HOME ARTICLES HISTORY MARTYRS PHOTOS LINKS ARCHIVES CONTACT  

 

 

11.05.2009

இன்று நடைபெறவிருந்த வடக்கின் வசந்தம் இரண்டாம் கட்ட மீள்குடியேற்றப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.


 

வன்னி மக்களின் அவலங்கள் தொடர்பான செய்திகள்
 


 

புளொட் ஈபிஆர்எல்எவ் தலைவர்கள் புனர்வாழ்வு முகாம்களுக்கு விஜயம்

 

 

முல்லைத்தீவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டவர்களில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்திடம் சரணடைந்த குழந்தை போராளிகள், இளைஞர்கள் நலன்புரிநிலையங்களிலிருந்து அழைத்துச்செல்லப்பட்டனர். இவர்களுக்கு என்ன நடந்தது என அறிய முடியவில்லை என பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்டது. கடந்த காலங்களை போன்று இவர்களும் காணாமற் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் என புலிகள் பாரியளவில் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்களை பற்றிய விபரங்களை அறியும் பணியில் புளொட் மற்றும் ஈபிஆர்எல்எவ் கட்சிகள் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. மேற்படி குழந்தை போராளிகளான சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளர் சிறிதரன் மற்றும் இக் கட்சிகளின் பிரதிநிதிகள் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் நிலைமையையும் அறிந்துகொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை நீதி அமைச்சின் செயலாளரும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் பணிப்பாளருமான சுசரித கம்லத் அவர்கள் செய்து கொடுத்திருந்தார்.
முழுமை
 


 

,d;iwa nra;jpj; jiyg;Gfs;                         

 

10.05.2009

10.05.2009

10.05.2009

10.05.2009

10.05.2009

10.05.2009

10.05.2009

10.05.2009

10.05.2009

10.05.2009

10.05.2009

10.05.2009

 

கடற்புலிகளின் முக்கியஸ்தர் கொல்லப்பட்டுள்ளார்

புலிகளின் பிடியில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்

வவுனியாவில் மேலும் ஒரு கள வைத்தியசாலை

முகாம்களில் இருந்த 200 புலிகள் படையினரிடம் சரண்

இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு சின்னமுத்து

தவறான செய்தி வெளியிட்டவர் வெளியேற்றப்பட்டார்

இலங்கை சர்வதேச சட்டத்திற்கு ஏற்பசெயற்படுகிறது

ஒருதொகுதி மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இராணுவத்தளபதி வவுனியாவிற்கு விஜயம்

இந்தியாவிற்குள் புலிகள் ஊடுருவும் சாத்தியம் அதிகம்

இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை

சர்வதேச நாணயநிதியத்தினூடாக நிதி பெறம் வசதி.

 

   

 


 

இடம்பெயர்ந்த மக்களுக்கு அன்புக்கரம் நீட்டுவோம்

 

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டும் காயங்களுக்குள்ளாகி வவுனியா மன்னார் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் உள்ள மக்களின் உணவு உடை மருத்துவம் கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் நாமும் கரம்கோர்த்து எமது பங்களிப்பை வழங்குவது கட்டாய கடமையும் உடனடி தேவையுமாகும்.

சுனாமியால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் துயர் துடைக்க முன்வந்து உதவிய கட்சி தோழர்கள் ஆதரவாளர்கள் நண்பர்கள் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் துன்பங்களை போக்கவும் உங்களால் முடிந்த உதவிகளை வழங்குவதுடன் இடம்பெயர்ந்தவர்கள் மீது அக்கறை கொண்டு உதவ முன்வரும் பொதுமக்களிடமிருந்தும் உதவிகளை பெற்று வழங்குவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு உதவவிரும்பும் அனைவரும் நீங்கள் வாழும் நாடுகளிலுள்ள பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சி பிரதிநிதிகளுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டு;கின்றோம்.

 

கட்சி பொதுச் செயலாளருடன் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் 0094 112 505372 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
 


 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களான தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வி. ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் தி. சிறிதரன் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த கடிதம்

 

 05.05.2009 

மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,               
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு - 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,
 


இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள்
 

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்து பல்வேறுபட்ட கோரிக்கைகள் வருவதால் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக உடன் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டுகிறோம்.

முழுமை
 


 

10.05.2009


தோழர் கலைச்செல்வனின் 4வது ஆண்டு நினைவு கூட்டம்.

 

 

10.05.2009 ஞாயிற்றுக்கிழமை
11.00
துன்பம் சூழும் நேரம்: இலங்கை - இந்திய உறவுகளும் ஈழத்தமிழரும்
மு. நித்தியானந்தன்
12.30
மதிய உணவு
13.30
யாழ்ப்பாணத்து சமூகக் கட்டமைப்பு: பேச மறந்தவையும் பேச மறுத்தவையும்
ச. தில்லைநடேசன்
14.30

MEDIA & DEMOCRACY
காமினி வியாங்கொட
16.00
தேனீர் இடைவேளை
17.00
கோணல்களும் நேர்கோடுகளும் - இலங்கையில் இனப்பிரச்சினை
வி. சிவலிங்கம்
17.30
திறந்த விவாதம்: இலங்கையில் இன்றைய யுத்த சூழலும் எதிர்நோக்கும் சவால்களும்

ஒழுங்கமைப்பு
உயிர் நிழல்
புகலி

 

Salle Heindenhein1er étage
6, Place du Marché du centre
92110
Clichy
M°: Marie de Clichy - Ligne 13
Sortie: rue Villeneuve
Bus No: 54, 174, 274, 340.
arret - Marie de
clichy

