HOME ARTICLES HISTORY MARTYRS PHOTOS LINKS ARCHIVES CONTACT  

 

 

  ARCHIVES - 3      April 2009

சிறுமி வர்ஷாவின் படுகொலைக்கான சூத்திரதாரியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் துரைரட்ணம் அறிக்கை

 

வன்னிப் பிரதேசத்திலிருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கக் கோரி யாழில் இடம்பெற்ற பேரணி (படங்கள்)

 

யாழ் மாவட்டத்தில் சுதந்திர தினம் 2009 (படங்கள்)


 

 

 

இடம்பெயர்ந்த மக்களுக்கு அன்புக்கரம் நீட்டுவோம்

 

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டும் காயங்களுக்குள்ளாகி வவுனியா மன்னார் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் உள்ள மக்களின் உணவு உடை மருத்துவம் கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் நாமும் கரம்கோர்த்து எமது பங்களிப்பை வழங்குவது கட்டாய கடமையும் உடனடி தேவையுமாகும்.

சுனாமியால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் துயர் துடைக்க முன்வந்து உதவிய கட்சி தோழர்கள் ஆதரவாளர்கள் நண்பர்கள் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் துன்பங்களை போக்கவும் உங்களால் முடிந்த உதவிகளை வழங்குவதுடன் இடம்பெயர்ந்தவர்கள் மீது அக்கறை கொண்டு உதவ முன்வரும் பொதுமக்களிடமிருந்தும் உதவிகளை பெற்று வழங்குவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு உதவவிரும்பும் அனைவரும் நீங்கள் வாழும் நாடுகளிலுள்ள பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சி பிரதிநிதிகளுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டு;கின்றோம்.

 

கட்சி பொதுச் செயலாளருடன் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் 0094 112 505372 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
 


 

30-04-2009,  10.00 PM

 

ம.உரிமை ஆணைக்குழு ஊழியர் ஒருவருக்கு கொலை மிரட்டல்

தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பகுதியின் இணைப்பாளர் எம். எம்.சாருக்கிற்கு புலிகளினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரிடமும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக இவருக்கு வந்திருந்த கடிதத்தில் 10 நாட்களில் குறித்த பதவியில் இருந்து விலகி பிரதேசத்தை விட்டு செல்லவேண்டும். அல்லது படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் எச். எல் ஜமால்டீனுக்கு ஏற்பட்டதை போன்று நிகழும். குறித்த கடிதத்தில் புலிகளின் இரணுவ புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ரகு என அடையாளப்படுத்தப்பட்டிருந்தது என அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார். மேலும் கடிதம் கிடைத்து இரண்டாம் நாள் தனது அலுவலக பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நடமாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

யசூசி அகாசி இன்று இலங்கை வரவுள்ளார்.

ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று இரவு (30.04.2009) இலங்கை வரவுள்ளார். இலங்கையில் 3 நாட்கள் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை சென்று பார்வையிடவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது

மட்டக்களப்பு வாழைச்சேனை கொண்டையன்கேணி பகுதியில் நேற்று (29.04.2009) துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் கொண்டையன்கேணியை சேர்ந்த வேலாயுதம் ஜெயச்சந்திரன் (வயது 27) என்பவர் காயமடைந்துள்ளார். வீட்டில் இருந்த போது அங்கு வந்த ஆயுததாரிகள் இவர்மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இவர் தற்பொழுது வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் நேற்று (29.04.2009) பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொகமட் தம்பி உவைஸ் என்ற இந்த நபரிடம் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் போது இவர் வழங்கிய தகவலின்படி ரி56 ரக துப்பாக்கி 01, அதற்கான ரவைகள் 70, கைக்குண்டு 03, எஸ் எல் ஆர் ரக துப்பாக்கி 01, அதற்கான ரவைகள் 08, மிதிவெடி 01, கையடக்க தொலைபேசி 01, என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லாவெளி கோயில் போரதீவில் 3 புலி உறுப்பினர்கள் அதிரடி படையினரால் நேற்று முன்தினம் (28.04.2009) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் தேடுதல் நடத்திய அதிரடிப்படையினர் இவர்களை கைது செய்ததோடு ஆயுதங்கள்சிலவற்றையும் மீட்டுள்ளனர். இதில் ரி56 ரக துப்பாக்கி 01, மகசீன் 01, கையடக்க தொலைபேசி 02 என்பபன இதில் அடங்குகின்றது. இவர்கள் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பரமேஸ்வரனின் உண்ணாவிரம் முடிவுக்கு வந்தது

பிரித்தானியாவின் நாடாளுமன்ற சதுக்கத்தில் உண்ணாவிரதமிருந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் இன்றுடன் (30.04.2009) முடிவடைந்துள்ளது. 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 23 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துள்ளார். இவரை லண்டன் பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இனி வரும் காலங்களி;ல் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இதனை ஏற்பாடுசெய்த சிலர் தெரிவித்துள்ளனர்.

 

10.45 AM

 

மக்களை மீட்கும் பணி தொடரும். ஜனாதிபதி தெரிவிப்பு

புலிகளின் பிடியில் இருக்கும் மக்களை மீட்கும் மனிதநேய நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சி.என்.என் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்களை மீட்பது தமது முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஐக்கியநாடுகள் சபையில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு வான் தாக்குதல்களையும், பாரிய ஆயுதங்களின் பாவனையும் நிறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டே பாதுகாப்பு வலயம் அரசினால் உருவாக்கப்பட்டது. ஆனால் புலிகள் பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களுக்கு மத்தியில் கனரக ஆயுதங்களை வைத்து படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். புலிகளின் தலைவர் உள்ளிட்ட புலி முக்கியஸ்தர்களை உயிருடன் கைது செய்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம். இவர்கள் கைதானதும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என கூறினார்.

போரை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தவில்லை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் வெளிவிவகார செயலர் டேவிட் மெலிபான்ட் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என சர்வதேச சமூகம் இலங்கை அரசிற்கு அழுத்தங்களை கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவுடன் நேற்று (29.04.2009) பேச்சுக்களை நடத்திய பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். புலிகளிடம் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கு ஆதரவு வழங்கபப்படும். நாட்டில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு சமாதானத்தை ஏற்படுத்தும் இலங்கை அரசின் திட்டத்திற்கு பிரித்தானிய அரசு உதவிகளை மேற்கொள்ளும் என கூறினார்.

பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அண்மையில் நோர்வேயில் இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றப்பணிகள் ஆரம்பம்

வடக்கு மாகணத்தில் முதலாவது கட்டமாக மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை இன்று (30.04.2009) இடம்பெறுகிறது. இதன் அடிப்படையில் மன்னார் முசலி பிரதேச செயலாளர் பகுதியில் 122 குடும்பங்களை சேர்ந்த மக்கள் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர் என அனர்த்த நிவாரண, மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் யு. எல். எம். கால்தீன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகழுக்கான உயர்தானிகராலயம் அங்கீகாரம் அளித்துள்ளது.

 

29-04-2009,  11.45 PM

 

புலிகள் 7 தடவை தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளனர்

பாதுகாப்பு வலயப்பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 7 தற்கொலை தாக்குதல்களை புலிகள் நடத்தியுள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு ஊடக மத்தியநிலையத்தில் இன்று (29.042009) செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதியில் முன்னேற்ற முயற்சியை மேற்கொள்ளும் படையினரை இலக்குவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. கப் வாகனத்தில் வந்து ஒருதடவையும், நால்வர் மோட்டார் சைக்கிளில் வந்து இரண்டு தடவையும் மற்றும் தற்கொலை குண்டுதாரிகளாக மொத்தம் 7 தடவை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இலங்கை வந்துள்ள பிரான்ஸ், மற்றும் பிரித்தானிய வெளியுறவு செயலர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார செயலார் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேனாட் கவுச்னர் ஆகிய இருவரும் இன்று (29.04.2009) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இதன் போது இலங்கையின் தற்போதைய நிலை குறித்தும் இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நலன் குறித்தும் கூடிய கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, வெளியுறவுச் செயலர் பாலித கோஹன, ஜனாதிபதியின் மேலதிக செயலர் காமினி செனாரத்ன, இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர், பிரான்ஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் ஒரு மண் அணை படையினரால் மீட்பு

பாதுகாப்பு வலயத்தில் உள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் படையினர் 700 மீற்றர் நீளமான பாரிய மண் அணை ஒன்றினை இன்று (29.04.2009) மீட்டுள்ளனர். 10 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட இந்த மண்அணை பொதுமக்கள் புலிகளின் பிடியில் இருந்து தப்பித்து செல்லமுடியாதவாறு அமைக்கப்பட்டிருந்தாhக படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடல் மார்க்கமாக மக்கள் தப்பித்து செல்லாதவாறு அவர்களின் படகுகளை புலிகள் தீயிட்டு எரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைய வேண்டும்.

புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய உள்த்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். உடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் பாரிய ஆயுதங்கள் மற்றும் வான் தாக்குதல்களை நட்தவேண்டாம் எனவும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அவர்களுக்கு உதவி புரியுமாறும் அந்த நாட்டு அரசு படையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்து பேச்சுக்களுக்கு முன்வரவேண்டும். இவ்வாறு இவர்கள் செய்தால் அவர்களது உயிர்களுக்கு உத்தரவாதம் அளி;கப்படும். புலிகளின் தலைவர் பிடிபட்டால் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது பற்றி தற்போது கூறமுடியாது.

இங்கு முக்கிய விடயம் என்னவெனில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாக்கப்படவேண்டும். இந்தியா இலங்கைக்கு பின்னணியில் இருந்து செயற்படுகிறது என பலர் வதந்திகளை கிளப்பி விடுகின்றனர் ஆனால் அவற்றில் எதுவித உண்மைகளும் இல்லை என தெரிவித்துள்ளார்.

