப்பிய ஒன்றிய கூட்டுத் தலைமை நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் அமெரிக்கா, கனாடா, பிரித்தானியா, இந்தியா போன்றி நாடுகளும் விடுதலைப் புலிகளிடம் வேண்டுகோள் விடுத்து;ளளன. தமிழ் நாடோ, தமிழ் தேசிய கூட்டமைப்போ விடுதலைப் புலிகளிடம் இத்தகைய வேண்டுகோள்களை விடுக்காதது. துரதிஷ்டமே. அதை விடுத்து அவர்கள் தற்போதும் விடுத்துள்ள முட்டாள் தனமான அறி;க்கை அதிர்ச்சியைத் தருகிறது.

 

நான் தங்களிடம் மூன்று கோரி;க்கைகளை விடுக்க விரும்புகிறேன். முதலாவதாக யார் யார் இடம் பெயர்ந்து வவுனியா வந்துள்ளாhகளோ அவர்களின் பெயர் மற்றும் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்கள் போன்ற பட்டியலை வெளியிடவேண்டும். அது அவர்களின் உறவினர்களின் பதட்டத்தையும் அச்சத்தையும் போக்குவதுடன் அவர்களுக்கு வேண்டிய சில தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும். எனது அடுத்த வேண்டுகோள் உள்ளுர் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், கிராம முன்னேற்ற சங்கங்கள் சனசமூக நிலையங்களைச் சேர்ந்தவர்களை அகதிகள் சந்தி;க்க அனுமதியழிக்கவேண்டும் இவ்வாறு செய்வதனால் புலிகள் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளும் பொய்ப் பிரசாரங்களை முறியடிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

 

11-02-2009, 2.30PM

முல்லைத்தீவிலிருந்து 240 நோயாளர்கள் கடல்மார்க்கமாக திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பிரதேச சனசமூக நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் ஒரு தொகுதியினர் ஐ.சி.ஆர்.சி யின் உதவியுடன் நேற்றயதினம் (10.02.2009) கடல்மார்க்கமாக திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அங்கிருந்த 400 நோயாளர்களில் மிகவும் ஆப்பத்தான நிலையில் இருந்த 70 வீதமான காயமடைந்தோர் உள்ளடங்கலாக 240 நோயாளர்களும் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் சிலரும் அழைத்து வரப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடக இணைப்பதிகாரி ஷோபி ரொமனன்ஸ் தெரிவித்துள்ளார்.

 

நோயாளர்களை ஏற்றிய கப்பல் ஐ.சி.ஆர்.சியின் கொடியுடன் திருகோணமலைத் துறைமுகத்தினை நேற்றயதினம் இரவு 8.30 மணியளவில் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் எஞ்சியுள்ள 160 நோயாளர்களை இன்று அழைத்துவருவதற்கு எடுக்கப்பட்ட முயற்ச்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாகவும் இவர்களை நாளையதினம் அழைத்து வருவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் சரஸி விஜயரட்ண தெரிவித்துள்ளார்.
காயமடைந்தோர் தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்ளவும், அவர்களை பார்வையிடவும் விரும்பும் உறவினர்கள் பொலிஸார் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

10-02-2009, 10.20AM

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு 17 பேர் பலி,  69 பேர் படுகாயம்

 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தெற்கு உடையார் கட்டுக்குளம் பகுதியினூடாக அரச கட்;டுப்பாட்டுப் பகுதிக்கு சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிறுவர், பெண்கள், உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் 69 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

குறித்த பகுதியில் இன்று (10.02.2009) காலை 6 மணிக்கும் 7 மணிக்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காயமடைந்தோரில் 11 சிறுவர்களும், 27 பெண்களும், 31 ஆண்களும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் ஹெலிகப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அனுராதபுரம், மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

10-02-2009, 09.50AM

பிரித்தானிய தூதரகத்தின் முன் தே.ப.தே.இயக்கம் ஆர்ப்பாட்டம்.


அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு எதிராக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இன்று (10.02.2009) காலை ஆர்ப்பாட்டம் நடாத்தியுள்ளது. கொழும்பு 7 அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தின் முன்னால் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஷ அமரசேகர தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

 

 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்டன் ஆகியோர் புலிகளின் சீருடையினை அணிந்திருப்பதான பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் ஐ.சி.ஆர்.சி, ஐ.நா அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் எனவே அவை நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என கோஷங்களையும் எழுப்பியதாக தெரியவருகின்றது. அத்துடன் இந்தியா, சீனா, ரஸ்ஷியா ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.


அங்கு உரையாற்றிய தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஷ அமரசேகர காசாவில் மக்கள் கொல்லப்படும்போது வாய் திறக்காத அமெரிக்கா இலங்கை பிரச்சினையில் பலவந்தமாக தலையிட்டு மனித உரிமைகளைப் பற்றியும், இராணுவ நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்திவருவதாக தெரிவித்துள்ளார்.

