HOME ARTICLES HISTORY MARTYRS PHOTOS LINKS ARCHIVES CONTACT  

 

 

 ARCHIVES     April - 2009

சிறுமி வர்ஷாவின் படுகொலைக்கான சூத்திரதாரியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் துரைரட்ணம் அறிக்கை

 

வன்னிப் பிரதேசத்திலிருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கக் கோரி யாழில் இடம்பெற்ற பேரணி (படங்கள்)

 

யாழ் மாவட்டத்தில் சுதந்திர தினம் 2009 (படங்கள்)


 

20-04-2009, 11.50 AM

 

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அண்மையில் ஜேவிபி உறுப்பினர் ஒருவர் கொல்ல்பபட்டதற்கு இதுவரை பொலிஸார் தகுந்த நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்து ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு வலயத்தில் இருந்து பெருமளவான மக்கள் வருகை

 

வன்னியில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயப் பகுதியில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரத்திற்கு மேற்பட்டமக்கள் அப்பகுதியில் இடம்பெறும் மோதல்களையடுத்து இன்று (20.04.2009) காலை மீட்கப்பட்டிருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் புலிகளின் பிடியிலிருந்து இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு தப்பிவந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அப்பகுதியிலிருந்து தப்பிவந்த மக்கள் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் காயமடைந்திருப்பதாக இராணுவ தரப்பிலிருந்து தெரியவருவதாக ராய்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

 

 09.00 AM

 

இந்தியாவின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி இலங்கை வருகிறார்

இந்தியாவின் ஆன்மீகத்தலைவரும், வாழும்கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி இன்று (20.04.2009) இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் 3 நாட்கள் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல் தலைவர்களையும் சர்வமத தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். மேலும் புலிகளின் பிடியில் இருந்து வந்து வவுனியா முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைகுறித்து சர்வதேசத்திற்கு தெரியப்படுதத வேண்டும்

இலங்கையில் உள்ள தற்போதைய நிலவரம் குறித்து சர்வதேச நாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க எடுத்து கூறியுள்ளார். கொறணையில் நேற்று (19.04.2009) இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் நாட்டில் உள்ள அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்களே. இது பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. தமிழ் மக்களின் உரிமை வேறு, பயங்கரவாதம் வேறு. இதனை பிரித்தறியும் சக்தி அரசாங்கத்திற்கு உள்ளது. நாட்டின் நிலவரம் குறித்து மக்கள் நன்கு அறிவர். ஆனால் சிலர் சர்வதேச சமூகத்திற்கு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

 

07.35 AM

 

தமிழகத்தில் புலி உறுப்பினர் ஒருவர் கைது

தமிழகத்தில் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தமிழக கியு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புலிகளுக்கு தேவையான நவீனரக உபகரணங்களை கடத்தினார் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தமிழகத்திற்குள் பெருமளவான புலிகளின் கடத்தல்காரர்கள் ஊடுருவி இருக்கின்றனர். இவர்கள் புலிகளுக்கு தேவையான நவீனரக ஆயுதம் மற்றும் நிதியினை சேகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தனை அடுத்து தமிழகம் முழுவதும் பொலிஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

 

19-04-2009, 10.30 PM

 

உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு புதுமாத்தளன் பாதுகாப்பு வலய பகுதியில் புலிகளின் பிடியில் இருக்கும் மக்களுக்கு நாளை (20.04.2009) ஒரு தொகுதி உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவுப் பொருட்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தமது கப்பல் மூலம் எடுத்து செல்லவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது. தற்பொழுது திருகோணமலை அஸ்ரப் துறைமுகத்தில் வைத்து இந்த உணவுப் பொருட்கள் கப்பலில் ஏற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம் பெயர்ந்த மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை

மன்னார் வைத்தியசாலையில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் பெற்றோரின் பிள்ளைகள் மற்றும் காயமடைந்த சிறுவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மன்னார் வலய கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் தற்காலிக கொட்டகைகளில் இந்த மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில் 283 மாணவர்கள் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை யுனிசெவ் நிறுவனம் வழங்கவுள்ளதாக மன்னார் கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியர்கள் 13 பேரில் 6 பேருக்கு கடந்த இரண்டு மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களுக்கு எதிர்வரும் 23ம் திகதி சம்பளம் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

07.45 PM

 

இலங்கை தொடர்பில் கலந்துரையாட விசேட தூதுவர்

இலங்கை விபரம் தொடர்பில் கலந்துரையாடவென விசேட பிரதிநிதியாக டெஸ் பிறவுணை பிரித்தானியா நியமித்துள்ளது. இலங்கையின் விசேட பிரதிநிதியான இவர் இலங்கை விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்துரையாடவென அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்துள்ளார். இவர் அங்கு அவசர கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக பிரித்தானியாவின் வெளிவிவகார செயலர் டேவிட் மிலிபன் தெரிவித்துள்ளார்.

பிறவுண் ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்வதற்கு எதிர்ப்புகள் சில எழுந்த போதும் அமெரிக்க வெளியுறவு செயலர் கிலாரி கிளின்டனின் தலையீட்டை அடுத்து அவர் தற்பொழுது ஐக்கியநாடுகள் சபைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் பிடியில் இருக்கும் பொதுமக்களை மீட்பதற்கென இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபை செயற்படுகின்றது. இந்த செயற்பாடு குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் டேவிட் மிலிபன் தெரிவித்துள்ளார்.

புலிகளின் பகுதியை இலகுவில் கைப்பற்ற முடியும்


புலிகளிடம் இருந்து விடுவிக்கப்படாத பகுதியினை சில வினாடிகளில் படையினரால் கைப்பற்ற முடியும் என மின் சக்தி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். புலிகளின் பிடியில் இருக்கும் பொதுமக்கள் பாதிப்படைய கூடாது எனும் நோக்கிலேயே படையினர் இவ்வாறான செயற்பாட்டினை தவிர்த்து வருகின்றனர். உலகின் மிக கொடூரமான பயங்கரவாத அமைப்பான புலிகள் தற்பொழுது சிறிய நிலப்பரப்பிற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (18.04.2009) இடம் பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

படையினரின் தேடுதலில் புலிகளின் ஆயுதங்கள் மீட்பு

புலிகள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியதையும், ஆயுதங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததையும் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல்களில் புலனாவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இங்கு கெட்டுப்போகாத வண்ணம் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்களில் இருந்து இது புலனாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்களை படையினர் கைப்பற்றி வருகின்றனர். இதனால் புலிகளின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். சர்வதேச யுத்த வரையறையில் சட்டவிரோத ஆயுதங்களாக கருதப்படும் பல ஆயுதங்களும் இங்கு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


தப்பித்து வந்த மக்கள் படையினரிடம் தஞ்சம்

புலிகளின் பகுதியில் இருந்து தப்பித்து வந்த மேலும் ஒரு தொகுதி மக்கள் நேற்று (18.04.2009) புதுமாத்தளனில் உள்ள படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இதில் 2857 வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களை மீட்ட 58வது படைப்பிரிவினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து வந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில் தாம் தப்பித்து வரும் வழியில் புலிகள் தம்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். தம்முடன் மேலும் ஒரு குழுவினர் தப்பித்து வந்துள்ளனர். இவர்கள் எதிர்வரும் தினங்களில் படையினரிடம் வந்து சேரலாம் என தெரிவித்துள்ளனர்.

 

07.30 AM

 

வெள்ளவத்தை மக்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும்

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள மக்கள் இன்று (19.04.2009) தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கென பாமங்கட தம்மோதபிவனா விகாரைக்கு சென்று தமது பதிவுகளை இன்று காலை தொடக்கம் மாலைவரை மேற்கொள்ள முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதே போன்று ஏனைய இடங்களுக்கான பதிவுகள் மேற்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றில் பெண்ணொருவர் கடத்தப்பட்டுள்ளார்.

அக்கரைபற்று 8ம் குறிச்சி பஸ்தியன் வீதி பகுதியில் நேற்று முன்தினம் (17.04.2009) இரவு 9 மணியளவில் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனகரத்தினம் மகேஸ்வரி (வயது 18) என்ற இந்த பெண் தனது வீட்டில் இருந்தசமயம் அங்கு வந்த சிலர் கடத்தி சென்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த பெண்ணின் கணவர் கடந்த 13ம் திகதி காணாமல் போயுள்ளார். இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.


காயமடைந்த மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்கள் உட்பட 483 பேர் நேற்று அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வழித்துணையுடன் கிறின் ஓசோன் கப்பல் மூலம் புதுமாத்தளன் பகுதியில் இருந்து புல்மோட்டைக்கு 22 வது தடவையாக அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் புல்மோட்டை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதி சிகிச்சைக்காக பதவிய மற்றும் சம்பத்நுவர  வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 

06.45 AM

 

புலிகள் மீது அழுத்தங்களை கொடுக்குமாறு வலியுறுத்தல்.