 

10.15 PM

 

அரசசார்பற்ற நிறுவனத்தின் பிரமுகர்களும் அரசியல்

தலைவர்கள் சிலரும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்

தமிழ் அரசியல் தலைவர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களின்; உறுப்பினர்களும் கலந்துகொண்ட விசேட கூட்டம் கொழும்பில் இன்று (29.04.2009) இடம்பெற்றுள்ளது. இதனை அரசசார்பற்ற நிறுவனங்கள் சில ஏற்பாடு செய்திருந்தன. இந்த கூட்டத்தில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள மக்களின் நிலை குறித்தும் அவர்களை சென்று பார்வையிடுவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன், ஈ பி ஆர் எல் எப் பத்மநாபா அமைப்பின் தலைவர் தி. சிறிதரன், ஈ பி டி பி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், இரா. சம்பந்தன் ஆகியோரும்

பாக்கியசோதி சரவணமுத்து, சாந்தி சச்சிதானந்தம், மற்றும் இந்திய செ ஞ்சிலுவை சங்கத்தின் முக்கியஸ்தாரன திருமதி ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

05.15 PM

 

தெற்கு, ஊவா மாகாணங்கள் கலைக்கப்படவுள்ளது.

தெற்கு மற்றும் ஊவா மாகாணங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் கலைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த இந்த மாகாணங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஐப்பசி மாதமளவில் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மாகணங்களுக்குரிய கால எல்லை முடிவடைவதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த தேர்தலில் இராணுவத்தினர் வேட்பாளராக நியமிக்கப்படவுள்ளனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் மாணவர் ஒருவர் கடத்தப்பட்டுளார்.


மட்டக்களப்பு கல்லடி பகுதியில் மாணவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இவர் சிவானந்தா தேசிய பாடசாலையில் 7ம் தரத்தில் கல்வி கற்கும் ஜனார்த்தனன் (வயது 12) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு பாதுகாப்பு வலய பகுதியில் இருந்து நேற்று (18.04.2009) கிறின் ஓசோன் கப்பல் மூலம் ஒரு தொகுதி மக்கள் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் காயமடைந்த மற்றும் அவர்களது உறவினர் உட்பட 514 பேர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வழித்துணையுடன் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் புல்மோட்டை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்கு பதவிய, மற்றம் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

03.45 PM

 

சிறுமி கடத்தப்பட்டதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி வினுசிகா கடத்தப்பட்டதை கண்டித்து சிறுமி கல்விகற்கும் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இன்று (29.04.2009) பாடசாலைக்கு முன் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். சிறுமியை கடத்தியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சிறுமி நேற்று (28.04.2009) முதல் காணாமல் போயுள்ளார். இவர் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட பாடசாலையில் கல்விகற்கும் பூம்புகாரைச் சேர்ந்த சதிஸ்குமார் வினுசிகா (வயது 08) என தெரிவிக்கப்படுகிறது. உறவினர் ஒருவரால் பாடசாலையில் விடப்பட்டுள்ளார். பின்னர் பாடசாலை முடிவடையும் நேரம் அந்த உறவினர் இவரை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்தபோது சிறுமி காணாமல் போயிருந்தார் என தொவிக்கப்பட்டுள்ளது.

 

 02.55 PM

 

புலிகளின் 6 படகுகள் தாக்கி அழிப்பு

முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று (29.04.2009) அதிகாலை 4.30 மணியளவில் புலிகளின் 6 படகுகளை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர். தம் மீது தாக்குதல் நடத்தவந்த படகுகள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த படகுகளில் 4 தற்கொலை படகுகள் எனவும் இதில் 25 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

10.15 AM

 

புலிகள் பல சந்தர்ப்பங்களை தவறவிட்டுள்ளனர்.

பயங்கரவாதம் சகல நாடுகளுக்கு ஒரேமாதிரியான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (28.04.2009) நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 90வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் புலிகளுக்கு பேச்சுவார்தை மூலமாக தீர்வு காண்பதற்காக பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருந்த போதும் அவர்கள் அதனை நிராகரித்துள்ளனர். இதனை அடுத்தே அவர்கமீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. 90 வருடங்களிற்கு முன் நாட்டில் பயங்கரவாதம் இல்லை. ஆனால் தற்பொழுது பயங்கரவாதம் மக்களின் அன்றாட வாழ்கைக்கும், தொழில் வாய்ப்புக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

09.15 AM

 

பிரித்தானிய, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் வருகை

பிரித்தானிய வெளிவிவகார செயலர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேனாட் கவுச்னர் இருவரும் இன்று (29.04.2009) அதிகாலை 5.30 மணியளவில் இலங்கை வந்துள்ளனர். இவர்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகிதபோகொல்லாகம உட்பட பல அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படையினரின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது

இலங்கையின் இறைமைக்காகவும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் தமது உயிர்களை தியாகம் செய்த படையினரை இந்தநாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாடையினரின் தியாகங்களினால் 30 வருடங்களாக நாட்டில் இருந்த பயங்கரவாதம் தற்பொழுது இல்லாது போயுள்ளதுடன் நாட்டிற்கு பெரு வெற்றியும் கிடைத்துள்ளது. இராணுவ தலமையகத்தில் நேற்று (28.04.2009) இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் படையினரின் பிள்ளைகளுக்கு புலமைபரிசில்களை வழங்கும் திட்டத்தையும் இராணுவத்தின் சேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. இதன் அடிப்படையில் படையினரின் 100 பிள்ளைகளுக்கு புலமை பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளது.

 

28-04-2009,  10.55 PM

 

முல்லைத்தீவு இரட்டைவாய்கால் பகுதி படையினர் வசம்

பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள இரட்டைவாய்க்கால் பகுதியை படையினர் இன்று (28.04.2009) கைப்பற்றியுள்ளனர். இன்று அதிகாலை 12 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இங்கு கடும்மோதல் இடம்பெற்றதை அடுத்தே 58வது படைப்பிரிவினர் இந்த இடத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர் என பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 12 அடி உயரமுடைய பாதுகாப்பு அரண் ஒன்றும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மோதலின் போது படையினர் சிறிய ரக ஆயுதங்களையே பயன்படுத்தியுள்ளனர். இதன் போது 45 புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களின் சடலங்களும் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

புலிகளின் தற்கொலை தாக்குதல் முறியடிப்பு

பாதுகாப்பு வலயத்தின் தெற்குப்பக்கமாக உள்ள இரட்டைவாய்கால் பகுதியில் இன்று (28.04.2009) காலை புலிகள் நடத்திய தற்கொலை தாக்குதல் முயற்சியை படையினர் முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் மண் அணையை உடைத்து முன்னேற முயன்ற படையினரை இலக்குவைத்து லொறி ஒன்றினுள் வெடிகுண்டுகளை நிப்பி இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. குறித்த லொறி இலக்கை அடையும் முன்னர் படையினர் அதன்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து பாரிய சத்தத்துடன் லொறி வெடித்து சிதறியதாக படையினர் மேலும் கூறியுள்ளனர்.

புலிகளின் பாரிய கவசவாகனம் படையினரால் மீட்பு

 

பாதுகாப்பு வலயத்தின் வலைஞர்மடம் பகுதியில் குண்டுதுளைக்காத வாகனம் ஒன்றை படையினர் இன்று (28.04.2009) மீட்டுள்ளனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் இதனை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் படையினரின் யுத்தராங்கிற்கு சமமான வகையில் இரும்புத் தகடுகளால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

 

 

படையினர் புதுக்குடியிருப்பிற்குள் முன்னேறியதை அடுத்து புலிகளின் தலைவர் பாதுகாப்பு வலயத்தினுள் செல்வதற்கு இதனை பயன்படுத்தியிருக்கிறார் என விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் நிரூபித்திருப்பதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
 

06.10 PM

 

பிரபாகரனை கைது செய்தால் இந்தியாவிடம் ஒப்படைப்பு

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் முதலில் இலங்கையில் மேற்கொண்ட குற்றங்களுக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தி தண்டனை வழங்கப்பட்ட பின்னார் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார். சி என் என் செய்தி சேவையின் ஐ பி என்னுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் நலன் கருதி வான் தாக்குதல்களையும், பாரிய ஆயுதங்களையும் உபயோகிக்க வேண்டாம் என படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் இது யுத்த நிறுத்தம் அல்ல என தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலவரம் குறித்து அமெரிக்கா ஆராய்வு

இலங்கை நிலவரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்காவின் பலதுறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளார். இதில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம், பென்டகன் தேசிய பாதுகாப்பு கவுன்சில், யுஎஸ்எய்ட், மற்றும் பல்வேறு துறைகளை சேர்தவர்களும் கலந்துகொண்டுள்ளனர். இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க அரசு தீவர அக்கறை காட்டி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு கல்வி

யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மாணவர்கள் தமது கல்வி செயற்பாடுகளை மேற்கொள்ள யாழ் மாவட்ட கல்வி திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கென கைதடி, மிருசுவில், கொடிகாமம் ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு அருகில் தற்காலிக வகுப்பறைகளை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்பறைகளை அமைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் நிதி உதவி வழங்கியுள்ளது.

இடம் பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தங்கியிருப்பதனால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தனியார் கட்டடங்களிலும், தற்காலிக கொட்டகைகளிலும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

03.30 PM

 

மன்னாரில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

மன்னாரில் நேற்று (27.04.2009) தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இவரிடமிருந்து 2 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து யுவதியிடம் விசாரணைகள் மேற்கொள்ளபப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ சீன அரசு முன்வந்துள்ளது

புலிகளின் பிடியில் இருந்து வந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள பெருமளவான மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ள சீன அரசு முன்வந்துள்ளது. இதற்கென இலங்கைக்கு 20 லட்சம் ரூபா நிதியினை சீன அரசு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதுவர் யங்சுயுவிங் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவுடன் இது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணசபை முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்க தெரிவு

மேல்மாகாண சபையின் முதலமைச்சர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்துள்ளார். குறித்த தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

10.15 AM

 

இந்திய கடற்கரை பகுதிகளில் விசேட பாதுகாப்பு

இந்தியாவின் ஒரிஸாமாநிலத்தின் கடற்கரை பகுதிகளுக்கு புலிகள் தப்பித்து வரக்கூடும் என இந்திய கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். யுத்த்தில் பின்னடைவை கண்டுள்ள புலிகள் இவ்வாறு வருவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் இருக்கின்றது. இந்திய கடற்கரை பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்கென ஹெலிகொப்டர்களையும், படகுகளையும் ஈடுபடுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் விசேட கூட்டம்

கிழக்கு மாகாணத்தில் இன்று (28.04.2009) இடம் பெயர்ந்து வரும் மக்களை தங்கவைப்பது தொடர்பான விசேட கூட்டம் ஒன்று இடம் பெறவுள்ளது. இதில் கிழக்கு மாகாண ஆழுநர், உள்ளுராட்சி சபை ஆணையாளர், மற்றும் மாவட்ட செயலாளர், ஆகியோர் இந்த கூட்ட தொடரில் கலந்துகொள்கின்றனர். இதன் போது புல்மோட்டை 14ம் கட்டை பகுதியில் அமைக்கப்படவுள்ள தற்காலிக குடியிருப்புக்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடவுள்ளனர்.

