HOME ARTICLES HISTORY MARTYRS PHOTOS LINKS ARCHIVES CONTACT  

 

 

28.02.2009

காஸ் சிலிண்டரின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.


28-02-2009,  11.200AM

தேர்தலுக்கான திகதியினை மாற்றுமாறு கட்சிகள் கோரிக்கை.
 

மேல் மாகாணசபைத் தேர்தலுக்கான திகதியினை மறுபரிசீலணை செய்யுமாறு பிரதான இரு அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்ததிஸ்ஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஏப்பிரல் மாதம் 25ம் திகதி தேர்தலினை நடாத்துவது என கடந்த 26ம் திகதி தேர்தல்கள் செயலகம் அறிவித்திருந்தது. இந்த திகதியினை மாற்ற வேண்டும் என இரண்டு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

 

28-02-2009, 08.55AM

பயங்கரவாதத்தினை ஒழிப்பதில் சார்க் நாடுகள் உறுதிபூழ வேண்டும் - ஜனாதிபதி

 

பயங்கரவாதத்தினை ஒழிப்பதில் சர்வதேசம் உட்பட உறுதியான வலிமை நிறைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து சார்க் நாடுகள் பின்வாங்கக் கூடாது என ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ கேட்டுக்கொண்டுள்ளார்.

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் 31வது மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


 

,d;iwa nra;jpj; jiyg;Gfs;                         

 

28.02.2009

28.02.2009

28.02.2009

28.02.2009

28.02.2009

28.02.2009

28.02.2009

28.02.2009

28.02.2009

58 சதுர கிலோ மீற்றருக்குள் புலிகள் இயக்கம் முடக்கம்

வவு. பூந்தோட்டம் நலன்புரி முகாமில் தீ விபத்து.

மட்டு. சத்துரகுண்டானில் ஆயுதங்கள் மீட்பு.

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ  நேபாளம் செல்லவுள்ளார்.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து 400 பேர்  அழைத்துவரப்படவுள்ளனர்.

பால்மாவிற்கான இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளது

தேர்தலுக்கான திகதியினை மாற்றுமாறு கட்சிகள் கோரிக்கை.

காஸ் சிலிண்டரின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத்தினை ஒழிப்பதில் சார்க் நாடுகள் உறுதிபூழ வேண்டும்

 

 

 

 

வன்னிப் பிரதேசத்திலிருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கக் கோரி யாழில் இடம்பெற்ற பேரணி (படங்கள்)

 

யாழ் மாவட்டத்தில் சுதந்திர தினம் 2009 (படங்கள்)


 

உறவுப்பாலம் நிகழ்சியில் ஈரோஸ் பிரபாகரன்.
 

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் வாரந்தோறும் சனிக்கிழமை இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் இன்று (28.02.2009) ஈரோஸ் அமைப்பின் தலைவர் ஆர்.பிரபாகரன் கலந்துகொள்ளவுள்ளார். ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கும் இடம்பெறும் இந்நிகழ்யில் கலந்து கொள்ள அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 0033148353200

 

28-02-2009, 09.02PM

58 சதுர கிலோ மீற்றருக்குள் புலிகள் இயக்கம் முடக்கம்
 

புலிகள் இயக்கம் 58 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிற்குள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு தென்பகுதியில் மோதல்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. பிரிகேடியர் சவேந்திரசில்வா தலைமையிலான 58வது படைப்பிரிவும் பிரிகேடியர் கலாத் குணரத்தின தலைமையிலான 53வது படைப்பிரிவும் புதுக்குடியிருப்பினை மீட்பதற்கான தாக்குதலினை ஆரம்பித்துள்ளன.

 

 

நேற்றயதினம் (27.02.2009) அங்கு இடம்பெற்ற மோதலில் புலிகள் இயக்கத்தின் சிரேஸ்ட தலைவர் சங்கர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் பயணித்த ஜீப் வண்டி மீது செஷ் வீழ்ந்து வெடித்ததன் காரணமாக இவர் பலியாகியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

 

 

மோதலின் பின்னர் 58வது படைப்பிரிவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து அதிநவீன ஒளிபரப்புக் கருவிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் படையினர் குறிப்பிட்டுள்ளனர். மேலும் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த படகுகள் சிலவும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன.

 

28-02-2009, 2.43PM

வவு. பூந்தோட்டம் நலன்புரி முகாமில் தீ விபத்து.
 

வவுனியா பூந்தோட்டம் நலப்புரி முகாமின் முதலாவது பிரிவில் இன்று (28.02.2009) முற்பகல் 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 8 கொட்டகைகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான காரணம் ஏதும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸ் விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

28-02-2009,  02.38PM

மட்டு. சத்துரகுண்டானில் ஆயுதங்கள் மீட்பு.
 

மட்டக்களப்பு சத்துரகுண்டான் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார்.


பொலிஸ் புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சத்திரகுண்டான் பகுதியின் கரையோரத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 10 கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு 01, 500 எம்.எம்ஜி ரவுன்ஸ் ஆர்பிஜி ரவுன்ஸ் ரி56 ரக துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

28-02-2009, 12.30PM

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ  நேபாளம் செல்லவுள்ளார்.
 

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேபாளம் செல்லவுள்ளதாக ஜனாதிபதிச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விஜயத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையிலான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை வந்துள்ள அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் உகேந்திர யாதவ் நேற்றயதினம் (27.02.2009) அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

 

28-02-2009,  11.53AM

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து மேலும் 400 பேர் திருகோணமலைக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
 

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலுள்ள மேலும் 400 நோயாளர்களை கிறீன் ஓசன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரஸிவிஜயரட்ண தெரிவித்துள்ளார். இவர்களை இன்று (28.02.2009) அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தாம் மேற்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தப் பகுதியிலிருந்து 1996 நோயாளர்கள் ஏற்கனவே ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையுடன் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்கள் திருகோணமலை கந்தளாய் வவுனியா ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

28-02-2009, 11.34AM

பால்மாவிற்கான இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளது

 

பால்மாவிற்கான இறக்குமதி தீர்வை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானி;த்துள்ளதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவு கணிப்பீட்டு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இந்த தீர்வையை அதிகரிக்கும் திட்டம் அமுல் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கு அமைய இறக்குமதி தீர்;வை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது 35 ரூபாவாகவுள்ள இறக்குமதி தீர்வை 55 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளபோதும் பால்மாக்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட மாட்டாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

28-02-2009,  11.20AM

தேர்தலுக்கான திகதியினை மாற்றுமாறு கட்சிகள் கோரிக்கை.
 

மேல் மாகாணசபைத் தேர்தலுக்கான திகதியினை மறுபரிசீலணை செய்யுமாறு பிரதான இரு அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்ததிஸ்ஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஏப்பிரல் மாதம் 25ம் திகதி தேர்தலினை நடாத்துவது என கடந்த 26ம் திகதி தேர்தல்கள் செயலகம் அறிவித்திருந்தது. இந்த திகதியினை மாற்ற வேண்டும் என இரண்டு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.


தேர்தலுக்கான காலம் நீடித்துள்ளதன் காரணமாக இந்த திகதியை மாற்ற வேண்டும் என தாம் தேர்தல்கள் செயலகத்திடம் கோரியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்துள்ளார்.


இதேவேளை இந்த திகதியில் தேர்தலினை நடாத்துவதில் தமக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த திகதியினை மாற்றுவது தொடர்பில் ஐ.தே.க பொதுச் செயலாளர் தம்முடன் கலந்துரையாடினார் எனவும் ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியினை ஒருபோதும் மாற்ற முடியாது எனத் தாம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் காலங்களில் தேர்தலுக்கான திகதியினை அறிவிக்கும்போது தேர்தல்கள் ஆணையாளர் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடும் முறைமையொன்றினை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

28-02-2009, 09.02AM

காஸ் சிலிண்டரின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
 

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நேற்று (27.02.2009) நள்ளிரவுடன் குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 1619 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 12.5 கிலோக்கிராம் நிறையுடை ஷெல் காஸின் விலை 1309 ரூபாவாகவும், 1403 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட லாப் காஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 1069 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது

 

28-02-2009, 08.55AM

பயங்கரவாதத்தினை ஒழிப்பதில் சார்க் நாடுகள் உறுதிபூழ வேண்டும் - ஜனாதிபதி

 

பயங்கரவாதத்தினை ஒழிப்பதில் சர்வதேசம் உட்பட உறுதியான வலிமை நிறைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து சார்க் நாடுகள் பின்வாங்கக் கூடாது என ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ கேட்டுக்கொண்டுள்ளார்.

 



தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் 31வது மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு நமது முயற்சிகளை தனிப்பட்ட ரீதியிலும் கூட்டாகவும் இரட்டிப்பாக்க வேண்டிய தேவை உள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் பொருளாதா நெருக்கடி தீவிரமடைந்து செல்கின்ற நிலையில் தமது முதலீடுகளை காத்துக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு வியாபித்து செல்வது மட்டுமன்றி அவை ஆழ வேரூன்றும் நிலையும் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பானது பக்குவமடைந்துள்ளது. சார்க் அங்கத்துவ நாடுகள் இணைந்து பணியாற்றுவதற்கு முற்று முழுதாக அர்ப்பணிப்புக் கொண்டிருப்பதுடன் தமது இயலுமையை குறித்தும் அறிந்து வைத்துள்ளன. சார்க் அமைப்பின் நடவடிக்கைகளை விஸ்தரித்துச் செல்வதற்கான தருணம் இது என்பதனை அனைவரும் அறிவர் அந்த நிலையில் கொழும்பு பிரகடனம் பொருத்தமான முறையில் எமது மக்களின் வளர்ச்சிக்கான பங்களிப்பு எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

 

27-02-2009, 08.37PM

புலிகள் தென்னிலங்கையில் தாக்குதல் நடாத்தலாம் - லக்ஸ்மன்


தோல்வியின் விளிம்பில் பரிதவிக்கும் புலிகள் தென்னிலங்கையில் தாக்குதலினை நடாத்தலாம் எனவே நாட்டு மக்கள் அனைவரும் மிக அவதானத்துடன் நடந்துகொள்ளுதல் வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
 

கொழும்பில் இன்று (27.02.2009) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தக் கோரிக்கையினை அவர் விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

27-02-2009, 08.20PM

கிழக்கு பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்துள்ளார்.
 

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவி ஒருவர் நேற்றயதினம் (26.02.2009) தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் தமது குடும்பத்தினருடன் தொடர்புகள் இல்லாமையினால் தாம் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் ஒன்றினை எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

முல்லைத்தீவு துணுக்காய் வீதி நட்டான்கண்டல் பகுதியைச் சேர்ந்த நிருஜா தனபாலசிங்கம் எனும் முதலாம் ஆண்டு மாணவியே தற்கொலை செய்திருப்பதாக தெரியவருகின்றது.

 

27-02-2009, 05.10PM

இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் வந்துள்ள பகுதியிலிருந்து 19 சிவிலியன்கள் பாதுகாப்பாக மீட்பு.


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மனிதாபிமான இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டு வரும் படையினர் தாம் கைப்பற்றியுள்ள பகுதியில் தங்கியிருந்த 19 சிவிலியன்களை நேற்றயதினம் (26.02.2009) பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
 

இவர்களில் 10 பேர் ஆண்கள் எனவும் 09 பேர் பெண்கள் எனவும் மையம் குறிப்பிட்டுள்ளது. இதில் சிலர் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வவுனியா நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றயதினம் மட்டும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து 54 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பி வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களில் 25 ஆண்கள் 42 பெண்களும் 48 சிறுவர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

27-02-2009, 03.27PM

வடமேல் மத்திய மாகாண முதலமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்.
 

வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான முதலமைச்சர்கள் மற்றும் அந்தந்த மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று (27.02.2009) மாலை ஜனாதிபதிச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
 

மத்திய மாகாணத்தின் முதலமைச்சராக ஏக்கநாயக்கவும், வடமேல் மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சர் அத்துல விஜயசேகரவும் முதலமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர்.

 

27-02-2009, 03.12PM

சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு ஆரம்பம்.
 

சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் 31வது மாநாடு கொழும்பு கெற்றியேட்டன் ஹோட்டலில் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தலைமையில் நடைபெற்று வருகின்றது.

 

 

இன்று (27.02.2009) காலை 10 மணியளவில் ஆரம்பமான இம்மாநாட்டின் அங்குராய்பண நிகழ்வில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளார். சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் 7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளபோதும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி அந்த நாட்டின் பதில் பிரதமராக பணியாற்றுவதன் காரணமாக இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை எனினும் அவருக்கு பதிலாக பிரதி வெளிவிவகார அமைச்சர் இ.அஹமட் கலந்து கொண்டுள்ளார்.

 

27-02-2009, 02.50PM

65 சதுர கிலோ மீற்றருக்குள் புலிகள் முடக்கம், நவீன வசதிகளுடன் நீச்சல் தடாகமும் கண்டுபிடிப்பு - நாணயக்கார
 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள சுமார் 65 சதுர கிலோ மீற்றர் காட்டுப் பகுதியினுள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை இராணுவத்தினர் ஒடுக்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.


புலிகளின் தற்போதய நிலைகளை இராணுவத்தினர் கைப்பற்றுவதற்கான அனைத்து முயற்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் புதுக்குடியிருப்பில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் பலத்த தாக்குதலுடன் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் முன்னேறிவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

காட்டுப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களில் புலிகளின் முக்கிய உறுப்பினர் சூசையின் பிரதான முகாம் உட்பட நவீன வசதிகளுடன் கூடிய நீச்சல் தடாகம் என்பனவற்றினையும் கைப்பற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார்;. மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் தேடுதல் நடவடிக்கையின்போது ஆயுதங்கள் உட்பட தற்கொலைப் பிரிவுக்கான அங்கிகள் தயாரிக்கும் முக்கிய நிலைகளையும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

 

27-02-2009, 10.29AM

அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா
 

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகளை ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான விவகாரங்களுக்கான செயலர் ஜோன்ஸ் கோம்ஸ் பாராட்டியுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுவருகின்றனர் என அமைச்சர் அனுரபிரியதர்சனயாப்பா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26.02.2009) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கை நிறைவுபெறவுள்ள இந்த வேளையில் சர்வதேச சமூகம் அதனைத் தடுக்கும் நடவடிக்கையினை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கம் மேற்கொண்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை அரசாங்கம் தொடர்ந்து அனுப்பி வருகின்றது. எனினும் மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் மனித உரிமை கண்காணிப்பகம் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். சிவில் சமூகத்தின் மனிதாபிமானப் பணிகள் மற்றும் மீள் குடியேற்றம் உள்ளிட்ட விடயங்கள் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்பத்தும் வகையில் சிலர் செயற்படுகின்றனர். புலிகள் இழந்துள்ளதனை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதான சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

27-02-2009, 09.53PM

தொழிலதிபர் லலித் கொத்தலாவெலவிற்கு விளக்கமறியல்.
 

