INTERVIEWS
உலக
மானிடத்தின் ஒரு பகுதியாக வாழ்வது பற்றி சிந்திப்போம்.
தவறான வழிகளில் சென்றவர்கள் நேர்வழிக்கு
வருவதற்குமான இடைவெளிகள் அனுமதிக்கப்பட்ட வேண்டும்.
தி. ஸ்ரீதரன். பத்மநாபா ஈ பி ஆர் எல் எப்.
உலகில் எந்தப் பகுதியில் அநியாயம் இழைக்கப்பட்டாலும் அதனை மனப்பூர்வமாக
உணரக்கூடியவர்களாக இருங்கள். இலங்கையில் அனைத்து இன மக்களும் மகிழ்ச்சியாகவும்
சகோதரத்துவத்துடனும் ஐக்கியமாகவும் வாழ்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
இலங்கை சுதந்திரம் பெற்ற 60 வருடங்களில் இந்த நாடு துயரத்தின் கூடாரமாக
பேரழிவின் இருப்பிடமாக இருந்து வந்திருக்கிறது. குரோதங்களும் வன்மங்களுமே இங்கு
கோலோச்சி இருந்தன.
இந்த நாட்டில் மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பூத்துக்குலுங்க ஏழை என்றும் அடிமை
என்றும் யாரும் இந்த நாட்டில் இல்லையென்ற நிலையை ஏற்படுத்த நாம் எம்மை
அர்ப்பணிக்க வேண்டியிருக்கிறது.
அதற்கு பிரதானமாக மக்களின் வாழ்வில் ஜனநாயகம் உணரப்பட வேண்டும். ஜனநாயக
நிறுவனங்கள் பல்வேறு மட்டங்களிலும் வலுவுள்ளதாக்கப்பட வேண்டும்.
எமது அதிகார கட்டமைப்பு சாதாரண மக்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக
மாற்றப்படவேண்டும்
நீதிமன்றம் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்துறைகளில் இந்த மாற்றங்கள்
அவசியப்படுகின்றன.
அதேவேளை பிரதானமாகவும், முதன்மையாகவும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையே உறவு
ஜனநாயகப்படுத்தப்படவேண்டும்.
மேலாண்மை வகைப்பட்ட ஆதிக்க வகைப்பட்ட உறவு முறைகளே இந்த நாட்டில் பிரச்சினைகளின்
தோற்றுவாயாக மூலாதாரமாக இருந்திருக்கிறது.
அதுவும் நிலமானிய வகைப்பாடாகவே இந்த உறவுகள் காணப்படுகின்றன. தனிநபர் வழிபாடு
மக்களுக்கு அரசர்கள் வேண்டும் என்ற பத்தாம்பசலித்தனம் இங்கு தாராளமாகவே
காணப்படுகிறது.
மக்களுக்கு ஜனநாயக ஆட்சி நிறுவனங்கள் தேவையே தவிர ஒரேயொரு ஊரிலே ஒரேயொரு ராசா
தேவையில்லை.
இந்த ஒரேயொரு ராசா சிந்தனை வெற்றிகரமான ராசா சிந்தனை தமிழ் சிங்கள மக்கள்
மத்தியில் காணப்படுகிறது. எனவே மக்கள் மத்தியில் சிந்தனை ரீதியாக மாற்றம்
வேண்டும். இந்த சிந்தனை ரீதியான மாற்றம் இல்லாமல் அழிவுகளை நாம் தடுக்க முடியாது.
உதாரணத்திற்கு எமது சமூகத்திற்குள் ஊட்டப்பட்டிருந்த இந்த ஒரேயொரு ராசா சிந்தனை
எத்தகைய விபரீதங்களுக்கு எமது சமூகத்தை இட்டுச் சென்றதென்பதை நாம் 3 தசாப்த
அனுபவ வாயிலாக அறிகின்றோம்.
கூட்டு சிந்தனையை நிராகரிக்கும் போக்கு இங்கு பலரை நான் நான் என்று பேச
வைத்துள்ளது. அநாவசியமான விடயங்களிலும் நானே செய்தேன், நானே தான் என்ற
திருவிளையாடல் நாகேஷின் வாக்கியங்கள் காணப்படுகிறன்றன.
கடந்து வந்த 30 வருடங்களையும் ஆராய்வோமானால் எமது சமூகத்தில் ஏற்பட்ட
எழுச்சிகளிலும் வீழ்ச்சிகளிலும் வளர்ச்சிகளிலும் சிதைவுகளிலும் பல்வெறு சமூக
அரசியல் சக்திகளின் பங்களிப்புக்கள் இருந்திருக்கின்றன.
ஆக்கமும் , அழிவும் ஒன்றாக இருந்திருக்க முடியாது. இதில் தனிப்பட யாரும் உரிமை
கொண்டாட முடியாது. இதில் பல்வேறு ஆக்க சக்திகளினதும் விநாச சக்திகளினதும்
பங்களிப்புக்கள் இருக்கின்றன.
ஆக்கத்துக்குரிய சக்திகளால்தான் இன்றளவும் எமது சமூகம் வாழ்கிறது. இதில்
பலதரப்பாரதும் பங்களிப்புக்கள் இருக்கின்றன. இதில் அகங்காரம் கொள்ள எதுவும்
இல்லை. தவறான வழிகளில் சென்றவர்கள் நேர்வழிக்கு வருவதற்குமான இடைவெளிகள்
அனுமதிக்கப்பட வேண்டும்.