 


 

10-05-2009, 09.30  PM

 

கடற்புலிகளின் முக்கியஸ்தர் கொல்லப்பட்டுள்ளார்

முல்லைத்தீவு கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியில் கடந்த 7ம் திகதி இடம்பெற்ற மோதலின் போது புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இவர் கடற்புலிபிரிவின் இரண்டாம் நிலை தளபதியான செழியன் என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புலிகளின் வானொலி உரையாடலை இடைமறித்து கேட்டபோது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது. இவர் புலிகள் இயக்கத்தில் பல முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் பிடியில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்

புலிகளின் பிடியில் இருந்து 700 பொதுமக்கள் இன்று (10.05.2009) காலை 10 மணியளவில் படையினரால் மீட்கப்படட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 685 பொதுமக்களை 58வது படைப்பிரிவினர் மீட்டுள்ளதுடன், 59வது படைப் பிரிவினர் 15 பொதுமக்களையும் மீட்டுள்ளனர். இந்த பொதுமக்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் அனுராதபுரம் வைததியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
 

05.55 PM

 

வவுனியாவில் மேலும் ஒரு கள வைத்தியசாலை

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு வைத்திய சேவைகள் வழங்குவதற்கு வவுனியா மனிக்பாம் பகுதியில் புதிய களவைத்திசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் வைத்திய நிறுவனமாகிய எம்.எஸ்.எவ் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானசேவை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இடம் பெயர்ந்த மக்களுக்கு வைத்திய சேவையை வழங்கிவரும் இந்த நிறுவனம் இந்த புதிய வைத்தியசாலையை அமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

முகாம்களில் இருந்த 200 புலிகள் படையினரிடம் சரண்

இடம்பெயர்ந்து வந்து வவுனியா முகாமில் தங்கியிருந்த புலிகளுடன் இணைந்து செயற்பட்ட 200 பேர் படையினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவர்களை பொறுப்பேற்றுக் கொண்ட பாதுகாப்பு தரப்பினர் 15 பஸ்களில் தென்பகுதியில் உள்ள புனர்வாழ்வு மையங்களுக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது. கடந்த வாரம் குறித்த பகுதிக்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விஜயம் செய்ததை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

05.00 PM

 

இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு சின்னமுத்து

இடம் பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் சிலர் சின்னமுத்து நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளவென பூவரசங்குளம் ஆதார வைத்திய சாலை விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நோய்கு உள்ளான மேலும் சிலர் நேற்று (09.05.2009) இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை கட்டுப்படுத்தும் மருந்து வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதுடன் முகாம்களில் உள்ள மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் புலிகளின்கட்டுப்பாட்டில் இருந்து வந்த மக்களில் சிலருக்கு தோல் சம்மந்தமான தொற்று ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வவுனியா முகாம்களில் மக்களிடையே பரவக்கூடிய தொற்று நோய் குறித்து ஆராய்வதற்கென வைத்தியர்கள் குழுஒன்றை வவுனியாவிற்கு அனுப்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

தவறான செய்தி வெளியிட்டவர் வெளியேற்றப்பட்டார்
 

இலங்கை அரசிற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட வெளிநாட்டு செய்தியாளர்கள் 3 பேர் இன்று (10.05.2009) காலை 7.30 மணியளவில் அவரது நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரித்தானியாவின் சுயாதீன தொலைக்காட்சியான சனல் - 4 என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நிக்பற்றன் வோல்ஸ் என்பவர் உட்பட 3 பேர் அடங்குகின்றனர். இவர்கள் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சிக்கப்பூர் ஊடாக பிரிததானியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் வைத்து நேற்று பிரித்தானிய சுயாதீன தொலைக்காட்சியின் செய்தி தயாரிப்பாளரும், புகைப்படக்கலைஞரும், இவருடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி இவர்கள் வெளியிட்ட இலங்கை தொடர்பான தவறான செய்தியொன்று பிரித்தானியாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு;ள்ளது.

இலங்கை சர்வதேச சட்டத்திற்கு ஏற்பசெயற்படுகிறது

இலங்கை படையினர் பொதுமக்களுக்கு நன்மைதரக்கூடிய வகையிலேயே செயற்படுகின்றனர் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை சர்வதேச சட்டத்திற்கு அமைவாகவே செயற்பட்டு வருகிறது. இலங்கையில் தனியான ஈழஅரசு ஒன்று உருவாகும் நிலை இருந்தது. படையினர் அதனை முறியடித்து செயற்பட்டு வருகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒருதொகுதி மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.


பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து மேலும் ஒரு தொகுதி மக்கள் நேற்று (09.05.2009) இரவு புல்மோட்டைக்கு கிறின் ஓசோன் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்கள் உட்பட 518 பேர் வந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். வந்தவர்களில் 200 பேர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

09.45 AM

 

இராணுவத்தளபதி வவுனியாவிற்கு விஜயம்

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா வன்னிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வன்னி படைத்தலைமையகத்தில் வைத்து இவரை வரவேற்றுள்ளார். இந்த விஜயத்தின் போது படைநடவடிக்கைகள் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்படவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் மற்றும் தற்போதைய நிலை குறித்தும் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