பிரபல தொழிலதிபரும் கோல்டன்கீ கிரடிட்காட் நிறுவனத்தின் தலைவருமான லலித் கொத்தலாவெலவை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதிமன்றம் நேற்று (26.02.2009) உத்தரவிட்டுள்ளது. மேலும் கோல்டன்கீ கிரடிட் காட் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியினை எதிர்வரும் 10 நாட்களுக்குள் செலுத்துமாறு அது உத்தரவிட்டுள்ளது.


இதேவேளை கோல்டன்கீ கிரடிட்காட் நிறுவனத்தின் பணிப்பாளர் பத்மா நந்தினியை எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதவான் அதன் பிரதிப் பணிப்பாளரான சிசிலிய கொத்தலாவலவை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

27-02-2009,  09.41AM

திருமலை மடத்தடியில் ஆயுள்வேத வைத்தியசாலை
 

வடக்கு கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் 5 இலட்சம் ரூபாய் செலவில் திருகோணமலை மடத்தடியில் ஆயுள்வேத மருத்துவமனை ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திருகோணமலை நகரசபைத் தவிசாளர் கௌரி முகுந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் நகரசபை அதிகாரிகள் ஊழிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

27-02-2009, 09.25PM

யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வதன் மூலம் புலிகளின் பிடியிலிருந்து மக்கள் வெளியேற முடியாது - விமல் வீரவங்ச
 

யுத்த நிறுத்தம் ஒன்றினை இரு தரப்பினரும் மேற்கொள்வதன் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துவிடுவர் என எண்ணக் கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.


இலங்கையில் பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதற்கான காலம் நெருங்கியுள்ள இவ்வேளையில் ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச அமைப்புக்களும் தவறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். புலிகளின் பிடியிலிருந்து இதுவரையில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அரக கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திருப்பதாக தெரிவித்துள்ள அவர் ஐ.நா. அமைப்புக்களும் சர்வதேச நிறுவனங்களும் மீண்டும் போர் நிறுத்தம் ஒன்றினைக் கோருவதன் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மக்கள் வேளியேற முடியாத நிலை தோன்றிவிடும் எனத் தெரிவித்துள்ளார்.

 

27-02-2009, 08.50AM

அரசாங்கம் 3இல் 2 பெரும்பான்மையைப் பெறும் - ஜி.எல்.பீரிஸ்
 

பொதுத் தேர்தல் ஒன்று நடாத்தப்பட்டால் அதில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


கொழும்பில் நேற்று (26.02.2009) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் அரசாங்கம் வெற்றியீட்டியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் மேல் மாகாணசபைத் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாரிய வெற்றியினை ஈட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

26-02-2009, 08.15PM

ஆயுதங்களை களையும் வரையில் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படாது - கோட்டாபாய ராஜபக்ஸ

 

பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் அனைத்தும் களையப்படும் வரையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது என பாதுகாப்பு செயலர் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


இவ்வாறான செயற்பாடு ஒன்றின் மூலமே இலங்கையின் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும் எனவும் இதன் முதற்கட்டமாக பயங்கரவாதிகளிடமிருந்து நிலப்பரப்பினைக் கைப்பற்றும் நடவடிக்கையினை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கத்தினை முற்றாக ஒழிக்கும் வரையில் அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி அதன் மூலம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை புலிகள் பெற்றுவருவதாக கூறியுள்ளார்.

 

26-02-2009,  08.10PM

ஊடக பயிற்ச்சி நிலையத்தில் ஒலி ஒளி பதிவு கூடம் திறப்பு.
 

யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்ச்சி நிலையத்தில் ஒலி ஒளிப் பதிவுக் கூடம் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அவர்களினால் இன்று (26.02.2009) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆலோசகர் கலாநிதி கென்றிக் குறூநெட், பல்கலைக்கழக கலைத்துறைப் பீடாதிபதி பேராசிரியர் சோ.கிருஸ்ணராஜா உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

 

26-02-2009,  08.02PM

மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் - பீட்டர் ஹையிஸ்
 

இலங்கையில் வாழும் பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் குறித்து எதிர்காலத்தில் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பீட்டர் ஹையிஸ் தெரிவித்துள்ளார்.

 


மலையகத்திற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பீட்டர் ஹையிஸ் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் பெ.சந்திரசேகரனைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது இவ்வாறு தெரிவித்துள்ளார். கல்வி பொருளாதாரம், வதிவிடம் என்பன தொடர்பில் மலையக மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கெர்டுத்துள்ளனர். இந்த சமூகத்தின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்பதனை தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

26-02-2009,  07.10PM

மார்ச் மாத இறுதியில் ஏ9 வீதி திறக்கப்படும் - ரி.பி.ஏக்கநாயக்க
 

ஏ9 வீதி மார்ச் மாத இறுதியில் மீண்டும் மக்கள் பாவனைக்கு திறந்து விடப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க அறிவித்துள்ளார். ஆணையிறவு படையினர் வசம் வந்ததன் காரணமாக இந்த வீதியினை மக்கள் பாவனைக்கு திறந்துவிடுவதற்கு வழி ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் குறித்த வீதி கடுமையாக சேதமடைந்துள்ளதன் காரணமாக அதனை உடனடியாக திறந்துவிடுவது சாத்தியமற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

இராணுவ பொறியியலாளர்கள் தற்போது குறித்த வீதியினை செப்பனிடும் பணியினை மேற்கொண்டுள்ளதாகவும் ஒரு பிரிவினர் வீதியின் அருகிலுள்ள கண்ணிவெடிகளை அகற்றிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

26-02-2009, 05.11PM

புரட்சிப் புலிகள் பெயரில் ஜெயலலிதாவிற்கு அச்சுறுத்தல்.
 

தமிழ் சமூகத்திற்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்து புரட்சிப் புலிகள் என்ற பெயரில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


அ.தி.முவின் நீண்டகால உறுப்பினர் ஒருவரின் பெயரில் இந்தக் கடிதம் புரட்சிப் புலிகள் எனப் பெயரிடப்பட்டு வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தினை அனுப்பிய நபர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் தற்போது விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

26-02-2009,  04.42PM

மட்டு. ஊறணிப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு.
 

மட்டக்களப்பு ஊறணிப் பகுதியில் நேற்று (25.02.2009) பிற்பகல் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி ஆயுதங்களை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.


சிவிலியன் ஒருவர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் தேடுதல் மேற்கொண்ட பொலிஸார் 7 கிலோக்கிராம் நிறையுடைய கிளைமோர் குண்டு ஒன்று, 2 கிரனைட் குண்டுகள், 250 கிராம் நிறையுடைய கண்ணிவெடிகள் என்பன உள்ளிட்ட பொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார்.

 

26-02-2009, 02.57PM

மட்டு. வெல்லாவெளியில் ஒருவர் சுட்டுக்கொலை.
 

மட்டக்களப்பு வெல்லாவெளிப் பகுதியில் நேற்று (25.02.2009) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார். வெல்லாவெளி வந்தவூர் சரவணதீப் (வயது 27) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

26-02-2009, 02.43PM

வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் பணிகள் நிறைவு.
 

மேல் மாகாணசபைக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று (26.02.2009) நண்பகலுடன் முடிவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த 9ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலுகாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி என்பன உள்ளிட்ட சுயேட்சைக்குழுக்கள் பலவும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது.

 

26-02-2009, 02.20PM

சுடர்ஒளியின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கைது.
 

சுடர்ஒளி பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் கல்கிசைப் பகுதியில் வைத்து இன்று (26.07.2009) காலை 9.40 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கல்கிசைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சுடர்ஒளி பத்திரிக்கையின் ஊழியர் ஒருவரின் இறுதிக்கிரிகையில் கலந்து கொள்வதற்காக கல்கிசையிலுள்ள மலர்ச்சாலை ஒன்றிற்கு சென்ற அவரை அங்கு வந்த ஆயுததாரிகள் கடத்திச் சென்றுள்ளதாக சுடர்ஒளி பத்திரிக்கையின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.சரவணபவன் கல்கிசைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


எனினும் வித்தியாதரன் கடத்திச் செல்லப்படவில்லை என்றும் அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுத்துறையினர் அழைத்து வந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார்.

 

26-02-2009, 06.19AM

632 பேர் நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து 5 கட்டங்களாக திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட 1996 பேரில் 632 பேர் சிகிச்சைகளின் பின்னர் நலன்புரி முகாங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


புதுமாத்தளன் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட நோயாளர்களில் இதுவரையில் 788 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் 1234 பேர் அருகிலுள்ள ஏனைய பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாற்றப்பட்டோரில் 150 பேர் மன்னார் வைத்தியசாலைக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் 6 குழந்தைகளை பிரவசித்துள்ளனர். அனுமதிக்கப்பட்டோரில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் புதுமாத்தளன் பகுதியில் தங்கியுள்ள நோயாளர்களை அழைத்து வருவதற்கு ஐ.சி.ஆர்.சி நடவடிக்கையினை எடுத்து வருகின்றது.

 

26-02-2009 , 06.15AM

பா.உ இரா.சம்பந்தனிடம் 4 மணி நேரம் சி.ஐ.டி விசாரணை. குடியுர்pமை பறிபோகும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவிப்பு.
 

குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸாரினால் 4 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று முன்தினம் (26.02.2009) காலை 9 மணி முதல் பிற்பகல் 01.30 மணிவரையில் குற்றப்புலனாய்வுப் பிரிவி;ன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சேனக குமாரசிங்க தலைமையில் விசாரணை இடம்பெற்றுள்ளது.

 

இலங்கையின் இறையாண்மைக்கு எதிராகவும் நாட்டில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பிற்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருவது தொடர்பில் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது. சம்பந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் பதிலறிக்கையின் பின்னர் நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனத் தெரியவருகின்றது.


இதேவேளை சம்பந்தன் தெரிவித்துவரும் கருத்துக்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்போது அவரின் குடியுரிமை பறிக்கப்படுவதுடன், சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

 

26-02-2009, 06.10AM

அமைச்சர்களின் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்.
 

கொழும்பில் நடைபெறும் சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி கலந்து கொள்ளாது போனாலும் முக்கிய தீர்மானங்கள் பல எடுக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலர் பாலித ஹோகன தெரிவித்துள்ளார்.

 


வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் பிரணாப்முகர்ஜி கலந்துகொள்ள மாட்டார் என வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்து வெளியிட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரணாப்முகர்ஜி கலந்து கொள்ளாது போனாலும் அவருக்கு பதிலாக இந்தியாவை பிரதிநிதித்துவப் படு
த்தும் ஒருவர் கலந்துகொள்கின்றார். எனவே மாநாட்டில் திட்டமிட்டபடி பிராந்திய ரீதியில் எடுக்கப்படவேண்டிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

25-02-2009, 04.12PM

முல்லைத்தீவிற்கு கப்பல் மூலம் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன - எஸ்.பி.திவாரட்ண.
 

முல்லைத்தீவு கடலோரப் பகுதியில் புலிகள் தடுத்து வைத்துள்ள சிவிலியன்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தொடர்ந்தும் அனுப்பி வருவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பி.திவாரட்ண தெரிவித்துள்ளார்.


கடந்த பெப்ருவரி 17ம் திகதி முதல் இதுவரையில் 4 தடைவைகள் கப்பல் மூலம் முல்லைத்தீவிற்கு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கோதுமை மா, பருப்பு, சீனி, பால்மா உள்ளிட்ட பல பொருட்கள் இவற்றுள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் குறித்த பகுதியிலிருந்து கர்ப்பிணித் தாய்மார், குழந்தைகள், நோயாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்து 600பேரை திருகோணமலைக்கு கப்பல் மூலம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு உலக உணவுத்திட்டமும் உதவி வழங்க முன்வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

25-02-2009, 03.25PM

புதுக்குடியிருப்பில் ஆயுதங்கள் படையினரால் கண்டு பிடிப்பு.
 

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கு புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற வேண்டியது அவசியம் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்றயதினம் (24.02.2009) 58வது படைப்பிரிவு புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் புலிகளின் 8 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர்கள் வசமிருந்த ரி56 ரக துப்பாக்கிகளும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

மேலும் அப்பகுதியில் இடம்பெற்ற மோதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 80 மில்லிமீற்றர் மோட்டார், கிளைமோர் குண்டுகள், கிரனைட்டுக்கள், வோக்கி டோக்கிகள், சையினட் வில்லைகள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

25-02-2009, 03.10PM

மேல் மாகாணசபைத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளது.
 

மேல் மாகாணசபைத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் கொழும்பு மற்றும் ஹம்பகா மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்கள் இன்று (25.02.2009) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 


 

மேல்மாகாணசபைத் தேர்தலுக்காக 4 அரசியல் கட்சிகளும், 4 சுயாதீனக்குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதனைத் தவிர 22 சுயாதீனக்குழுக்கள் தமக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

 

25-02-2009, 02.28PM

1900 நோயாளர்கள் திரமலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்

 

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து 5வது தடைவையாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் 382 பேர் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நோயாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆகியோர் கிறீன் ஓசன் கப்பலில் அழைத்து வரப்பட்டுள்ளதாக ஐ.சி.ஆர்.சியின் பேச்சாளர் சரஸிவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.