பயங்கரவாத செயற்பாட்டின் காரணமாக கடந்த 30 வருடங்களாக புலிகளின் பிடியில் பணயக்கைதிகளாக இருக்கும் மக்களுக்கு ஒரு மணித்தியாலமாவது சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்க புலிகளை வலியுறுத்துமாறு உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புக்களிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (18.04.2009) மாலை இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை இராணுவத்தை போரை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கும் இந்த அமைப்புக்கள் புலிகள் மீது இவ்வாறான கோரிக்கைகளை ஏன் விடுப்பதில்லை என தெரிவித்துள்ளார். புலிகள் ஒருமணித்தியாலமாவது மக்களுக்கு சுதந்திரம் வழங்கினால் அவர்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வருவதை யாராலும் தடுக்க முடியாது.

தற்பொழுது நடைபெறுவது பயங்கரவாதத்தை அழிக்கும் நடவடிக்கையே தவிர தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல. அரசாங்கத்தின் இந்த யுத்தத்திற்கு போலியான கருத்துக்களை முன்வைத்து சில அரசியல் வாதிகள் தனக்கு எதிராகவும், பாதுகாப்பு செயலருக்கு எதிராகவும், இராணுவ தளபதிக்கு எதிராகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டை காட்டிக்கொடுக்காத எந்த ஒரு சவாலையும் தனது அரசாங்கம் எதிர்கொள்ள தயார் என அவர் மேலும் கூறினார்.

 

18-04-2009, 10.30 PM

 

ஈழவேந்தனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவடைந்தது

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் (வயது 76) மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நேற்றுடன் (17.04.2009) நிறைவுக்கு வந்துள்ளது. தென்னாபிரிக்காவில் உள்ள யுத்த நிறுத்தம் உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒன்பது நாட்கள் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். தென்னாபிரிக்க அரசியல்வாதிகள் சிலர் உறுதிமொழி வழங்கியதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டதாக தெரிவித்துள்ளார்.


கிழக்கு மாகாணசபையின் விவாதங்கள் ஒத்திவைப்பு

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படவுள்ள உள்ளுராட்சி சபைகள் தொடர்பான விசேட திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி இடம் பெறவுள்ளதாக சபையின் தவிசாளர் எச் எம் எம் பாயிஸ் இன்று (18.04.2009) தெரிவித்துள்ளார். இந்த விவாதமானது எதிர்வரும் 20ம் திகதி நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இது சம்மந்தமாக மாகாணசபை உறுப்பினர்கள் தமது கருத்தினை தெரிவிக்கும் பொருட்டு ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்த கால எல்லை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லிலித் வீரதுங்கவினால் கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜயவிக்கிரமவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 

06.00 PM

 

வவுனியாவில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

வவுனியா புதுநகர் புகுதியில் இளம் யுவதி ஒருவர் நேற்று (17.04.2009) இனந்தெரியாதோரால் கடத்தி செல்லப்பட்டுள்ளார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே 16 வயதான இந்த யுவதியை கடத்தி சென்றுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஒருதொகுதி மக்கள் அரச கட்டுப்பாட்டிற்கு வருகை

அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு ஒரு தொகுதி மக்கள் நேற்று (17.04.2009) தப்பித்து வந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இதில் 68 ஆண்கள், 71 பெண்கள், 59 சிறுவர்களும், 55 சிறுமிகளும் வந்ததாகவும் இவர்கள் மாங்குளம் பகுதியில் உள்ள படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இவர்கள் விசாரணையின் பின்னர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் உள்ள மக்களுக்கு விசேட அடையாள அட்டை

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு விசேட அடையாள வழங்கப்படவுள்ளதாக அனர்த்த நிவாரண மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் இந்த அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார். இடம் பெயர்ந்தவர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். அடுத்த மாதம் இந்த அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

முன்னேறும் படையினர் மீது தாக்குதல்

புதுக்குடியிருப்பு வெள்ளைநில வாய்கால் பகுதியில் நேற்று (17.04.2009) படையினர் முன்னேற்ற முயற்சி ஒன்றை மேற்கொண்டனர். இதில் 8 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 9பேர் காயமடைந்துள்ளனர். படையினருடன் நேரடி மோதலை தவிர்த்துள்ள புலிகள் படையினர் மீது பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்துவதுடன், முன்னரங்க நிலைகளில் இருந்து பொதுமக்கள் இருக்கும் பகுதிகளுக்குள் தப்பி செல்வதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

 

03.00 PM

 

இலங்கையில் யுத்தநிறுத்தம் அமுல்படுத்த வேண்டும்

இலங்கையில் உடனடியாக யுத்தநிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் என அரசாங்கத்தையும், புலிகளையும் சர்வதேச மன்னிப்புச்சபை கோரியுள்ளது. பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் மக்கள் சுதந்திரமாக வெளியேறுவதற்காக மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளது. அரச கட்டுப்பாடற்ற பகுதியில் மக்கள் பெருமளவில் பாதிப்படைவதாகவும் மன்னிப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

08.30 AM

 

புலிகளின் தலைவர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என அமைச்சர் முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தள்ளார். பிரபாகரன் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டள்ளார். மேலும் புலிகளின் தலைவர் இந்தியா செல்ல முடியாது, இந்தொனேசியா சென்றாலும் பாதுகாபப்பாக மறைந்திருக்க முடியாது, நோர்வேயில் தஞ்சம் கோருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. நேர்வே அவரை பாதுகாக்கும் என தெரிவித்துள்ளார்.

 

 08.05 AM

 

வைத்தியர் குழு ஒன்று முகாம்களுக்கு செல்லவுள்ளது

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் சுகாதரா நிலைமை குறித்து அறிவதற்கு இன்று (18.04.2009) வைத்தியர் குழு ஒன்று வவுனியா, மன்னார் ஆகிய இடங்களுக்கு செல்கிறது. முகாம்களில் உள்ள மக்களின் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இவர்கள் அங்கு செல்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அஜித் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

 

17-04-2009, 11.05 PM

 

பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்

புதுமாத்தளன் பகுதியில் இருந்து காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்கள் இன்று (17.04.2009) அழைத்து வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. செஞ்சிலுவை சங்கத்தின் வழித்துணையுடன் கிறின் ஓசோன் கப்பல் மூலம் 517 பேர் வந்திருப்பதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இதில் காயமடைந்தவாக்கள் புல்மோட்டை தள வைத்தியசாலையிலும் அவர்களின் உறவினர்கள் வவுனியா முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வலயத்தில் இருந்து மக்களை அழைத்து வருவது இன்றுடன் 21வது தடவையாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் புலி உறுப்பினருக்கு தீர்ப்பு

பித்தானியாவில் கைது செய்யப்பட்ட அருணாச்சலம் கிருசாந்தகுமார் (வயது 52) என்பவர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபனமாகியுள்ளது. கடந்த 2000மாம் ஆண்டு ஸ்கொட்யாடின் பொலிஸாரால் சாந்தன் என்று அழைக்கப்படும் புலிகளின் பிரித்தானிய பொறுப்பாளரான அருணாச்சலம் கிருசாந்தகுமார் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் பிரித்தானியாவில் தடை செய்யபப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு உதவியதாக 3 குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டார். தற்பொழுது இரண்டு குற்றங்கள் குறித்து விசாரணை செய்த கிங்ஸ்ரன் கிரவுண்ட்; நீதிமன்றம் இவரை பயங்கரவாதி என தீர்ப்பளித்துள்ளது. இவர் தொடர்பான 3வது குற்றச்சாட்டு குறித்த தீர்ப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்.

 

10.45 PM


பிரான்சில் புலிகளின் முக்கியஸ்தர் கைது

புலிகளின் முக்கிய உறுப்பினரான குமரன் என்பவர் இன்று (17.04.2009) பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலி நாட்டின் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளுக்காக இத்தாலி பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேடுதலின் போது படையினரால் பெருமளவு ஆயுதம் மீட்பு

புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதியில் படையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனடிப்படையில் முல்லைதீவு கல்மடுக்குளம், அம்பகாமம், முத்தயன்கட்டுகுளம், ஆகிய பகுதியில் நேற்று (16.04.2009) இவ்வாறு தேடுதல் நடத்தப்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் 115 கண்ணி வெடிகள், 243 கைக்குண்டுகள், 60 மில்லிமீற்றர் ரக குண்டுகள் 36, 80 மில்லிமீற்றர் ரக மோட்டார்கள் 08, அருள் ரக குண்டுகள் 3, துப்பாக்கி ரவை 440, ரெட்டனேட்டர் 05, 12 கிளைமோர் குண்டுகள், என்பன படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

10.10 PM

இதுவரை புலிகளின் பிடியிலிருந்து 68273 மக்கள் வருகை

வன்னியில் புலிகளின் பகுதிகளில் இருந்து இதுவரை 68273 பொதுமக்கள் வந்துள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (17.04.2009) இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் காலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இதில் 57938 பேர் வவுனியாவில் உள்ள 2 நிவாரண கிராமங்களிலும், 13 நலன்புரி நிலையங்களிலும், தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த மக்களின் தேவைகளுக்கென 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உணவு தேவைகளை செய்து கொடுக்க ஒரு குழுவும், சுகாதாரம், கல்வி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஒரு குழுவும், பொதுமக்களின் இருப்பிட வசதிகளை செய்து கொடுக்க மூன்றாவது குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