புதுமாத்தளனில் இருந்து மக்கள் வருகை

புதுமாத்தளன் பகுதியில் இருந்து நேற்று (27.04.2009) பொதுமக்கள் படகுகள் மூலம் புல்மோட்டைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 3 படகுகளில் 65 பேர் இவ்வாறு வந்துள்ளனர். இவர்கள் புல்மோட்டை பாடசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 

 

08.55 AM

 

புலிகள் இயக்கம் மிக கொடூரமான பயங்கரவாத இயக்கம்

உலகில் உள்ள பயங்கராவாத இயக்கங்களில் புலிகள் இயக்கம் மிககொடூரமானது என வொசிங்ரன் ரைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதம் அழிவடையும் இறுதி தருணம் ஏற்பட்டுள்ளது. சிலர் புலிகள் அழிவடையும் இந்த நிலையை திசை திருப்ப முனைகின்றனர். புலிகளை ஒழிக்கும நடவடிக்கைக்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அமெரிக்க இராஜாங்க செயலர் கிலாரி கிளின்டன் இலங்கை அரசின் மீது குற்றச்சாட்டுக்களை மேற்கொண்டு வருவது பயங்கரவாதத்திற்கு துணைபோகும் ஒர் செயலாகும் என அந்த பத்திரிகையில் தெரிவி;க்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை ஆரம்பம்

வடமாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை எதிர்வரும் 30 திகதி தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற் கட்டமாக மன்னார் முசலிபிதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட 122 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளன. இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்தானிகராலயம் அனுமதி அளித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. இங்கு 95 சதவீதமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் அமைச்சரின் செயலர் கால்தீன் தெரிவித்துள்ளார்.
 

27-04-2009,  11.30 PM

 

இலங்கைஅரசின் அறிவிப்பு குறித்து இந்தியா வரவேற்பு

பாதுகாப்பு வலய பகுதியில் பாரிய ஆயுதங்கள், மற்றும் வான் தாக்குதல்கள் நிறுத்தபடுவதாக இலங்கை அரசின் முடிவினை இந்தியா வரவேற்றுள்ளது. இந்திய உள்த்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஊடகம் ஒன்றிற்கு இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறினார். இலங்கை படையினர் தற்பொழுது மேற்கொண்டு வருவது மனிதாபிமான நடவடிக்கையே. இதன் மூலம் அப்பாவி பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இலங்கையில் தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்பொழுது கனரக ஆயுதங்கள், மற்றும் வான் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது இலங்கையின் தற்போதைய நிலமை காரணமாக இந்திய இலங்கை உறவில் எந்த பாதிப்புக்களும் ஏற்படாது. இலங்கையுடன் இந்தியாவிற்கு நட்புறவு உள்ளதால் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

படையினர் 900மீற்றர் நிலப்பரப்பை கைப்பற்றியுள்ளனர்.

மனிதாபிமான நடவடிக்கையினை மேற்கொண்டு வரும் படையினர் இன்று (27.04.2009) பாதுகாப்பு வலயப்பகுதியின் தெற்கு பக்கமாகவுள்ள 900ம் மீற்றர் நிலப்பரப்பை கைப்பற்றியுள்ளனர். படையினரின் 58வது படைப்பிரிவு இந்த பகுதியில் இருந்த மக்கள் சிலரை மீட்டுள்ளனர். அத்துடன் புலிகளின் பாரிய பாதுகாப்பு அரண் ஒன்றும் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் இடம் பெற்ற மோதலில் 40 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தை அடுத்து இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது புலிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

10.30 PM

 

ஜோன் ஹோம்ஸ் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

மனிதஉரிமைகளுக்கான பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் இன்று (27.04.2009) மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன் போது இலங்கையின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டு;ளதுடன் புலிகளின் பிடியிலிருந்து வந்த மக்களுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து ஜோன் ஹோம்ஸ் பாரட்டுதெரிவித்துள்ளார்.

ஜோன் ஹோம்ஸ் முகாம்களில் உள்ள மக்களை சந்தித்துள்ளார்

வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜோன் ஹோம்ஸ் புலிகளின் பிடியில் இருந்து வந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இங்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளார். இதன் போது இந்த மக்களுக்கென 10 கோடி அமெரிக்க டொலர்களை வழங்குவதாக உறுதிஅளித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தியா உதவி வழங்கவுள்ளது

புலிகளின் பிடியில் இருந்து வந்த மக்களுக்கு உதவுவதற்கு இந்தியா முன்வந்துள்ளதாக இந்திய மத்தய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கின் பணிப்பின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த மக்களின் அடிப்படை தேவைகளுக்கென 100 கோடி ரூபாநிதியினை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவி;க்கப்பட்டுள்ளது.

 

 06.45 PM

 

மொனறாகலையில் ஒருவர் சுட்டுக் கொலை

மொனறாகலை பிரதேசத்தில் இன்று (27.04.2009) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் ஹொட்டல் ஒன்றில் பணிபுரியும் ராமையா ரமேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

05.00 PM

 

போர் நடவடிக்கைகள் முடிவு – அரசாங்கம் அறிவிப்பு
 


போர் நடவடிக்கைகள் முடிவை எட்டியிருப்பதாக பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக சனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நடவடிக்கைகள் அவற்றின் முடிவை எட்டியிருப்பதாக இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கணரக ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை பயன்படுத்துவதையும் ஆகாயமார்க்கமான தாக்குதல்களை மேற்கொள்வதையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புப்படையினர் பணயமாக வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளோடு தங்களது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்வதோடு பொதுமக்களின் பாதுகாப்பு விடயத்திற்கு மிகுந்த முன்னுரிமை வழங்குவர் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக முதல்வரின் உண்ணாவிரதம் முடிவு

தமிழக முதல்வர் மு. கருணாநிதி இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் கோரி இன்று (27.04.2009) உணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார். இந்த போராட்டம் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தொலைபேசி மூலம் முதல்வருடன் உரையாடியதை அடுத்து தற்பொழுது கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு போர்நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்ததாக இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் முதல்வர் கருணாநிதிக்கு தெரிவித்ததை அடுத்தே இந்த போராட்டம் நிறுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

இருப்பினும் இதனை இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ளது. போர் நிறுத்தம் ஒன்றிற்கு இலங்கை அரசு ஒருபோதும் இடமளிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் நலனை நோக்காக கொண்டு கனரக ஆயுதங்களின் பாவனை, மற்றும் விமான தாக்குதல்கள் என்பவற்றை மேற்கொள்ள வேண்டாம் என அரசாங்கம் படையினருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 04.35 PM

 

பிரித்தானியாவிலுள்ள இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன் இன்று (27.04.2009) புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்திய தூதரகத்தின் வீசா வழங்கும் கட்டடப்பகுதிக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆர்ப்பாட்ட காரர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.


ஜோன் ஹோம்ஸ் வெளிவிவகார அமைச்சரை சந்தித்துள்ளார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கியநாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் இன்று (27.04.2009) வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன் போது பாதுகாப்பு வலய பகுதிக்கு ஐநா பணியாளர் குழுவினை அனுப்புவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலய பகுதியில் ஐநா குழுவினரை அனுப்புவதிலும் அங்குள்ள மக்களை மீட்பதே தற்போதுள்ள தேவை என இலங்கை அரசதரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தினை ஜோன் ஹோம்ஸ் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த சந்திப்ப்பின் போது வெளிவிவகார அமைச்சின் செயலர் பாலித ஹோகன்ன, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதபிமான நடவடிக்கைகளுக்கான அமைச்சர் ஜோன் ஹோம்ஸ் இன்று (27.04.2009) மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து பேச்சுநடத்தவுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தொவித்துள்ளார்.
 

02.35 PM

 

POLITICAL PARTY/ INDEPENDENT GROUP

VOTES OBTAINED

PERCENTAGE

SEATS

UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE

1,506,115

64.73

68*

UNITED NATIONAL PARTY

688,253

29.58

30

PEOPLE'S LIBERATION FRONT

56,384

2.42

3

SRI LANKA MUSLIM CONGRESS

49,388

2.12

2

DEMOCRATIC UNITY ALLIANCE

11,970

0.51

1

LEFT FRONT

3,997

0.17

 

UNITED SOCIALIST PARTY

1,688

0.07

 

UNITED NATIONAL ALLIANCE

1,247

0.05

 

RUHUNU JANATHA PARTY

1,010

0.04

 

JATHIKA SANGWARDHENA PERAMUNA

578

0.02

 

NAWA SIHALA URUMAYA

526

0.02

 

EKSATH LANKA MAHA SABHA

208

0.01

 

SOCIALIST EQUALITY PARTY

181

0.01

 

SINHALAYE MAHASAMMATHA BHOOMIPUTRA PAKSHAYA

162

0.01

 

SRI LANKA PROGRESSIVE FRONT

135

0.01

 

DEMOCRATIC UNITED NATIONAL FRONT

107

0.00

 

EKSATH LANKA PODUJANA PAKSHAYA

104

0.00

 

PATRIOTIC NATIONAL FRONT

92

0.00

 

NATIONAL PEOPLES PARTY

46

0.00

 

* Includes 2 bonus seats under Section 61A(2) of the Provincial Council     Elections Act No 2 of 1988

 

08.35 AM

 

பிரித்தானிய அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் மைக் போஸ்டர் இன்று (27.04.2009) இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார். இதன் போது வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம மற்றும் அனர்த்த நிவாரண மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் தற்போது நிலவும் நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளதுடன் வவுனியாவில் உள்ள முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

08.15 AM

 

புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரண்.