அழைத்துவரப்பட்ட நோயாளர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு வேண்டிய சிகிச்சைகள் அனைத்தும் உரிய முறையில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து ஐ.சி.ஆர்.சி யினரால் இதுவரையில் ஆயிரத்து 900 நோயாளர்கள் திருகோணலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என சரஸிவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.

 

25-02-2009, 02.12PM

புலிகளின் பிடியிலிருந்து 38 ஆயிரம் பேர் தப்பி வந்துள்ளனர்.

 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பி வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் இன்றுவரையில் 38 ஆயிரம் பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நேற்றயதினம் (24.02.2009) 106 பெர்துமக்கள் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். படகினைப் பயன்படுத்தி 56 பேர் பருத்தித்துறை கடற்படை முகாமை வந்தடைந்ததாகவும் இவர்களில் 21 ஆண்கள், 18 பெண்கள், 17 சிறுவர்கள் அடங்குவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் 50 பேர் ஓமந்தை சோதனைச்சாவடிப் பகுதியை நேற்று மாலை வந்தடைந்துள்ளதாகவும் இவர்களில் 13 ஆண்கள், 14 பெண்கள், 24 குழந்தைகள் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார்.

 

25-02-2009, 08.20AM

புதுக்குடியிருப்பு நகர் இராணுவத்தின் வசம் வந்துள்ளது.
 

புதுக்குடியிருப்பு நகருக்கு இராணுவத்தினர் நேற்றயதினம் (24.02.2009) காலை பிரவேசித்து விட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு நகருக்கு இராணுவம் நுழைந்துள்ளதன் மூலம் புலிகள் 66 சது கிலோ மீற்றர் பரப்பளவினுள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தின் 58வது, 53வது படைப்பிரிவுகளும் நான்காவது செயலணியினரும் புதுக்குடியிருப்பு பகுதியை தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான தாக்குதலினை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

25-02-2009, 07.20AM

காணாமல் போயிருந்த 20 பேரை த.வி.கூ கண்டு பிடிப்பு.
 

யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை தேடிக்கண்டறியும் பணியிலீடுபட்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தூதுக்குழு தமது குடும்பங்களுடன் தொடர்பின்றி சிறையில் வாடும் 20 பேரை கண்டு பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த 20 பேரில் பெண்கள் பலரும் அடங்குவதாக தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அவர்களின் உறவினர்கள் தமது கட்சி அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

  

 இல

 பெயர்

 முகவரி

01

சிவபாதசுந்தரம் சோபனா

சுண்டிக்குளம் 40ஆம் வாய்க்கால் பிரமந்தனாறு விசுவமடு

02

வேலன் முருகுப்பிள்ளை

12 கட்சன் வீதி வட்டக்கச்சி

03 இராசரத்தினம் அற்புதமலர் தேவன்பிட்டி வெள்ளாங்குளம் புதுக்காடு மன்னார்
04 ஜேகதீஸ்வரன் ஜெயரதன் அடம்பன் மன்னார்
05 அருமைநாதர் குகதர்சினி வைரவர் கோவிலடி கண்டி வீதி பரந்தன்
06 இராசலிங்கம் வளர்மதி கார்த்திகா 137 உதயநகர் கிளிநொச்சி
07 பாஸ்கரன் சிவசக்தி அருட்செல்வராணி 57 கல்விளான் துணுக்காய்
08 த.சுபாசினி இணுவில் தெற்கு இணுவில்
09 கணேசலிங்கம் 566 7ஆம் யுனிட் இராமநாதபுரம் வட்டக்கச்சி
10 சிவனடியான் குகராஜ் அளவெட்டி தெற்கு அளவெட்டி
11 மகேந்திரன் மதனகுமார் உக்கிளான்குளம் வவுனியா
12 கந்தசாமி யசிந்தன் வரணி யாழ்ப்பாணம்
13 ஜெயராசா அசோக்குமார் பாசையூர் யாழ்ப்பாணம்
14 பூபாலசிங்கம் கபிலன் புத்தூர் கிழக்கு புத்தூர்.
15 சண்முகநாதன் சதிஸ்கரன் இணுவில் கிழக்கு இணுவில்
16 பஸ்டியான் தினேஸ் நாவலர் வீதி நாவாந்துறை யாழ்ப்பாணம்
17 இராசலிங்கம் சந்திரமோகன் உடபுசல்லாவ
18 அய்யாத்துரை முருகஜோதி வேப்பங்களம் வவுனியா
19 கிருஷ்ணபிள்ளை சந்திரமோகன் கள்ளப்பாடு முல்லைத்தீவு
20 அரியதாஸ் சிவாஜினி உரும்பிராய் கிழக்கு உரும்பிராய்

 

இவர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 30ஃ1பி அல்விஸ் பிளேஸ் கொழும்பு - 03 தொலைபேசி - 0112347721 0772487339

 

25-02-2009, 06.31AM

வன்னியிலிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு உதவத் தயார் என இந்திய மத்திய அரசு அறிவிப்பு.
 

வசதிகள் அனைத்தையும் செய்து தரவும் அவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் என்பனவற்றினை வழங்கவும் இந்தியா தயாராகவிருப்பதாக அறிவித்துள்ளது.


இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலினால் உள்ளக இடப்பெயர்விற்கு உள்ளாகியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறிச் செல்வதற்கு பொருத்தமானதும் நம்பகத்தன்மையானதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வாறு அம்மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்வதை சர்வதேச முகவர் அமைப்புக்கள் கண்காணிப்பதற்கு வழிசெய்ய வேண்டும்.

 

மேலும் தரை மார்க்கமாகவும் கடல்மார்க்கமாகவும் அதிகளவானவர்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரக்கூடிய சாத்தியமான சூழலை இரு தரப்பினரும் உருவாக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். காயமடைந்துள்ள மற்றும் சுகயீனம் அடைந்துள்ள மக்களுக்கான மருந்து மற்றும் உபகரணங்கள் முன்கூட்டியே சென்றடைவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

25-02-2009, 06.14AM
செயலகத்தினை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது.

 

இலங்கையில் இடம்பெறும் போரை உடனடியாக நிறுத்தக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தினை முற்றுகையிட முயன்ற 140 மாணவர்கள் பொலிஸாரினால் நேற்றயதினம் (24.02.2009) கைது செய்யப்பட்டுள்ளனர்.


தமிழகத்திலுள்ள சட்டக்கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் போரை நிறுத்த இந்திய மத்திய அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தியே தாம் இந்த போராட்டத்தினை மேற்கொண்டதாக செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர் செம்புகுமார் தெரிவித்துள்ளார்.

 

25-09-2009, 06.03AM

மனித அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
 

தாக்குதல்களினால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அமெரிக்க அரசாங்கம் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இரு தரப்பினரும் உடனடியாக பேச்சு வார்த்தையொன்றினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ரொபேர்ட் உட் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இலங்கையில் நிலவும் மனித அவல நிலைதான் எங்களுடைய முக்கிய கவலையாகவுள்ளது. யுத்தம் காரணமாக உள்நாட்டிலேயே மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை கவலை தரக்கூடிய ஒரு விடயம். இந்த மோதலில் அநியாயமாக சிக்கிக் கொள்ளும் மக்கள் குறித்தும் நாம் கலையடைகின்றோம். இவற்றுக்கு முற்றுப்புள்ளி ஒன்ற வைக்கப்பட்டே ஆகவேண்டும். பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்படவேண்டும். இலங்கையில் யுத்தத்தை நிறுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கம் எனினும் அதனை மேற்கொள்ள வேண்டியது சம்பந்தப்பட்ட இரு தரப்பினரினதும் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

25-02-2009, 05.40AM

பயங்கரவாதமும் ஜனநாயகமும் ஒரே கட்டிலில் படுத்துறங்க முடியாது பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க.
 

வெண்ணை திரண்டு வரும்போது தாளியை உடைக்க முற்படுவது போல் பயங்கரவாத்தினை அரசாங்கம் ஒழிக்கும் நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்யுமாறு சர்வதேசம் கோருகின்றது என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.


படையினருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்வு பிரதமர் அலுவலகத்தில் நேற்றயதினம் (24.02.2009) இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதமர் ஜனநாயகமும் பயங்கரவாதமும் ஒரே கட்டிலில் படுத்துறங்க முடியாது. இலங்கை அரசைத் தவிர இங்க வேறு நாடு இல்லை இதுவே எமது தாய் நாடு. எமது தாயத்தினை காக்கும் பணியினை படையினர் சரிவரச் செய்கின்றனர் எனத் தெரிவித்தார். யுத்த நிறுத்தம் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயம் எனத் தெரிவித்துள்ள அவர் முதலில் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பயங்கரவாதக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டவேண்டும் அவ்வாறான நிலை ஏற்படும்போது யுத்த நிறுத்தம் தொடர்பில் அரசு பரிசீலிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

24-02-2009, 08.37PM

மேலும் 37 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர்.
 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பிய 37 பொது மக்கள் இன்று (24.02.2009) காலை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 


மூன்று சிறிய படகுகளில் இவர்கள் அனைவரும் புல்மோட்டைப் பிரதேசத்தினை வந்தடைந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். இதேபோன்று நேற்றயதினம் 59 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திருப்பதாகவும் இவர்களில் காயமடைந்த பெண் போதகர் ஒருவரும் வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

24-02-2009, 08.25PM

பிரான்ஸில் 6 புலி உறுப்பினர்கள் பொலிஸாரினால் கைது.
 

பிரான்ஸில் புலிகள் அமைப்புடன் நேரடித் தொடர்பினைப் பேணி வந்த 6 இலங்கையர்கள் அந்நாட்டுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரிப்பது தொடர்பான விசாரணையினை மேற்கொள்ளச் சென்ற பொலிஸ் அதிகாரி கடந்த 21ம் திகதி கொலை செய்யப்பட்டதனை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அதிகாரியை படுகொலை செய்ய அவரிடமிருந்து பறித்தெடுத்து பயன்படுத்திய பிஸ்டோலினையும் இவர்களிடமிருந்து பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

 

24-02-2009,  07.43PM

யுத்தம் நிறைவடையவுள்ள வேளையில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் - பா.உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர
 

நீண்டகாலமாக இருந்து வந்த யுத்தம் நிறைவடையும் தருணம் நெருங்கியுள்ள இந்த வேளையில் இறுதியான அரசியல் தீர்வொன்றினைக் காண அரசாங்கம் முயலவேண்டியது கட்டாயமானது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
 

இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் தனியார் வானொலி ஒன்றிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர வழங்கிய செவியில் இதனைத் தெரிவித்துள்ளார்.


சிங்கள அரசாங்கங்கங்களினால் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அரசாங்கம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி அவர்களின் கருத்துக்களைப் பெற்று நிரந்தரமான அரசியல் தீர்வொன்றினை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

24-02-2009,  07.15PM

நிவாரணத்தினை அதிகரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.
 

சமுர்த்தி உதவி நிவாரணம் பெறுவோர் தமக்கு போதிய நிவாரணம் வழங்கப்படுவதில் எனத் தெரிவித்து பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (24.02.2009) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளனர்.


மீனவர் சங்கங்களும் கிராம அபிவிருத்திச் சங்கங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் பிரதேச செயலகத்தின் நுழைவாயில் கதவினைப் பூட்டி பணிகள் நடைபெறாத வண்ணம் தடுத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

24-02-2009, 07.01PM

புலிகளின் பகுதிகளில் மக்கள் இல்லாதிருந்திருந்தால் ஒரே நாளில் யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும் - ஜெகத் ஜெயசூரிய
 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மக்கள் எவரும் இல்லாதிருந்திருந்தால் ஒரே நாளில் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்திருப்போம் என வன்னிப் பிராந்திய இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
புலிகள் சமாதானச் செயலகமாக கிளிநொச்சியில் பயன்படுத்தி வந்த கட்டிடத்தில் ரொயிட்டர் செய்திச்சேவை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திரசில்வா இன்னும் சில தினங்களில் இறுதி யுத்தத்திற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த யுத்த நடவடிக்கையினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நீண்ட நாட்கள் செல்லாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

24-02-2009, 04.10PM

மட்டு. வாழைச்சேனை கைதர் வீதியில் ஆயுதங்கள் மீட்பு.
 

மட்டக்களப்பு வாழைச்சேனை கைதர் வீதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் என்பன நேற்று (23.02.2009) மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சிவிலியன் ஒருவரிடமிருந்து கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ரி56 ரகத் துப்பாக்கி அதற்கான ரவைகள் என்பன உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

24-02-2009, 03.41PM
திருமலைலைக்கு மருந்துப் பொருட்கள் அனுப்பிவைப்பு.

 

திருகோணமலை வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க முல்லைத்தீவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள நோயாளர்களுக்க சிகிச்சை அளிப்பதற்காக மருந்து பொருட்களை இன்று (24.02.2009) அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்திய மருந்து விநியோகப் பிரிவின் வைத்தியர் சரத்வீரபண்டார தெரிவித்துள்ளார்.

 

இதேபோன்று வன்னியிலிருந்துவரும் மக்களுக்கான சிகிச்சையினை வழங்குவதற்கு அந்தந்தப் பகுதி வைத்தியசாலைகளுக்கு மருந்து பொருட்களை அனுப்பிவைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

24-02-2009, 01.57PM

இறைவரித் திணைக்களத்தின் பணிகள் வழமைக்கு திரும்பின

 

புலிகளின் விமானத் தற்கொலைத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டிருந்த இறைவரித் திணைக்களத்தின் நடவடிக்கைகள் இன்றுமுதல் (24.02.2009) வழமைக்கு திரும்பியுள்ளதாக பிரதி நிதிஅமைச்சர் ரஞ்சித் சீம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

 

 

தாக்குதலில் பாதிக்கப்பட்ட திணைக்களத்தின் 12ம் மாடி தவிர்ந்த ஏனைய மாடிகளின் பணிகள் திறந்து இடம்பெறுவதாகவும் 12ம் மாடியில் இடம்பெற்றுவந்த பணிகளை வேறு ஒரு பகுதிக்கு மாற்றுவதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

24-02-2009, 01.29PM

இலங்கையின் தற்போதய நிலை தொடர்பாக அமெரிக்க செனட்சபை ஆராய்ந்துள்ளது.
 