06.20 PM

 

உள்ளுராட்சி சபை குறித்த விவாதம் இடம் பெறுகிறது

கிழக்கு மாகாணசபையின் உள்ளுராட்சி சபையின் விசேட திருத்த சட்டத்தை நிறைவேற்றும் விவாதம் இன்று (17.04.2009) கிழக்கு மாகாணசபையில் இடம் பெறுகின்றது. இந்த சட்டமூலம் குறித்து விவாதங்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வன்னியில் இருந்து வந்த மக்களுக்கு வைத்திய பரிசோதனை
 

வன்னியில் இருந்து வந்து வவுனியா வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் சுகாதாரம் குறித்து அறியவென வைத்தியர் குழு ஒன்று அங்கு செல்லவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அஜித் மென்டிஸ் தெரிவித்தள்ளார். இந்த வைத்திய குழுவினர் நாளை (18.04.2009) வவுனியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்று நேற்று சுகாதார அமைச்சுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தனை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலயத்தில் இருந்து மக்கள் படகில் வருகை

பாதுகாப்பு வலயத்தில் இருந்து கடல் மார்க்கமாக தப்பித்து வந்த மக்கள் இன்று (17.04.2009) கடற்படையினரால் புல்மோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். பின் அங்கிருந்து வவுனியா முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்வருகிறது. இவர்கள் புதுமாத்தளன் பகுதியில் இருந்து 5 படகுகளில் புடவைகட்டு பகுதிக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

 

 05.50 PM

 

ஜ. ஐ மு. வேட்பாளர் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு மாற்றம்

எதிர்வரும் 25ம் திகதி இடம் பெறவுள்ள மேல்மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக ஐக்கிய முன்னணி உறுப்பினர் ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளரான ஆதிதாநிலா என்ற இவர் இன்று (17.04.2009) ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணியின் வேட்பாளர் ஆர். துமிந்த சில்வாவுடன் இணைந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காகவே தோர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப் போவதாக ஆதிதாநிலா தெரிவித்துள்ளார்.

இலங்கை தூதரக தாக்குதலுக்கு நோர்வே அரசு நஸ்டஈடு

நேர்வேயில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு நோர்வே அரசாங்கம் நஸ்டஈடு வழங்க முன்வந்துள்ளது. இந்த தூதரகம் அண்மையில் புலிகளின் ஆதரவாளர்களினால் தாக்கப்பட்டது. இதன் போது ஏற்பட்ட சேதங்களுக்கே நோர்வே அரசு நஸ்டஈடு வழங்க முன் வந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் நேர்வே பொலிஸார் முன்னிரிமை வழங்கியுள்ளனர். இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள நேர்வே அரசு இது போன்ற ஒரு செயல் இனிவரும் காலங்களில் இடம் பெறமாட்டது எனவும் தெரிவித்துள்ளதாக இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

04.55 PM

 

கப்பல் மூலம் மக்கள் அழைத்து வரப்படுகின்றனர்

பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்கள் இன்று (17.04.2009) புல்மோட்டைக்கு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் செஞ்சிலுவை சங்கத்தின் வழித்துணையுடன் கிறின் ஓசோன் கப்பல் மூலம் கொண்டுவரப்படுகின்றனர்.

இந்த கப்பலில் குறைந்தது 500 பேர் வரை வரலாம் எனவும் இதற்கான ஒழுங்குகள் புல்மோட்டை தள வைத்தயசாலையில் நடைபெற்று வருவதாகவும் கிழக்கு மகாகாண அனர்த்த நிவாரண அதிகாரி வைத்திய கலாநிதி குணாளன் தெரிவித்துள்ளார்.

ஐநா சபையின் விஜய் நம்பியார் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் சிரெஸ்ட தலைமை அதிகாரி விஜய் நம்பியார் இன்று (17.04.2009) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. நம்பியாரும் அவருடன் வந்த குழுவினரும் நேற்று பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். நம்பியார் குழுவினர் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது. மோதலில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

09.15 AM

 

நாட்டிற்கான படையினரின் அர்ப்பணிப்பு அழப்பரியது

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி தெரிவிப்பு

 

இலங்கை மக்கள் அனைவரும் இன மத பேதங்களை மறந்து சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கான சுதந்திரமான தேசம் ஒன்றை உருவாக்குவதற்கு படையினரின் தியாகங்கள் மிக முக்கியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இவர்கள் நாட்டிற்காக தமது உயிர்களை அர்ப்பணித்துள்ளனர். இவர்களுக்கு தேசத்தின் கௌரவம் கிடைத்துள்ளது. இலங்கை படையினர் எந்த ஒரு நாட்டு படையினருக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

நேற்று (16.04.2009) கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி படையினருக்கு மத்தியில் உரையாற்றும் போது. புலி பயங்கரவாதத்தை படையினர் தோற்கடித்த விதத்தையும் 2005ம் ஆண்டு தான் பதவியேற்கும் போது எதிர்நோக்கிய சவால்கள் குறித்தும் விளக்கியுள்ளார். இதில் பயங்கர வாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுப்பது முக்கியமான சாவாலாக இருந்தது. முன்னைய காலங்களிலும் முப்படையினரும் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதும் படையினர் முறையாக வழிநடத்தப்படாமையின் காரணமாக அது தோல்வியை கண்டுள்ளது. 2006ம் ஆண்டு படையினருக்குமுறையான தலைமைத்துவத்தை வழங்கியதோடு படையினர் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான பிண்ணியை உருவாக்கி கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

08.30 AM

 

புலிகளின் கொள்கை பரப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் நேற்று முன்தினம் (15.04.20909) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் புலிகளின் சுவிஸ் நாட்டிற்கான கொள்கை பரப்பு பொறுப்பாளருமாவார். இவர் புலிகளின் தலைமைத்துவத்தை காப்பாற்றும் நோக்கில் பல கோரிக்கைகளை முன்வைத்து சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தின் அருகில் உள்ள சதுக்கத்தில் உண்ணாவிதரம் இருந்துள்ளார். இந்த இடத்திற்கு நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் சென்ற சுவிஸ் பொலிஸார் அந்த இடத்தை விட்டு விலகுமாறும் உண்ணாவிரதம் இருக்க முடியாதும் எனவும் தெரிவித்துள்ளனர். பின்பு அங்கிருந்து சென்ற இவர்கள் சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் அரசியல் செயலக பிரதான வாசலில் தனி ஒருவராக அமர்து உணாவிரதம் இருந்தார். மாலை 5 மணியளவில் சென்ற பொலிஸார் அங்கும் உண்ணாவிரதம் இருக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பொலிஸாருடன் வாதத்தில் ஈடுபட்ட கிருஸ்ணாவும் சில புலி ஆதரவாளர்களும் பின் அங்கிருந்து விலகி சென்றுள்ளனர். பின்னர் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பேர்ண் முருகன் கோவிலில் உண்ணாவிரதம் இருந்துள்ளார். அன்று இரவு 8 மணியளவில் சென்ற சுவிஸ் பொலிஸார் இவரை பலவந்தமாக இழுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

16-04-2009, 10.55 PM

 

மேல் மாகாணசபை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது

எதரிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ள மேல்மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் 23ம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

அத்துடன் குறித்த தேர்தல் வாக்காளர் அட்டைகள் வினியோகிக்கும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது என பிரதி தபால் மா அதிபர் ஆர் சி டி காமினி தெரிவித்துள்ளார். இதில் 50 வீதம் நிறைவடைந்துள்ளது. வாகாளர் அட்டைகளை உத்தியோகபூர்வமாக வினியோகிக்கும் நடவடிக்கை நாளையுடன் நிறைவடையவுள்ளது. வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் தத்தமது அஞ்சல் அலுவலகம், மற்றும் உபஅஞ்சல் அலுவலகம் என்பவற்றில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என அவர் மேலும் கூறினார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர் நாடு திரும்பினர்

இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் நேற்று (15.04.2009) இலங்கை வந்து சேர்ந்துள்ளதாக கடல் தொழில் திணைக்களம் அறிவித்தள்ளது. இவர்களின் 8 இயந்திர படகுகளும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக திருகோணமலை, தங்காலை, மற்றும் தெய்வேந்திரமுனை ஆகிய பகுதிகளை சேர்ந்த 45 மீனவர்கள் இவவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் 31 மீனவர்கள் இவ்வாறானதொரு குற்றத்தின் பேரில் இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
 

10.15 PM

 

இரசாயன ஆயுதங்களை படையினர் உபயோகிக்கவில்லை

இலங்கை படையினர் மோதல் இடம்பெறும் பிரதேசத்தில் இரசாயன ஆயுதங்கள் பாவித்ததாக கூறப்படுவதில் எதுவித உண்மைகளும் இல்லை எனவும் அதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்தானிகர் ஜோன் கோம்ஸ் தெரிவித்துள்ளார். ஐ நா சபையின் தலைமையகத்தில் நேற்று (15.04.2009) இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமானது மேலும் தொடருமானால் பாதுகாப்பு வலய பகுதியில் புலிகளின் பிடியில் இருக்கும் மக்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர்களை சுதந்திரமாக வெளியேறுவதற்கு புலிகள் இடமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அரச கட்டுப்பாட்டில் உள்ள ஓமந்தை சோதனை சாவடிக்கு அருகில் ஐ நா மனித உரிமைக்கான அலுவலகர்கள் மக்களின் நலன் குறித்து கண்காணிப்பதற்கு அனுமதி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

06.30 PM

 

புதுக்குடியிருப்பில் படையினர் புலிகள் மோதல்.