புலிகளின் 52 உறுப்பினர்கள் நேற்று (26.04.2009) படையினரிடம் சரணடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. படையினரால் கைப்பற்றப்பட்ட வளையார்மடம் பகுதியில் படையினர் தேடுதல் மேற்கொண்டிருந்த போது இவர்கள் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்பயிற்சி பெற்ற 13 வயதிற்கும் 18 வயதிற்கும் உட்பட்ட 23 பேரும், மேலும் பலவந்தமாக புலிகளுடன் இணைத்து கொள்ளப்பட்ட 29 சிறுவர்களும் இதில் அடங்குவர்.

 

07.50 AM

 

ஜோன் ஹோம்ஸ் வவுனியாவிற்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் இன்று (27.04.2009) வவுனியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார். புலிகளின் பிடியில் இருந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கென அவர் அங்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை வெளிவிவகார அமைசர் ரோகிர போகொல்லாகமவை ஜோன் ஹோம்ஸ் இன்று (27.04.2009) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

போர்நிறுத்த அறிவிப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.

புலிகளினால் நேற்று (26.04.2009) அறிவிக்கப்பட்ட ஒருதலைபட்சமான போர்நிறுத்தத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. மோதல்கள் காரணமாக ஐக்கியநாடுகள்சபை, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் பல சர்வதேச நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க புலிகள் ஒருதலைபட்சமாக போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் இந்த அறிவிப்பை அடுத்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்ச புலிகள் பல சந்தர்ப்பங்களை தவறவிட்டு தற்போது உள்ள நிலையில் போர் நிறுத்தம் ஒன்றை கோருவதானது சாத்தியமற்ற விடயம். அவர்களுக்கு தற்போது உள்ள ஒரே வழி பணயக்கைதிகளாக வைத்துள்ள அப்பாவி மக்களை விடுவித்து ஆயுதங்களை கீளேவைத்து சரணடைய Nவுண்டும் என அவர் அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வெற்றிக்கு ஜனாதிபதி நன்றி

மேல்மாகாண சபை தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பை வெற்றியடைய செய்த அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்றிகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (26.04.2009) விடுத்துள்ள அறிக்கையில் நாட்டில் பயங்கரவாதம் அழிவடைந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளமையானது எமது நாட்டில் சர்வதேச தலையீட்டிற்கு இடமில்லை என்பதனை உணர்த்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

26-04-2009,  11.10 PM

 

திருகோணமலையில் 4 பேர் சுட்டுக்கொலை

திருகோணமலை மொறவௌ நொச்சிக்குளம் பகுதியில் நேற்று (25.04.2009) இரவு பிரதேச சமாதானகுழு செயலாளர் உட்பட 4 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கடை ஒன்றின் முன் உரையாடிக்கொண்டிருந்த சமயம் அங்கு வந்த ஆயுததாரிகள் இவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவில் கடற்படையினர் புலிகள் மோதல்

முல்லைத்தீவு வெள்ளைமுல்லைவாய்க்கால் பகுதியில் இன்று (26.04.2009) பகல் 1 மணியளவில் புலிகளின் படகுகள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது புலிகளின் 3 படகுகள் முற்றாக அழிக்கப்பட்டதுடன் அதில் இருந்த 12 புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு கடமையில் இருந்த கடற் படையினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து கடற்படையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள்

பாதுகாப்பு வலயத்தில் இருந்து வரும் மக்களுக்கென இன்று (26.04.2009) விமானப்படையினர் 35 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை எடுத்து சென்றுள்ளதாக விமானப்படை பேச்சாளர் வின் கொமான்டர் ஜெனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இதில் உலர் உணவுப் பெருட்கள் பால் உற்பத்தி பொருட்கள் என்பன அனுராதபுரம், கொழும்பு, கெத்கல ஆகிய விமானப்படை தளங்களில் இருந்து விமான மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். இவை வவுனியாவில் முகாம்களில் உள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இ. தொ. கா மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

புலிகளின் பிடியிலிருந்து வரும் பொதுமக்களுக்கு உதவவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாக சபையினர் மத்தியில் இன்று (26.04.2009) நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தொவித்துள்ளார். இதன் அடிப்படையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் ஒருமாத சம்பளத்தையும், கட்சியின் உறுப்பினர்களின் ஒருநாள் சம்பளத்தையும், அந்த மக்களுக்கான நிவாரணத்திற்கென வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 05.35 PM

 

அம்பாறையில் 5பேர் குத்தி கொலை

அம்பாறை பொத்துவில் பகுதியில் இன்று (26.04.2009) அதிகாலை 5 தமிழ் மீனவர்கள்; கூரிய ஆயுதங்களால் குத்தி கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் மீன் வாடி சேதமாக்கப்பட்டுள்ளதோடு அங்கு இருந்த நான்கு படகுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலைஞர்மடம் இன்று படையினர் வசம்

பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள வலைஞர் மடம் பகுதியை இன்று (26.05.2009) காலை படையினர் தமது முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். முள்ளி வாய்க்காலுக்கு 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த பகுதியை புலிகளிடம் இருந்து விடுவித்த 58வது படைப்பிரிவினர் அங்கு 500ற்கும் அதிகமான பொதுமக்களையும் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேல்மாகாண சபை தேர்தலில் ஆளும்தரப்பிற்கு வெற்றி

மேல்மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்;டமைப்பு பெரு வெற்றியை பெற்றுள்ளது. இந்த தேர்தலில்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு         - 15,06,115      68 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி                                - 6,88,253        30 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி)        - 56,384         03 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்             - 49,388         02 ஆசனங்கள்
ஜனநாயக ஐக்கய முன்னணி                       - 11,970        01 ஆசனங்கள்.

மாவட்ட ரீதியில் பெறப்பட்ட வாக்குகளும் ஆசனங்களும்.

கொழும்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு         - 530,370         25 ஆசனம்
ஐக்கயதேசியக்கட்சி                               - 327, 571        15 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி               - 21, 787        01 ஆசனம்
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்             - 18, 978        01 ஆசனம்
ஜனநாயக ஐக்கய முன்னணி                 - 11, 970        01 ஆசனம்

களுத்துறை

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு           - 351,215     14 ஆசனம்
ஐக்கிய தேசிய கட்சி                                 - 124,426     05 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி                 -13,106        01 ஆசனம்


கம்பஹா

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு             - 624,530         27 ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி                                  - 236,530         10 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி                   - 21,491         01 ஆசனம்
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்                 - 18,014         01 ஆசனம்

புல்மோட்டையிலும் மக்கள் தங்கவைக்கப்படவுள்ளனர்

புலிகளின் பிடியில் இருந்து வரும் பெருமளவான மக்களை திருகோணமலை புல்மோட்டை பகுதியில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் படி திருகோணமலை புல்மோட்டை வீதியில் உள்ள 13ம் கட்டை பகுதியில் உள்ள 100 ஏக்கர் காணி தற்பொழுது சீரமைக்கப்பட்டு 5000ம் குடும்பங்களை தங்க வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் பெருந்தொகையில் வந்துகொண்டிருப்பதனால் வவுனியா மற்றும் மன்னார் பகுதியில் இட நெருக்கடியை குறைக்கும் முகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

09.35 AM

 

புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்து வருகின்றனர்

புலிகள் தமது பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி யுத்தத்தில் ஈடுபடுத்துவதாக ஐக்கிநாடுகள் சபையின் பேச்சாளர் கொடன் வைஸ் தெரிவித்துள்ளார். இதற்கென பாதுகாப்பு வலயப்பகுதியில் சிக்கியுள்ள 12 வயதுடைய சிறுவர்கள் புலிகளினால் பலவந்தமாக அழைத்து செல்லப்படுகின்றனர். இதனால் அங்குள் பெற்றோர் புலிகளுடன் முரண்பட்டுள்ளனர். பெற்றோர் தமது பிள்ளைகளை புலிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கு முயற்சித்தால் அவர்கள் மீது புலிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்கின்றனர். யுத்த முனைக்கு இந்த சிறுவர்களே முதலில் புலிகளால் அனுப்பி வைக்கப்படுகின்றனர். என கூறினார்.

பாதுகாப்பு வலயத்தை மீட்டெடுக்க இன்னும் 4 நாட்கள்

தற்பொழுது இடம்பெற்றுவரும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் நான்கு நாட்களுக்குள் முடிவுக்கு வரும் என பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். பொதுமக்களை மீட்கும் பணியினை படையினர் மிகவும் அவதானத்துடன் மேற்கொண்டு வருகின்றனர். எந்தவொரு கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தாது துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்தி முன்னேறிவருகின்றனர் என கூறினார்.

 

 08.25 AM

 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னணியில்

நடந்து முடிந்த மேல்மாகாணசபை தேர்தலில் அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னணியில் உள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே வெற்றியீட்டியுள்ளது. அறிவிக்கப்பட்ட முடிவுகளில் 70 சதவீதமான வாக்குகளை ஐக்கயமக்கள் சுதந்திர முன்ணணி பெற்றுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் தோர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு     - 3,51 215
ஐக்கிய தேசியக் கட்சி                  - 1,24 426
ஜே வி பி                             - 13 106
 

 

25-04-2009,  11.35 PM

 

இடம்பெயர்ந்து வரும் மக்கள் குறித்து கூடுதல் கவனம்

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரும் மக்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இடம் பெயர்ந்து வரும் மக்களுக்கு உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவதோடு அதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 பிரான்ஸ் அரசு நடமாடும் வை.சாலையை அமைக்கவுள்ளது

பாதுகாப்பு வலயத்தில் இருந்து காயமடைந்து வரும் பொதுமக்களுக்கு உதவுவதற்கென பிரான்ஸ் அரசு நடமாடும் வைத்தியசாலை ஒன்றை நிர்மானிக்கவுள்ளது இதற்கென வைத்தியர்கள், மற்றும் சேவையாளர்கள் உட்பட 75 பேரை கொண்ட குழு பிரான்ஸ் அரசின் அனுசரணையுடன் இன்று (25.04.2009) இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித போகொல்லாகமவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வலயத்தின் 400 மீட்டர் பகுதி படையினர் வசம்
 

பாதுகாப்பு வலயத்தின தெற்கு பகுதியில் 400 மீட்டர் பகுதியை படையினர் இன்று (25.04.2009) தமது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்துள்ளதாக 58வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் சவெந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக படையினர் மிகவும் அவதானத்துடன் முன்னேறிவருகின்றனர் என அவர் கூறினார்.