இலங்கையின் தற்போதய நிலை தொடர்பாக அமெரிக்க செனட்சபையின் அதிகாரமிக்க வெளிநாட்டு விவகாரக்குழு இன்று (24.2.2009) விவாதம் ஒன்றினை நடாத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்க அரசியல் யாப்பில் பலமிக்க செனட்சபையின் முக்கிய குழுவிற்கு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜோன் ஹெரி தலைமை தாங்கவுள்ளார். இதன்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

24-02-2009, 12.50AM

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைக் காண்பதற்கு ஜேவிபி செயற்படும் - விஜித ஹேரத்
 

தனி ஈழம் என்ற கோரிக்கையினை கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் இலங்கையர் என இன> மத> பேதமற்ற ஒருமைப்பாட்டினை உருவாக்குவதற்கு தமது கட்சி செயற்படப்போவதாக ஜேவிபியின் பிரச்சாரச் செயலாளர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.


தோல்வியினைத் தொடர்ந்து சந்தித்து வரும் புலிகள் தற்போது யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு கோரிக்கை விடுக்கின்றனர். மனிதக் கேடயங்களாக மக்களைப் பயன்படுத்தி வரும் இவர்கள் அந்த மக்களின் அவலவாழ்விற்கு காரணமாகவும் இருந்து வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்காகவே தாம் போராடுவதாக தெரிவி;த்து வரும் இவர்கள் அம்மக்களின் நிம்மதியான வாழ்வினை சீர்குலைத்தும் அவர்களை பாதுகாப்பான இடங்களிற்கு செல்லவிடாதும் தடுத்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளனர்.

 

24-02-2009, 07.20AM

புதுக்குடியிருப்பி புலிகளின் 60 நீளமான படகு கண்டு பிடிப்பு.
 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதியில் 60 அடி நீளமான புலிகளின் பாரிய தாக்குதல் படகொன்றினை இராணுவத்தினர் நேற்று (23.02.2009) மீட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 


பிரிகேடியர் சவேந்திரசில்வா தலைமையிலான 58வது படைப்பிரிவினர் இதனை கண்டு பிடித்துள்ளதாகவும் இதிலிருந்து அதிசக்திவாய்ந்த எஞ்சின்கள், ஆயுதங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

24-02-2009, 07.15AM

இராணுவ நடவடிக்கையினை நிறுத்தப் போவதில்லை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா
 

பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படும் வரையில் மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகள் ஒருபோதும் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.


2006ம் ஆண்டு முதல் இராணுவத்தினர் இவ்வாறான மனிதாபிமான இராணுவ நடவடிக்கையினை உறுதியுடன் முன்னெடுத்து வருவதாகவும் அவ்வாறான நடவடிக்யொன்றின் மூலம் படையினர் பெற்ற முன்னேற்றங்களிலிருந்து ஒருபோதும் தாம் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்புடன் போர் நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்படமாட்டாது எனக் குறிப்பிட்டுள்ள அவர் அவர்கள் மூச்சுவிடுவதற்கு இனிவரும் காலங்களில் இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

24-02-2009, 07.06AM

மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வதற்கு இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் - ஐ.ஒன்றியம்
 

மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் அம்மக்கள் சுதந்திரமாக வெளியேறுவதற்கு வழிவகுக்கும் வகையிலும் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் ஒன்றிற்கு உடனடியாக வரவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.


அத்துடன் புலிகள் அமைப்பு ஆயுதங்களை கீழே போட்டு பயங்கரவாதம் மற்றும் வன்முறைகளை முற்று முழுதாக கைவிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டங்களை யுத்தத்தின்Nபுhது கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் புலிகளும் அரசாங்கமும் இதனை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளது. மனிதாபிமானமற்ற வகையில் சிறுவர் போராளிகளை படையணியில் இணைத்தல் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடல் போன்ற விடயங்களை புலிகள் அமைப்பு கைவிடுவதுடன் நீடித்த அரசியல் தீர்வைக் காணும் வகையில் அரசியல் தீர்வைக் காணும் வகையில் அரசியல் நீரோட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

 

24.02.2009, 06.55AM

போர் நிறுத்தத்திற்கு தயார் என புலிகள் அறிவிப்பு. ஆயுதங்களை கீழே போடும் வரை அவ்வாறான பேச்சுக்கே இடமில்லை என அரசாங்கம் அறிவிப்பு.
 

புலிகள் அமைப்பு ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அரச படைகளிடம் சரணடைய வேண்டும் அதன் பின்னரே பேச்சு வார்த்தை குறித்தும் அரசியல் தீர்வு குறித்தும் கலந்துரையாட முடியும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆயுதங்களை புலிகள் கீழே வைக்க வேண்டும் என்ன கோரிக்கையினையே சர்வதேச சமூகம் புலிகளிடம் விடுக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.


ஆயுதங்களை கைவிடுமாறு கோருவதற்கு முன்னதாக போர் நிறுத்தத்தையும் நிரந்தர தீர்வையும் சர்வதேசம் வலியுறுத்த வேண்டும் நாம் போர் நிறுத்தத்திற்கு தயார் என புலிகளின் மூத்த உறுப்பினர் பா.நடேசன் இணைத் தலைமை நாடுகள் மற்றும் ஐ.நா. செயலர் பாங்கிமூன் ஆகியோரிடம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அரசாங்க பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல புலிகள் அமைப்பு இலங்கையில் மட்டுமல்ல இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கம் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்படும்போது அரசாங்கத்துடன் யுத்த நிறுத்தம் மேற்கொள்வதும் பின்னர் அதனை குழப்புவதும் புலிகளின் வழமையான செயற்பாடு ஆகிவிட்டது. கடந்த 30 வருட காலமாக அரசாங்கம் புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது. அதனைப் பயன்படுத்திய புலிகள் தம்மால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பின்னர் அதனை உடைத்தெறிந்தனர்.

பயங்கரவாதத்தினை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு 98 சதவீதத்தினை நிறைவு செய்துள்ளது. மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதன் காரணமாகவே புலிகள் அமைப்பு இன்னமும் எஞ்சியுள்ளது. புலிகளுடனான போர் நிறுத்த வரலாற்றில் மிகவும் பெருமைபெற்றவர் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவரும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் இணைந்து 13வது அரசியல் சட்டத்தினை திருத்துவதற்கு ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது ஆயுதங்களை கையளித்த புலிகள் மீண்டும் பாரியளவிலான அழிவினை ஏற்படுத்தினர். இவ்வாறு பல அனுபவங்களை இலங்கi அரசாங்கம் கொண்டிருக்கும் தருணத்தில் புலிகளுடன் மீண்டும் ஒரு போர் நிறுத்தம் தேவையற்றது என அரசு கருதுகின்றது. காரணத்துடன் ஒரு சமூகத்திற்காக நியாயத்துடன் செயற்படும் அமைப்புக்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள அரசாங்கத்தினால் முடியும் ஆனால் இவ்வாறான கண்மூடித்தனமான மனிதப்படுகொலையினை மேற்கொண்டுவரும் பயங்கரவாதிகளுடன் போர் நிறுத்தம் செய்வது அர்த்தமற்ற விடயம். புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவார்களாயின் அதில் உறுதியாக இருப்பார்களாயின் போர் நிறுத்தம் ஒன்று தேவையற்றது. சமாதானம் இயல்பாகவே மலந்துவிடும் என அமைச்சர் ஹெகலிய தெரிவித்துள்ளார்.

 

23-02-2009, 03.15PM

புலிகளுடன் அரசு போர் நிறுத்தம் எதனையும் மேற்கொள்ளாது

கடந்த 20 வருடங்களாக புலிகள் அமைப்பிடமிருந்து பெற்றுவந்த அனுபவங்களை கொண்டு எதிர்காலத்தில் புலிகள் அமைப்புடன் இலங்கை அரசாங்கம் போர் நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ளாது என பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றிற்கு அவர் வழங்கிய விசேட செவியில் இதனைத் தெரிவித்துள்ளார். புலிகளின் போர் நிறுத்தத்தினை அரசு நிராகரிப்பதாக குறிப்பிட்ட அவர் பயங்கரவாதத்தினை ஒழிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் 98சதவீதத்தினை நிறைவு செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 

23-02-2009, 02.55PM

மேலும் 13 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.
 

புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மோதல்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக மீண்டும் தமிழகத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மன்னார் மற்றும் வவுனியாப் பகுதிகளிலிருந்து 13 பேர் அகதிகளாக தமிழகத்தின் பாம்பன் கடற்கரையினை சென்றடைந்துள்ளனர். நேற்று முன்தினம் (21.02.2009) சென்ற இவர்கள் விசாரணைகளின் பின்னர் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

23-02-2009, 10.35AM

முல்லைத்தீவிலிருந்து அழைத்துவரப்பட்டோரில் 528 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது - ஹிஸ்புல்லா
 

முல்லைத்தீவிலிருந்து ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையுடன் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட 1610 நோயாளர்களில் 528 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

 

வன்னியிலிருந்து கொண்டுவரப்பட்ட மக்கள் திருகோணமலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர் பாதுகாப்பு அமைச்சு அனுமதியளிக்கும் பட்சத்தில் இவ்வாறு கொண்டுவருவோரை மட்டக்களப்பு மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளிலும் அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் கொண்டுவரப்பட்ட 1610 நோயாளர்களில் 441 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வவுனியா நலன்புரி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களில் கந்தளாய் வைத்தியசாலைக்கு 160 பேரும், வவுனியா வைத்தியசாலைக்கு 23 பேரும், தம்பலகாமம் வைத்தியசாலைக்கு 65 பேரும் கண்டி மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு 60 பேரும், மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

23-02-2009, 10.27AM

மேல் மாகாணசபைத் தேர்தலிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் - முத்து சிவலிங்கம்
 

தேர்தல்களில் எத்தகைய பெறுபேறுகள் வந்தாலும் நாம் அரசாங்கத்துடனேயே இணைந்திருப்போம் மேல் மாகாணசபைத் தேர்தலிலும் நாம் அரசாங்கத்திற்கே ஆதரவு வழங்குவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

தேர்தல்களின்போது கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளை விட மக்களுக்கு கிடைக்கும் சேவையினைக் கருத்தில் கொண்டே எமது கட்சி செயற்பட்டு வருகின்றது எனத் தெரிவித்துள்ள அவர் மலையக மக்கள் இன்னும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்காக தமது ஆதரவினையும் எமக்கு வழங்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். பலமிழந்து போயுள்ள ஐக்கிய தேசிய கட்சியுடன் இருப்பதைக் காட்டிலும் அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு தேவையான சேவையினை செய்ய முடியும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

 

23-02-2009, 10.25AM
கிரிமிட்டியாவ தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு.
 

அம்பாறை கிரிமிட்டியாவ பகுதியில் புலிகள் மேற்கொண்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


உயிரிழந்தவர்களில் 2வயதுடைய குழந்தையொன்றும் 8 வயது மாணவர் ஒருவரும் 4 பெண்களும் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தோர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தினை அடுத்து விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவம் என்பன இணைந்து குறித்த கிராமத்தின் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

23-02-2009, 09.15AM

புலிகள் கெரில்லாத் தாக்குதல்களை நடாத்தலாம் - ரணில்


இந்த நாட்டில் கடந்த 3 தசாப்தகாலமாக தொடரும் யுத்தம் காரணமாக பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இனங்களுக்கு இடையில் கசப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


புலிகள் அமைப்பு முல்லைத்தீவு காட்டுப் பகுதியினுள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இனிவரும் காலங்களில் ஹெரில்லாத் தாக்குதல்களை அவர்கள் தொடரலாம் எனத் தெரிவித்துள்ளார். தற்பேர்து குறைந்தளவிலான மக்களே புலிகளுக்கு ஆதரவாகவுள்ளனர் ஆனாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்று காணப்படும்போது அந்த மக்களினதும் உள்ளங்களை கவரக்கூடியதாக இருக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசியல் தீர்வொன்றினை காண்;பதற்கு அரசாங்கம் முன்வைக்கும் தீர்வுத்திட்டத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

23-02-2009, 08.51AM

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி விலகியுள்ளார்.
 

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மௌனம் காத்துவருவதனைக் கண்டித்து தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தமிழருவி மணியன் பதவி விலகியுள்ளார்.


இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி உரிய நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை எனவே இந்த கட்சியிலிருந்து தாம் விலகிக்கொள்வதாக மதுரையில் செய்தியாளகளிடம் அறிவித்துள்ளார்.

 

23-02-2009, 08.47AM

மேலும் ஒரு தொகுதி பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுக்குள்

 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பிய மேலும் ஒரு தொகுதி மக்கள் நேற்றயதினம் (22.02.2009) அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 


யாழ் குடாநாட்டின் வெற்றிலைக்கேணிப் பகுதிக்கு 15 பேர் படகொன்றின் மூலம் வந்துள்ளனர் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் 4 ஆண்கள் 5 பெண்கள் 6 சிறுவர்களும் அடங்குவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.


இதேபோன்று இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் தாளையடியின் தென்புறத்திலுள்ள வதிரிப் பகுதிக்கு படகொன்றில் வந்திருப்பதாகவும் இவர்களில் 4 ஆண்கள் 2 பெண்கள், 2 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

23-02-2009, 08.45AM

போலியான தாக்குதல் மூலம் புலிகள் பலத்தை நிரூபிக்க முயன்றுள்ளனர் - சுப்பிரமணியசுவாமி

 

இலங்கையின் தலைநகர் கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை புலிகள் மேற்கொண்ட விமானத்தாக்குதல் அவர்களின் இறுதி விமானத் தாக்குதலாக அமைந்துள்ளது என ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.


புலிகள் அமைப்பின் அழிவினை எவராலும் தடுத்துவிட முடியாது தாம் அழிவடைவதற்கு முன்னர் இவ்வாறு தாக்குதல் ஒன்றினை நடாத்தி தமது பலத்தினை நிரூபிக்க முயன்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த விமானம் மூலமான தற்கொலைத் தாக்குதல் மூலம் புலிகள் அமைப்பு உலக நாடுகளின் கண்டனத்திற்கு மேலும் உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் அப்பாவிச் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடாத்தும் ஒரு அமைப்பு விடுதலைக்கான அமைப்பு அல்ல என்று தெரிவித்துள்ளார்.