இந்தியாவிற்குள் புலிகள் ஊடுருவும் சாத்தியம் அதிகம்

இலங்கை படையினரின் தாக்குதல்களினால் தோல்விகண்டுள்ள புலிகள் இந்தியாவிற்குள் ஊடுருவுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக இந்தியாவின் தெற்கு பிராந்திய கடற்படைத்தளபதி எஸ். கே தம்ளே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் மநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். புலிகளை ஒருபோதும் இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு அனுமதி அளிக்கமாட்டோம். இது சம்மந்தமான அனத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புலிகள் ஊடுருவுவதற்கான சந்தர்ப்பம் அதிகரித்துள்ள நிலையில் இந்திய கடலோர பொலிஸார் தமது பாதுகாப்பு நடவடிக்கையை விரிவு படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை

இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கை குறித்து கூடியி கவனம் செலுத்தி வருவதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நலன்புரி நிலையங்களில் வகுப்புக்கள் நடைபெறுவதற்குரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள ஆசிரியர்களை கொண்டு இந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் வேறு இடங்களில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
 

 08.35 AM

 

சர்வதேச நாணயநிதியத்தினூடாக நிதி பெறும் வசதி.

சர்வதேச நாணய நிதியத்தினூடாக நாட்டிற்கு விரைவில் நிதி வசதிகளை பெறமுடியும் என அமைச்சர் ரஞ்சித் சுயம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுவருகிறது. இதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது. உலகின் பல நாடுகள் பெருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நேரத்தில் இலங்கையில் மகிந்த சிந்தனை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

09-05-2009, 09.30 PM

 

முள்ளிவாய்கால் பகுதியில் ஷெல் தாக்குதல்

முள்ளிவாய்கால் பகுதியில் இன்று (09.05.2009) ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் போது நிவாரணப் பொருட்கள் பெறும் நோக்கில் நின்ற 34 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 134 பேர் காயமடைந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இந்த பகுதியில் படையினர் தாக்குதல் எதையும் நடத்தவில்லை. பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு வலயப்பகுதி மீது கனரக ஆயுதங்கள் எதனையும் படையினர் பயன்படுத்துவதில்லை. அங்கு மக்கள் இறந்துள்ளார்களா என்பது குறித்த தகவல்கள் எமக்கு கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

இலங்கை பிரச்சனை ஜனநாயக முறையில் தீர்க்கப்படவேண்டும்

இலங்கை பிரச்சனை ஜனநாயக முறையில் தீர்க்கப்பட வேண்டும் என இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தின் காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரத்தை ஆதரிக்கும் வகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள நம் சகோதரர்கள் பாதுகாக்கப்படவேண்டும். இலங்கை தமிழ் மக்களுக்காக இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய அதிகாரிகளை அங்கு அனுப்பி பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

எமது குடும்பத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எமது தந்தை தற்கொலை தாக்கதல் மூலம் கொல்லப்பட்டது இங்குதான். தமிழகத்தில் உள்ள தமிழர்களை மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்கள் எங்கள் மனதில் இடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

05.30 PM

 

கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல்

முல்லைத்தீவு வெள்ளைமுல்லை வாய்க்கால் பகுதியில் இன்று (09.05.2009) அதிகாலை கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் புலிகளின் 2 படகுகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதுடன் 2 படகுகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 14 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் 2 புலி உறுப்பினர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் பதில் உடகப்பேச்சாளர் மகேஸ் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

மண்டபம் முகாமிற்கு  அருகில் ஒருவர் கைது

தமிழகத்தில் இலங்கை அகதிகள் தங்கியுள்ள மண்டபம் முகாமிற்கு அருகில் ஒருவர் இந்திய கியூ பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பொதி ஒன்றுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் குறித்து பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கண்ணிவெடிகள் அகற்றும் பணி தொடர்கிறது

வடக்கு மாகாணத்தில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருவதாக தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சின் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் திட்டத்தின் ஆலோசகர் எம். ஐ. ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் 70 சதவீதம் வரை பூர்த்தி அடைந்துள்ளது. யாழ் மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் மாத்திரமே நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணி மீதமாகவுள்ளது. இவை அகற்றப்பட்ட பிரதேசங்களில் மக்களை மீள் குடியமர்த்தும் பணி நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

படையினர் 600 சதுர மீட்டர் பகுதியை மீட்டுள்ளனர்.

பாதுகாப்பு வலயப்பகுதியில் மனிதாபிமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ள படையினர் இன்று (09.05.2009) 600 சதுர மீற்றர் பகுதியை மீட்ள்ளனர். இங்கு நேற்று இரவு முழுவதும் இடம்பெற்ற கடும் மோதலை அடுத்து இந்தப்பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த மோதலின் போது புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பரணி எனப்படும் பெண்புலி உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளார் என பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இங்கு நடத்தப்பட்ட தேடுதலின் போது புலிகளின் 4 சடலங்களும், பெருந்தொகையான ஆயுதங்களும் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

தப்பித்து வந்த மக்கள் மீது புலிகள் துப்பாக்கி சூடு

 

புலிகளின் பிடியில் இருந்து தப்பித்து மேலும் 186 பொதுமக்கள் நேற்று (08.05.2009) படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளனர் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இவர்கள் வந்கொண்டிருக்கும் போது புலிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களும் கொல்லப்பட்டவரின் சடலமும் விமானப்படையினரின் உதவியுடன் அனுராதபுரம் வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் வின்கொமான்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்திற்கு ரஷ்யா வரவேற்பு

இலங்கையில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தினை தாம் ஆதரரிப்பதாக ரஷ்யாவின் சமஸ்டி அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செஜே லப்ரொப் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயப்பகுதியில் படையினர் மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கை குறித்தும் அங்குள்ள மக்களை மீட்பதற்க அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்தும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சருக்கு அமைச்சர் ரோகித போகொல்லாகம விழக்கியுள்ளார். புலிகள் தமது பிடியில் உள்ள மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவது தொடர்பாகவம் புலிகளின் பிடியில் இருந்து வந்த மக்களுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அடிப்படை வசதிகள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

03.30 PM

 

இந்தியாவில் இருந்து மேலும் ஒரு வைத்தியக்குழு வரவுள்ளது.

இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி வைத்தியர்கள் அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலர் அத்துல ஹகந்த லியனகே தெரிவித்துள்ளார். வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து அரசகாட்டுபாட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு வைத்திய சேவை வழங்கும் நோக்கிலேயே இவர்கள் வரவுள்ளனர்.

முன்பும் வைத்திய குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்திய சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோன்று தற்பொழுதும் 60 பேர் கொண்ட வைத்திய குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. முன்பு வந்த வைத்தியர்களின் எண்ணிக்கை போதாமையினாலும் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு இவர்கள் அனுப்பப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக தஇந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியக்குழு அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம்

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரமளவில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய அங்கத்தவர்கள், அடுத்து வரவிருக்கும் தலைமைத்துவம், ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் அடங்குகின்றனர். இவர்கள் இலங்கையில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம், மனித உரிமைகள், மற்றும் அபிவிருத்தி உதவிகள், இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இவர்களுடன் பேசவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

08.45 AM

 

கரையாமுள்ளி வாய்க்கால் மண் அணை படையினர்வசம்

முல்லைத்தீவு கரையமுள்ளி வாய்க்கால் பகுதியில் நேற்று (08.05.2009) புலிகளின் மண்அணை ஒன்று படையினரால் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது. பலமணிநேர மோதலை அடுத்தே இந்த மண் அணையை படையினர் மீட்டுள்ளனர். இங்கு இடம்பெற்ற தாக்குதலை அடுத்து நடத்தப்பட்ட தேடுலின் போது புலிகளின் 35 சடலங்களும் பெருந்தொகையான ஆயுதங்களும் கண்டெடு;க்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

08-05-2009, 11.05 PM

 

பாரிய இரும்புக் கவசம் படையினரால் மீட்பு

முல்லைத்தீவு இரட்டைவாய்கால் பகுதியை படையினர் நேற்று (07.09.2009) முழுமையாக கைப்பற்றியுள்ளனர். இந்தப்பகுதியில் தண்ணீருக்கு அடியில் மறைந்து வாழக்கூடிய பாரிய உலோக கவசம் ஒன்றை படையினர் மீட்டுள்ளனர் என இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். உருளை வடிவிலான இந்த கவசம் சுமார் 60 அடி நீளமும் அத்துடன் 3 பிரிவுகளை கொண்டதாகவும்; இரும்பக் கம்பிகள் ரயில்வே தண்டவாளங்கள் ஆகியவற்றை கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கவசத்தை நீருக்கடியில் செலுத்தக்கூடிய இயந்திரம் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அலுவலக அமைப்பு ஒன்றும் பின்புறமாக ரயில் பெட்டியை போன்ற விசாலமான பகுதி ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த கவசம் அண்மைக்காலத்திலேயே வெல்டிங் செய்ததற்கான அடையாளங்கள் காணப்படுகிறது. படையினர் முல்லைத்தீவிற்குள் முன்னேற்ற முயற்சியை மேற்கொள்ளும் போதே புலிகளின் தலைவர்கள் தப்பிச் செல்வதற்காக இது தயாரிக்கப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கவசத்தை கடலுக்குள் கொண்டு செல்லும் நோக்கில் 300 அடி நீளமும் 30 அடி ஆளமும் கொண்ட கால்வாய் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. புலிகள் தமக்கு தேவை ஏற்படும் போது குறித்த கவசத்தை கடலுக்குள் கொண்டு செல்வதற்கு நிலக்கீழ் நீரை பெறும் நோக்கில் இந்த கால்வாய் தோண்டியிருக்கின்றனர். இந்த கால்வாய் வெளியில் தெரியாதபடி இருபுறமும் இரும்பு சீட்டுக்களால் மறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த கவசத்தை இயக்குவதற்கு தேவையான சுழலக்கூடியி இயந்திரங்கள் வேறு ஒரு இடத்தில் இருந்து படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

படையினர் பாதுகாப்பு வலயப்பகுதியில் புலிகளை 2 சதுர கிலோமீட்டருக்குள் முடக்கியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இன்று (08.05.2009) தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த பகுதியில் புதியதொரு பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்படி கரையா முள்ளிவாய்க்கால் பகுதியின் தெற்கு பிரதேசத்தையும் வெள்ளாமுள்ளிவாய்கால் பிரதேசத்தையும் உள்ளடக்கி 2 கிலோமீட்டர் நீளமும் 1.5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட பிரதேசத்தையும் இவ்வாறு பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி இந்த வலயம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முன்பு பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தப்பட்ட போது 20 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்தது. தற்பொழுது அது 2 சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கு ஒடுக்கப்பட்டுள்ளது. இங்கு மக்களை மீட்கும் பணியினை படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு வலயப்பகுதியில் புலிகளின் பிடியில் உள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள படையினர் இதுவரையில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீட்டுள்ளனர் என அவர் குறிபிட்டுள்ளார்.