 

 

இந்த பகுதியில் தேவாலயம் ஒன்றில் சிக்குண்டிருந்த 3 கத்தோலிக்க மதகுருமார்களையும், 14 கன்னியாஸ்திரிகளையும் படையினர் மீட்டுள்ளனர். புலிகள் சிறுவர்களை பலவந்தமாக தமது படையணிக்கென இழுத்து செல்வதாக இந்த மதகுருமார் தெரிவித்துள்ளனர். இதனாலேயே அந்த சிறுவர்களின் பெற்றோர் புலிகளின் பகுதியில் இருந்து வெளியேறமுடியாதுள்ளது. புலிகள் மக்களை மிக கொடூரமாக நடத்துவதோடு தப்பித்து செல்பவர்கள் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர் என அவர்கள் கூறினர்.

இராணுவ தளபதி வன்னிக்கு விஜயம்

இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று (25.04.2009) காலை வன்னிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வன்னி படைத் தலைமையகத்திற்கு சென்ற அவர் பொதுமக்களை விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்படும் மனிதாபிமான நடவடிக்கையின் இறுதி கட்டம் குறித்து அங்குள்ள இராணுவ அதிகாரிகளுடன் விரிவாக ஆராய்து ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

தற்பொழுது பாதுகாப்பு வலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகள் இராணுவத்தளபதியின் கண்காணிப்பின் கீழ் இடம் பெற்று வருவதினால் அவர் அது குறித்து கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

05.00 PM

 

மட்டக்களப்பு வவுணதீவில் ஒருவர் சுட்டுக்கொலை.

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இன்று (25.04.2009) காலை ஒருவர் ஆயுததாரிகளினால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இவர் முல்லாமுனையைச் சேர்ந்த பால் வியாபாரியான வைரமுத்து ராமச்சந்திரன் (வயது 26) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வீட்டிலிருந்து பால்வியாபார நிமித்தம் சைக்கிளில் சென்றபோது வீதியில் வைத்து சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

மேல்மாகாணசபை தேர்தல் சுமூகமாக இடம் பெறுகிறது

மேல்மாகாணசபையில் இன்று (25.04.2009) இடம்பெறும் தேர்தலில் 35 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதுவித அசம்பாவிதங்களும் இன்றி இந்த வாக்கெடுப்புக்கள் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்து மந்த கதியில் இடம் பெற்ற வாக்களிப்பு தற்பொழுது சூடு பிடித்துள்ளது. பொலிஸாரும் படையினரும் இணைந்து பாதுகாப்பு கடைமைகளில் ஈடுப்பட்டுள்ளனார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோன் ஹோம்ஸ் இலங்கை வருகிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் இன்று (25.04.2009) இலங்கை வரவுள்ளார். இவர் இலங்கையில் 3 நாட்கள் தங்கியிருப்பார் என ஐ நா செயலகம் தெரிவித்துள்ளது. இந்த விஜயதின் போது பல அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ள ஜோன் ஹொம்ஸ் இடம் பெயர்ந்த மக்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பும் தேவை இல்லை

இலங்கைக்கு இந்திய அமைதிப்படையினரை அனுப்ப வேண்டிய தேவை இல்லை என இந்தியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆனந் சர்மா தெரிவித்துள்ளார். கல்கத்தா நகரில் நேற்று (24.04.2009) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளாh. மக்களின் மனிதாபிமான நடவடிக்கை தொடர்பிலேயே இந்தியா அதிக கவனம் செலுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் பிரமுகர்கள் நாடு திரும்பியுள்ளனர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் ஆகிய இருவரும் நாடு திரும்பியுள்ளனர். அங்கு சென்ற இவர்கள் கருத்து தெரிவிக்கும் போது புலிகளின் பிடியில் இருந்து வரும் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விளக்கி கூறியுள்ளதாகவும் இந்திய அரசு இலங்கை பிரச்சினை தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தும் எனவும் கூறியுள்ளனர்.

மட்டக்களப்பில் 3பேர் காணாமல் போயுள்ளனர்.

மட்டக்களப்பில் 3 பேர் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிலும் பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடந்த 16ம்திகதி செங்கலடி கணபதி நகரைச் சேர்ந்த சண்முகராசா கமலானந்தராஜா (வயது 25) என்பவர் தனது வீட்டில் இருந்து சகோதரியின் வீட்டுக்கு சென்ற வேளை காணாமல் போயுள்ளார்.

கடந்த 18ம் திகதி சமுர்த்தி அதிகாரியான மகிழூரை சேர்ந்த பொன்னம்பலம் ரவீந்திரன் (வயது 35) என்பவர் வீட்டிற்கு வாகனத்தில் வந்த சிலரால் பலவந்தமாக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

கடந்த 19ம் திகதி செங்கலடியை சேர்ந்த கூலி வேலை செய்யும் சீனித்தம்பி சந்திரசேகரன் (வயது 34) என்பர் தனது வீட்டிற்கு அண்மித்து நின்றவேளை அங்குவந்த சிலரால் அழைத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

09.30 AM

 

மேல்மாகாணசபை தேர்தல் நடைபெறுகிறது

மேல்மாகாணசபைத் தேர்தலுக்குரிய வாகளிப்பு இன்று (25.04.2009) நடைபெற்று வருகிறது. இவை அமைதியான முறையில் இடம்பெறுகிறது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 38 இலட்சத்தி 20 ஆயிரத்தி 214 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 15 இலட்சத்தி 60 ஆயிரத்தி 593 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 14 இலட்சத்தி 58 ஆயிரத்தி 295 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 8 இலட்சித்தி ஆயிரத்தி 326 பேரரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

புலிகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும்

புலிகள் ஆயுதங்களை கீளேவைத்து மூன்றாம் தரப்பு ஒன்றிடம் சரணடையுமாறு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நாளாந்த கூட்டம் நேற்று (24.04.2009) நடைபெற்றதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தின் பதில் பேச்சாளர் றோபேட்வூட் கருத்து தெரிவிக்கும் போது இணைத்தலைமை நாடுகள் இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்து வருவதாக தெரிவித்தார். பொதுமக்களை பணயகைதிகளாக வைத்திருப்பதையும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் புலிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்கா புலிகளிடம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு சர்வதேச சமூகம் உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

 07.50 AM

 

மோதல் பிரதேசத்திற்கு ஐநாசபையை அனுமதிக்க முடியாது

இலங்கையில் மனிதாபிமான பணிகளை மேற்கொள்ளவென விசேட குழுஒன்றை இலங்கைக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக ஐநா செயலர் பான்கி மூன்தெரிவித்துள்ளார். இலங்;கை நிலவரம் தொடர்பில் இனியும் காலம் கடத்த முடியாது. இந்த குழுவினர் மோதல் வலயப்பகுதிக்கு அனுப்பப்படவுள்ளனர். நிலமையை அவதானிப்பதும் மனிதாபிமான பணிகளை மேற்கொள்ளுவதுமே இவர்களின் முக்கிய நோக்காகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர் போர் நடைபெறும் இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். தற்போதுள்ள நிலமையில் அவர்கள் அங்கு செல்வது ஏற்புடையதல்ல. பாதுகாப்பு வலயத்தில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் இடம் பெற்றுவருகிறது. அங்கிருந்து மக்கள் மீட்கப்படுகின்றனர். பாதுகாப்பு வலயத்தில் இருந்து வரும் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் ஐநா சபை உதவிகளை மேற்கொள்ளலாம். பாதுகாப்பு வலய பகுதியில் காயமடைந்த மக்களை வெளியேற்றி படையினரின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரும் பணியினை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மேற்கொண்டு வருகிறது. மேலும் பாதுகாபப்பு வலயத்தின் தென் பகுதியை நோக்கி படையினர் தமது முன்னகர்வுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கனரக ஆயுதங்கள் எதனையும் உபயோகிக்கவில்லை. துப்பாக்கிகள் மாத்திரமே பிரயோகிக்கின்றனர் என கூறினார்.

 

24-04-2009,  10.50 PM

 

இந்திய அரசியல் பிரமுகர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கெ. நாராயணன் ஆகிய இருவரும் இன்று (24.04.2005) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பில் பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்ச, மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன் போது உலகிலேயே பணயக்கைதிகளாக இருந்த பெருமளவான மக்களை விடுவித்ததற்கும், விடுவிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் சேவைகளுக்கும் நாராயணன், மற்றும் சிவசங்கர் மேனன் ஆகிய இருவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வலயத்தில் இருந்து வரும் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகளிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் வன்னிக்கு அழைத்து வரப்பட்டனர்

கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் ஆகிய பகுதிகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளளர்கள் இன்று (24.04.2009) அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இது நடைபெற்றுள்ளது. இவர்கள் கொழும்பு ரத்மலானை விமானநிலையத்தில் இருந்து விமானப்படையினரின் விமானத்தில் இந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டதோடு கிளிநொச்சியில் 58வது படையணியின் கட்டளையிடும் தளபதி சவிந்திர சில்வாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன் போது தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கை குறித்து படை தளபதி விளக்கமளித்துள்ளார்.

மன்னார் வைத்தியசாலைக்கு மேலும் நோயாளர் வருகை

புல்மோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொகுதி நோயாளர்கள் நேற்று (23.04.2009) மாலை மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் 20 அன்புலன்ஸ் வண்டிகள் மூலம் 255 பேர் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் மன்னார் வைத்தியசாலையில் 3000ம் பேர் வரையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் நன்கு குணமடைந்த 300 பேர் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

05.15 PM

 

அமைச்சர் முரளிதரன் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின்

உபதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (24.04.2009) இடம்பெற்ற போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 5 உபதலைவர்களில் ஒருவராக இவர் நியமனம் பெற்றுள்ளார்.