 

23-02-2009, 08.43AM

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர் - ஹெகலிய
 

கடந்த இரண்டரை வருடங்களாக அரசாங்கம் மேற்கொண்டுவரும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர் என பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஆட்சி இந்த நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள், அரசியல் தலைவர்கள் மீது மக்கள் கூடுதலான நம்பிக்கையினை வைத்திருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர் பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதற்கான இறுதித்தருணம் நெருங்கியுள்ள வேளையில் நாட்டுமக்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தருவதாக தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (22.02.2009) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ மீதும் அவரது அரசாங்கத்தின் மீதும் அளவுகடந்த நம்பிக்கையினை மக்கள் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். பயங்கரவாத்தினை தோற்கடிப்பதில் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சிறப்பாக செயற்பட்டுள்ளதனை கண்டு மக்கள் மகிழ்சிகொண்டுள்ளனர். கடந்த 20ம் திகதி புலிகளின் விமானங்கள் இரண்டும் சுட்டுவீழ்த்தப்பட்டமை இதற்கு மேலும் வலுவானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

23-02-2009, 08.40AM

சிவராத்தி தினத்தை அனுஸ்டிக்கும் அனைவருக்கும் வாழ்த்து.
 

உலகெங்கும் உள்ள இந்துக்கள் இன்று மகாசிவராத்திரி தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியில் பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டு இம்முறை அதிகளவான இந்துக்கள் சிவராத்திரி தினத்தை அனுஸ்டிப்பதாக தெரிவித்துள்ளார். சிவராத்திரி தினத்தை அனுஸ்டிக்கும் அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் மலர இறைவனை பிராத்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

22-02-2009, 04.10PM

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ ஐ.நா மனித உரிமை விவகாரச் செயலர் ஜோன்ஸ் கோம்ஸை சந்தித்துள்ளார்.


இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன்ஸ் கோம்ஸை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ நேற்றயதினம் (21.02.2009) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

 


புலிகளினால் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்படும் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலேயே நாம் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றோம். அந்த மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலான எச்சரிக்கையினை தொடர்ந்தும் விடுத்து வருகின்றோம் என இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

வன்னியிலிருந்து வரும் மக்கள் அனைவரும் என் நாட்டு பிரஜைகள் அவர்களையும் சிறுவர்களையும் புலிகள் ஆயுதம் ஏந்த வைத்துள்ளனர். எனினும் நான் அவர்களையும் எனது நாட்டு மக்களாகவே பார்க்கின்றேன் எனக்குறிப்பிட்டுள்ளார். மக்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு புலிகள் ஆயுதங்களை கீழே போடவேண்டும் இதனை அடிக்கடி எனது அரசாங்கம் வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். எல்லாவற்றினையும் விட வடக்கு மக்களின் அபிலாஷைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் நான் உறுதியாகவுள்ளேன். பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு அவசியம் என்பதனையும் நான் உணர்ந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

22-02-2009, 03.42PM

விமான எதிர்ப்பு பீரங்கித் தாக்குதலில் காயமடைந்த 43 பேர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்.


கொழும்பு நகரில் புலிகளின் விமானங்கள் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியபோது அதனை சுட்டுவீழ்த்த விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் காயமடைந்த 43 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பணிப்பாளர் ஹெக்டர் வீரங்சிங்க தெரிவித்துள்ளார்.


இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ள அவர் அவர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 53 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் இருவர் உயிரிழந்ததுள்ளனர்.

 

22-02-2009, 03.20PM

தாக்குதல் தொடருமானால் பதில் தாக்குதல் தொடரும் -முகர்ஜி
 

அமைதிப் பேச்சுவார்த்தையொன்றின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்;வைக் காணுமாறு அரசாங்கத்திடமும் புலிகளுடம் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி தெரிவித்துள்ளார். இதனைவிடுத்து தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில் பதில்த்தாக்குதல் நடாத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேற்கு வங்க மாநிலத்தின் பேரம்பூர் நகரில் நேற்று (21.02.2009) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த அவர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்துள்ளார். புலிகளின் விமானம் இலங்கை அரச படைகளினால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் புலிகள் பிரச்சினைகளுக்கு இராணுவத்தீர்வு சாத்தியமாகாது என்பதனை உணர்ந்து அரசியல் தீர்;வொன்றைக் காண முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


இந்தியா ஒரு நிலைப்பாட்டில் தெளிவாகவுள்ளது அதாவது 1987ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையினை முறையாக அமுல்படுத்தப்படவேண்டும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை பாதிக்கப்படாத வகையில் இலங்கையிலுள்ள தமிழர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினரும் தமது அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கேற்ப கட்டமைப்பொன்றை கொண்டிருக்கவேண்டும் என்ற விடயத்தில் இந்தியா தெளிவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

22-02-2009, 11.10AM

நலன்புரி முகாங்களில் தங்கியுள்ளவர்களின் உறவினர்களை கண்டறிய அரசாங்கம் நடவடிக்கை.

 

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி முகாங்களில் தங்கியுள்ளவர்களின் உறவினர்கள் வேறு இடங்களில் வசிக்கும் பட்சத்தில் அவர்களை தேடிக்கண்டறியும் திட்டமொன்றினை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.


இதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சர் மகிந்தசமரசிங்க தெரிவித்துள்ளார். உறவினர்கள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் இதனையடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து நலன்புரி முகாங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

22-02-2009, 09.45AM

புலிகளின் தாக்குதலினால் வருமான வரித்துறையின் கணனி மயப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு பாதிப்பில்லை - சீம்பலாப்பிட்டிய.
 

புலிகளினால் வருமான வரித்துறை கட்டிடம் மீது மேற்கொள்ளப்பட்ட விமானம் மூலமான தற்கொலைத் தாக்குதலினால் கணனி மயப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பிரதி நிதிஅமைச்சர் ரஞ்சித் சீம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். எனினும் 15 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் சேதத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் முழுமையான சேதவிபரங்களை உடனடியாக கணக்கிடமுடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

22-02-2009, 09.36AM

அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் இடம்பெயர்ந்தோர் மீளக்குடியமர்ததப்படுவர் - பசில் ராஜபக்ஸ


அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டதன் பின்னரே இடம்பெயர்ந்து வாழும் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பில் கிழக்கு மாகாணசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நெல் அறுவடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தினை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மக்களில் 97 சதவீதமானோர் அவர்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்;த்தப்பட்டு விட்டனர் எனவும் எஞ்சியிருப்போரை எதிர்வரும் புதுவருடப் பிறப்பிற்கு முன்னதாக மீளக்குடியமர்த்துவதற்கு எண்ணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

22-02-2009, 09.27AM

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு ஐ.நா 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது - ஜோன்ஸ் கோம்ஸ்


உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை வழங்கவுள்ளதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான செயலர் ஜோன்ஸ் கோம்ஸ் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிதி வன்னியில் சிக்குண்டுள்ள மக்களுக்கும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றபோதும் அது எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை தெரியவருகின்றது.

 

22-02-2009, 09.15AM

அம்பாறையில் 8 சிவிலியன்கள் சுட்டுக்கொலை.
 

அம்பாறை கரமிட்டியாவ பிரதேசத்தில் நேற்று (21.02.2009) மாலை 5 மணியளவில் சிவிலியன்கள் மீது ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்தச் சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்தத் தாக்குதலினை தோல்வியின் விளிம்பில் விரத்தியடைந்துள்ள புலிப்பயங்கரவாதிகளே மேற்கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

22-02-2009, 09.10AM

எதிர்வரும் காலங்களில் புலிகளினால் விமானத் தாக்குதல் நடாத்த முடியாது - உதயநாணயக்கார
 

எதிர்வரும் காலங்களில் புலிகளினால் விமானத் தாக்குதல் எதனையும் நடாத்த முடியாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

புலிகள் அமைப்பிடம் 3 விமானங்களே இருந்தன எனத் தெரிவித்த அவர் அவற்றினை பாதுகாப்புத் தரப்பினர் சுட்டுவீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே எதிர்வரும் காலங்களில் புலிகளினால் விமானத் தாக்குதல் எதனையும் நடாத்த முடியாது என்பதனை உறுதியாக கூறமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

22-02-2009, 09.01AM

மீள் வாக்குப்பதிவில் ஐ.ம.சு.கூ வெற்றியீட்டியுள்ளது.
 

புத்தளம் தேர்தல் தொகுதியின் நாயகர்சேனை வாக்களிப்பு நிலையத்திற்கான மறு வாக்குப்பதிவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


26 ஆயிரத்து 753 வாக்கினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், 22 ஆயிரத்து 667 வாக்கினை ஐக்கிய தேசியக் கட்சியும், ஜேவிபி 337 வாக்கினையும் பெற்றுள்ளது. புத்தளம் மாவட்டத்தின் 5 தேர்தல் தொகுதிகளிலும் ஐ.ம.சு.கூ 1 இலட்சத்து 71 ஆயிரத்து 377 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களையும், 76 ஆயிரத்து 799 வாக்கினைப் பெற்று ஐக்கிய தேசிய கட்சி 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

21-02-2009, 03.15PM

சவுதியில் இன்னல்களை நோக்கிய 56 பேர் நாடு திரும்பினர்.
 

வேலைவாய்ப்பத்தேடி சவுதி அரேபியாவிற்கு சென்று பல இன்னல்களைச் சந்தித்த 56 பேர் இன்று (21.02.2009) நாடுதிரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

 

அதிகாலை 5.30 மணியளவில் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்திருப்பதாகவும் அனைவரும் ஆண்கள் எனவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

 

21-02-2009, 02.55PM

சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது.
 

சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் 27ம் 28ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி பாக்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


21-02-2009, 11.42AM

ரி.ஆர்.ரி தமிழ்அலை வானொலி அரசியல் நிகழ்ச்சி தொகுப்பாளர் உதயகுமாருக்கு புலிகள் கொலைப்பயமுறுத்தல்

 

பிரான்ஸிலிருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியின் அறிவிப்பாளரும் அரசியல் அரங்கம் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான உதயகுமாருக்கு புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.


கடந்த 18ம் திகதி மாலை பிரான்ஸின் புறநகர் பகுதியான டிரான்சி என்னுமிடத்திலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற மூன்று புலி உறுப்பினர்கள் வீட்டிலிருந்த அவரது மனைவியிடம் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியினை நிறுத்துமாறும் இல்லையேல் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துச் சென்றுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் டிரான்சி பொலிஸாரிடம் உதயகுமார் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரியவருகின்றது. தமிழ்அலை வானொலியில் அரசியல் அரங்கம், உறவுப்பாலம் ஆகிய இரு நிகழ்ச்சிகளையும் உதயகுமாரே தொகுத்த வளங்கிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

21-02-2009, 11.34AM

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு ஐ.தே.கவின் ஒத்துழைப்பு அவசியமற்றது - லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன
 

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் கொண்வரப்படும்போது அதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒத்துழைப்பு அவசியமில்லை என ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (20.02.2009) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் வரலாற்றில் இதுவரையில் இடம்பெற்ற எந்தவொரு தேர்தல்களிலும் கட்சிகளுக்கான நிலையான வாக்குகள் சிதறடிக்கப்படவில்லை எனவும் ஆனால் நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தல்களில் ஏனைய கட்சிகளின் வாக்குகள் சிதறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை பார்க்கும்போது அரசாங்கத்தினால் எவரினது உதவியுமின்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

21-02-2009, 11.16AM

தலைமறைவான இயக்குனர் சீமான் பொலிஸாரிடம் சரண்.
 

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக பேசிய குற்றச் சாட்டின் பேரில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த இந்திய திரைப்பட இயக்குனர் சீமான் நேற்றயதினம் (20.02.2009) டில்லி மாநகர பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.அவரை புதுச்சேரி பொலிஸ் நிலையத்தில் தமிழக பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.


புதுச்சேரியில் உண்ணாவிரதமிருந்த மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றிய சீமான் தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியிருந்தார். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த புதுச்சேரி பொலிஸார் இவரை பல நாட்களாக தேடிவந்த நிலையில் டில்லி மாநகர பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

21-02-2009, 10.48AM

புத்தளம் நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலயத்தில் மறு வாக்குப்பதிவு இடம்பெறுகின்றது.


வடமேல் மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்ட புத்தளம் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 47ம் இலக்க நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலய வாக்குச் சாவடியில் மீள் வாக்குப்பதிவு இன்று (21.02.2009) இடம்பெறுகின்றது.


இந்த வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் மறு வாக்குப் பதிவு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்ததிஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். வாக்களிப்பின் பின்னர் வாக்குப் பெட்டிகள் புத்தளம் மாவட்ட செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு எண்ணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

21-02-2009, 10.36AM

கப்பம் கோருவோரின் தொலைபேசி இலக்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு - பிரதி அமைச்சர் பி.இராதாகிருஸ்ணன்
 

கொழும்பின் பல பகுதிகளில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரும் நபர்களின் தொலைபேசி இலக்கங்களை பிரதி அமைச்சர் பி.இராதாகிருஸ்ணன் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் கையளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் தலைமையில் அந்தக் கட்சியின் தூதுக்குழு ஒன்று நேற்று (20.02.2009) அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இதன்போது இந்த தொலைபேசி இலக்கங்களை அமைச்சர் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார். மேலும் இதன்போது கொழும்பின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றமை குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

21-02-2009,  10.21AM

வன்னி மக்களை மீட்பதற்கு இந்தியா உதவ முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது இலங்கைத் தூதுவர் சி.ஆர்.ஜயசிங்க
 

வன்னியில் புலிகளிடம் சிக்குண்டுள்ள மக்களை மீட்பதற்கான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் சி.ஆர்.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.