புதுக்குடியிருப்பு கிழக்கு பகுதியில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இன்று (16.04.2009) மோதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதனை அடுத்து குறித்த பகுதியில் இருந்த புலிகளின் மண் அரணை படையினரின் 53 படைப்பிரிவு கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் 19 புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்தமையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

புலிகளின் நடவடிக்கை குறித்து பிரன்ஸ் பிரிட்டன் அதிருப்தி

புலிகளின் நடவடிக்கை குறித்து பிரிட்டன், மற்றும் பிராஸ் ஆகிய நாடுகள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. புலிகள் மனித கேடயங்களாக வைத்திருக்கும் மக்களை விடுதலை செய்வதுடன் பயங்கரவாத செயற்பாடுகளையும் கைவிடவேண்டும் என தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தற்காலிக மோதல் தவிர்பினை பிரிட்டன் வெளியுறவு செயலர் டேவிட் மினிபாண்டும், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேணாட் கௌச்னரும் பாராட்டியுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் புலிகளின் பிடியிலிருந்து வெளியேறும் பொதுமக்களை அவர்கள் பலவந்தமாக தடுத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

 

 05.50 PM

 

முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு விசேட திட்டம் அமுல்

வவுனியா முகாம்களில் உள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விசேட திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒரே இடத்தில் தங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக வவுனியா மாவட்ட வலய கல்விப் பணிப்பாளர் ரஞ்சினி ஒஸ்வெல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை ஒன்று வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக கணித, மற்றும் விஞ்ஞான பிரிவை சேர்ந்து மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் அவர்களுக்கான ஆசிரியர்களையும் அவர்களது குடும்பங்களையும் வவுனியா கதிர்காமர் முகாமில் தங்கவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

உலக த. இ புலிகளுக்கு நிதி சேகரித்தமை தெரியவந்துள்ளது

கனடாவின் உலகதமிழர் இயக்கம் புலிகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது குறித்து கனேடிய அரசு ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட்டுள்ளது. உலக தமிழர் இயக்கம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் கனேடிய பாதுகாப்பு திணைக்களம் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நேரடியாக பணம்வழங்கிய உலக தமிழர் இயக்கத்தின் பணிப்பாளர் கைச்சாத்திட்ட ஆவணங்களையும் கண்டுபிடித்துள்ளது. அத்துடன் இது சம்மந்தமான விடியோ நாடாக்களும் அவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த அமைப்பு விமான எதிர்ப்பு ஏவுகணை மற்றும் எறிகணைகளை கொள்வனவு செய்யவென புலிகளுக்கு 70 லட்சம் டொலர் நிதியை வழங்கியுள்ளது. அத்துடன் இலகுரக விமானங்கள், ஹெலிகொப்டர்கள், அதிவேக படகுகள் என்பன கொள்வனவிற்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச வலைப்பின்னல் ஊடாக சர்வதேச நாடுகளில் உள்ள கணக்குகளின் மூலம் புலிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. வன்னியின் பொளாதார சமூக பணிகளுக்கென செடட் என்ற நிறுவனத்திற்கு 5 இலட்சம் டொலர்களை இந்த இயக்கம் வழங்கியுள்ளது.

கனடாவின் ஒட்டாவா நீதிமன்றத்தில் இது சம்மந்தமான ஆவணங்களும், விடியோ ஒளி நாடாக்களும் சென்ற வாரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அடுத்த சில நாட்களில் உலக தமிழர் இயக்கத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விரிவான அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கனேடிய அரசின் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலக தமிழர் இயக்கத்தின் தலைவரான மரியதாஸ் இமானுவல் தான் புலிகளின் தலைவர் பிரபாகரனை வன்னியில் சென்று சந்தித்துள்ளதாக விசாரணையின் பொது பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். உலக தமிழர் இயக்கத்தின் ரொறன்ரோவில் உள்ள அலுவலகத்தை கண்காணிப்பதற்கென புலிகளின் தலைவரினால் தான் நியமிக்கப்பட்டதாக அவர் கூறினார். தான் அந்த அமைப்பிற்கு உதவியபோதும் அந்த அமைப்பின் உறுப்பினர் அல்ல என தெரிவித்துள்ளார். இந்த விசாரணையின் போது தான் நிதி சேகரிப்பில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.

 

 01.30 PM

 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளிநொச்சிக்கு விஜயம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (16.04.2009) காலை கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என தேசிய பாதுகாப்பு ஊடக மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. அங்கு சென்ற அவர் சிரெஸ்ட இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். அத்துடன் அங்குள்ள படையினரை சந்தித்து அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். 30 வருடங்களின் பின் இலங்கை ஜானாதிபதி ஒருவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

01.15 PM

விசுவமடுவில் படையினரால் ஆயுதங்கள் மீட்பு

 

முல்லைத்தீவு வடக்கு விசுவமடு பகுதியில் நேற்று (15.04.2009) படையினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர் என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் போது 130 மில்லிமீட்டர் ஆட்லரி – 01, ஐகோம் வகையை சேர்ந்த தொடர்பாடல் உபகரணம் - 02, பாரிய ஆயுத குழல் - 01, கைக்குண்டு 27, புலிகளின் தயாரிப்பு குண்டு – 08, ரொக்கட் வகையை சேர்ந்த குண்டு – 07, என்பன மீட்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் புலிகளினால் பாதுகாப்பான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

08.45 AM

 

யாழ் மீனவர்கள் வெளி. இ இயந்திரம் பொருத்த அனுமதி

யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் தமது படகுகளில் வெளிஇணைப்பு இயந்திரக்களை பொருத்தி தொழிலில் ஈடுபட பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. ஞாயிறு, வியாழன் தவிhந்த ஏனைய நாட்களில் அவர்கள் இவ்வாறு செயற்பட முடியும். அத்துடன் படையினரால் அனுமதிக்கப்பட்ட பகுதியில் முன்பு 6 மணியில் இருந்தே மீன்பிடியில் ஈடுபட அனுமதி கிடைத்திருந்தது இந்த நிலை மாற்றமப்பட்டு அதிகாலை 4 மணிதொடக்கம் மீன் பிடியில் ஈடுபடலாம்.

 

08.15 AM

 

ஏ9 பாதை மே மாதமளவில் திற்க்கப்படும்

யாழ்ப்பாணத்திற்கான ஏ9 பாதையை எதிர்வரும் மே மாதம் பொதுமக்களின் போக்குவரத்திற்கு அனுமதிக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த வீதி பல ஆண்டுகள் பயங்கரவாத செயற்பாடுகளினால் மூடப்பட்டிருந்தது. 230 கிலோ மீட்டர் நீளமான இந்த வீதியில் போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் பெயர்கள் என்பவற்றை அமைக்கும் பணி தற்பொழுது துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ரி பி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். வீதியின் இருமருங்கிலும் இருக்கும் கண்ணிவெடிகள் மிதிவெடிகள் தற்பொழுது அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணி முடிவடைந்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்ததும் இந்த வீதி பொதுமக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறினார்.

 

15-04-2009, 10.55 PM

 

கனடா புலிகள் மீதான தடையை நீக்காது

கனேடிய அரசாங்கம் புலிகள் மீதான தடையை நீக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது. புலிகள் மீதான தடையை நீக்ககோரி அவர்களுக்கு ஆதரவான சில தமிழ் குழுக்கள் கனேடிய பாராளுமன்றத்தின் முன் உண்ணாவிரத போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர் என கனேடிய குடிவரவு குடியகல்வு அமைச்சர் ஜேசன்கனி தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கம் நலிவடைந்து செல்கிறது அதற்கு புத்தியிர் ஊட்டும் வகையில் அவர்களது ஆதரவாளர்கள் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதையே கனேடிய அரசு விரும்புகிறது. இதற்காக அவர்கள் மீதான தடை ஒருபோதும் நீக்கப்படமாட்டாது என அவர் மேலும் வலியுறுத்தி கூறினார்.