சரி பிழைகளை பற்றிய விவாதங்கள் நடைபெற வேண்டும். நூறு மலர்கள் மலர்வதும் , நூறு
கருத்துக்கள் முட்டி மோதுவதும் எமது சமூகத்தின் மிக மிக அவசியமானது.
அதற்கப்பால் அதற்கும் மேலாக தமிழர்கள் நத்தை ஓட்டினுள் வாழமல் சக சமூகங்களுடன்
எவ்வாறு ஐக்கியப்பட்டு செயற்படுவது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
வௌ;வேறு சமூகத்தவர் ஒருதரப்பார் மறுதரப்பை புரிந்து கொள்வதற்கு என்ன செய்ய
வேண்டும்? இதற்கான நிறுவனங்கள் தேவையில்லையா?
நாம் தென்னிலங்கை இடதுசாரி சக்திகள் , மற்றும் முற்போக்களர்களுடன் ஐக்கியமாக
செயற்படுவதற்கு தயாராக வேண்டும்.
எமது பிரச்சினைகளை சிங்கள மக்களுக்கு விளங்க வைப்பதற்கும் , சிங்கள மக்கள்
புரிந்து கொள்வதற்குமான நிலைமைகளை , சந்தர்ப்பங்களை , வாய்ப்புக்களை உருவாக்க
வேண்டும்.
உதாரணமாக இன்று 500 ரூபா சம்பளம் வழங்க கோரி மலையக தோட்டத் தொழிலாளர்கள்
போரட்டம் நடத்துகிறார்கள்.
முட்கம்பி வேலிகளுக்கு பின்னால் இருக்கும் மக்களின் அவலங்களுடன் நாம் விஷம் போல்
ஏறும் விலைவாசியுடன் போராடும் மலையக மக்களின் பிரச்சினைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு
செலுத்த வேண்டும்,
அந்தந்த பகுதி மக்களின் வாழ் நிலையில் அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் எம் மனதை
தொட்டாக வேண்டும்.
நாம் துன்பங்களை அனுபவிக்கின்றோம் உண்மை. ஆனால் நாம் மாத்திரம் துன்பங்களை
அனுபவிக்கிறோம் என்று கருதும் சுயபச்சாதாபத்தினுள் நாம் ஆழ்ந்துவிடக் கூடாது.
மற்றவர்களுடைய துன்பங்கள் பற்றிய அலட்சியமும்தான் தமிழர்களை அழிவின்
விளிம்பிற்கு இட்டுச் சென்றது.
தென்னிலங்கையில் நாளும் பொழுதும் பேரூந்துகளுக்கும் , ரயில்களுக்கும் , குண்டு
வைக்கும் போது பெருமளவு மனிதர்கள் அநியாயமாக மடிந்து கொண்டிருக்கும் போது
எம்மில் ஒரு பெரும் பகுதியினர் அலட்சியமாக இருந்தனர். ஒரு பகுதியினருக்கு இது
மனதுக்கு போதையூட்டும் விடயமாக இருந்தது.
இந்த நிலை மாற வேண்டும் நாம் தமிழ் கட்சிகளில் மாத்திரமல்ல தென்னிலங்கை
முற்போக்கு அரசியல் சக்திகளுடனும் , மலையக , முஸ்லீம் அரசியல் சமூக
ஸ்தாபனங்களுடனும் இணைந்து பணியாற்றுவதற்காக மனதை தயாராக வைத்திருக்க வேண்டும்.
அப்படி பணியாற்றுவதன் மூலமே இந்த நாட்டு மக்களுக்கு சிறந்ததொரு வாழ்க்ககையை நாம்
அமைத்துக் கொடுக்க முடியும்.
எமது மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் எவையெல்லாம் விமோசனம் அளிக்க கூடியனவோ அவை
பற்றி சிந்திப்போம். இன , மத , போதைகளில் இருந்து விடுபடுவது பற்றி சிந்திப்போம்.
உலக மானிடத்தின் ஒரு பகுதியினர் என எம்மை பற்றி சிந்திப்போம்.
தி.ஸ்ரீதரன்- பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
புதிய
தலைமுறையினருக்கு உலகின் ஜன்னல்கள் திறக்கப்பட வேண்டும்.