09-02-2009, 09.02AM
இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் மீது இந்தியாவுக்கு எந்தவித அனுதாபமும் கிiயாது - பிரணாப் முகர்ஜி

விடுதலைப் புலிகள் மீது இந்தியாவுக்கு எந்தவித அனுதாபமும் கிiயாது என்றும் எனினும் பொதுமக்கள் பாதுகர்ககப்பட வேண்டு;ம் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று கூறியுள்ளார். அவர் இதுபற்றி மேலும் குறிப்பிடுகையில் இலங்கையில் போரில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் பாதுகாப்பினை இலங்கை அரசு உறுதிப்படு;த்த வேண்டும் என புதுடில்லியில் காங்கிரஸ் தொண்டர்கள மத்தியில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

 

இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் தற்போதைய மோதல்களினால் பாதிக்;கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இலங்கை அரசு 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பபந்தத்தை நிறைவேற்றி தமிழர் வாழும் பகுதிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். புலிகள் மீது இந்தியாவுக்கு எந்த அனுதாபமும் கிடையாது அது ஒரு பயங்கரவாத இயக்கம். அது இலங்கை, இந்தியா, மற்றும் பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது தவிர ஒவ்வொரு ஆண்டும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரிக்கவென இந்தியாவுக்கு அனுப்புமாறு இலங்கையை நாங்கள் கேட்டுக்கொண்டுடிருக்கிறோம். மோதல்களில் சிக்கித் தவிக்கும் அப்பாவித் தமிழ் மக்கள் நிலை குறித்து நாங்கள் மிகவும் கவலைப் படுகிறோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

09-02-2009, 09.00AM
புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரின் சடலங்களுடன் இராணுவக் கட்டுப்பாட்டு எல்லைக்குள் தப்பி வந்த பொதுமக்கள்

புலிகளின் பிடியிலிருந்து தப்பி இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மீது புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் புரயோகத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர் மேலும் மூவர் படுகாயமடைந்துளனர். கடந்த 48 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 10,301 பொதுமக்கள் தப்பிவந்து இராணுவத்தினரிடம சரணடைந்துள்ளதாக பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் 5,600 பேரும் நேற்றைய தினம் (08) 4,701 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர். இவர்களில் மூவர் புலிகளின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பிரிகேடியர் தெரிவித்துள்ளார்.


புலிளினால் கொல்லப்பட்ட மூன்று சிவிலியன்களின் சடலஙகளை பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன் காயமடைந்த மூவரையும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவி;த்துள்ளார். கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்றுக் காலை வரை 21,621 பொதுமக்கள் புலிகளிடமிருந்து தப்பி வந்து இராணுவத்திடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

09-02-2009, 08.55AM
குண்டு துளைக்காத வாகனத்தில் விரைந்த புலிகள் மீது தாக்குதல் 34 பேர் பலி

இராணுவத்தினரை நோக்கி விரைந்த புலிகளின் குண்டு துளைக்காத வாகனம் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் 34 புலிகள்; கொல்லப்பட்டுள்ளனர்.

 

புதுக்கடியிருப்புப் பகுதியை நோக்கி முன்னேறிவரும் படையினர் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளும் பொருட்டு விரைந்த இந்த ட்ரக் வண்டியை அவதானித்த படையினர் அதன் மீது கனரக ஆயுதங்கள் சகிதம் கடும் தாக்குதல் நடத்தியதில் இவர்கள் கொலலப்பட்டுள்ளனர் என பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட 12 புலி உறுப்பினர்களின் சடலங்களை படையினர் நேற்று மாலைவரை கைப்பற்றியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

08-02-2009, 09.01AM

 

 

 

அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகள்

 

தேர்தல் திணைக்களத்தால்

03 ஜுலை 2008 இல் வெளியிடப்பட்டது

 

 

 

 

அவுஸ்;திரேலியாவில வெளிவரும் உதயம் மாத இதழில் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவ

ர்கள் எழுதிய 13வது அரசியல் யாப்பு திருத்தம், அதன் அமுலாக்கம் குறித்த கட்டுரை தொடர்
 

 

கூட்டமைப்பு

 

01 ஆகஸ்ட் 2008
த.வி.கூ புளொட்

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
 


அறிக்கைகள்

 

01 மே 2007
ஈ.பி.ஆர்.எல்.எவ்

 


கட்சியின் விளக்கம்

 

10 நவம்பர் 2006
இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு தொடர்பாக எமது கட்சியின் விளக்கம்
 

இணைத்தலைமை
 

22 நவம்பர் 2006
 


ஜெனீவா பேச்சுவார்த்தை
 


மத நிறுவனங்கள்

 

08 ஏப்ரல் 2007
 


 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரேரணைகள்
 

Proposal for the Political Solution to the Ethnic Conflict in Srilanka
EPRLF seeks merger of Sri Lanka's north-east Indo-Asian News Service 30 March 2007

Indian backing proposals styled on the Indo-Lanka Accord The Island, March 26, 2007  

Moderate Tamils' constitutional proposal  Hindustan Times 23 March 2007

FRATERNAL PAGE

LSSP demands 13th Amendment be implemented
 

 

தோழர் றொபேட்
50வது பிறந்தநாள் நினைவு
 

மார்கழி 13
ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல்
khh;fop 13

<gpMh;vy;vt; kPJ jhf;Fjy;

 

Appeal to the leaders of  Political Parties and the People of  Tamil Naad 14 October 2008

 

 

 

மட்டக்களப்பு மாவட்ட உள்ள+ராட்சி தேர்தல்கள்- 2008
 

வாக்களிப்பு மற்றும் கட்சிகளுக்குக் கிடைத்த ஆசனங்கள்
 

மட்டக்களப்பு மாநகர மேயர் பத்மினி 13.03.2008 அன்று அளித்த செவ்வி
 

 

கிழக்கு மாகாணசபை தேர்தல் ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் வழங்கிய (14.03.2008) செவ்வி

 

 

 
     
 

 'ehk; kf;fSf;fhfg; NghuhLtnjd;gJ vk;kPJ Rkj;jg;gl;l flikNa jtpu vkf;F toq;fg;gl;l mjpfhuky;y"  Njhoh; f.gj;kehgh