முல்லைத்தீவில் மோதல்கள் மீண்டும் ஆரம்பம்

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 48 மணிநேர மோதல் தவிர்ப்பு முடிவடைந்ததை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டள்ளன. இந்த காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து பயங்கரவாதத்தை அழிக்கும் நடவடிக்கையை படையினர் மேற்கொண்டு வருவதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

10.30 PM

 

புலிகளின் மனிதாபிமானமற்ற நிலை குறித்து த இந்து செய்தி
 


புலிகள் அழிவுப்பாதையை நோக்கி சென்றுகொண்டிருந்தாலும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி தமிழ் மக்களை மனித கேடயங்களாக வைத்திருப்பது குறித்து எதுவித சிந்தனையும் அவர்களுக்கு இல்லை என இந்தியாவில் வெளியாகும் த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மனித நேயத்தை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்பு வலயம் என்பதை கூட புலிகள் ஏற்க மறுக்கின்றனர். புலிகள் எந்த மக்களின் ஏகபிரதிநிதிகள் என கூறிக்கொள்கிறார்களோ அந்த மக்களின் உயிர்களும், நலன்களும் இந்த போலி விடுதலை போராட்டத்தில் எடுத்து கொள்ளப்படமாட்டாது என்பது தெளிவாக தெரிகிறது என அந்த பதிரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசு அறிவித்த தற்காலிக மோதல் தவிர்ப்பு குறித்து பாராட்டுக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் இதுவரையில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது தமிழ் மக்கள் தம்மோடு சுயவிருப்பத்தின் பேரிலேயே இருக்கிறார்கள் என புலிகள் கூறும் பொய் பிரச்சாரத்தை புலப்படுத்துவதாக பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். புலிகளின் பிடியிலிருக்கும் மக்களை எதுவித தடையுமின்றி வெளியேறுவதற்கு அழுத்தங்களை பிரயோகிப்பதை தவிர அங்கு நிலவும் மனிதாபிமானமற்ற செயலை தீர்கும் ஒரே வழியாகும் என குறித்த பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
 

05.00 PM

 

சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட முற்பட்டுள்ளனர்.

களுத்துறை சிறையில் இருந்து இன்று (15.04.2009) அதிகாலை 10 சிறை கைதிகள் தப்பி ஓட முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது சிறைச்சாலையின் பாதுகாப்பு ஊத்தியோகஸ்தர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் மரணமானதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸாரும் சிறைச்சாலை திணைக்களமும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

புலிகளின் சமாதன கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது.

புலிகளினால் வெளியிடப்பட்ட சமாதன கோரிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தற்பொழுது புலிகள் மீளமுடியாதவாறு பலவீனமடைந்துள்ளார். இது போன்ற சந்தர்ப்பங்களில் புலிகள் தம்மை பலப்படுத்தும் நோக்கில் இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிடுவது வழமையான விடயம். இதன் அடிப்படையில் நிரந்தரமான ஓர் போர் நிறுத்தத்தை அறிவிக்க முடியாது. அரசாங்கத்தை சர்வதேச அழுத்தங்களுக்குள் உள்ளாக்கும் நோக்குடனே புலிகள் இவ்வாறானதொரு செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த அரசாங்கம் செய்ய வேண்டிய முக்கிய கடமை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை விடுவிப்பதே ஆகும் என அவர் மேலும் கூறினார்

 

03.15 PM

 

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு நாளை

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை (16.04.2009) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதல் கட்டமாக 17 மாநிலங்களில் 124 தொகுதிகளுக்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்தியாவின் 543 தொகுதிகளுக்குமான வாக்கெடுப்புக்கள் 5 கட்டமாக நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் முலலாவது கட்டமாக நாளை 16ம் திகதியும், இரண்டாவது கட்டம் 23ம் திகதியும், மூன்றாவது கட்டம் 30ம் திகதியும், நான்காவது கட்டம் மே மாதம் 7ம் திகதியும், ஐந்தாவது கட்டமாக மே மாதம் 13ம் திகதியும் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு ஒழுங்குகள் அனைத்தும் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. தேர்தலின் பிரச்சார நடவடிக்கை நேற்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது.

 

03.15 PM

 

பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பித்து மக்கள்வருகை.

பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து நேற்று (14.04.2009) மேலும் ஒரு தொகுதி மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காட்டு வழியாக 98 குடும்பங்களை சேர்ந்த 67 ஆண்கள், 77 பெண்கள், 100 சிறுவர்கள் உட்பட 244 பேர் வந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 09.30 AM

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இந்தியா பயணம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று (15.04.2009) 2 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்கள் இந்திய வெறியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனின் அழைப்பின் பேரில் அங்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், ஆகியோர் செல்வதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தற்காலிகமோதல் தவிர்ப்பு நிறைவு

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட தற்காலிக மோதல் தவிர்ப்பு நேற்று (14.05.2009) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் படையினர் தாக்குதல்களை தவிர்த்த போதும் புலிகள் படையினர் மீது பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்காலிக மோதல் தவிர்ப்பு தொடர்வது புலிகளின் கையில்.

புலிகள் தமது பயங்கரவாத செயற்பாடுகளை மாற்றிக் கொண்டால் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட தற்காலிக மோல் தவிர்ப்பானது தொடரும் வாய்ப்பு உள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். யுத்தநிறுத்தம் தொடர்து மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். மோதல் தவிர்ப்பு அறிவிப்பானது இந்திய வெளிவிவகார கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும் என அவர் மேலும் கூறினார்.

 

08.00 AM

 

கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் நிறைவடையவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளதாக அனர்த்த நிவாரண மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இங்கு இடம் பெயர்ந்த மக்களில் 95 வீதமானவர்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் அடுத்த மாத இறுதிக்குள்; மீள் குடியமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கிழக்கு மாகணத்தின் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவடையும் என குறித்த அமைச்சின் செயலர் யு. எல். எம். கால்தீன் தெரிவித்துள்ளார். இதுவரையில் மட்டக்களப்பில் 34 ஆயிரத்தி 564 குடும்பங்களும், திருகோணமலையில், 22 ஆயிரத்தி 110 குடும்பங்களும் இதுவரை மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் கூறினார்.

 

14-04-2009, 09.30 PM

 

புலிகளின் விமான எதிர்பு ஏவுகணை மீட்பு

 

நந்திக்கடல்களப்பிற்கு வடக்காக 53வது படைப்பிரிவினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன் போது புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணை 4 படையினரால் மீட்கபப்பட்டுள்ளது.

 

08.30 PM

 

மக்கள் கப்பல்மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

புதுமாத்தளன் பகுதியில் இருந்து மேலும் ஒரு தொகுதி மக்களை இன்று (14.04.2009) கிறீன் ஓசோன் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இதில் காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்கள் உட்பட 414 பேர் அடங்குங்குகின்றனர். இவர்கள் புல்மோட்டை தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மோதல் தவிர்ப்பு காலத்தில் படையினர் மீது புலிகள் தாக்குதல்

மோதல் தவிர்பொன்றை அரசாங்கம் அறிவித்த காலப்பகுதியில் புலிகள் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக தேசியபாதுகாப்பு ஊடக மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு கிழக்கிலும், அம்பலவாணன் பொக்கணையிலும் நேற்று (13.04.2009) இயந்திர துப்பாக்கி, மற்றும் செல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படையினர் இதன் போது பதில் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை. இதில் 58வது படைப்பிரிவை சேர்ந்த ஒருவர் சினைப்பர் தாக்குதலில் மரணமடைந்ததுடன் 53வது படையணியை சேர்ந்த இருவர் செல் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
 

07.55 PM

 

இராணுவத்தளபதி படையினருக்கு நன்றி

இராணுவ தளபதி சரத் பொன்சேக இன்று (14.04.2009) படையினருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார். சமாதானத்தை எதிர்பார்திருந்த மக்கள் தமிழ், சிங்கள புத்தாண்டை சிறந்த முறையில் கொணட்டாடுவதற்கு வழியமைத்து கொடுத்த அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி இந்த நன்றியை தெரிவித்தார். கடந்த 30 வருடங்களாக நிலவிவந்த பயங்கரவாத வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவந்தமைக்காக நாட்டுமக்களின் பாராட்டும் அவர்களுக்கு உரித்தாகும்.

மாவிலாற்றில் 2006ம் ஆண்டு ஆரம்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் அனைவரது ஆதரவினாலும் முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளது. 13 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவான நிலப்பகுதியை ஆக்கிரமித்திருந்த பயங்கரவாதம் தற்பொழுது 23 சதுர கிலோமீற்றர் பரப்பிற்குள் முடக்கப்பட்டுள்ளனர். புலிகளின் தனிஈழம் என்ற கனவு சீர்குலைந்துள்ளது என இராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புத்தல தாக்குதலை பிரித்தானிய அரசு கண்டித்துள்ளது

புத்தல பகுதியில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை பிரித்தானிய அரசு வன்மையாக கண்டித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட பிரித்தானிய வெளிவிவகார செயலர் டேவிட் மிலிபான்ட் இது போன்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை தமது அரசு ஒருபோதும் அனுமதிக்காது என தெரிவித்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவுடன் தெலைபேசி மூலம் உரையாடும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது அரசாங்கத்தின் தற்காலிக மோதல் தவிர்ப்பையும் பாராட்டியுள்ளார்.

யுத்தம் தெடருமானால் பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டி நேரிடும். எனவே அரசாங்கம் அறிவித்துள்ள தங்காலி மோதல் தவிர்ப்பு காலப்பகுதியை சரியான முறையில் பயன்படுத்தி புலிகள் சரணடைவதுடன், அங்கு பணயக்கைதிகளாக வைத்திருக்கும் மக்களை புலிகள் விடுவிக்க வேண்டும் எனவும் பிரித்தானிய வெளிவிவகார செயலரிடம் அமைச்சர் ரோகித போகொல்லாகம வலியுறுத்தி கூறியுள்ளார். அத்துடன் நோர்வேயில் உள்ள இலங்கை தூதரகம் புலிகளின் ஆதரவாளர்களால் தாக்கப்படமை குறித்தும் அவருடன் பேசியுள்ளார்.
 