இந்தியாவின் முக்கியதலைவர்கள் இலங்கை வந்துள்ளனர்

இந்திய வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே நாராயணன் ஆகய இருவரும் இன்று (24.04.2009) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலமையிலான உயர்மட்டக் குழுவினர் இலங்கை விடயம் தொடர்பில் கூடி ஆராய்ததன் அடிப்படையிலேயே இந்திய பிரமரின் சிறப்பு தூதுவர்களாக இவர்கள் வந்துள்ளனர். இவர்கள் இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக ஆராயவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுடர்ஒளி ஆசிரியர் வித்தியாதரன் விடுதலை

சுடர்ஒளி ஆசிரியர் வித்தியாதரன் இன்று (24.04.2009) விடுதலை செய்யப்பட்டுள்ளார். அண்மையில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இவர் தடுப்புக் காவலில் இருந்துள்ளார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

03.15 PM

 

பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் வருகை

 

பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து நேற்று (23.04.2009) 2 அயிரம் பொதுமக்கள் படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு வலய பகுதியில் 58, 59, 55, 53வது, படையணிகளும் 8வது நடவடிக்கை படையினரும் மக்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

புலிகள் தற்பொழுது சிறிய நிலப்பரப்பிற்குள் ஒடுக்கப்பட்டுள்ளனர்;. கடந்த 20ம் திகதி தொடக்கம் இன்றுவரை 1 இலட்சத்து 6 அயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் படையினரிம் தஞ்சமடைந்துள்ளனர் என மேலும் அறிவவிக்கப்பட்டுள்ளது

 

 09.15 AM

 

இலங்கையின் எல்லா பகுதியிலும் தேசியக்கொடி பறக்கும்

இலங்கையின் எல்லா பகுதியிலும் இன்னும் சில நாட்களில் தேசியக்கொடி பறக்கும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சுதந்திரமான நாடு ஒன்றை காண்பதற்கு மக்கள் நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் இருக்கின்றனர். பலவந்தமாக கப்பம் கோருதல், சிறுவர்களை படையில் இணைத்தல் போன்ற மனித பேரவலங்கள் மக்கள் வாழும் நாள் வெகு தொலைவில் இல்லை. புலிகள் இயக்கம் 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குள் சிக்கியுள்ளது.

பாணந்துறையில் நேற்று (23.04.2009) மாலை சுனாமியால் முற்றாக அழிந்து போன ஸ்ரீ சுமங்கலா என்ற பாடசாலையில் கட்டடங்ளை மீள கட்டியெழுப்பும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மகிந்த சிந்தனை மூலம் சிறந்த ஒரு சமுதாயம் உருவாகி வருகிறது.

மேல்மாகாணசபை தேர்தலின் அனைத்து வேலைகளும் நிறைவு

மேல் மாகாண சபை தேர்தல்களுக்குரிய அனைத்து வேலைகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்களிப்பு நிலையங்களில் கடைமையாற்றும் ஊழியர்கள் இன்று (24.04.2009) காலை அந்தந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 2769 வாக்கு சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. நாளை நடைபெறவுள்ள இந்த தேர்தல் மூலம் மேல்மாகாணசபைக்கு 104 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதில் 3 இலட்சத்து 82 ஆயிரத்தி 241 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்களர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் தயாநந்த திஸநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்த விசேட பாதுகாப்பு திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கென 17 ஆயிரம் பொலிஸாரும், ஆயிரம் படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்தலை நீதியாகவும் அமைதியாகவும் நடத்துவதற்கு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என பொலிஸ்மா அதிபர் கேட்டுள்ளார்.

தேர்தலை முன்னிட்டு மேல் மாகாணத்தின் அரச பாடசாலைகள் இன்றுடன் தற்காலிகமாக விடுமுறை விடப்படவுள்ளது. சில பாடசாலைகள் வாக்களிப்பு நிலையங்களாகவும், சில பாடசாலைகள் வாக்கு எண்ணும் நிலையங்களாகவும் அறிவிக்கப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளது.

 

23-04-2009,  11.50 PM


காயமடைந்த மக்களுக்கு விசேட சுகாதார திட்டம்

பாதுகாப்பு வலயத்தில் இருந்து வரும் காயமடைந்த மக்களுக்கு நேற்று (22.01.2009) முதல் விசேட சுகாதார சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிறுவர்களுக்கு போசாக்குள்ள உணவுகளை வழங்குவதற்கும், தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்கும், நோயாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளுக்கு புதிய கட்டில்கள் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு மக்கள் படகு மூலம் அழைத்து வரப்பட்டனர்

பாதுகாப்பு வலயத்தில் இருந்து ஒரு தொகுதி மக்கள் இன்று (23.04.2009) யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு படகுகள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அங்கிருந்து தென்மராட்சி பகுதிக்கு வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளனர். 10க்கும் மேலான பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டள்ளனர். இதில் 23 பேர் காயமடைந்த நிலையில் இருந்ததாகவும் இவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதுவரை யாழப்பாணத்திற்கு வந்த மக்களின் தொகை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வலயத்திலேயே புலிகளின் தலைவர் இருக்கக்கூடும்

புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பு வலயத்தின் தென்பகுதியலே பதுங்கி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புலிகளின் பிடியில் மீதமுள்ள பொதுமக்களுக்கு மத்தியில் மறைந்து இருக்கின்றார். அவர் தப்பிகக்க வேண்டுமாயின் கடல் மார்க்கமாகவே தப்பிக்க முடியும் அன்றி தரை மார்க்கமாக தப்பிப்பது சாத்தியமற்ற விடயம் என ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.
 

09.50 PM

 

இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தியா உணவு

இந்தியா முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்தில் இருந்து வரும் மக்களுக்கு என உணவுப் பொதிகளை இன்று (23.04.2009) அனுப்பி வைத்துள்ளதாக பி ரி ஐ செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 40 ஆயிரம் உணவுப் பொதிகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை நிலவரம் குறித்து இந்தியா ஆராய்வு

இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து இந்திய அரசின் உயர்மட்ட குழு நேற்று (22.04.2009) இரவு விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளது பிரதமர் மன்மோகன் சிங் தலமையிலான இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ. கே அன்ரனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன், வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இலங்கையில் நடைபெற்றுவரும் இறுதி தாக்குதல் நடவடிக்கை குறித்து விரிவாக ஆரயப்பட்டுள்ளது. புலிகள் பொதுமக்களை பணய கைத்திகாளாக வைத்திருப்பதை உடனடியாக நிறுத்தி அந்த மக்களை சுதந்திரமாக வெளியேறுவதற்கு இடமளிக்க வேண்டும் என வலியுறுத்தி கூறியுள்ளார். அத்துடன் தப்பித்து வரும் மக்களுக்கு இலங்கை அரசு அனைத்து தேவைகளையும் செய்து கொடுக்க வேண்டும். இலங்கை பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்;காக அமையாது அரசியல் மட்டத்திலேயே தீர்வு காணப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.


இலங்கை நிலவரம் தொடர்பாக ஐ நா ஆராய்வு

ஐ நா பாதுகாப்பு சபை இலங்கையின் நிலவரம் குறித்து நேற்று (22.04.2009) விரிவாக ஆராய்ந்துள்ளது. ஐநா பாதுகாப்பு சபையின் தலைவரான மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த ஹெலொட் ஹலர் தலைமையில் நடத்த இந்த மாநாட்டில் 15 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்த ஐநா செயலாளர் நாயகம் பான் கிமூனின் விசேட தூதுவர் விஜய் நம்பியார் இலங்கையின் நிலைவரம் குறித்து ஐ நா பாதுகாப்பு சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்தே இந்த மாநாடு இடம் பெற்றுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த ஐநா பாதுகாப்பு சபையின் தலைவர் ஹெலொட் ஹலர் புலிகள் இயக்கம் ஒர்; பயங்கரவாத அமைப்பு. அவர்கள் மக்களை பணய கைதிகளாக வைத்திருப்பது கண்டிக்கப்படவேண்டிய விடையம். புலிகள் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு இடமளிக்க வேண்டும். தற்போதைய நிலமையில் யுத்த நிறுத்தம் ஒன்றை கோருவதானது புலிகள் பலமடைவதற்கு மட்டுமே உதவும். இதனை கொண்டு பொதுமக்களி;ன் பாதிப்பினை எந்தவகையிலும் தடுக்க முடியாது என வலியுறுத்தி கூறியுள்ளார்.

மேலும் இந்த பிரச்சினைக்கு தீர்வாக புலிகள் தீவிரவாத செயலை கைவிட்டு ஆயுதங்களை கிழேவைத்து சரணடைந்து அரசியல் நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்களுக்கு உதவுவதற்கென இலங்கை அரசிற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

07.50 PM

 

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு

புளொட் ஊட்டச்சத்து பிஸ்கட் சமைத்த உணவு வழங்கியது

வன்னியில் பாதுகாப்பு வலய பகுதியில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வவுனியாவுக்கு பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு அரச செயலக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைய, புளொட் அமைப்பினர் ஊட்டச்சத்துள்ள பிஸ்கட் மற்றும் சமைத்த உணவு என்பனவற்றை கடந்த இருதினங்களாக வழங்கிவருவதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் புனர்வாழ்வு நடவடிக்கை பொறுப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

ஒரேநேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி்க்குள் வந்துள்ளதையடுத்து, அவர்களது அவசர உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பொதுமக்களின் ஒத்துழைப்போடு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊட்டசத்துமிக்க 700 கிலோ பிஸ்கட் மற்றும் இரண்டு தினங்களாக 30 ஆயிரம் சமைத்த உணவுப் பார்சல்கள் என்பன பொதுமக்களின் பேருதவியோடு வழங்கப்பட்டுள்ளதாகவும் புளொட் அமைப்பி்ன் புனர்வாழ்வு நடவடிக்கை பொறுப்பாளர் கண்ணன் கூறியுள்ளார்

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவைச் சமைப்பதற்கு கோவில்குளம் சிவன்கோவில் அறங்காவல் அவையினர் முக்கிய ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

03.30 PM

 

பாதுகாப்பு வலயத்தில் மக்களை மீட்கும் பணி தொடர்கிறது.

 

முல்லைத்தீவு புதுமாத்தளன் பாதுகாப்பு வலய பகுதியில் இருந்து மக்கள் வந்தவண்ணமுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் படையினரால் முன்னெடுத்து செல்லப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 


கடந்த 20ம் திகதி தொடக்கம் இன்று (23.04.2009) காலை வரை 103143 பொதுமக்கள் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதில் கடந்த 20 ம் திகதி மாத்திரம் 31017 சிறுவர்களும், 27990 பெண்களும், 24422 ஆண்களுமாக 83429 பேர் 58வது படை பிரிவினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

08.30 AM

 

புலிகள் 5 சதுர கிலோமீற்றருக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

புலிகள் தற்பொழுது 5 சதுரகிலோமீற்றர் பரப்பளவிற்குள் முடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (22.04.2009) இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தப்பித்து வரும் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு புலிகளின் தலைவர் பிரபாகரன் புலி உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். புலிகளுடன் போரை நிறுத்தி சமாதான பேச்சுக்களை நடத்துமாறு பல தரப்புக்களிடமிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இவற்றிலிருந்து மீண்டு எழுந்து நாட்டை காப்பதற்கு அரசாங்கத்தாலும், படையினராலும் முடிந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தல் விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.