புலிகளுக்கும் சர்வதேச பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு

இலங்கை படையினர் யுத்தரீதியில் புலிகளை தேற்கடித்தால் அவர்களால் மரபுரீதியில் வளர்சி அடைய முடியாது என அமெரிக்காவின் யுத்தபகுப்பாய்வு நிறுவனமான ஸ்ரட்டபோட் தெரிவித்துள்ளது. புலிகள் இந்தியாவின் தமிழ்நாட்டை பயன்படுத்தி ஏனைய பயங்கரவாத இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளனர். தலிபான்களும், அல்கெய்தா அமைப்பினரும் பாகிஸ்தானை தமது வன்செயல்களுக்காக பயன்படுத்துவது போன்று புலிகள் தமிழ் நாட்டை பயன்படுத்துகின்றனர். புலிகள் தமது உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், பயிற்சிகளை பெறுவதற்கும் இந்தியாவையே பயன்படுத்துகின்றனர். சர்வதேச பயங்கரவாதிகளான அல்கெய்தா அமைப்பும் புலிகளும் ஆயுதங்கள், போதைவஸ்து கடத்தல், ஆள்க்கடத்தல் போன்றவற்றிற்கு பரஸ்பரம் உதவிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

05.05 PM

 

இடம்பெயர்ந்து நெல்லியடியில் உள்ள மாணவர்களுக்கு கல்வி

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் நெல்லியடி மகாவித்தியாலயத்தில் தங்கியிருக்கும் மணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு 258 மாணவர்களும், 6 ஆசிரியர்களும், 8 ஆசிரியைகளும் தங்கியுள்ளனர். இந்த ஆசியர்களை கொண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக யாழ் மேலதிக கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான பாடப்புத்தகங்களை கரவெட்டி, மற்றும் பருத்தித்துறை கல்வி கோட்டங்கள் வழங்கியுள்ளதாகவும், மேலதிகமாக தேவைப்படும் புத்தகங்களை ஏனைய கல்வி கோட்டங்களில் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் மேலதிக கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

புல்மோட்டை களவைத்தியசாலை இடமாற்றம்

இந்திய அரசின் அனுசரணையுடன் புல்மோட்டையில் இயங்கிவந்த தள வைத்தியசாலை இடம்மாற்றப்படவுள்ளது. இதனை வவுனியாவின் செட்டிக்குளம் பகுதிக்கு மாற்றுவதற்கு சுகாதார அமைச்சும், இந்திய தூதரகமும் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த வைத்தியசாலையை சுகாதாரஅமைச்சின் செயலாளர் அத்துல ஹகந்தலியனகே மற்றும், இந்திய உயர்ஸ்தானிகராலய பிததிநிதிகள் சிலரும் நேற்று (07.05.2009) விஜயம் மேற்கொண்டிருந்தனர். புலிகளின் பிடியில் இருக்கும் மக்கள் விடுவிக்கப்பட்டதும் அவர்களை தங்கவைக்கும் நோக்கிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
 

03.30 PM

 

உணவுப் பொருட்கள் கொண்டுசெல்ல ஐசிஆர்சி மறுப்பு

புலிகளின் கட்டுப்பாட்டிற்கு உணவுப் பொருட்கள் எடுத்து செல்வதற்கு தமக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கேட்டுள்ளது. அந்த பகுதிக்கு கூடுதல் உணவுப் பொருட்களை எடுத்து செல்வதற்கு செஞ்சிலுவை சங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் என இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்ததை அடுத்து செஞ்சிலுவை சங்கம் இவ்வாறு அறிவித்துள்ளது. அந்த பகுதிக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையக பேச்சாளரான மார்ஷல் ஈசாத் கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் 2300 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 30 மெற்றிக் தொன் எடுத்து செல்லப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரச்சனை அங்கு வலுவடைந்துள்ளதால் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. அது தவிர வேறெந்த பிரச்சனையும் இல்லை என அவர் கூறியுள்ளார். மேலும் உணவுப் பொருட்களை இறக்கிவிட்டு நோயாளர்களை அங்கிருந்து இங்கு அழைத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

தற்பொழுது அனுப்பப்படும் 30 மெற்றிக் தொன் உணவு அவர்களுக்கு போதுமானதாக இல்லை என்பதனால் 500 மெற்றிக் தொன் உணவை அனுப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளபோதும் அதற்கு செஞ்சிலுவை சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு

மாளிகாவத்தை பகுதியில் பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகில் இன்று (08.05.2009) துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளதோடு இது சம்மந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

11.30 AM

 

முல்லைத்தீவில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து நேற்று (07.05.2009) மாலை மேலும் ஒரு தொகுதி மக்கள் புல்மோட்டை பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட 493பேர் கிறின் ஓசோன் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வழித்துணை வழங்கியுள்ளது. இந்த நோயாளர்கள் புல்மோட்டை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் தேடுதல்

கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்குளி, கிரான்பாஸ், கோட்டை, புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று (07.05.2009) படையினரும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன் போது 22 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு;ளனர் இவர்கள் தமது அடையாளங்களை உறுதிப்படுத்த தவறியதன் காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தற்பொழுது அந்தந்த பொலிஸ் நிலையங்களில் வைத்து விசாரணைக்கு உட்பபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குணமடைந்த நோயார்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்

பாதுகாப்பு வலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 61 பேர் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடை;ந்த நோயாளர்கள் குணமடைந்தமையை அடுத்தே அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 660 பேர் குணமடைந்த நிலையில் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

09.50 AM

 