தி.ஸ்ரீதரன் பொதுச் செயலாளர்
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
அகதிகளான
மக்கள் மீளக்குடியேற்றப்பட வேண்டும். இனப்பிரச்சனைக்கு நியாயமானதொரு அரசியல்
தீர்வு வேண்டும். அத்தகைய தீர்வொன்று தமக்கு கிடைத்திருக்கிறதென்று தமிழ்
மக்கள் உணரக்கூடியதாக இருக்க வேண்டும். வன்முறை கலாச்சாரம் முடிவுக்குக்
கொண்டுவரப்பட வேண்டும். ஜனநாயக சூழ்நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும். இதன்
பகுதியாக மக்கள் பயத்திலிருந்து விடுபடுவதற்கும், அரசியல், சமூக, பொருளாதார
நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
யுத்தத்தின் பின்னர் மக்கள் அழுது வடியும் நிலையென்றில்லாமல் சமாதான
நடவடிக்கைகள் பிரவாகமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
இத்தகைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இலங்கையின் அரசியல்
சக்திகள் குறிப்பாக தமிழ் அரசியல் சக்திகள் இணைந்து இதய சுத்தியுடன்
பணியாற்ற வேண்டும். வேறு வேறு கொள்கைகள், அபிப்பிராயங்கள் இருந்தாலும் எமது
மக்களை கௌரவமாகவும், சுயமரியாதையுடனும் வாழ வைப்பதற்கு இச் சக்திகள் இணைந்து
செயற்பட வேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் மக்கள் அனுபவித்துவரும் துயரங்கள் முடிவுக்கு
வருவதில் ஆக்கபூர்வமாக தீர்க்க தரிசனத்துடன் பங்களிக்க வேண்டும்.
சொந்த நிலத்தில் நிம்மதியாக, பாதுகாப்பாக, இயல்பாக வாழ்வதற்கான நிலைமைகளை
ஏற்படுத்தினாலே அது மிகப் பெரும் வரலாற்றுப் பணியாக இருக்கும்.
கடந்த 30 வருடங்களில் தமிழ் மக்களின் உயிர், உடைமை, உழைப்பு என்பன
பாரியளவில் விரயமாக்கப்பட்டன.
போராட்டம் என்பது மக்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக, ஆக்கபூர்வமான வழிகளில்
வாழ்வதற்கான நோக்கங்களையே கொண்டது.
ஆனால் தமிழர்களின் போராட்டம் மரணத்தை பூசித்து அழிவையே தாரக மந்திரமாக
கொண்ட பாசிசமாக மாறியதன் விளைவு இன்று தமிழ் மக்களை பாரிய இன்னல்களுக்கு
வேதனைகளுக்கு ஆளாக்கியுள்ளது.
எனவே விரயங்களையும், இழப்புக்களையும், வேதனைகளையும் கருத்திற்கெடுத்து
செயற்பட வேண்டிய காலமிது.
ஐரோப்பாவிற்கோ, வட அமெரிக்காவிற்கோ சென்றவர்கள் ஏதோவொரு வகையில் வாழ்க்கையை
திருப்திகரமாக அமைத்திருக்கிறார்கள்.
ஆனால் உள்ளுரில் வாழ்க்கை நேர்த்தியாக இல்லை. அலங்கோலமாகவே அமைந்திருக்கிறது.
அகதிகளான மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அல்லல் படுவது
ஒருபுறமிருக்க விதவைகளாகவும், ஊனமுற்றவர்களாகவும், உற்ற சுற்றத்தை
இழந்தவர்களாகவும், சொந்த ஊரை இழந்தவர்களாகவும் எம்மில் ஒரு பகுதி மக்கள்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பெருமளவு இளம் வயதினர் கல்வியை இழந்திருக்கிறார்கள். 16, 17 வயது பிள்ளைகள்
பலர் கொப்பி,புத்தகங்கள் இல்லாமல் கடந்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு மேலாக
முகாம்களில் வாழ்கிறார்கள். ஏற்கனவே 2006 முற்பகுதியில் யுத்தம் ஆரம்பித்து
பல்வேறு தடவைகள் இடம் பெயர்ந்த சென்றவர்கள் இந்த இளந் தலைமுறையினர் சில
வருடங்களாகவே அவர்களின் கல்வி மீது இடி விழுந்திருக்கிறது.
பல பிள்ளைகள் பலாத்காரமாக புலிகளால் படையணிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதால்
உயிரிழந்து விட்டார்கள். ஒரு கணிசமான தொகுதியினர் ஊனமுற்றவர்களாகி
இருக்கிறார்கள். தமிழ் சமூகத்தில் இளம் வயதினராக இருப்பதே ஒரு பாழாய் போன
விடயம் என்றாகிவிட்டது.
இரண்டு தலைமுறைகள் வன்முறை சூழலுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டது. எனவே
எமது சமூகத்தில் தன்னம்பிக்கையை ஊட்டுவதும், வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய
வைப்பதும், உண்மையான சுதந்திர இயக்கத்தின் தார்மீக தாற்ப்பரியங்களை
தெளிவுபடுத்துவதும் மானிட உயிர்களின் மகத்துவத்தை உணர்த்துவதும் எமது
சுற்றாடலை பாதுகாப்பதற்கும் சகல விதமான சமூக அநீதிகளை ஒழித்துக் கட்டுவதும்,
சமூக சமத்துவத்தை நிலைநாட்டுவதும் சகோதர சமூகங்களுடன் உறவுகளை பேணுவதும்,
சகோதர சமூகங்களின் இன்ப துன்பங்களை புரிந்து கொள்வதும், பங்கு கொள்வதும்
நட்புறவை வளர்ப்பதும் என்பனவெல்லாம் எமது இளந் தலைமுறையினருக்கு புரிய
வைப்பதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
நாம் உலக மானிடத்தின் ஒரு பகுதியினர் என்பது உணர வைக்கப்பட வேண்டும்..
நாம் பிரத்தியேகமான பிறவிகள் என்ற விகாரமான சிந்தனை களையப்பட வேண்டும்.