வன்னியில் சிக்குண்டுள்ள மக்களை மீட்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட இந்தியா தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி பாராளுமன்றத்தில் தெரிவித்தமை குறித்து கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


எமது நட்பு நாடுகளில் ஒன்றான இந்தியா இவ்வாறு தெரிவித்துள்ளமை கண்டு இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சி கொண்டுள்ளது. இந்தியாவிடமிருந்து நுட்பங்களை பெற்றுக் கொள்வதற்கும் இலங்கை அரசு ஆர்வமாகவுள்ளது. இந்த நிலையில் வன்னியில் சிக்குண்டுள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை இராணுவம் அவதானமாகவுள்ளது. பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு புலிகள் தொடர்ந்து தடையேற்படுத்தி வருகின்றனர். எனினும் இந்தியாவின் இந்தக் கூற்றினை தாம் வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

21-02-2009, 10.08AM

மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்துவதனை புலிகள் நிறுத்த வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்
 

கடந்த மாதம் சிவிலியன்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு இரு தரப்பினரும் பொறுப்புக்கூறவேண்டும் எனத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் கணக்காணிப்பகம் சிவிலியன்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை இரு தரப்பினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இடம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல் எனும் தொனிப்பொருளில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

வன்னியில் செயற்படும் கண்காணிப்பாளர்களின் தகவல்களின் படி கடந்த ஒரு மாத காலப் பகுதியினுள் சுமார் 2 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 ஆயிரம் பேர் வரையில் காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் கட்டாயம் நிறுத்தப்பட்டே ஆகவேண்டும்.

 

வன்னியிலுள்ள வைத்தியசாலைகள் மீதும் தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றன. பாதுகாப்பு வலயம் எனத் தெரிவிக்கப்படும் பகுதிகளிலும் மக்கள் பலியாகியுள்ளனர். எனவே யுத்தம் நடைபெறும் பகுதிகளிலிருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறுவதற்கு புலிகள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு வெளியேறிச் செல்லும் அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதனை புலிகள் நிறுத்த வேண்டும். அரச படைகள் முன்னேறிவரும் நிலையில் புலிகள் வசமுள்ள பகுதி குறுகிவருகின்றது. இந்த நிலையில் அங்குள்ள மக்கள் அபாயகரமான நிலைக்கு செல்கின்றனர். எனவே அவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்ல முடியாதவாறு தடுப்பதும்> அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்துவதும் சர்வதேச போர்ச் சட்டங்களை மீறும் செயலாகும். எனவே இரு தரப்பினரும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்கவேண்டும் குறிப்பாக பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவதற்கு புலிகள் அனுமதிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

21-02-2009, 09.55AM
நலன்புரி முகாங்களில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டோர் உறவினர்கள் வீடுகளில் சென்று வசிப்பதற்கு அனுமதி.
 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பி வந்து வவுனியா நலன்புரி முகாங்களில் தங்கியுள்ள 60 வயதிற்கு மேற்பட்டோர் தமது உறவினர்கள் வீடுகளிற்கு சென்று வசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இடம்பெயர்ந்து வந்துள்ளவர்களில்; 60 வயத்திற்கு மேற்பட்டோரின் உறவினர்கள் எவரேனும் வவுனியா பிரதேசத்தினுள் இருந்தால் அவர்கள் இவர்களை பொறுப்பேற்று அழைத்துச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அவர்கள் உறவு முறை தொடர்பான விண்ணப்பம் ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து வந்துள்ளவர்களில் பல முதியோர் குடும்பங்களுடன் வந்துள்ளதாகவும் சிலர் தனிமையாக வந்துள்ளதாகவும் எனவே இவர்கள் தம்மை தாமே கவனித்துக் கொள்வதற்கு இயலாத தன்மையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

21-02-2009, 09.27AM

400 நோயாளர்கள் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்டிருந்த மேலும் 400 பேர் ஐ.சி.ஆர்.சி யினரின் வழித்துணையுடன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.


இவ்வாறு கொண்டுவரப்பட்ட அனைவரும் திருகோணமலை வைத்தியசாலை மற்றும் அதன் இணைப்பு வைத்தியசாலைகள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4வது கட்டமாக இவர்களை அழைத்து வந்துள்ளதாகவும் இதற்கு இரு தரப்பினரும் சிறியளவிலான காலப்பகுதியை பாதுகாப்பு உத்தரவாதமாக வழங்கியதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரஸி விஜயரட்ண தெரிவித்துள்ளார்.


இதற்கு முன்னதாக கொண்டுவரப்பட்ட 1200 நோயாளர்களில் சுமார் 1000 பேர் இன்னமும் திருகோணமலை தம்பலகாமம் கந்தளாய் பொலநறுவை கண்டி கொழும்பு வைத்தியசாலை மெதடிஸ்த கல்லூரி தற்காலிக வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரியவருகின்றது.

 

21-02-2009, 09.15AM

அத்துமீறி மீன்பிடியிலீடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது.
 

இலங்கையின் தலைமன்னார் கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியிலீடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் டி.பி.கே.தஸநாயக்க தெரிவித்துள்ளார்.


நேற்று முன்தினம் (19.02.2009) காலை 10 மணியளவில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் பயணித்த இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

21-02-2009, 09.02AM

முல்லைத்தீவு அம்பலவன்பொக்கனை இராணுவத்தினர் வசம்.
 

முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலவன்பொக்கனை பிரதேசத்தினை இராணுவத்தினர் நேற்றயதினம் (20.02.2009) கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.


பிரிகேடியர் சவேந்திரசில்வா தலைமையிலான 58வது படைப்பிரிவினரே இந்தக் கிராமத்தினை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார 84 சதுர கிலோமீற்றர் பரப்பளவினுள் முடக்கப்பட்டுள்ள புலிகள் அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து ஷெல் தாக்குதலினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்த மோதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது புலிகளின் 7 சடலங்களையும், ஆயுதங்கள் பலவற்றினையும் இராணுவத்தினர் மீட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

21-02-2009, 08.06AM

புலிகளின் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

 


 

புலிகளின் விமானங்கள் இரண்டு நேற்றயதினம் (20.02.2009) விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

 

 

நேற்று இரவு 9.30 மணியளவில் கொழும்பில் தாக்குதலினை நடாத்த வந்த புலிகளின் விமானங்களே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். புலிகளின் விமானங்கள் வீசிய குண்டு ஒன்ற கொழும்பு சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தையிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டிடத்திற்கு அருகில் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் இதனால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் விமானப்படை வீரர் ஒருவர் உட்பட 50 பேர் வரையில் காயமடைந்தும் உள்ளனர்.

 

 

இறைவரித்திணைக்களம் மீது குண்டு வீசிய விமானம் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் அமைந்துள்ள பிரதேசத்திலும், மற்றய விமானம் கொழும்பின் புறநகர் பகுதியிலும் வைத்து சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. தாக்குதலின் பின்னர் சம்பவம் இடம்பெற்ற பகுதிகளை பாதுகாப்பு செயலர் கோத்தபாயராஜபக்ஸ மற்றும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, லக்ஸ்மன் ஹ_ளுகல்ல ஆகியோர் உட்பட பலரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

 

20-02-2009, 03.27PM
புலிகள் சிறுவர்களை படையணியில் இணைத்து வருகின்றனர் - வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம.


இலங்கையில் பயங்கரவாதத்தினை ஒழிக்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ள நிலையில் புலிகள் சிறுவர்களை படையணியில் இணைக்கும் நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன்ஸ் கோம்ஸ் உடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் யுத்தத்தின் பிடியில் சிக்குண்டுள்ள மக்களின் பாதுகாப்பு அரசாங்கத்திற்கு பாரிய சவாலாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் மீட்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

 

20-02-2009, 03.03PM
மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச் சூடு.

 

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் பிரத்தியேக செயலாளர் சத்தியசீலனின் மெய்ப்பாதுகாவலர் மீது நேற்று (19.02.2009) மாலை ஆயுததாரிகளினால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.


திருமால் சிவனேசன் (வயது 26) என்பவரே படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசடிச் சந்தியால் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இவர் மீது 7.30 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

20-02-2009, 02.46PM

மனித உரிமை செயலர் கோம்ஸ் வவுனியாவிற்கு விஜயம்

 

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன்ஸ் கோம்ஸ் இன்று (20.02.2009) வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுடன் அங்கு செல்லும் இவர் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து வவுனியாவில் தங்கியுள்ள அகதிகளை நலன்புரி முகாங்களுக்கு சென்று பார்வையிடவுள்ளார். மேலும் முற்பகல் 11 மணியளவில் மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் கூட்டத்திலும் கலந்து கொள்ளுவார் என தெரியவருகின்றது.

 

20-02-2009, 02.38PM

இடம்பெயர்ந்த மக்களை தங்கவைப்பதற்கு சிறுவர் இல்லக் கட்டிடத்தினை பயன்படுத்த அரச அதிபர் தீர்மானம்.
 

வன்னியிலிருந்து தப்பி வரும் மக்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கைதடி சிறுவர் இல்லக் கட்டிடத்தினை யாழ் செயலகத்தின் மேற்பார்வையுடன் தென்மராட்சி பிரதேச செயலாளர் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தற்போது பாவனையில்லாது உள்ள இந்த சிறுவர் இல்லம் தொடர்பாக ஏதாவது தொடர்பு கொள்ள விரும்புவர்கள் யாழ் செயலகத்துடனோ அல்லது அரசாங்க அதிபரிடமோ தொடர்பு கொள்ளுமர்று அரசாங்க அதிபர் கே.கணேஸ் கேட்டுள்ளார்.

 

20-02-2009, 02.10PM

மேலும் 12 புலி உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரண்.
 

புலிகள் அமைப்பிலிருந்து தப்பி வந்த 12 புலி உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார்.


இராணுவத்தினரிடம் சரணடைந்த இவர்கள் அனைவரும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் இவர்களை நலன்புரி முகாமில் தங்கவைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 17ம் திகதி சரணடைந்த 10 புலி உறுப்பினர்களும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நலன்புர்p முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

20-02-2009, 01.25PM

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பிவந்துநலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு உலக உணவுத்திட்டம் உதவி.


புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பிவந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்களுக்கு உலக உணவுத்திட்டம் 10 லொறிகளில் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.


இடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் குழுக்களை அமைத்து சமைத்து சாப்பிடுவதற்கான ஏற்பாடுகளையும் உலக உணவுத்திட்டம் மேற்கொண்டுள்ளது. ஒரு குழுவில் 100 பேரை இணைத்து அவர்களுக்கான சமையல் பாத்திரம், அதற்கான பொருட்கள் என்பனவற்றினை வழங்க உலக உணவுத்திட்டம், மற்றும் யுனிசெவ் என்பன முன்வந்துள்ளன. மேலும் இவர்களுக்கு வேண்டிய மேலதிக அத்தியாவசியப் பொருட்களை மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாக அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

 

20-02-2009, 01.13PM

25 மெற்றித்தொன் பொருட்கள் முல்லைத்தீவிற்கு - திவாரட்ண.


மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய மேலும் 25 மெற்றி தொன் அத்தியாவசிய பொருட்கள் நேற்று (19.02.2009) மாலை முல்லைத்தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரட்ண தெரிவித்துள்ளார்.


முல்லைத்தீவில் மோதலில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்கனவே கடந்த 17ம் திகதி 20 மெற்றித்தொன் மா, 7 மெற்றித்தொன் பருப்பு, 4 மெற்றித்தொன் சீனி, மற்றும் அரிசி, பால்மா உள்ளடங்கலாக 40 மெற்றித்தொன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் அதற்கு மேலதிகமாக நேற்றும் 25 மெற்றித்தொன் பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அங்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் அரசாங்க அதிபரின் மேற்பார்வையுடன், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளினால் மக்களுக்கு முழுமையாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை ஐ.சி.ஆர்.சியின் கொழும்பு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

20-02-2009, 12.38PM

புதிய அரசியல் அமைப்பு அனைத்துச் சமூகத்தினரையும் திருத்திப்படுத்துவதாக அமையவேண்டும் - லக்ஸ்மன் கியெல்ல
 

அரசாங்கம் தயாரிக்கும் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் அனைத்து சமூகத்தினையும் திருத்திப்படுத்துவதாக அமையும் பட்சத்தில் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (19.02.2009) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத் தீர்விற்காக புதிய அரசியல் அமைப்பொன்றினை கொண்டுவரப்போவதாக அமைச்சர் மைதிரிபாலசிறிசேன தெரிவித்து வருகின்றார். அவ்வாறு ஒன்று கொண்டுவரப்படும்போது அதனை எதிர்க்கட்சி உட்பட்ட ஏனைய அரசியல் கட்சிகளினதும் பரிசீலணைக்கு விடப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

20-02-2009, 12.01PM

வன்னி சிக்கியுள்ள மக்கள் சுதந்திரமாக வெளியேறுவதற்கு புலிகள் அனுமதிக்க வேண்டும் - ஜோன்ஸ் கோம்ஸ்
 

வன்னியில் இடம்பெறும் உயரிழப்புக்கள் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன்ஸ் கோம்ஸ் தெரிவித்துள்ளார்.


மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று (19.02.2009) அதிகாலை இலங்கையை வந்தடைந்த அவர் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் கருத்து வெளியிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 அப்பாவி மக்கள் பலியாவதனைத் தடுப்பதற்கு சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை இரு தரப்பினரும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார். வன்னியில் சிக்கியுள்ள தமிழ் மக்கள் அங்கிருந்து சுதந்திரமாக வெளியேறவேண்டும் என நாம் விரும்புகின்றோம். இதற்கு புலிகள் அமைப்பு அனுமதியளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றோம். ஏனெனில் இது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களில் ஒருபகுதியாகும் வேறு நிலையில் இந்தக் கோரிக்கையினை பலரும் விடுத்துள்ள நிலையில் இதற்கு புலிகள் அமைப்பு செவி சாய்க்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

 

19-02-2009, 12.24PM
அப்பாவித் தமிழ் மக்களை புலிகள் விடுதலை செய்ய வேண்டும்  இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி.