07.55 AM

 

தமிழ் சிங்கள புத்தாண்டு மலர்ந்துள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டு இன்று (14.04.2009) கொண்டாடப்படுகிறது. இத் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டுமக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் சமாதானம், கொளரவம், சௌபாக்கியம் என்பவற்றுடன் மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு நாட்டில் உள்ள அனைத்து மக்களிடையேயும் அன்பையும், சகோதரத்துவத்தையும் வ
ர்க்கும் ஓர் நன்நாளாகும் என தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் எதிர்பாத்திருந்த சமாதானம் மலரும் தருணத்தில் இந்த புத்தாண்டு பிறந்துள்ளது. கிழக்குமாகாண மக்கள் சுதந்திரமாக புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இதே போன்று வடக்கு மக்களும் ஓர் சுபீட்சத்தை காண்பார்கள். வ
மான சமூகம் ஒன்று தோன்றுவதற்கு இந்த புத்தாண்டு வழியமைத்துள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மக்கள் பேணும் சகோதரத்துவம் நாட்டின் சமாதானத்திற்கு வழியமைக்கும். நாட்டிற்காக அர்பணிப்புடன் செயற்படும் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட்டு சமாதானத்தை ஏற்படுத்தும் தமிழ் சிங்கள புத்தாண்டை மக்கள் மிகவும் சிறந்த முறையில் கொண்டாடி வருகின்றனர். பயங்கரவாதம் நாட்டில் இல்லாமல் போவதே அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பாகும்;. பயங்கரவாதத்தின் பிடியிலிருந்த மக்கள் தற்பொழுது சுதந்தரமாக வாழ்வதற்கான நேரம் வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

 

அரசகட்டுப்பாட்டிற்கு வருவோருக்கு அடிப்படை வசதிகள்

பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பித்து அரச கட்டுப்பாட்டிற்குள் வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அரச கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளனர். ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் யு. எல். எம். கால்தீன் தெரிவித்துள்ளார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக கூடாரங்களை வழங்குவதற்கு ஐ நா சபையின் அகதிகளுக்கான உயர்தானிகராலயமும், அரசசார்பற்ற நிறுவனங்களும் முன்வந்துள்ளன. மேலும் வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள பாடசாலைகளிலும் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தினங்களில் மக்களின் வருகை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

13-04-2009, 11.15 PM

 

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குசட்டம் நீக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் புதுவருட கொண்டாட்டத்தை முன்னிட்டு ஊரடங்கு சட்டம் இன்று (13.04.2009) முதல் நீக்கப்பட்டுள்ளதாக யாழ் படைத் தலமையகம் அறிவித்துள்ளது. இது நாளையும் தொடரும். இரவு நேரத்தில் புத்தாண்டு பிறப்பதனால் மக்கள் அதனை உரிய முறையில் கொண்டாடும் நோக்கில் பலரும் யாழ் படை தலைமையகத்தை ஊரடங்கு சட்டத்தை நீக்குமாறு கேட்டிருந்தனர். இதனை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை தூதரகம் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது

நோர்வேயில் உள்ள இலங்கை தூதரகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் இன்று (13.04.2009) நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வேயிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். இந்தற்கான அறிவிப்பை நேர்வே அரசாங்கம் விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தூதரகம் தாக்கப்பட்டமைக்கு நோர்வே அரசு இலங்கை அரசிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. அதிகாரமின்றி இலங்கை தூதரகத்திற்குள் நுழைந்தவர்களை வன்மையாக கண்டிப்பதோடு, தூதரகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோனஸ் கஸ்ரோப தெரிவித்துள்ளார்.

தூதரகம் தாக்கப்பட்டமையை இலங்கை அரசு வன்மையாக கண்டித்துள்ளது.

புதுக்குடியிருப்பில் படையினரும் புலிகளும் மோதல்

புதுக்குடியிருப்பு ஏ35 வீதியில் உள்ள படையினரின் பாதுகாப்பு அரண்கள் மீது நேற்று (12.04.2009) புலிகள்; தாக்குதல் நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை 53வது படைப்பிரிவினர் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் வானொலி தெடர்பை இடைமறித்து கேட்டபோது இதில் 36 புலிகள் கொல்லப்பட்டதுடன் 16 பேர் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது. படையினரின் இந்த தாக்குதலை அடுத்து நந்தி கடலுக்கு வடக்காக அமைந்துள்ள மணல் அணையை புலிகள் கைவிட்டு சென்றுள்ளதாகவும் அங்கு நடத்தப்பட்ட தேடுதலில் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது.

புலிகளின் தவறானசெயற்பாடுகள் காரணமாகவே இலங்கையின்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது போயுள்ளது.

புலிகளின் தவறான செயற்பாடுகள் காரணமாகவே இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது இருப்பதாக தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய அமைப்பின் தலைவர் பழ நெடுமாறன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக தலைவர் வை கோபால்சாமி ஆகியோர் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் இலங்கை பிரச்சினையை பாரியதொரு விடையமாக எடுத்து காட்டுவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இது தொடர்பில் கருணாநிதியையும், காங்கிரஸ் கட்சியினையும் சாடியுள்ளனர். இவர்களுக்கு இலங்கை தமிழ் மக்கள் மீது சிறு துளிகூட அக்கறை இல்லை என்பதை இலங்கை தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட எவரும் அறித்து கொள்வார்கள் என அவர் மேலும் கூறினார்.

பாதுகாப்பு வலயத்தில் இருந்து மக்கள் வருகை

பாதுகாப்பு வலயத்தில் இருந்து 174 பொதுமக்கள் நேற்று (12.04.2009) படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பலவாணன்பொக்கணை பகுதிக்கு வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் 64 சிறுவர்களும், 56 ஆண்களும், 54 பெண்களும் அடங்குவர். இவர்கள் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை பிரச்சினை குறித்து இந்தியா ஒரே கருத்து

தமிழ் நாட்டின் காரைக்குடி பகுதியில் நேற்று (12.04.2009) செய்தியாளர்களிம் பேசிய இந்திய மத்தய உள்த்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இலங்கையில் சமாதானம் ஒன்று ஏற்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்திய மத்திய அரசு இருப்பதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் அனைத்து இனங்களும் சம உரிமையுடன் வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. இலங்கை பிரச்சனை குறித்து பல அரசியல் கட்சிகளும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்திய மத்திய அரசை பொறுத்தவரையில் 1983 ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை ஆட்சியில் உள்ள அரசாங்கங்கள் ஒரே கொள்கையினை கொண்டிருப்பதாக கூறினார்.

 

 0935 PM

 

கோபால்சாமியும், இராஜேந்தரும் கைது செய்யப்படலாம்!

தமிழகத்தின் மறுமலர்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வை கோபால்சாமியும், இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான ரி. இராஜேந்தரும் கைது செய்யப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தமிழக பொலிஸ் அத்தியட்சகர் கே. இராதாகிருஸ்னன் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் இந்தியாவில் தடைசெய்யப்ட்ட இயக்கமான புலிகளுக்கு ஆதரவாக பொது கூட்டங்களில் பேசியதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் பேச்சுக்கள் அடங்கிய ஒலிநாடாக்கள் தற்பொழுது விசேட குழு ஒன்றின் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

 

06.35 PM

 

சுவிஸ் இந்திய தூதரகம் மீது புலிகள் அடாவடித்தனம்
 

நோர்வேயில் உள்ள இலங்கை தூதரகம் மீது தாக்குதல் நடாத்தியது போன்று இன்று (13.04.2009) சுவிஸ் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் புலிகள் சுவிற்சர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்ததை தொடர்ந்து புலிகள் தூதரகத்திற்கு உள்ளே செல்லும் முயற்சியை கைவிட்டு தப்பிச் ஓடியுள்ளனர். இது குறித்து தூதரகத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விரைந்து செயற்பட்டதை தொடர்ந்து புலிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சுவிஸ் பாராளுமன்றத்திற்கு முன்பாக கடந்த சில நாட்களாக இலங்கை மற்றும் இந்தியா எதிர்ப்பு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடாத்திவரும் புலிகள், புலிசார்பு அமைப்புக்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புலிகளின் அடாவடி நடவடிக்கைகளால் சுவிற்சர்லாந்தில் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதாகவும், பொதுபோக்குவரத்துக்கு இடைய+று விளைவிப்பதாகவும் ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களையும் வெறுக்கும் நிலைக்கு வித்திடப்படுவதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர். யுத்தத்தில் தமக்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம் கற்பிக்க முயலும் புலிகள் வன்னியில் இந்திய இராணுவம் வந்து நிற்பதாகவும் அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் கூறி தமிழக தமிழர்களையும், வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களையும் ஏமாற்றி வருகின்றனர். இதனால் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு நெருக்கடிகளை தவிர வேறெதையும் புலிகள் சாதிக்கப்போவதில்லை என புலிசார்பானவர்களே சலித்துக்கொள்கின்றனர்.
 