ஒரு புதிய தலைமுறை, அகங்காரமற்ற அகிம்மை வழியில் நம்பிக்கைக் கொண்ட சத்திய
வழியில் நடக்கும் தலைமைத்துவமொன்று உருவாக்கப்பட வேண்டும்.
இதற்காக தமிழ் மக்களின் நலன்களில் இதய சுத்தியும், நேர்மையும் கொண்ட
சக்திகள் இணைந்து செயற்பட வேண்டும்.. இச் சக்திகள் தென்னிலங்கையின்
முற்போக்கு சக்திகளுடனும், மலையக, முஸ்லீம் மக்களுடனும் இணைந்து அவர்களின்
இன்ப துன்பங்களில் பங்குபற்ற தயாராக வேண்டும். இலங்கை ஒரு பல்லினங்களின்
நாடாக நிர்மாணிப்பதில் தனது அக்கறையை செலுத்த வேண்டும்.
அல்லாமல் குறுகிய அரசியல் நலன்களுக்காக உணர்ச்சிகளை கிளறி, சமூகத்தை
தொடர்ந்து அழிவுப் பாதையில் வைத்திருக்கும் அரசியலை கைவிட வேண்டும்.
ஏற்கனவே 30 வருடங்களில் ஆயுதமேந்திய அரசியல் பாசிசமாக மாறியதில் ஆயுதம்
ஏந்தாத அதற்கு முந்திய தலைமுறையினருக்கு சித்தாந்த ரீதியான பங்களிப்பை
வழங்கியிருக்கிறார்கள் என்பதை எந்த விருப்பு வெறுப்புக்கும் அப்பால்
சொல்லியே ஆக வேண்டும்.
எனவே சமூகத்தின் மத்தியில் செயற்படும் போது புதிய தலைமுறையினரிடம் நஞ்சை
வார்க்காமல், குரோதங்கள், விரோதங்களை வளர்க்காமல் எமது மக்களின் தார்மீக
நியாயங்களை விளங்க வைக்க வேண்டும்.
எப்படி போர் பற்றிய எண்ணங்கள் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து உருவான பாசிசம்
பற்றிய பெருமித உணர்வுகள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வலிப்பு நோயை
உருவாக்கினவோ அதேபோல் இன்று சிங்கள மக்கள் மத்தியில் போர் வெற்றி பற்றிய
வலிப்பு நோய் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நோய்கள் நீண்காலத்திற்கு
நீடிக்கக் கூடாது. சகல இன சமூகங்களினதும் சமத்துவமான சகோதரத்துவமான
வாழ்வுரிமையை அங்கீகரிக்க வேண்டும்.
நாகரிகமான மனிதர்களாக நல்லியல்புள்ள மனிதர்களாக வாழ்வதற்கு நாம்
கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு திறந்த மனதும் ஆரோக்கியமான எண்ணமும் கொண்ட
தலைமைத்துவம் எம் மத்தியில் உருவாக வேண்டும்.
தி.ஸ்ரீதரன்
பொதுச் செயலாளர்
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
இடம்பெயர்ந்த
மக்கள் மீள் குடியமர்த்தப்பட வேண்டும்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் பொதுச்செயலர் ரி.
சிறிதரன்.
இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் இயன்றவரை துரிதமாக அவர்களது சொந்த இடங்களில்
குடியேற்றப்படவேண்டும். இரண்டு லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி
நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதை சாதாரணமாக கருத முடியாது. அவர்கள்
தொடர்ந்தும் முகாம் வாழ்க்கை வாழ்வது பல வழிகளிலும் அவர்களை
பாதிப்படையச்செய்யும் என
பத்மநாப ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் (ஈ பி ஆர் எல்
எப் பத்மநாபா) பொதுச்செயலர் ரி. சிறிதரன் கேசரி வார இதழுக்கு அளித்த செவ்வியில்
குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னரான வடக்கு நிலைவரம், மக்கள் நிலைப்பாடு, எவ்வாறு அமைய
வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள். என அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்
இவ்வாறு பதிலளித்துள்ளார்.