இலங்கையின் வடக்குப் பகுதியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைக்குள் சிக்குண்டுள்ள மக்களை மீட்பதற்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்க தயாராகவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்திய பாராளுமன்றத்தில் நேற்றயதினம் (18.02.2009) எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தியதன் பின்னர் இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் சிவிலியன்கள் சிக்கியுள்ளமை இந்தியாவிற்கு கவலை தருவதாக தெரிவித்துள்ள அவர் அவர்களை மீட்பதற்கு இந்தியா உதவி செய்யும் எனத் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு ராஜீவ் - ஜெயவர்த்தன ஏற்படுத்திய அதிகாரப் பகிர்வு தீர்விற்கு வழிவகுக்கும் என்றும் 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவது தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த இயக்கம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 23 வருட கால இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வு காண்பதற்கு தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு தீர்வினை காண்பது தனது நோக்கம் எனவும் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ எம்மிடம் உறுதியழித்துள்ளார்;. இந்தியா அமைதியையே விரும்புகின்றது. அதற்காக இரு தரப்பினரையும் யுத்த நிறுத்தம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றது.

அப்பாவித் தமிழ் மக்களுக்கு புலிகளினாலேயே அதிகளவில் சேதமேற்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவிலிருந்து வெளியேறும் தமிழ் மக்கள் மீது புலிகள் தாக்குதல் நடாத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சண்டை நடைபெறும் பகுதிகளிலிருந்து அப்பாவித் தமிழர்களை விடுவிக்கவேண்டும் என தாம் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

19-02-2009, 12.10PM
புலிகளின் 5 இலக்குகள் மீது விமானத் தாக்குதல்.


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள புலிகளின் ஐந்து இலக்குகள் மீது விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடாத்தியிருப்பதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனகநாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஹைபர் மற்றும் எம்.ஐ.24 ரக ஹெலிகப்டர்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது வெற்றியழித்துள்ளதனை விமானிகள் உறுதி செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

19-02-2009, 11.50AM

ஐ.நாவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோம்ஸ் இலங்கை வந்துள்ளார்.

இராணுவ நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு என்பன தொடர்பாக ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் இன்று (19.02.2009) காலை இலங்கை வந்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினை அழைப்பை ஏற்று இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு அவர் இலங்கை வந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். வடக்கு இராணுவ நடவடிக்கை பாதிக்கப்படும் மக்களுக்கு அரசு மேற்கொண்டுவரும் மனிதாபிமான உதவிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை விவகாரங்களுக்கான செயலாளருக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலில் இது தொடர்பில் தாம் கலந்துரையாடவுள்ளதாகவும் இதன் பின்னர் அவர் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ உள்ளிட்ட தலைவர்களை சந்திப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

 

18-02-2009, 05.02PM

10 புலி உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர்..


புலிகள் அமைப்பிலிருந்து தப்பி வந்த 10 உறுப்பினர்கள் நேற்றயதினம் (17.02.2009) இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.


பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் ஆயர் செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுள் பெண் புலி உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

18-02-2009, 04.43PM

பா. உறுப்பினர் இரா.சம்பந்தன் புலிகளுக்கு சார்ப்பான கருத்தினை வெளியிடுகின்றார் - ஹெகலிய ரம்புக்வெல்ல


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் புலிகள் அமைப்பிற்கு சார்ப்பான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றார் என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (18.02.2009) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களை அரச படைகள் தாக்குவதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார் இதன் மூலம் அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல எனவும் புலிகளுக்கு சார்ப்பான ஒருவர் என்பது தெளிவாவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களை அரசு வன்னிக்கு அனுப்புவதில்லை என சம்பந்தன் தெரிவித்திருக்கும் அதேவேளை 40 மெற்றித்தொன் உணவுப் பொருட்களை அரசு கடல்மார்க்கமாக நேற்றயதினம் முல்லைத்தீவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

18-02-2009, 04.25PM

முல்லைத்தீவில் உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு தடுப்பாடு நிலவுகின்றது - ஐ.சி.ஆர்.சி
 

உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போதியளவு இல்லாமையினால் முல்லைத்தீவிலுள்ள மக்கள் வாழ்வா சாவா என்ற நிலையில் வாழ்கின்றனர் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.


கப்பல் மூலம் நோயாளர்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்துள்ளதன் மூலம் பல உயிர்களை நாம் காப்பாற்றியுள்ளோம் எனினும் இன்னும் பலர் அங்கு உதவியற்றவர்களாக ஆர்வத்தோடு வெளியே செல்ல காத்திருக்கின்றனர் என சங்கத்தின் தலைவர் போல் கஸ்டல்லா தெரிவித்துள்ளார். இராணுவ அதிகாரிகளும், உள்ளுர் பொதுமக்களும், சிவில் அதிகாரிகளும், பொதுமக்களையும், நோயாளர்களையும் அங்கிருந்து வெளியேற்றி திருகோணமலைக்கு கொண்டு வருவதற்கு தம்மாலான அனைத்து ஒத்துழைப்பினையும் வழங்கிவருகின்றனர். திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் வைத்திய குழுவொன்று அங்கு தங்கியிருந்து சேவையாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

 

18-02-2009, 03.54PM

அரசியல்வாதிகளைவிட மக்கள் முன்னணியில் உள்ளனர் -சுசில்


கொழும்பில் நேற்று (17.02.2009) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அரசியல்வாதிகளை விட மக்கள் முன்னணயில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் வாக்காளர்கள் அரசியல்வாதிகளை விட முன்னணியில் உள்ளனர் என்பது வரலாற்று ரீதியாக நாம் கண்டு வரும் உண்மை. இதனையே கடந்த மாகாணசபைத் தேர்தல் உணர்த்தியுள்ளது. இதனை ஐக்கிய தேசியக் கட்சியினர் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டினையே எதிர்வரும் மேல்மாகாணசபைத் தேர்தலிலும் மக்கள் எடுப்பார்கள் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

18-02-2009, 03.46PM

கல்முனையில் ஆயுததாரிகளின் சூட்டில் ஒருவர் பலி.
 

கல்முனை நீதிமன்ற வீதியில் நேற்று (17.02.2009) இரவு 8.30 மணியளவில் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என கல்முனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வீதி அபிவிருத்தி திணைக்களத்தில் தொழில்நுட்ப உதவியலாளராக கடைமையாற்றும் மேகராஜா அழகேந்திரன் (வயது 46) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் அவரது சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

18-02-2009, 03.37PM

451 பேர் அரக கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்துள்ளனர்.


புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பி வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்றயதினம் (17.02.2009) முழுவதும் 154 குடும்பங்களைச் சேர்ந்த 451 பேர் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

இவர்களில் 129 ஆண்களும், 141 பெண்களும், 18 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவித்துள்ள இராணுவம் இவர்கள் அனைவரும் விசாரணைகளின் பின்னர் நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

18-02-2009, 03.10PM

புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மாலைத்தீவு அரசு முன்வந்துள்ளது.


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு மாலைதீவு அரசாங்கம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அம்மக்களுக்காக ஒரு தொகுதி படுக்கை விரிப்புக்கள், கூடாரங்கள், அப்பியாச புத்தகங்கள், நுளம்புவலைகள், பாதணிகள் என்பனவற்றினை மாலைத்தீவு அரசாங்கம் அன்பளிப்புச் செய்துள்ளது. பொருட்களை கையளிக்கும் நிகழ்வு இலங்கைக்கான மாலைத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று (17.02.2009) இடம்பெற்றுள்ளது. மாலைதீவு உயர்ஸ்தானிகர் இந்தப் பொருட்களை மீள் குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் உத்தியோகபூர்வமாக கையழித்துள்ளார்.
 

18-02-2009, 01.57PM

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண நாம் தயாராகவுள்ளோம் - த.தே.கூ பாராளுமன்ற குழுவின் தலைவர் இரா.சம்பந்தன்.


வன்னியில் மோதல்கள் அதிகரித்துச் செல்கின்றமையினால் மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன இதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கமும் புலிகளும் போர் நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ள முன்வரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 


பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (17.02.2009) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும்போது இந்த வேண்டுகோளினை த.தே.கூ பாராளுமன்ற குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ளார்.


வன்னியில் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர் அவர்கள் மத்தியில் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மருந்து பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக அரசு கூறுகின்றபோதும் அவ்வாறு அங்கு ஏதும் அனுப்பி வைக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் பாதுகாக்கப்படவேண்டும் போர் நிறுத்தம் மூலமே மக்களை பாதுகாக்க முடியும் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படும் பட்சத்தில் மக்கள் எங்கு செல்லவேண்டும் எனத் தீர்மானிப்பர் என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் எனினும் சர்வகட்சி ஆலோசனை குழுவில் பங்கேற்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

18-02-2009, 01.27PM

வவுனியாவில் சட்டவிரோத ஒளி பரப்பு நிலையம் முற்றுகை.
 

தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாது வவுனியாவில் இயங்கி வந்த ஒளி பரப்பு நிலையம் ஒன்றினை இராணுவத்தினர் நேற்று முன்தினம் (16.02.2009) கண்டு பிடித்துள்ளதுடன். அந்த நடவடிக்கையினை மேற்கொண்டு வந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.


புலிகள் அமைப்பிற்கு சார்பான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தில் இந்த ஒளிப்பரப்பு நடவடிக்கை இடம்பெற்று வந்ததன் காரணமாக இதனை கண்டு பிடிப்பதில் சிக்கல் நிலை தோன்றியிருந்தாகவும் எனினும் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது இந்த நிலையம் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒளிபரப்பு நிலையம் ஊடாக இராணுவத்தினருக்கும், அரசாங்கத்திற்கும் எதிரான பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நிலையத்திலிருந்து அதிநவீன ஒளிபரப்பு சாதனங்கள், டிவிடி. விசிடி, கணனி உள்ளிட்ட பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

18-02-2009, 01.15PM

முல்லைத்தீவிற்கு 40 மெற்றித் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - எஸ்.பி.திவாரட்ண


முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள மக்களுக்காக 40 மெற்றித் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அரசாங்கம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரட்ண தெரிவித்துள்ளார்.
 

திருகோணமலையிலிருந்து நேற்று (17.02.2009) இரவு கப்பல் மூலம் இவை முல்லைத்தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் கிறீன் ஓசன் கப்பல் மூலம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தற்போது இந்தக் கப்பல் முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த நோயாளர்களை அழைத்து வருவதற்காக பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். ஐ.சிஆர்சியின் கொடியுடன் இந்தக் கப்பல் உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

18-02-2009, 12.10PM
புதுக்குடியிருப்பு மேற்குப் பகுதி இராணுவத்தின் வசம்.


புலிகளின் முக்கிய பிரதேசமாக கருதப்படும் புதுக்குடியிருப்பு பகுதியின் மேற்குப் பிரதேசத்தினை இராணுவத்தின் 58வது படைப்பிரிவு தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

பரந்தன் முல்லைத்தீவு ஏ35 வீதி ஊடாக குறித்த பிரதேசத்திற்குள் நேற்று (17.02.2009) காலை இராணுவத்தினர் முன்னேறியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த மோதலில் 25 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவற்றில் 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இறுதி நகரமான புதுக்குடியிருப்பினை மீட்பதற்கான மோதலில் ஈடுபட்டுள்ள மற்றுமோர் படைப்பிரிவான விசேட அதிரடிப்படையின் 4வது பிரிவு ஏ35 வீதியின் ஒரு பகுதியை தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். உடையார் கட்டு முதல் புதுக்குடியிருப்பு நகருக்கு அருகிலுள்ள பாதுகாப்பு மதில்வரையான பகுதியையே கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

18-02-2009, 09.20AM

16.02.2009

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

அன்புடையீர்,
வன்னிவாழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அகப்பட்டு வாழும் அப்பாவி மக்கள் மத்தியில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் திடீரென உயர்ந்துள்ளமையை மிக அக்கறையுடனும் மிகுந்த துன்பத்துடனும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இராணுவம் வன்னிக்குள் புகுந்ததில் இருந்து, இன்று ஏற்பட்டுள்ள நிலை மிக அதிகப்படியாக உயர்ந்துள்ளது. நான் இரு சமூகங்களுக்கிடையில் எதுவித பேதமும் காணாதவன் என்பதை தாங்கள் அறிவீர்கள் ஒரு தமிழராக இருந்தாலும்ஓர் சிங்களவராக இருந்தாலும், ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் அவர்களின் உயிர் மிகப் பெறுமதியானவையாகும். இன்றுள்ள யுத்த நிலைமையில் இராணுவம் பதிலடி கொடாது தொடர்ந்து தாக்கத்தை சகிக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. இராணுவத்தினர் தம் தாய் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு மாறாக விடுதலைப் புலிகளோ ஏறக்குறைய யுத்தத்தில் தோன்றுப்போன நிலையிலும் ஆணவம் கொண்ட தமது தலைவனின் பணிப்பின் பேரில் போராடுகின்றனர். தாம் பலாத்;காரமாக தம் பாதுகாப்புக்காக பிடித்து வைத்துள்ள பொதுமக்களின் பாதுகாப்புப் பற்றி யோசிக்காது எதுவித கேள்வியும் கேட்காது போராடி மடிவதே அவர்களின் கடமையாகும்.

ஆனால் ஜனாதிபதி அவர்களே எப்படியும் தங்களின் அரசுக்கு அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டிய புனிதமான கடப்பாடு உண்டு. விடுதலைப் புலிகள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரதேசத்தினையும் மக்களின் பெரும் பகுதியினரையும் மீட்டெடுத்த பெருமை இராணுவத்தினருக்கு உண்டு. இராணுவத்தில் இதுவரை காலமும் பல தோழர்களை பலிகொடுத்து சம்பாதித்த நற்பெயருக்கு பல அப்பாவி மக்களின் இழப்பால் களங்கம் ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மாற்றம் பற்றி நான் நன்கறிவேன். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் பெருமளவில் குறுகியுள்ளமையால் ஏற்பட்ட இடநெருக்கம் பெருமளவாக பாதிப்புக்கள் ஏற்பட காரணமாக இருக்கலாம். யுத்தத்தை விரைவில் முடிக்க வேண்டுமென இராணுவத்தினரின் அளவுக்கு மீறிய உற்சாகம் நிச்சயமாக ஒரு காரணமாக இருக்காது.