வவுனியா முகாம்களில் உள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீர்

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு விசேட திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் அமைச்சர் மகிந்த சமரவீர தெரிவித்துள்ளார். முகாம்கள் உள்ள பகுதிகளில் 200 குளாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு நீர்வழங்குவதற்கென தண்ணீர் பவுசர்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் போத்தலில் அடைக்கப்பட்ட நீர்ரும் வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிபப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்து வந்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உதவி

இடம்பெயர்ந்து வந்த பெண்கள், மற்றும் சிறுமிகளுக்கு உதவுவதற்கு ஐக்கிநாடுகள் சபையின் சனத்தொகை நிதியம் முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில் 3000ம் வரையிலான கர்ப்பிணி தாய்மர்கள் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து அரச கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளனர். இவர்களுக்கு வேண்டிய சுகாதார சேவைகளை செய்து கொடுக்கப்படவுள்ளது என ஐ நா சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி லிங்கே கிறிஸ்ரியன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேசம் நேரில் பார்வையிடவேண்டும்

இலங்கையின் அபிலாசைகளையும் திட்டங்களையும் புறம்தள்ளாது மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு உதவுமாறு சர்வதேச சமூகத்திடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வேண்டுகொள் விடுத்துள்ளார். இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்களை நேற்று (07.09.2009) கொழும்பில் சந்தித்து பேச்சு நடத்திய அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் வடமாகாணத்தை அபிவிருத்தி செய்யும் திட்டங்களும் அமுல்படுத்தப்படவுள்ளன. இதற்கு சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

முகாம்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கம் செய்து கொடுத்துள்ள வசதிகளையும், அங்கு அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள திட்டங்களையும் சர்வதேச சமூகம் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என தெரிவித்துள்ளார். அத்துடன் புலிகளுக்கு சர்வதேச சமூகம் அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இலங்கை அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளுக்கும், அமைப்புக்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நன்றிகளை தெரிவித்துள்ளார்.
 

08.30 AM

 

வெசாக் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது

வெசாக் பண்டிகை இன்று (07.05.2009) பொளத்த மக்களால் மகிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. புத்த பெருமான் பிறந்ததும், பரிபூரணம் அடைந்ததும், உயிர் நீத்ததும் இத்தினத்திலாகும். இந்த பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் புத்தபெருமானின் போதனைகளுக்கு ஏற்ப அனைவரும் வாழவேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டியுள்ளார். தீய குணங்களை விடுத்து அன்பு, கருணை, போன்ற நற்குணங்களுடன் அனைவரும் நல்லவர்களாக வாழவேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

பொருட்கள் எடுத்துச்செல்ல ஐசிஆர்சி உதவவேண்டும்.

முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு அத்தியாவசியப்; பொருட்களை அனுப்புவதற்கு ஐ சி ஆர் சியின் உதவி மிகவும் அவசியம் என அத்தியாவசிய சேவைகள் ஆணையார் எஸ் பி திவாரட்ண தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில் நேற்று (07.05.2009) கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். கிறின் ஓசோன் கப்பல் மூலம் அந்த மக்களுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் போதுமானதாக இருக்க வாய்ப்புக்கள் இல்லை என கருதுகிறேன். போதியளவு உணவுப் பொருட்களும், அதனை எடுத்து செல்வதற்கான கப்பலும் எம்மிடமுள்ளன ஆனால் அவற்றை எடுத்து செல்வதிலேயே சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இதனாலேயே ஐ சி ஆர் சியின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளோம்

கிறின் ஓசோன் கப்பல் மூலமே தற்பொழுது 30 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களும் மருந்துகளும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் உணவு பொருட்கள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐ சி ஆர் சி யின் உதவி கிடைக்கும் பட்சத்தில் 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை அனுப்புவதற்கு தயாரக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

07-05-2009,  08.45 PM

 

முல்லைத்தீவில் மண் அணை கைப்பற்றப்பட்டுள்ளது

முல்லைத்தீவு கரையமுள்ளிவாய்கால் பகுதியில் இன்று (07.05.2009) அதிகாலை படையினர் புலிகளின் பாரிய மண் அணை ஒன்றை மீட்டுள்ளனர். 58வது படைபிரிவினரும் 10வது கஜபா படையினரும் நேற்று இந்த பகுதியில் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டதை அடுத்தே இந்த பகுதி படையினர் வசம் வந்துள்ளது. இங்கு நடைபெற்ற மோதலை அடுத்து நடத்தப்பட்ட தேடுதலின் போது புலிகளின் 03 சடலங்களும், ரி 56 ரக துப்பாக்கி 02, ஜகோம் தொடர்பு சாதனம் 01, என்பன படையினரால் மீட்கப்பட்டள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரவிசங்கரின் கருத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது

இந்தியாவின் வாழும் கலைப்பயிற்சி நிலையத்தின் தலைவர் சிறி சிறி ரவிசங்கர் இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்தை நடத்துவதற்கு தான் மத்தியஸ்தம் வகிக்க தான் தயாhர் என தெரிவித்துள்ளதை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இது சம்மந்தமாக ரவிசங்கருடன் பேசுவதற்கு தாராக இல்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. புலிகளுடன் பேச்சு நடத்தப்படமாட்டாது என்ற அரசாங்கத்தின் கொள்கையில் எந்தவித மாற்றமும் கொண்டுவரப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

04.30 PM

 

இதுவரை 192,000ம் மக்கள் அரசகட்டுப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து அரச கட்டுப்பாட்டிற்கு இதுவரை 192,000 பேர் வைரயில் வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 190,255 பேர் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 1739 பேர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு உணவுபொருட்கள்

பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள மக்களுக்கு நேற்று (06.05.2009) உணவுப் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் குழந்தைகளுக்கான உணவு உட்பட 30 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலக உணவுத் திட்டத்தின் நிவாரணப் பொருட்களும் இதில் அடக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வவுணதீவில் அமைதிப் பேரணி

மட்டக்களப்பில் வவுணதீவில் இன்று (07.05.2009) கண்டனப் பேரணி ஒன்று இடம் பெறுகிறது. வவுணதீவில் ரவீந்திரதாஸ் என்ற பாடசாலை ஆசிரியர் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்தே இந்த பேரணி அமைதியான முறையில் நடத்தப்படுகிறது. இது ஆசிரியரின் பூதவுடல் அடக்கம் செய்யும் வரை இடம் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுணதீவில் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

மட்டக்களப்பு வவுணதீவு கரையாக்கன் தீவில் ஒருவர் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார். இவர் கூலித்தொழிலாளியான கிருபைராச ரமணன் (வயது 27) என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் திகதி வீட்டில் இருந்த போது அங்கு வந்த சிலர் இவரை கடத்தி சென்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள சீன தூதரகம் மீது தாக்குதல்

லண்டனில் உள்ள சீன தூதரகம் மீது புலிகளின் ஆதரவாளர்கள் (07.05.2009) தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சுமார் 150 இற்கும் மேற்பட்ட புலி ஆதரவாளர்கள் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சீன தூதரகம் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுப்பட்ட 3 புலி ஆதரவாளர்களை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

03.15 PM

 

மட்டக்களப்பில் 4 பேர் கடத்தப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பு பகுதியில் 4 இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நண்பர்களான இவர்கள் கடந்த 3ம் திகதி ஒரே நேரத்தில் காணாமல் போயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்கள் தாண்டவன்வெளி எல்லை வீதியை சேர்ந்த யோகேந்திரன் யோசான் (வயது 20), சேற்றுக்குடாவைச் சேர்;ந்த மகேசன் பேர்னாட் (வயது 22), ஜயந்திபுரத்தைச் சேர்ந்த தவராசா ஹரிமுகுந்தன் (வயது 20) மற்றும் மாமாங்கத்தை சேர்ந்த பெர்னான்டோ பிரசாத் (வயது 20) என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


ஐநா செயலர் இலங்கை விஜயம் குறித்து ஆராய்வு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கை வருமாறு விடுத்துள்ள அறிவித்தல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூன் பரிசீலித்து வருவதாக ஐநா செயலகம் தெரிவித்துள்ளது. நேற்று (06.05.2009) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஐநா சபையின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். இவரின் இந்த விஜயம் இலங்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என கருதும் பட்சத்தில் இந்த விஜயம் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

 

 11.15 AM

 

ஆசிரியர் படுகொலை துரைரட்ணம் கண்டனம்


மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாவற்கொடிசேனை விநாயகர் வித்தியாலய ஆசிரியரான பாலசிங்கம் ரவீந்திரராஜா கொல்லப்பட்ட சம்பவத்தை கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ பி ஆர் எல் எப் பத்மநாபா அமைப்பின் முக்கியஸ்தருமான இரா. துரைரட்ணம் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கஷ்ட பிரதேசங்களில் ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தயக்கம் காட்டுகின்ற போது சேவை நோக்குடன் அங்கு பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமையானது கண்டிக்கத்தக்க விடயம். தற்பொழுது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சதீஸ்குமார் தினுஷ்சிக்கா வின் சம்பவம் குறித்த பீதியடைந்த கல்விச் சமூகம் அதிலிருந்து விடுபடாத நிலையில் இந்த படுகொலை; இடம்பெற்றுள்ளது. ஆயுத வன்முறை செய்யுமளவிற்கு ஆசிரியர்கள் நலிவடைந்தவர்கள் அல்ல. எனவே இந்த படுகொலை சம்மந்தமாக தீவிர விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மக்களுக்கு உணவு அனுப்பப்படுகிறது

பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு போதுமான அளவு உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக மனிதஉரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தடவையும் 30 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் 200 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை கொண்டு செல்லக்கூடிய கப்பலை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் 1000 மெற்றிக் தொன் எடுத்துச் செல்லக்கூடிய கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. தற்போதைய நிலைமையில் அதனை அங்கு கொண்டு செல்வதில் சிக்கல் தோன்றியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் சமைத்து உண்ண வசதி செய்யப்படுகிறது

வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் தாமே சமைத்து உண்ணக்கூடிய புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அனர்த முகாமைத்துவ மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயலர் யூ எல் எம் கால்தீன் தெரிவித்துள்ளார். இதற்கான வசதிகள் அனைத்தும் இந்த மக்களுக்கு செய்து கொடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். கடந்த 20ம் திகதிக்கு பின்னர் வந்த பொதுமக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. சமைத்த உணவை வழங்கும் போது பல சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் இதனை தவிர்கும் முகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் பிடியில் இருந்து மக்கள் வருகை

புலிகளின் பிடியில் இருந்து வந்த மேலும் ஒரு தொகுதி மக்கள் நேற்று (06.05.2009) படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இரண்டு படகுகளில் 36 பேர் அந்த பகுதியில் உள்ள 58வது படைப்பிரிவினரிம் வந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு தேவையான அனனத்து வசதிகளையும் செய்து கொடுத்த படையினர் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் புதிய முகாம் அமைக்கப்படுகிறது