நிச்சியமாக மக்கள் குடியேற்றப்பட்டதும் தாம் தொடர்ந்தும் இராணுவ சூழலில் அதாவது
இராணுவ உடை தரித்தவர்கள் மத்தியில்தான் தொடர்ந்தும் வாழ்கின்றோம் என்ற எண்ணம்
அந்த மக்கள் மத்தியில் எழாத வகையில் அரசாங்கம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் அதாவது
அந்த மக்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கான சூழல் கட்டியெழுப்பப்டவேண்டும். தமிழ்
மக்களை பொறுத்தவரையில் அவர்கள் சுமார் 30 வருடங்களாக காப்பரண்களில் இறங்கி ஏறி
போதல் என்ற ஒரு நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். எதிர் காலத்தில் இப்பாடியான
ஒரு வாழ்க்கை நிலை நிச்சயமாக ஏற்படாது என நினைக்கிறேன். ஆகவே அந்த மக்களின்
சுதந்திரமான வாழ்க்கைக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின்
கடமையாகும். உலக தராதரத்தில் மக்கள் சாதாரணமாக எவ்வாறு வாழ்கின்றார்களோ
ஆவ்வாறானதோரு சூழலை வடபகுதி மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இந்த வாழ்க்கை முறைகiளை வடக்கில் ஜனநாயகத்தை கட்டி எழுப்புவதற்கான ஓர்
இடைவெளியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காரணம் துரதிஸ்டவசமாக இலங்கையின் தமிழ்
தலைமைத்துவங்கள் நிறையவே அழிக்கப்பட்டுள்ளது. அதில் புலிகளுக்கும் பங்கு உண்டு.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தலைமைத்துவ இடைவெளியை நிரப்பும் வகையில் இப்போதுள்ள
தமிழ் தரப்பில் இருந்து துரதிர்ஷ்டம் மிக்க ஆற்றலும் வீரியமும் உள்ள தமிழ்
தலைமைகள் தோன்றக் கூடியதாக ஒரு ஜனநாயக இடைவெளி அங்கு உருவாக்கப்படவேண்டும் தமிழ்
மக்களின் கருத்தாடல்களுக்கு இடமளிக்கப்படவேண்டும் அதாவது வௌ;வேறான கருத்துக்கள்,
கருத்தரங்குகள், பேச்சுக்கள் அபிப்பிராங்கள் உருவாவதற்கான சுதந்திரம் அந்த
மக்களுக்கு வழங்கப்படவேண்டும்.
அதிகாரப்பகிர்வு தொடர்பாக எந்த அளவில் வடக்கு கிழக்கு மாகாணங்களில்
கருத்தரங்குகள் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன? வடக்கு கிழக்கு தமிழ் மக்களை
பொறுத்தவரையில் கோயில்களை தவிர வேறு எங்கும் அவர்கள் செல்வதே இல்லை. பொது
கூட்டங்களை கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதோ அல்லது அவற்றில் பங்கு கொள்வதோ
அரசியல் விவகாரங்களை பேசுவதோ இந்த மக்களை பெறுத்தவரையில் ஆபத்தான
விடையங்களாகிவிட்டன. ஆகவே எதிர்காலத்தில் இந்த பிரதேசங்களில் 100 கருத்துக்கள்
வரவேண்டும் வௌ;வேறு சமூக அரசியல் கட்சிகள் அதாவது இடது சாரிக்கட்சிகளினது
செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. வன்முறை
கலாச்சாரத்தினால் மாசடைந்து போயுள்ள வடக்கு மாகணத்தின் சூழல்
சுத்திகரிக்கப்படவேண்டும்.
இங்கு முக்கியமாக குறிப்பிடப்பிடப்படவேண்டிய விடயம் என்றால் வடமாகாணத்தல் ஒரு
சில கட்சிகள் என்று இல்லாமல் அனைத்து தமிழ் கட்சிகளது சுதந்திரமான
செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்படவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் கூட
ஜனநாயக உணர்வுள்ளவர்கள் இருக்கின்றார்கள். தமிழ் அகதிகளை கடந்த 25 வருடங்களுக்கு
மேலாக பராமரித்து வரும் சந்திரகாசன் போன்றவர்கள் இருக்கின்றார்கள். முஸ்லீம்
தலைமைகள் உள்ளன. இவர்கள் அனைவதும் வடக்கில் ஜனநாயக அரசியலை முன்கொண்டு செல்ல
அனுமதிக்கப்படவேண்டும். அதேவேளை ஏனைய கட்சிகளின் ஜனநாயக அரசியலை உரிமைகளை
தடுக்கும் வகையில் ஒருவரை ஒருவர் படுகொலை செய்யும் பிஸ்ரல் கலாச்சாரம் முற்றாக
ஒளிக்கப்படுதல் அவசியம். மனித உரிமை ஜனநாயமே இங்கு அடித்தளமாக அமைய வேண்டும்.
சமூக பொருளாதார வழர்ச்சியானது சர்வதிகார சூழலில் ஏற்படுத்தப்படுத்தப்படுவதில்லை.
மக்களின் ஜனநாய சுதந்திரத்தில் சேர்ந்ததாகவே அது ஏற்படுத்தப்படவேண்டும். மேலும்
வடமாகாணத்தில் பாரிய பொருளாதார மீள் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதும்
இன்றியமையாதது. இவற்றினை மேற்கொள்ளும் வகையில் வடக்கில் அதிகார கட்டமைப்பு ஒன்று
ஏற்படுத்தப்படவேண்டும்.
இலங்கை வானொலி
தென்றல் ஒலிபரப்பில் 17.05.2009 ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் 7வது நாள்
நிகழ்ச்சியில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் அவர்கள்
தெரிவித்த கருத்துக்கள்
கேள்வி :- இப்பொழுது அதிகமாக பத்திரிகைகளின் பிரச்சாரத்திற்கு மத்தியில் இந்திய
தேர்தல் வெற்றிகளைப் பார்க்கின்றபோது அந்த தேர்தல் முடிவு பத்திரிகைகள் ஊடகங்கள்
வெளியிட்ட கருத்துக்களுக்கு மாறான வெற்றியை காங்கிரஸ் கூட்டணி பெற்றிருக்கின்றது.