படையினரின் முன்னகர்வு நடவடிக்கை தொடர்கிறது

பாதுகாப்பு வலயத்தின் தென்பகுதியை கைப்பற்றும் நடவடிக்கை இன்று (23.4.2009) நடைபெற்று வருவதாக படையினர் தெரிவித்துள்ளனர். புலிகளின் பிடியில் இருக்கும் பொதுமக்களை முழுமையாக விடுவித்து புலிகளை முற்றாக அழிக்க சில மணித்தியாலங்கள் போதும் என அவர்கள் தொவித்துள்ளனர்.

பாதுகாப்பு வலயத்தில் வடகிழக்கு பக்கமாக இருந்த வெல்லாமடம் பகுதிக்குள் லெப்டினட் கேணல் கித்சிறி ஏக்கநாயக்க தலைமையிலிலான 11வது படைப்பிரிவு நேற்று (22.04.2009) ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் புலிகளின் கடும் தாக்குதல்களை முறியடித்து படையினர் உட்பிரவேசித்துள்ளதாக இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

பாதுகாப்பு வலயத்;தின் வடக்கு பகுதியை பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான 58வது படையணி நேற்று (22.04.2009) தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இவர்கள் கடந்த 20ம் திகதி பாதுகாப்பு வலயததினுள் உட்பிரவேசித்து பெருமளவான மக்களை விடுவித்துள்ளனர்.

 

22-04-2009, 10.45 PM

 

பயங்கரவாதம் இல்லாமல் போக சில மணித்தியாலங்களே



பயங்கரவாதம் நாட்டில் முற்றாக இல்லாது போய் ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப இன்னும் ஒரு சில மணிநேரங்களே இருக்கின்றன என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நட்சத்திர கோட்டல்களில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரியோசனமற்ற விவாதங்களை நடத்த நேரம் ஏதும் இல்லை. தொழிற்துறை மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள், மற்றும் அங்கு பயிற்சிபெறும் மாணவர்களையும் அலரிமாளிகையில் இன்று (22.04.2009) சந்தித்து பேசியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலய பகுதிக்குள் படையினர் உட்புகுந்துள்ளனர். இதனை அடுத்து புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு தப்பி வரும் மக்கள் மீது புலிகள் துப்பாகி பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர். தமது உறவுகள் மரணமடைவதை கண்ணால் காணும் இவர்கள் படையினரின் கரங்களை பற்றி கதறி அழுகின்றனர். இலட்சக் கணக்கான மக்களை பணயகைதிகளாக வைத்திருந்த புலிகளின் இறுதி தருணம் வந்துவிட்டது என கூறினார்.

 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜெனீவா சென்றுள்ளார்

சமூகசேவைகள் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜெனீவாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயெ அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனை அமைச்சர் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


மேல் மாகாணசபை தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு

மேல் மாகாணசபை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று (22.04.2009) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அனைத்து அரசில் கட்சிகளும் அவர்களது இறுதி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிரதான 3 மாவட்டங்களிலும் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஐக்கிய தேசியக் கட்சி கொஸ் கஸ் சந்தியில் தமது இறுதி பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.


வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள் அனைவரும் இன்று (22.04.2009) ஒரு மணிநேர பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா வைத்திய சாலையின் பொண் நோயியல் நிபுணர் மொகமட் சுல்தான் மீரா ஆயுததாரிகளினால் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்தே இந்த பகிஸ்கரிப்பு இடம் பெற்றுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா கிழை இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் அஞ்சலி சுலோகங்களையும், கண்டன வாசகங்கள் அடங்கிய சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர். படையினரும் பொலிஸாரும் தமக்கான பாதுகாப்பை தரவேண்டும் என கேட்டதை அடுத்து அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

06.35 PM

 

பாதுகாப்பு வலயத்தின் வடக்கு பகுதி படையினர் வசம்

படையினர் பாதுகாப்பு வலயத்தின் வடக்கு பகுதியை இன்று (22.04.2009) காலை முற்றாக கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 58வது படைப்பிரிவினரே இந்த பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இதனை அடுத்து புலிகள் 8 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குள் முடக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலின் போது 35 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மோதலை அடுத்து நடத்தப்பட்ட தேடுதலின் போது புலிகளின் சடலங்களும் வாகனங்களும் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

படையினர் பாரிய ஆயுதங்கள் எதனையும் உபயோகிக்காது சிறிய ஆயுதங்களை கொண்டே இந்த முன்னேற்ற முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் நலைனை கருத்தில் கொண்டே இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர். இருப்பினும் புலிகள் படையினர் மீது பாரிய ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் என இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மக்கள் படையினரின் பகுதிக்குள் வந்தவண்ணமுள்ளனர்

 

 

படையினர் கடந்த 72 மணிநேரத்தில் 81423 பொதுமக்களை மீட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. உலகில் பெருமளவான பணயக்கைதிகளை மீட்கும் பணியினை இலங்கை படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இன்று (22.04.2009) கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதுையில் புலிகளின் பிடியில் இருந்து தப்பித்து 1 லட்சத்து 53 ஆயிரம் பேர்வரையில் படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளனர். பொதுமக்கள் தமது சுயவிருப்பத்தின் பேரிலேயே புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள் என்ற பொய்யான பிரச்சாரம் மக்கள் தப்பி ஓடும் வீடியோ காட்சியில் இருந்து புலனாகிறது. அவர்கள் புலிகளிடம் இருந்து தப்பிக்கும் விருப்புடனே படையினரிடம் வந்துள்ளனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் சாத்தியமற்றது

இலங்கையில் தற்காலிக போர்நிறுத்;தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பிரிட்டன் இலங்கை அரசிடம் கேட்டுள்ளது. நேற்று (21.04.2009) பிரிட்டிஸ் பிரதமர் கோடன் பிறவுன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசி மூலம் உரையாடும் போது இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இவரின் இந்த கோரிக்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். தற்பொழுது பெருமளவான மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்தவண்ணமுள்ளனர். இந்த நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று அவசியமற்றது என கூறியுள்ளார். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களை அழைத்து வர விமானங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மிதிவெடிகள் மற்றும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் இந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்படுவர் என பிரிட்டன் பிரதமருக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தப்பித்து வந்த மக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள்

இடம் பெயர்ந்து வந்து கிளிநொச்சியில் உள்ள மக்களுக்கு விமானப்படையினர் இன்று (22.04.2009) அத்தியாவசிய பொருட்களை விமானமூலம் கொண்டு சென்றுள்ளனர். இது கொழும்பு விமானப்படை தளத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ம் திகதி மக்கள் தப்பித்து வரும் போது புலிகள் மேற்கொண்ட தற்கொலை தாக்கல் நடத்தும் போது காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு விமானப்படையினர் பெரிதும் உதவிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் 238 போர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

புதுமாத்தளன் பகுதியில் படையினர் மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு விமானப்படையினர் உதவி வழங்கி வருவதாக விமானப்படை பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

 03.35 PM

 

புலிகளின் முக்கியஸ்தர்கள் படையினரிடம் சரண்

புலிகளின் ஊடக இணைப்பாளர் தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதன் தயாநிதியும், புலிகளின் முன்னாள் அரசில் துறை பொறுப்பாளர் சு.ப தமிழ் செல்வனின் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் என அழைக்கப்படும் குமார் பஞ்சரட்ணம் ஆகிய இருவரும் தமது குடும்ப உறுப்பினர் சகிதம் இன்று (22.05.2009) 58 வது படை பிரிவினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். புதுமாத்தளன் பகுதியில் புலிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்த மக்களுடன் வந்த இவர்களும் படையினரின் பகுதிகளுக்கு வந்து சரணடைந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

 

09.35 AM

 

பாதுகாப்பு வலய பகுதியில் மோதல் இடம்பெற்றுள்ளது

பாதுகாப்பு வலயப்பகுதியில் நேற்று (21.04.2009) படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம் பெற்றுள்ளது. இதில் 45 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலை அடுத்து நடத்தப்பட்ட தேடுதலின் போது புலிகளின் 22 சடலங்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரும், 58வது படையணியினரும் இணைந்து புலிகளின் தலைவர் ஒருவர் பயணித்த கப் ரக வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் புலிகளின் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பிற்கு சிறிது காலம் பொறுப்பாக இருந்த குமாரன் என்பவர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலில் குறித்த கப் வாகனம் முழுமையாக சேதடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புதுமாத்தளன் பகுதிக்குள் ஊடுருவியுள்ள படையினர் அங்கு பாடசாலை கட்டடம் ஒன்றில் இயங்கிய வைத்தியசாலையை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். அத்துடன் புலிகளின் பொலிஸ் நிலயம் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அரச கட்டுபாட்டு பகுதிக்கு அதிகளவான மக்கள் வருகை

 

புலிகளின் பிடியில் இருந்து இதுவரை 70 ஆயிரம் பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளனர். இது கடந்த 36 மணித்தியாலங்களுக்குள் நிகழ்ந்துள்ளது. 3 கிலோமீட்டர் நீளமான மண் அணை தகர்க்கப்பட்டதை அடுத்தே மக்கள் இவ்வாறு படையினரிடம் தஞ்சமடைந்து வருகின்றனர். பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள அம்பலவாணன்பொக்கணை, மற்றும் புதுமாத்தளன் கிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள 58வது படையினரிடம் 60 ஆயிரம் பொதுமக்களும், மேலும் ஒரு தொகுதி மக்கள் சாலை கிழக்கில் நிலைகொண்டுள்ள 55வது படைப்பிரிவினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை புலிகளின் பகுதியில் இருந்த வந்த மொத்த சனத்தொகை 1 இலட்சத்தி 20 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்