அக்டோபர் 24ம் தேதிக்கும் நவம்பர் 09ம் தேதிக்கும் இடைப்பட்ட இருவார யுத்தத்தில் எட்டு பொது மக்கள் இறந்தும் ஒன்பது பேர் காயப்பட்டும் உள்ளனர். ஆனால் கடந்த வாரத்தில் மட்டும் 288 பேர் இறந்தும் 766 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். கடந்த சனிக்கிழமை 55 பேர் இறந்தும் 109 பேர் காயப்பட்டும் உள்ளனர். இது ஓர் அதிர்ச்சி தரும் விடயம் மட்டுமல்ல. தாக்கப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பிN;யாடி வருபவர்களையும் நன்றாக பராமரிக்கும் இராணுவத்தினருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது பாரதூரமான விடயமாகும்பல ஆண்டுகளாக பல்வேறு துன்பத்தை அனுபவித்து குறிப்பாக கடந்த சில மாதங்களாக செல் அடிக்கும், பீரங்கி தாக்குதலுக்கும் பயந்து வாழும் மக்களின் நம்பிக்கையை பெற இத்தகைய படுகொலைகளை நிறுத்த வேண்டும்.

இராணுவம் இனி விமானத் தாக்குதலைகளை உடனடியாக நிறுத்தி பீரங்கித் தாக்குதல் செல் தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும். அகப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை எஞ்சியுள்ள பகுதிகளை பிடிப்பதைப் பொறுத்திருக்கலாம். ஆனால் இராணுவ நடவடிக்கை தொடரலாம்.

விடுதலைப் புலிகள் தமது பிரச்சாரத்துக்கு பெரிதாக பாவித்த குற்றச்சாட்டாகிய இன ஒழிப்பை மறுத்துரைத்தவன் நான் என்பதை தாங்கள் அறிவீர்கள்

நன்றி
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

 

17-02-2009, 04.12PM

நாட்டு மக்களின் உண்மை நிலையை பார்வையிட ஐ.நா. பொதுச் செயலர் இலங்கை வரவேண்டும் - ஜனாதிபதி
 

சர்வதேசத்தின் மத்தியில் நாட்டு மக்களை கண்காட்சி பொருளாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாறாக இலங்கை மக்களின் உண்மையான நிலவரத்தினை பார்வையிட வருமாறு ஐ.நா பொதுச் செயலாளர் பாங்கிமூனுக்கு அழைப்பொன்றினை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 


ஹோமாகமை வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் ஒன்றினை நேற்றயதினம் (16.02.2009) திறந்து வைத்து உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலிகளிடமிருந்து தப்பி வரும் மக்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதாக சர்வதேசத்தில் பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்களை எமது சகோதர மக்களாகவே கருதி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறான தவறான பிரச்சாரங்களை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். நாட்டின் உண்மையான நிலவரத்தினை பார்வையிட இலங்கை வருமாறு ஐ.நா பொதுச் செயலாளருக்கு அழைப்பு விடுத்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்;.

 

17-02-2009, 03.48PM

பொதுமக்களை மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதனை நிறுத்துமாறு கோரி பேரணி.

 

பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்தி யுத்தம் புரிவதை புலிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் நேற்றயதினம் (16.02.2009) மக்கள் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

சிறி ரெலோ எனப்படும் சிறி தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் வைரவபுளியங்குள சிறுவர் பூங்காவிலிருந்து ஆரம்பமான பேரணி வவுனியா கடை வீதி வழியாக வவுனியா கச்சேரியை சென்றடைந்துள்ளது. பேரணியின் முடிவில் வவுனியா மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. பேரணியில் கலந்து கொண்டோர் மக்கள் மீது தற்கொலைத் தாக்குதலினை நடாத்துவதனை நிறுத்துமாறும், பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்தி யுத்தம் மேற்கொள்ள வேண்டாம் போன்ற கோசங்களை எழுப்பியவாறு சென்றுள்ளனர்.

 

17-02-2009, 03.29PM

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மக்கள் செல்வதனை புலிகள் தடுத்து வருகின்றனர் - ஐ.நா


இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதல்களில் அப்பாவி மக்கள் சிக்குண்டு பலியாவது, மற்றும் காயமடைவது என்பன குறித்து தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


இலங்கையிலுள்ள ஐ.நாவின் வதிவிட மனிதநேய ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாதுகாப்பு வலயம் என அரசாங்கம் ஒரு பகுதியை அறிவித்துள்ளது. இது அங்குள்ள மக்களுக்கு ஓரளவு நிம்மதியை கொடுத்திருந்தாலும் கடந்த சில நாட்களாக அங்கும் மோதல்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் மோதல்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கத்தையும், புலிகளையும் நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

 

மேலும் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதனை புலிகள் தொடர்ந்தும் தடுத்து வருகின்றனர். அதனை மீறி செல்லும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்படும் சம்பவங்களும் அதிகரித்துச் செல்கின்றன. ஐ.நா அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை புலிகளினால் பலவந்தமாக அவர்களின் படையணியில் இணைக்கப்பட்டுள்ளார் என்றும் 14 வயதுடைய சிறுவர்களை புலிகள் தமது அமைப்பில் பலவந்தமாக இணைத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்;கப்படுகின்றத. இவ்வாறு பலவந்தமாக இணைக்கப்பட்ட ஐ.நா அதிகாரியை புலிகள் விடுதலை செய்ய வேண்டும் அத்துடன் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல விரும்பும் மக்கள் சுதந்திரமாக வெளியேறிச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

17-02-2009, 03.10PM

மேலும் 440 நோயாளர்கள் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

 

 

தாக்குதல்களில் சிக்கி காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு புதுமானந்தளல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 440 நோயாளர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 

 

இதற்கான கடல் பாதுகாப்பு உத்தரவாதத்தினை புலிகளும், அரச படைகளும் வழங்கியிருந்ததாகவும் இதற்கு அமைய கிறீன் ஓசன் கப்பல் மூலம் குறித்த நோயாளர்கள் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரஸிவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.

 

17-02-2009, 11.39AM

யுத்தநிறுத்தத்தைக் கோரி தமிழகத்தில் போராட்டம்.


இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மனிதச்சங்கிலிப் போராட்டம் ஒன்று இன்று (17.02.2009) இடம்பெறவுள்ளது.

 

தமிழகத்தில் மாலை 5 மணி முதல் 6 மணிவரையில் இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியும் பங்குகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

17-02-2009, 11.16AM

தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது - கிங்ஸ்லி

 

நடந்து முடிந்த வடமேல் மற்றும் மத்திய மகாணசபைத் தேர்தல்கள் பாரியளவான வன்முறைகள் அற்;று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளதாக சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு (பவ்ரல்) தெரிவித்துள்ளது.

 

பாதுகாப்பு படையினர், பொலிஸார், மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் தமது கடைமைகளை சரிவர செய்திருப்பதாக பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொற்றிக்கோ தெரிவித்துள்ளார்.

 

17-02-2009, 10.29AM

புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளின் இலக்குகள் மீதுதாக்குதல்.
 

எம்.ஐ 24 ரக ஹெலிகப்டரினைப் பயன்படுத்தி புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்திருந்த புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனகநாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் வெற்றியழித்துள்ளதனை விமானிகள் உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

இதேவேளை விஸ்வமடுப் பகுதியில் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அதிநவீன சொகுசு கார்கள் இரண்டினை இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் மக்களின் சுகாதாரத் தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்கு 10 பேர் கொண்ட மக்கள் குழுவொன்று வவுனியாவிற்கு வந்தடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

17-02-2009, 10.02AM

வன்னியிலிருந்து வந்த 6 மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகம் செல்ல பண உதவி வழங்கப்பட்டுள்ளது - றிசாட் பதியுதீன்
 

புலிகளின் அடக்குமுறைப் பிரதேசத்திலிருந்து தப்பி வந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த 6 மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு சென்று தமது கல்வி நடவடிக்கையினைத் தொடர்வதற்கு வேண்டிய போக்குவரத்திற்கான விமானச் சீட்டு மற்றும் கைச்செலவிற்காக 10 ஆயிரம் ரூபாய் பணம் என்பன வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


வவுனியா செயலகத்தில் நேற்று (16.02.2009) இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவர்களுக்கான உதவித் தொகை மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவி;க்கப்படுகின்றது.

 

17-02-2009, 09.50AM

குப்பிளான்குளம் பிரதேசம் இராணுவத்தினர் வசம் வந்துள்ளது.
 

புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தினை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டுள்ள படையினர் குப்பிளான்குளம் பகுதியை நேற்று (16.02.2009) கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.


பிரிகேடியர் சவேந்திரசில்வா தலைமையிலான 58வது படைப்பிரிவு பரந்தன் ஏ32 வீதி ஊடாக முன்னேறிச் செல்வதாகவும் இந்தப் படையணியே நேற்று மாலை குறித்த பகுதியை தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த மோதல்களில் 30 புலி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 14 பேரின் சடலங்களை இராணுவத்தினர் மீட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

16-02-2009, 06.20PM
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவரும் மீளக் குடியமர்த்தப்படுவர் - ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ

 

யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உரிய பாதுகாப்பினை வழங்கி அவர்களின் நலன்களுக்கான அனைத்துத் தேவைகளையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். படையினரிடமோ அல்லது ஐ.சி.ஆர்.சி யினரிடமோ சரணடையும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையினை பூர்த்தி செய்வதற்கு உரிய நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

16-02-2009, 04.37PM

பெரும்பான்மை கட்சிகளுடன் சிறுபான்மை தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதில் பயனில்லை - விக்கிரமபாகு
 

சிறுபான்மை தமிழ் கட்சிகள் பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து தேர்தல்கள் போட்டியிடுவதன் மூலம் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (16.02.2009) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் அரசாங்கம் இராணுவ நடவடிக்கையினை முன்னிலைப் படுத்துவதைப் போன்று எதிர்கட்சியினரும் அதற்கு சார்ப்பாக செயற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். யுத்தத்தின் மூலம் எவ்வித தீர்வினையும் பெற்றுக் கொள்ள முடியாது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
 

16-02-2009, 04.24PM

இந்திய உயர்ஸ்தானிகர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்.
 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் இன்று (16.02.2009) கிழக்கு மாகாணத்திற்கு தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அங்கு செல்லும் அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மட்டு மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன், உட்பட்ட பலரை ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 

16-02-2009, 04.12PM
வாழைச்சேனை கடதாசி ஊழியர்களின்போராட்டம் தொடர்கிறது

 

கடந்த காலங்களில் வழங்கப்படாதுள்ள சம்பளங்களை வழங்க வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு வாழைச்சேனை கடதாசி ஊழியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 5வது நாளாக இன்றும் (16.02.2009) தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கடந்த 11ம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் 150க்கு மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் இப்போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

16-02-2009, 03.50PM

இலங்கை பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியா தயார்.
 

புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


புலிகள் தமது ஆயுதங்களை களையும் அதேவேளை இலங்கை அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தினால் இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாக இந்தியா மத்தியஸ்தம் வகிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தத்தை அரசாங்கம் மேற்கொள்ளும் அதேவேளை ஆயுதங்களை முழுமையாக ஒப்படைப்பது தொடர்பில் புலிகள் உறுதியழிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் 1985ம் ஆண்டு இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய உடன்படிக்கையினை புலிகள் ஏற்றிருந்தால் அவர்களுக்கு அரசியல் அந்தஸ்து கிடைத்திருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த யுத்தத்தினால் அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகள்

 

தேர்தல் திணைக்களத்தால்

03 ஜுலை 2008 இல் வெளியிடப்பட்டது

 

 

 

 

அவுஸ்;திரேலியாவில வெளிவரும் உதயம் மாத இதழில் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவ

ர்கள் எழுதிய 13வது அரசியல் யாப்பு திருத்தம், அதன் அமுலாக்கம் குறித்த கட்டுரை தொடர்
 

 

கூட்டமைப்பு

 

01 ஆகஸ்ட் 2008
த.வி.கூ புளொட்

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
 


அறிக்கைகள்

 

01 மே 2007
ஈ.பி.ஆர்.எல்.எவ்

 


கட்சியின் விளக்கம்

 

10 நவம்பர் 2006
இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு தொடர்பாக எமது கட்சியின் விளக்கம்
 

இணைத்தலைமை
 

22 நவம்பர் 2006
 


ஜெனீவா பேச்சுவார்த்தை
 


மத நிறுவனங்கள்

 

08 ஏப்ரல் 2007
 


 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரேரணைகள்
 

Proposal for the Political Solution to the Ethnic Conflict in Srilanka
EPRLF seeks merger of Sri Lanka's north-east Indo-Asian News Service 30 March 2007

Indian backing proposals styled on the Indo-Lanka Accord The Island, March 26, 2007  

Moderate Tamils' constitutional proposal  Hindustan Times 23 March 2007

FRATERNAL PAGE

LSSP demands 13th Amendment be implemented
 

 

தோழர் றொபேட்
50வது பிறந்தநாள் நினைவு
 

மார்கழி 13
ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல்
khh;fop 13

<gpMh;vy;vt; kPJ jhf;Fjy;

 

Appeal to the leaders of  Political Parties and the People of  Tamil Naad 14 October 2008

 

 

 

மட்டக்களப்பு மாவட்ட உள்ள+ராட்சி தேர்தல்கள்- 2008
 

வாக்களிப்பு மற்றும் கட்சிகளுக்குக் கிடைத்த ஆசனங்கள்
 

மட்டக்களப்பு மாநகர மேயர் பத்மினி 13.03.2008 அன்று அளித்த செவ்வி
 

 

கிழக்கு மாகாணசபை தேர்தல் ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் வழங்கிய (14.03.2008) செவ்வி

 

 

 
     
 

 'ehk; kf;fSf;fhfg; NghuhLtnjd;gJ vk;kPJ Rkj;jg;gl;l flikNa jtpu vkf;F toq;fg;gl;l mjpfhuky;y"  Njhoh; f.gj;kehgh