இதனால் இலங்கையின் பிரச்சினையை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் பேசிய அரசியல்
தலைவர்கள் படு தோல்வி அடைந்திருக்கின்றார்கள் குறிப்பாக தமிழர்களின்
இரத்தக்கொதிப்போடு இருந்து தமிழர்களுக்காக போராடிய வைகோ அவர்கள்
தோற்கடிக்கப்பட்டிருக்கின்றார்கள். இப்படி பல பகுதிகளில் ஜெயலலிதா கூட பிரபாகரனின்
ஈழக்கனவை தான் தனக்கு வாக்களிப்பதன் மூலம் பெற்றுக் கொடுப்பேன் என தேர்தல்
பிரச்சாரங்களில் தெரிவித்திருந்தார். அவரும் தோற்கடிக்கப்பட்டுள்ளார். மொத்தத்தில்
39 ஆசனத்தில் கிட்டத்தட்ட 10, 11 ஆசனங்களை எடுத்திருக்கின்றார்கள். இப்படியான
சூழ்நிலையில் இந்த முடிவு என்ன செய்தியை சொல்கின்றது. உங்களுடைய பார்வையில்.
பதில் :- இந்த விடயத்தில் இந்திய ஜனநாயக இயந்திரம் என்பது ஒரு மக்கள் சார்ந்த
மிகவும் சக்தி வாய்ந்ததும். மிகவும் தீர்க்க தரிசனமானதும். உணர்ச்சி வசப்படாததுமான
ஒரு கட்டமைப்பு அந்த ஜனநாயக இயந்திரம். நீங்கள் இந்தியா முழுவதும் வாக்களிக்கப்பட்ட
முறையை பார்த்தீர்கள் எனின் ஒரு வேற்றுமையில் ஒற்றுமை காணுதல் சமூகங்களுக்கு இடையே
உறவுகளை பேணுதல் தீவிரவாதத்தினை நிராகரித்தல் சமூக பொருளாதார அபிவிருத்தி நாட்டின்
ஐக்கியம் என்கிற கன விடயங்கள் அங்கு இருக்கிறது. மற்றது நாங்கள் கவனிக்க வேண்டியது
அங்கு இருக்கிற சனத்தொகையில 2 வீதமாக இருக்கக் கூடிய சனத்தொகையை கொண்ட ஒரு இனத்தவர்
2 வது தடைவையாக பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். நீங்கள் தமிழ் நாடு
தொடர்பாக குறிப்பிட்டிருந்தீர்கள் தமிழ்நாடு தொடர்பாக தனிப்பட்ட ரீதியில் எந்த
அரசியல் கட்சியையும் பற்றி பேசி உள் விவகாரத்தில் தலையிடுவதில் எனக்கு உடன்பாடு
இல்லை என்றாலும் சில விடயங்களை நான் சொல்லலாம். அங்கு ஒரு வருடத்திற்கு முன்னரே
நடந்தவற்றை கவனித்தால் சில ஊடகங்கள் கருத்துக் கணிப்பொன்றினை இணையத்தளங்கள் ஊடாக
நடாத்தி புலிகளுக்கு 55 சதவீதமான மக்கள் ஆதரவளிக்கிறார்கள் ராஜீவ்காந்தியின்
படுகொலைகள் பற்றிய அக்கறைகள் குறைந்துவிட்டது. என்பது மாதிரியான கருத்துக்கள்
வெளிவரத் தொடங்கின அப்பவே புலிகளின் மறைகரங்கள் இருப்பது தெளிவாக தெரிந்தது. அவை
படிப்படியாக வளர்ச்சியடைந்து அங்கு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை புலிகளோடு ஒன்றாக
போட்டு குழப்பி ஒரு புலி ஆதரவு தளம் ஒன்றினை ஏற்படுத்துவதற்குரிய முயற்சி நடந்தது.
சில முக்கியமான ஊடகங்கள் ஊடாகவும் அத்தகைய ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டது. அது
இலங்கையிலும் நடந்தது. தமிழ் நாட்டு மக்களின் யதார்த்த உணர்வுகளுக்கும் அங்கு
உருவாக்கப்பட்ட பிரமைகளுக்கும் இடையில் பாரிய இடைவெளிகள் இருந்தது. அது திகைக்க
வைக்கிற மாதிரி, ஆச்சரியப்பட வைக்கிற மாதிரி முடிவுகள் அமைந்திருக்கிறது. இந்த முறை
நீங்கள் கவனித்தால் புலிகளுடைய நிலைப்பாடுகளை ஆதரித்த கட்சிகள் எத்தகைய பின்னடைவைச்
சந்தித்திருக்கிறார்கள் என்று நீங்கள் பார்க்கலாம். அதில் முக்கியமாக பாட்டாளி
மக்கள் கட்சி மற்றது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் அடைந்த
பின்னடைவுகளை நாங்கள் கூறிக்கொள்ள முடியும். என்னெண்டு சொல்லிச் சொன்னால்
தீவிரவாதத்தினை வன்முறையை அங்குள்ள மக்கள் எப்பவும் ஏற்றுக் கொள்ளுவதில்லை மற்றது
இந்தியா முழுவதுமே உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை எடுக்காது நிதானமாக முடிவு
எடுத்திருக்கின்றார்கள். இந்தியா முழுவதும் தமிழ் நாட்டிலும் அது ஒரே மாதிரி;
இருந்திருக்கிறது. உங்களுக்கு தெரியும் தேர்தல் காலத்தில் இந்தியாவின் பிரதமர்
சொல்லியிருந்தார் ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு ஒரு சிறந்த தீர்வைப் பற்றி
குறிப்பிட்டிருந்தார். தமிழரின் பிரச்சினைக்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்
அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வு முன்வைக்கப்படும் என திருமதி சோனியா
காந்தி அவர்கள் சொல்லியிருந்தார். இராகுல்காந்தி கூட இலங்கைத் தமிழர்;;;களின்
பிரச்சினை கவனிக்கப்பட வேண்டும் என சொல்லியிருந்தார். கலைஞர் அவர்கள் தேர்தல் முடிவு
வெளியாகிய காலை வேளையில் இந்த தீர்வினை விரைவில் கொண்டுவருவதற்கு முயற்ச்சிகள்
மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்;டிருந்தார். அங்கு அதிதீவிரவாத நிலைப்பாட்டினை
பெருவாரியான மக்கள் எடுக்கவில்லை. இங்கிருந்த புலி ஆதரவு ஊடகங்களும் எமது தமிழ்
ஊடகங்களும் இலங்கையில் நடக்கிற இந்தக் கொடூரங்களுக்கு காங்கிரஸ் கட்சி பொறுப்பு
என்கின்ற மாதிரியும் சோனியா காந்தியை ஒரு கொடூரமான ஆளாகவும் சித்தரித்து படங்கள்
காட்டூன்கள் எல்லாம் வரைந்து எழுதினார்கள். மறுபுறத்தில் இந்தியாவின் ஜனநாயக
இயந்திரத்தின் மிகப் பெரிய சக்தி என்பதையும் அவர் வகித்த பாத்திரம் எத்தகையது
என்பதையும் ஆயிரம் மில்லியன் மக்களைக் கொண்ட நாடு நிரூபி;த்திருக்கின்றது. அங்கு
தேர்தல் நடந்த போதும் தேர்தல் முடிந்த பின்னரும் அரசியல் வாதிகளுக்கு இடையில்
சரியான நாகரீகமான உறவு முறைகள் இருக்கிறது. இவற்றிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள
வேண்டும். இங்கு ஏகபிரதிநிதிகள் என்று கூறுவது எங்களைப் போல வியத்தகு ஆக்கள்
உலகத்தில் ஒரு இடமும் இல்லை என்று சொல்லுறது. முதல் இந்த தன் அகங்காரங்களை
விட்டுப்போடவேணும் இப்படியான கீழ்த்தரமான உணர்வுகளிலிருந்து நாங்கள் விடுபடவேண்டும்
உண்;மையாக தமிழ் நாட்டு மக்களின் தீர்ப்பு அவர்களின் உள்ளுர் விவகாரங்களை கருத்தில்
எடுத்ததாகவும் இந்திய நாட்டின் நலன்களை கருத்திற்கு எடுத்ததாகவும் இந்தியாவின்
வெளியுறவுக் கொள்கையினை கருத்திற்கு எடுத்ததாகவும் இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களை
கருத்திற்கு எடுத்ததாகவும் தான் அமைந்திருக்கிறது என நான் கருதுகின்றேன்.
தமிழர்
விடுதலை கூட்டணி தலைவர் வி. ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் த.
சித்தார்த்தன், பத்மநாபா ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் செயலாளர் தி. சிறிதரன்
ஆகிய மூவரும் இணைந்து ஜனாதிபதியை சந்தித்து பேசியசந்தர்ப்பத்தில் அவரிடம்
விடுத்த வேண்டுகோள்
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
05.05.2009
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு - 03
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,
இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள்
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்து பல்வேறுபட்ட கோரிக்கைகள் வருவதால்
தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக உடன் நடவடிக்கை
எடுக்குமாறு தங்களை வேண்டுகிறோம்.
01. நீர்
தந்போதைய காலநிலையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவது சகஜமே. வேறு பல்வேறு
தேவைகளுக்கும் உதவும் நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெறுவதற்காக
நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நிற்கின்றனர். இடம் பெயர்ந்த மக்களுக்கு இதுவொரு
பாரிய பிரச்சினையாகும். பலர் நீண்ட நாட்களாக குளிக்கும் வாய்ப்பையும்
இழந்துள்ளனர். இந் நீர் தட்டுப்பாட்டை நீக்க யுனுசுயு என்ற ஸ்தாபனத்தை அணுகுமாறு
கேட்டுக்கொள்கிறோம். இப் பிரச்சினையை தீர்ப்பதற்கு போதிய வசதிகள் அவர்களிடம்
இருப்பதாக நான் நம்புகின்றேன். 250 மீற்றர் ஆழத்திற்கு குழாய் கிணறை அடிக்கின்ற
வாய்ப்பும் ஒரு நாளைக்கு இரண்டு கிணறுகள் அமைக்கக்கூடிய தகுதியும் அவர்களிடம்
இருக்கிறது. 5000 கலன்கள் கொள்ளக்கூடிய கொள்கலன்களும் அவர்களிடம் உண்டு.
02. உணவு
அதிகமான முகாம்களில் உணவுப் பிரச்சினை இல்லாத போதும் சில முகாம்களில் சில
வேளைகளில் உணவு வழங்கப்படுவதில்லை. முறையான திட்டமின்மையே இதற்குக் காரணமாகும்.