05.35 PM

 

புதுமாத்தளனிலிருந்து 440 பேர் புல்மோட்டை

வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டனர்

 

புதுமாத்தளன் வைத்தியசாலையில் இருந்து மேலும் ஒரு தொகுதி காயமடைந்தவர்களும் நோயாளர்களும் புல்மோட்டைக்கு கப்பல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். கிறீன் ஓசன் கப்பல் மூலமாக காயமடைந்தவர்கள், நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 440 பேர் இன்று (13.04.2009) புல்மோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

10.30 AM

 

அரசாங்கத்தின் அறிவிப்பை ஐ நா வரவேற்றுள்ளது.

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 48 மணிநேர தற்காலிக மோதல் தவிர்பை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூன் வரவேற்றுள்ளார். இது குறுகிய காலமாக இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும். இந்த காலகட்டத்தில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை சுதந்திரமாக வெளியேறுவதற்கு புலிகள் இடமளிக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

சீரற்ற காலநிலையால் யாழ் முகாம்கள் சில இடமாற்றம்

யாழ்ப்பாணத்தில் பெய்துவந்த மழைகாரணமாக இடம் பெயர்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் முகாம்களில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் கே. கணேஸ் தெரிவித்துள்ளார். மழை வெள்ளம் முகாமிற்குள் புகுந்தமையினால் கைதடி சிறுவர் இல்லம், தைடி சித்தமருத்துவ பீடம் ஆகியவற்றில் இயங்கிவந்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 700 குடும்பங்களை சேர்ந்த மக்கள் சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த சீரற்ற காலநிலை முடிவுக்கு வந்ததும் மக்கள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு புதுவருடத்தை முன்னிட்டு விசேட பொங்கல் நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தமது உறவினர்களை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இதற்கென விசேட கட்டடங்கள் முகாமிற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

சோனியா காந்திக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாகாந்தியின் தேர்தல் பிரசாரத்தின் போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளினால் சோனியாகாந்தி உட்பட இந்திய தலைவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய புலனாய்வுத்துறையினர் தெரிவித்ததை அடுத்து 1500 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

08.30 AM

 

மோதல்தவிர்ப்பிற்கான அறிவிப்பிற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் பாராட்டு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தற்காலிக மோதல் தவிர்ப்பிற்கான அறிவிப்பை பத்மநாபா ஈ பி ஆர் எல் எப் இன் செயலாளர் ரி. சிறிதரன் பாராட்டியுள்ளார். ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்சியில் நேற்று (12.04.2009) இரவு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அப்பாவி மக்களை புலிகள் யுத்த ஆயுதங்களை போன்று பயன்படுத்தி வருகின்றனர். புலிகள் தமிழ் மக்களில் அக்கறை கொண்டிருந்தால் அவர்களை உடனடியாக அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த மக்களை விடுவிக்க கோரி ஐநா சபை உட்பட சர்வதேச நாடுகள் புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து வரும் இந்த நேராத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், வெளிநாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்களும் மௌனம் சாதிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

புலிகள் செய்த தவறுகளின் பலன்களையே தற்பொழுது அனுபவித்து வருகின்றனர். தமிழ் மக்கள் தமது உரிமைகளை பெறுவதற்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை புலிகள் தட்டிக்கழித்துள்ளனர். இருப்பினும் 3 தசாப்த காலத்தின் பின்னர் வடக்கு மக்கள் ஜனநாயக காற்றை சுவாசிக்கும் சந்தர்பம் ஒன்று உருவாகி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
 

 08.05 AM

 

நோர்வேயில் உள்ள இலங்கைதூதரகம் மீது தாக்குதல்

நோர்வேயில் உள்ள இலங்கை தூதரகம் மீது நேற்று (12.04.2009) புலிகளின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை தூதரகம் அமைந்துள்ள பகுதியில் ஒன்றுகூடிய இவர்கள் கட்டடத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர் எனினும் அங்கு பணிபுரியும் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தை அடுத்து நோர்வேயிற்கான இலங்கை தூதுவர் நோர்வே அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

12-04-2009, 11.30 PM


மக்கள் வெளியேற கோரி மோதல் தவிர்ப்பு

பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை விடுவிக்க கோரி அரசாங்கம் மோதல் தவிர்பு ஒன்றை இன்று (12.04.2009) அறிவித்துள்ளது. இது எதிர்வரும் 13ம், 14ம் திகதிகளில் அமுல் படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் மக்கள் பாதுகாப்பாக படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வருவற்கும், புதுவருட கொண்டாட்டங்களை மேற்கொள்வதற்கும் படையினர் தாக்குதல் எதனையும் நடத்தவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த முடிவை தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி பாராட்டியுள்ளார்.
புலிகளின் பயங்கரவாத செயற்பாடு காரணமாக கடந்த காலங்களில் புத்தாண்டை சுதந்திரமாக கொண்டாட முடியாத சந்தர்ப்பம் இருந்துள்ளது. ஜனாதிபதியின் நடவடிக்கையால் மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். புலிகள் பணயக்கைதிகளாக வைத்திருக்கும் மக்களை விடுதலை செய்யவேண்டும் என வலியுறித்திய அவர் இதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை பார்வையிட அனுமதி

வவுனியா முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை அவர்களது உறவினர்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்று (12.04.2009) தெரிவித்துள்ளார். இங்கு தங்கியிருக்கும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று மக்கள் தமது உறவினர்களை சந்தித்துள்ளனர். மக்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை குறித்த அமைச்சின் ஊடாக அரச அதிபர் மேற்கொள்வார் என தெரியவருகிறது. மக்கள் சந்திப்பதற்கென தனியான கட்டடங்களும் அமைக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

நுவரெலியாவில் பாரிய குண்டு மீட்பு

நுவரெலிய நாவலபிட்டி பஸ்தரிப்பு நிலைய பகுதியில் இன்று (12.04.2009) பாரிய குண்டொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். தொலை பேசி கூண்டு ஒன்றிற்குள் இது மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளார் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

09.10 PM

 

கிராமவாசிகள் புலிகளால்  கொலை

புத்தல, மொனராகல வீதியின் மஹாகொடயாய பகுதியில் இன்று (12.04.2009) இரவு 7 மணியளவில் புலிகளின் 4 பேரை கொண்
 ஆயுதம் தாங்கிய குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 2 பேர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த கிராமத்தில் இருந்த வீடு ஒன்றிற்குள் நுழைந்து புலிகள் அப்பாவிகளான மக்களை மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார். இந்த பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் கூட்டாக தேடுதல் நடத்தி வருகின்றனர்.

 

05.30 PM

 

மக்கள் அரச கட்டுப்பாட்டிற்குள் வருகை

பாதுகாப்பு வலயத்தில் இருந்து 270 பொதுமக்கள் நேற்று (11.04.2009) மாலை 6 மணியளவில் படையினரிடம் வந்து சேர்ந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் 77 பெண்கள், 86 ஆண்கள், 48 சிறுவர்களும், 59 சிறுமிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விசாரணையின் பின்னர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் இன்றுவரை 67270 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு மத்திய நிலையம் மேலும் குறிபப்பிட்டுள்ளது.

அம்பலவன்பொக்கணை பகுதியில் மோதல்

முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணை பாதுகாப்பு வலய எல்லை பகுதியில் நேற்று (11.04.2009) படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 8 புலிகள் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

 

 

 

 02.55 PM

 

வைத்தியர்களை மிரட்டி புலிகள் பொய் பிரச்சாரம்

புலிகள் அரச வைத்தியர்களை மிரட்டி சர்வதேச ரீதியில் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி வைத்திய அதிகாரிகள் பாதுகாப்பு வலயம் மீது படையினர் செல் தாக்குதல் நடத்துவதாக சர்வதேச நாடுகளுக்கு தெரிவித்தமையானது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இது உண்மைக்குப் புறம்பான ஒர்; செயலாகும். இவர்கள் காயமடைந்துள்ள புலி உறுப்பினர்களுக்கே சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலி சந்தேகநபர்கள் கைது

பாதுகாப்பு வலயத்தில் இருந்து வந்த புலி சந்தேக நபர்கள் 19 பேர் நேற்று (11.04.2009) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். அனைவரும் 22 தொடக்கம் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

01.50 PM

 

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் கருத்து வேறுபாடு

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலர் சிவசங்கர் மேனன், மற்றும் ஜனாதிபதி மகிந்;த ராஜபக்ச ஆகியோரின் பேச்சு வார்த்தைக்கான அழைப்பை நிராகரித்தமையை அடுத்தே இந்த நிலை தோன்றியுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பை அடுத்து முறுகல் நிலையில் இருந்த இந்த சம்பவமானது தற்பொழுது வலுப்பெற்று வருகிறது. ஜனாதிபதி யின் அழைப்பு குறித்து சில தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் சாதகமான பதிலை வெளியிட்டிருந்தனர் பின்பு இதற்கு மறுப்பு தெரிவித்து கட்சி இறுதி முடிவை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தகது என செய்திகள் வெளியாகியுள்ளன.