 

புலிகளின் பிடியில் இருந்து எந்தளவு மக்கள் வந்தாலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என அராசாங்கம் தெரிவித்துள்ளது. அண்மை காலமாக அயிரக்கணக்கில் மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்தவண்ணமுள்ளனர். இந்த மக்களின் நிலைமைகளை கண்டறிவதற்கென ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்கள் அடங்கிய இரு குழுக்கள் அந்த பகுதிக்கு சென்றுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார். தப்பி வரும் மக்களை வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையம் மற்றும் நிவாரண கிராமங்களுக்கு அழைத்து வருவதற்கு இலங்கை போக்குவரத்து சபையின் 150 பஸ்க்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மக்களுக்கு உலர் உணவுகள் உட்பட அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த மக்களுக்கு தேவையான நலன்புரி நிலையங்கள் அமைப்பதற்கென வவுனியா பறையனாலங்குளம் பகுதியில் 600 ஏக்கர் காணியும், செட்டிகுளத்தில் 200 ஏக்கர் காணியும், மதவாச்சியில் 200 ஏக்கர் காணியும், தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தாண்டிக்குளம், புளியங்குளம், ஓமந்தை முதலியார்குளம் ஆகிய பகுதிகளில் பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்தேவி ரயில் தாண்டிக்குளம் வரை செல்லவுள்ளது

யாழ்தேவி ரயில் 20 வருடங்களின் பின்னர் கொழும்பில் இருந்து நாளை (23.04.2009) தாண்டிக்குளம் வரை செல்லவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். இந்த சேவையானது நாளை தொடக்கம் அமுலுக்கு வரும.; யாழ் ரயில் பாதை அமைக்கும் வேலைத்திட்டம் மிகவேகமாக நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். என அவர் கூறியுள்ளார்.

 

21-04-2009, 11.45 PM

 

நாட்டின் அபிவிருத்தியை கட்டியெழுப்புவதன் மூலம்

வெளிநாடுகளுக்கு அடிபணிய வேண்டிய தேவையில்லை

நாட்டின் அபிவிருத்தியை கட்டியெழுப்பி பொருளாதாரத்தை அதிகரிப்பதன் மூலம் இலங்கை வெளிநாடுகளுக்கு அடிபணிய வேண்டிய தேவை இல்லை என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (21.04.2009) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சில தரப்பினர் தற்பொழுதும் புலிகளுடன் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது மிகவும் வேடிக்கையை அளிக்கிறது. நாட்டில் பயங்கரவாதத்தை அழித்து நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டுசெல்வதே அரசாங்கத்தின் ஒரே நோக்காகும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.

இலங்கையில் இருந்து இன்று (21.04.2009) காலை இந்தியாவின் தமிழகத்திற்கு தமிழ் மக்கள் அகதிகளாக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது. 8 பெண்கள் 2 குழந்தைகள் உட்பட 19 பேர் அடங்கிய குழு ஒன்று படகு மூலம் தமிழகத்தின் வேதாரணியம் ஆர்க்காடு துறைக்கு வந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன. இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று 14 படகுகள் மூலம் 34 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பின்னர் முகாம்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தழிழக சேல சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் யுத்தநிறுத்தம் செய்யவேண்டும் என கோரி இன்று (21.04.2009) தமிழகத்தின் சேலம் சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் வீதியால் பயணம் செய்தவர்களுக்கும் வாகனங்களுக்கும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து பலரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளதோடு ஆர்ப்பாட்டமும் கலைக்கப்பட்டுள்ளது என தமிழக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

09.30 PM

 

வன்னியில் புலிகளுடனான யுத்தத்தை நிறுத்தக் கோரி

 பிரான்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலி ஆதரவாளர்கள் கைது

 

வன்னியில் யுத்தநிறுத்தம் மேற்கொள்ள கோரி புலிகளுக்கு ஆதரவாக நேற்று (20.04.2006) பிரான்சில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகச்செய்ய பிரான்ஸ் பொலிஸார் தடியடி நடாத்தியதுடன் வன்முறைகளில் ஈடுபட்ட 210 க்கு மேற்பட்ட புலி ஆதரவாளர்களை கைது செய்தனர்.

 

http://www.youtube.com/watch?v=ZgXiIsFlhvo

 

 

08.30 PM

 

புலிகளின் தலைவர் பயங்கரவாதியே. இந்தியா தெரிவிப்பு

புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒர் போர் குற்றவாளி. அவர் தனது பயங்கரவாத கொள்கைகளில் இருந்து மாறுபடவில்லை. தற்பொழுதும் அப்படியே செயற்படுகின்றார் என தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு போதனா

வைத்தியசாலையின் மருத்துவர்களும் பணியாளர்களும் இன்று (21.04.2009) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவில் நேற்று பெண் வைததியர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்தும் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது வைத்தியசாலையின் அன்றாட நிகழ்வுகள் எதுவும் பாதிப்படையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

03.00 PM

 

இன்றும் 3000 மக்கள் படையினரிடம் தஞ்சம்

 

 

முல்லைத்தீவு புதுமாத்தளன் அம்பலவாணன் பொக்கணை பகுதியில் இருந்து இன்று (21.04.2009) காலை 3000 பொதுமக்கள் 58வது படைப்பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த பகுதியில் 58, மற்றும் 53 வது படைப்பிரிவினர் தமது முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு வலய பகுதியில் பெருமளவான பகுதியினை படையினர் கைபற்றியுள்ளனர். இதனை அடுத்தே மக்கள் படையினரிடம் தஞ்சமடைவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் புலி உறுப்பினர்களுக்கும் படையினரிடம் சரணடையுமாறு விதிக்கப்பட்ட 24 மணிநேர காலக்கெடு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வருகையை ஐநா வரவேற்றுள்ளது

புலிகளின் பிடியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வந்துகொண்டிருப்பதை வரவேற்பதாக ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதனை இட்டு ஐநா சபை மிகுந்த சந்தோசம் அடைந்துள்ளது என ஐநா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மோதல் பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் குறித்து கவலையடைவதுடன் அவர்கள் குறித்து மிகுந்த கவனம் எடுத்துள்ளது.

மோதல் இடம்பெறும் பகுதியில் இருந்து மக்கள் வெளியேறுவதை புலிகள் தடுத்து வைத்திருப்பது கவலையளிப்பதாகவும், புலிகள் அவர்களை சுதந்திரமாக வெளியேற இடம் கொடுக்க வேண்டும் எனவும் ஐ நா செயலர் பான்கி மூன் தனது அறிக்கையில் தெரிவித்துளார்

 

08.35 AM

 

புலிகளுடன் தொடர்புடைய இருவர் கைது

அம்பாறை திருக்கோவில் பகுதியில் புலிகளுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருக்கோவில் பொலிஸ் நிலையத்;தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளான நாகராஜா நாகரட்ணம், மற்றும் வர்த்தகரான கணபதிப்பிள்ளை சுரேஸ்குமார் என தெரிவிக்கப்படுகிறது. புலிகளுக்கு உதவி புரிந்தார் என்ற சந்தேகத்தில் சுரேஸ் குமார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழர்கள் பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் 2000ம் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு பொலிஸ் சேவையில் இணைத்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (20.04.2009) இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்களை நியமிப்பது தொடர்பான மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இந்தனை தெரிவித்துள்ளார். இதில் சிவில் பாதுகாப்பு குழுவுக்கு பொறுப்பான மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம், எஸ், எஸ் அமீர்அலி, பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன மற்றும் பல பாதுகாப்பு, சிவில் அதிகாரிகள் பங்குபற்றினர். இங்கு உரையாற்றிய அமைச்சர் முரளிதரன் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

குமுறும் மலையகம்

 

எங்கள் சின்னம்

 

அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகள்

 

தேர்தல் திணைக்களத்தால்

03 ஜுலை 2008 இல் வெளியிடப்பட்டது

 

 

 

 

அவுஸ்;திரேலியாவில வெளிவரும் உதயம் மாத இதழில் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவ

ர்கள் எழுதிய 13வது அரசியல் யாப்பு திருத்தம், அதன் அமுலாக்கம் குறித்த கட்டுரை தொடர்
 

 

கூட்டமைப்பு

 

01 ஆகஸ்ட் 2008
த.வி.கூ புளொட்

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
 


அறிக்கைகள்

 

01 மே 2007
ஈ.பி.ஆர்.எல்.எவ்

 


கட்சியின் விளக்கம்

 

10 நவம்பர் 2006
இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு தொடர்பாக எமது கட்சியின் விளக்கம்
 

இணைத்தலைமை
 

22 நவம்பர் 2006
 


ஜெனீவா பேச்சுவார்த்தை
 


மத நிறுவனங்கள்

 

08 ஏப்ரல் 2007
 


 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரேரணைகள்
 

Proposal for the Political Solution to the Ethnic Conflict in Srilanka
EPRLF seeks merger of Sri Lanka's north-east Indo-Asian News Service 30 March 2007

Indian backing proposals styled on the Indo-Lanka Accord The Island, March 26, 2007  

Moderate Tamils' constitutional proposal  Hindustan Times 23 March 2007

FRATERNAL PAGE

LSSP demands 13th Amendment be implemented
 

 

தோழர் றொபேட்
50வது பிறந்தநாள் நினைவு
 

மார்கழி 13
ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல்
khh;fop 13

<gpMh;vy;vt; kPJ jhf;Fjy;

 

Appeal to the leaders of  Political Parties and the People of  Tamil Naad 14 October 2008

 

 

 

மட்டக்களப்பு மாவட்ட உள்ள+ராட்சி தேர்தல்கள்- 2008
 

வாக்களிப்பு மற்றும் கட்சிகளுக்குக் கிடைத்த ஆசனங்கள்
 

மட்டக்களப்பு மாநகர மேயர் பத்மினி 13.03.2008 அன்று அளித்த செவ்வி
 

 

கிழக்கு மாகாணசபை தேர்தல் ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் வழங்கிய (14.03.2008) செவ்வி

 

 

 
     
 

 'ehk; kf;fSf;fhfg; NghuhLtnjd;gJ vk;kPJ Rkj;jg;gl;l flikNa jtpu vkf;F toq;fg;gl;l mjpfhuky;y"  Njhoh; f.gj;kehgh