03 முதியோர்களை விடுவித்தல்
60 வயதுக்கு மேற்பட்ட முதியோரை விடுவிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தும் அதை
நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இத் தீர்மானத்தை மாற்றி 60 இற்கும்
60 இற்கு அண்மித்துள்ள வயதுடையோரின் மனைவிமாரை அல்லது கணவன்மாரை விடுவிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
04. நோயாளிகள்
பல நோயாளிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தால் தம் செலவிலேயே நல்ல
வைத்திய சேவையை பெற்றிருக்க முடியும். இதற்குக் காரணம் நோயாளிகளின் எண்ணிக்கை
அதிகமாகவும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதுமே ஆகும்
05. வெளிநாட்டில் வைத்தியம் பெறுதல்
வெளிநாட்டில் வைத்தியம் பெற வசதியுடையோர் விரும்பிக் கேட்பின் அதற்கு அனுமதி
வழங்கப்பட வேண்டும்.
06. அரச ஊழியர்கள்
கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில்
இருந்த யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் கடமையாற்றிய அரச
ஊழியர்கள் அவரவர் குடும்பத்துடன் விடுவிக்கப்பட்டு அவர்களி;ன் சேவை முகாம்களில்
பயன்படுத்தப்பட வேண்டும்.
07. அரசாங்க அதிபர்கள்
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள் தங்கள்
மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்தோரை பொறுப்பெடுத்து வவுனியாவில் கச்சேரி
அமைத்து செயற்படுவதோடு படிப்படியாக அப் பணிகளை தம் மாவட்டங்களுக்கு
விஸ்தரிக்கலாம். இம் மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவகர்கள் உள்ளுரில்
இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை கவனிக்க பணிக்கப்பட வேண்டும்.
08. குடும்பத்தினரை மீள ஒன்றிணைத்தல்
பல்வேறு முகாம்களில் சிதறுண்டு இருக்கும் ஓரே குடும்பத்தினரை ஒன்றிணைக்கும்
பணியில் அனைவரும் ஒரு முகாமுக்கு மாற்றப்பட வேண்டும்.
09. தொலைபேசி இணைப்புக்கள்
தற்போது வழங்கப்படுகின்ற தொலைபேசி இணைப்புக்கள் போதாமையால் மேலும் சில
இணைப்புக்கள் ஒவ்வொரு முகாமுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
10. உறவினர்களின் சந்திப்பு
முகாம்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரையும் ஒருவரேனும் வந்து பார்ப்பதற்கு
அனுமதிக்க வேண்டும்.
11. கர்ப்பிணி பெண்கள் பற்றியது.
கர்ப்பிணிகளும், குழந்தைகளின் தாய்மார்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் மடு
தேவாலய முகாமில் அனுமதிக்கப்பட வேண்டும்.
12. ஊனமுற்றோர், அனாதை குழந்தைகள், முதியோர், சித்த சுயாதீனமற்றோர்.
ஓர் விசேட குழு அமைக்கப்பட்டு மேற் கூறப்பட்டவர்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய
வகையில் வதி விடங்கள் ஏற்படுத்திக் கொடுத்தல்.
13. விதவைகள்
விதவைகள் அனேகர் உருவாக்கப்பட்டிருக்கின்றபடியினால் அவர்களை பொறுப்பேற்பதற்கும்
புதிய ஆலோசனை வழங்குவதற்கும் மகளிர் நலன்புரி அமைப்புக்களோடு தொடர்புகளை
ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
14. பிரேத அறை
முறையான ஒரு பிரேத அறை இன்மையால் நாம் மதிப்பு மரியாதையோடு எமது
கலாச்சாரத்துக்கு அமைய அடக்கம் செய்ய முடியாமல் அழுகிய நிலையில் அண்மையில் உள்ள
நோயாளிகளுக்கு பெரும் சங்கடத்தை உண்டு பண்ணியதோடு அப் பிரேத அறையிலிருந்து எழும்
துர்நாற்றம் சுமார் 200 மீற்றர் விட்ட பிரதேசத்துக்கு பரவுகிறது. பிரேதங்கள்
உறவினரிடமோ அல்லது நண்பர்களிடமோ கையளிக்கப்படும் வரை பாதுகாத்து வைக்கக்கூடிய
ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்
புதுமாத்தளனில் வாரத்திற்கு 478 மெற்றிக் தொன் உணவு தேவைப்படுகிறது. எம்மால்
கூறப்படுகின்ற ஆலோசனைகளை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி
கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
வீ.ஆனந்தசங்கரி த.சித்தார்த்தன்
தி.சிறிதரன்
தலைவர்-த.வி.கூ புளொட்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
புலிகளுக்கு பின்னரான அரசியல் சூழல் எவ்வாறு
அமையும்.
கடந்த இரண்டு
தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் தலைமைகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு
வந்ததாலும் சமூக உணர்வுள்ள பல மனிதர்கள் இல்லாதொழிக்கப்பட்டதாலும் பாரிய
தலைமைத்துவ வெற்றிடமொன்று தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது.
http://www.thinakaran.lk/vaaramanjari/2009/05/31/?fn=p0905312