 

தற்பொழுது வெளியான செய்திகளின் படி இவர்கள் எதிர்வரும் 16ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் சிவசங்கர் மேனனை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 

10.00 AM

 

வாக்காளர் அட்டைகள் இன்றும் வினியோகிக்கப்படும்

எதிர்வரும் 25ம் திகதி இடம் பெறவுள்ள மேல் மாகாண சபை தேர்தலுக்கான வாக்காளர் அட்டை வினியோகிக்கும் விசேட தினமாக இன்று (12.04.2009) அமுல் படுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டையை இதுவரை பெற்றுக் கொள்ளாத மக்கள் தமக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களில் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டை வினியோகம் எதிர்வரும் 17ம் திகதி வரை நடைபெறும். இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல் திணைக்களத்தால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வினியோகிக்கும் திட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் பதியுதீன் அமெரிக்க பயணிக்கவுள்ளார்.

மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அமெரிக்கா பயணமாகவுள்ளார். அங்கு எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள சுனாமி மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். இவர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டன், ஐ நா செயலர் பான் கி மூன் ஆகியோரை சந்தித்து இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள் குடியேற்றுவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.

எதிர்வரும் 19ம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள டேர்மன் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 

08.15 AM

 

உயிர்த்தஞாயிறை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து


உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களால் இன்று (12.04.2009) உயிர்த்த ஞாயிறு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ மகளுக்கும் மகிழ்சி, சாமாதானம், அமைதி நிறைந்த நாளாக அமைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். இயேசு நாதர் உயிர்த்த நாளானது மகி முக்கியமான, மனித இனத்திற்கு நம்பிக்கை, புத்தெழுச்சி, அன்பு, கருணை சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றை ஏற்படுத்தும் நாள்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு அனைத்து சமூகங்களுக்கிடையிலும் சமாதானம், சகோதரத்துவம் ஏற்பட்டு வரும் காலகட்டத்தில் இந்த பண்டியை கொண்டாடும் எமது நாட்டின் கிறிஸ்தவமக்களுக்கு முக்கியமான ஒர்; நாளாகும்.. கிறிஸ்தவ மதத்தின் போதனைகள் அன்பை வளர்க்கிறது. இது உலகில் வாழும் அனைத்து உயிரினங்கள், இயற்கையின் கொடைகளையும் சென்றடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

11-04-2009, 03.15 PM

 

ஒரு தொகுதி மக்கள் படையினரிடம் தஞ்சம்

பாதுகாப்பு வலயத்தில் இருந்து மேலும் 200 பொது மக்கள் இன்று (11.04.2009) காலை அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். புலிகளிடமிருந்து தப்பித்து இதுவரையில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயத்தில் இருந்து பாதுகாப்பாக மக்கள் அரச கட்டுப்பாட்டிற்கு வருவதற்கான வழிகளை படையினர் அடையாளப்படுத்தி காட்டியுள்ளதாகவும் இதற்கென ஒலி பெருக்கிகள் மூலம் பாடல்களை ஒலிக்க விட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 

02.20 PM

 

ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்

லிபியாவிற்கு 3 நாள் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (11.04.2009) காலை நாடு திரும்பியுள்ளார். இந்த விஜயம் இலங்கைக்கு பல வழிகளிலும் நன்மையை ஏற்படுத்தியுள்ளது. லிபியா இலங்கை அபிவிருத்தி பணிகளுக்கென 500 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதுடன் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் விமான நிலையத்திற்கும் நிதியுதவி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி பணிகளுக்கு லிபியா உதவுவ முன்வந்துள்ளதுடன் அரசாங்கம் அங்கு மேற்கொண்டு வரும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார தொழில் முயற்சிகளை லிபிய ஜனாதிபதி கேணல் முகமது அல் கடாபி பாரட்டு தெரிவித்துள்ளார்.

 

08.55 AM

 

சோதனை சாவடி அகற்றப்பட்டுள்ளது

திருகோணமலை கந்தளாய் திருகோணமலை கிண்ணியா ஆகிய வீதியில் இருந்த சோதனை சாவடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ளளது. இந்த சோதனை சாவடியில் முன்பு பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த சோதனை சாவடி அகற்றப்பட்டதன் பின்னர் மக்களின் போக்குவரத்து இலகுவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை மீது செல் தாக்குதல் நடத்தவில்லை.

முல்லைத்தீவு புதுமாத்தளன் வைத்தியசாலை மீது படையினர் செல் தாக்குதல் நடத்தவில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கடந்த 8ம் திகதி குறித்த வைத்தியசாலை மீது படையினர் செல்தாக்குதலை மேற்கொண்டதாக முல்லைதீவு வைத்திய அதிகாரி தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த இராணுவ பேச்சாளர் இரு தரப்பு மோதல் இடம்பெறும் பொழுது மக்கள் பாதிக்காத வண்ணமே இந்த பாதுகாப்பு வலயம் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு எந்த ஒரு தரப்பும் தாக்குதல் நடத்தக் கூடாது என்பதே உலக நாடுகளினதும் அரசாங்கத்தினதும் வேண்டுகோளாகும். இங்கு தாக்குதல் நடத்தவேண்டிய தேவை படையினருக்கு இல்லை. படையினர் மீது வீண்பழி சுமத்துவதற்கு புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் மேற்கொள்ளும் பொய் பிரச்சாரமே இது என அவர் மேலும் கூறினார்.

 

08.25 AM

 

பயங்கரவாதத்திற்கு எதிரானயுத்தம் நிறைவடையவுள்ளது

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்பொழுது பாதுகாப்பு வலயத்தினுள் சிக்குண்ட மக்களை மீட்கும் பொருட்டு மனிதாபிமான நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர். இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ள 58வது படைப்பிரிவினர் பாதுகாப்பு வலயத்தின் புதுமாத்தளன் தெற்கு, அம்பலவன் பொக்கணை மேற்கு ஆகிய பகுதியில் பாதுகாப்பு வலய எல்லைக்கு மிகவும் அருகில் உள்ளனர். பாதுகாப்பு வலயத்தின் வடக்கு பக்கமாக இருந்த புலிகள் பின்வாங்கி சென்றுள்ளனர். பொதுமக்கள் வெளியேறுவதற்கு பாதுகாப்பான இடங்களை படையினர் இனங்கண்டு ஒழுங்கு செய்திருப்பதுடன் வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது.

 

குமுறும் மலையகம்

 

எங்கள் சின்னம்

 

அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகள்

 

தேர்தல் திணைக்களத்தால்

03 ஜுலை 2008 இல் வெளியிடப்பட்டது

 

 

 

 

அவுஸ்;திரேலியாவில வெளிவரும் உதயம் மாத இதழில் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவ

ர்கள் எழுதிய 13வது அரசியல் யாப்பு திருத்தம், அதன் அமுலாக்கம் குறித்த கட்டுரை தொடர்
 

 

கூட்டமைப்பு

 

01 ஆகஸ்ட் 2008
த.வி.கூ புளொட்

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
 


அறிக்கைகள்

 

01 மே 2007
ஈ.பி.ஆர்.எல்.எவ்

 


கட்சியின் விளக்கம்

 

10 நவம்பர் 2006
இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு தொடர்பாக எமது கட்சியின் விளக்கம்
 

இணைத்தலைமை
 

22 நவம்பர் 2006
 


ஜெனீவா பேச்சுவார்த்தை
 


மத நிறுவனங்கள்

 

08 ஏப்ரல் 2007
 


 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரேரணைகள்
 

Proposal for the Political Solution to the Ethnic Conflict in Srilanka
EPRLF seeks merger of Sri Lanka's north-east Indo-Asian News Service 30 March 2007

Indian backing proposals styled on the Indo-Lanka Accord The Island, March 26, 2007  

Moderate Tamils' constitutional proposal  Hindustan Times 23 March 2007

FRATERNAL PAGE

LSSP demands 13th Amendment be implemented
 

 

தோழர் றொபேட்
50வது பிறந்தநாள் நினைவு
 

மார்கழி 13
ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல்
khh;fop 13

<gpMh;vy;vt; kPJ jhf;Fjy;

 

Appeal to the leaders of  Political Parties and the People of  Tamil Naad 14 October 2008

 

 

 

மட்டக்களப்பு மாவட்ட உள்ள+ராட்சி தேர்தல்கள்- 2008
 

வாக்களிப்பு மற்றும் கட்சிகளுக்குக் கிடைத்த ஆசனங்கள்
 

மட்டக்களப்பு மாநகர மேயர் பத்மினி 13.03.2008 அன்று அளித்த செவ்வி
 

 

கிழக்கு மாகாணசபை தேர்தல் ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் வழங்கிய (14.03.2008) செவ்வி

 

 

 
     
 

 'ehk; kf;fSf;fhfg; NghuhLtnjd;gJ vk;kPJ Rkj;jg;gl;l flikNa jtpu vkf;F toq;fg;gl;l mjpfhuky;y"  Njhoh; f.gj;kehgh