வவுனியா பறையனாலங்குளம் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்குவதற்கென நிவாரண கிராமம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. 1200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கிராமம் அமைக்கப்படுகிறது. வலயம் 4 என பெயரிடப்பட்டுள்ள இந்த கிராமத்தில் மக்கள் வரைவில் குடியமர்த்தப்படுவர். இதில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இடம் பெயர்ந்த மக்களுக்கு பிறப்பு இறப்பு விகாக சான்றிதழ்


வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து யாழ்ப்மாவட்டத்தில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் தமது பிறப்பு, இறப்பு, விவாக சன்றிதழின் பிரதிகளை பெறமுடியும் என யாழ் மாவட்ட பிறப்பு இறப்பு விவாக பதிவு உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதற்கென இடம் பெயர்ந்த மக்கள் தமது விண்ணப்பங்களை நலன்புரி நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் கையளித்தால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் இதுவைரயில் விண்ணப்பித்த 130 பேருக்கு இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக என அவர் மேலும் கூறியுள்ளார்.

நீரிழிவு நோய்ப் பிரிவு கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது

யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு நோய்ப் பிரிவு கணனி மயப்படுத்தப்பட்டு;ள்ளது. இதற்கான வேலைத்திட்டம் இன்று (07.09.2009) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான உபகரணங்களை ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்ந்தோர் அமைப்பும், சுகாதார அமைச்சும் வழங்கியுள்ளது. யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோயாளர்களின் தொகை அதகரித்து வருவதாகவும் இந்த பிரிவை கணனி மயப்படுத்துவதன் மூலம் நோயாளர்களுக்கு துரித கதியில் சிகிச்சை மேற்கொள்ள முடியும் எனவும் தை;தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

08.15 AM

 

யாழில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உடைகள்

யாழ்ப்பாணத்தின் நலன்புரி நிலையங்களில் உள்ள இடம் பெயர்ந்த மக்களுக்கு கியூடெக் கரித்தாஸ் நிறுவனம் இன்று (07.05.2009) உடைகள் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி கட்டம் கட்டமாக இடம்பெறவுள்ளது. இதன் முதல் கட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கொடிகாமம் திருநாவுக்கரசு பாடசாலையில் தங்கியிருக்கும் 250 குடும்பங்களுக்கு இந்த ஆடைகள் வழங்கப்பட்டுள்ளது.

 

06-05-2009,  11.00 PM

 

 

 

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ம் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரனின் அதிகாரவெறி காரணமாக ரெலோ இயக்கம் மீது மேற்கொண்ட தாக்குதல் மே 6ம் திகதி வரை நீடித்தது. அக்கட்சியின் தலைவர் சிறி சபாரத்தினம் மே 6ம் திகதி கோண்டாவில் அன்னங்கை என்னுமிடத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பின்னரே புலிகளின் தாகம் தணிந்தது.

ரெலோ இயக்கம் மீது புலிகள் நடாத்திய உக்கிர தாக்குதல் ஒரு சில தினங்களில் ஓய்வுக்கு வந்தபோதும் ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினத்தை தேடி புலிகள் அலைந்து திரிந்தனர். ரெலோ இயக்க தலைவர்களையும், உறுப்பினர்களையும் சரணடைய வலியுறுத்தியும், அவர்களுக்கு புகலிடம் அளிக்க வேண்டாம் என்று மக்களை எச்சரித்தும் புலிகளின் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள் ஓலமிட்டபடி கிராமத்து வீதிகளை வலம் வந்தன.

23 வருடங்களுக்குப் பின்னர் இப்போது புலிகளையும், புலிகளின் தலைவர் பிரபாகரனையும் சரணடைய காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அன்று சிறி சபாரத்தினத்தின் நிலையில் இன்று பிரபாகரன் உள்ளார். ஒரு வித்தியாசம் ரெலோ இயக்கத்தவர்கள் தம்மை பாதுகாப்பதற்காக மக்களுக்கு எவ்வித தீங்கையும் செய்யவில்லை. புலிகள் தம்மை பாதுகாக்க மக்களை கேடயமாக பாவித்து வருகின்றனர். அன்று ரெலோ இயக்கத்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என அச்சுறுத்திய அதே மக்களையே புலிகள் இன்று தமக்கு அரணாக ஆக்கியுள்ளனர்.

ரெலோ இயக்கம் மீது தாக்குதல் தொடுத்ததற்கு புலிகள் கூறிய நியாயம் அவர்கள் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதாகும். ரெலொ இயக்கம் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டதா? ரொலோ இயக்கத்தினர் மீது குற்றம் சுமத்திய புலிகள் அத்தகையை குற்றங்களை புரியவில்லையா என்ற நியாயமான கேள்விகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டாலும் தற்போது முல்லைத்தீவில் மக்களை பலவந்தமாக தடுத்து வைத்து புளியங்காயையும், பருப்பையும் அவித்து உண்ணும் நிலையை ஏற்படுத்தியிருப்பதுடன் உணவு பொருள்களை வாங்க பணமில்லாத மக்களிடம் உள்ள தங்க ஆபரணங்களை அறாவிலைக்கு புடுங்கிக் கொண்டு அந்த மக்களுக்காக அரசாங்கம் அனுப்பும் உணவுப் பொருட்களில் அபகரித்தவற்றை வியாபாரம் என்ற பேரில் ஆபரணங்களுக்கு விலையாக கொடுத்த பணத்தை திரும்ப புடுங்க பயன்படுத்தும் புலிகளின் நடவடிக்கையை சமூகவிரோதம் என்பதா? துரோகம் என்பதா?

ஆக, விடுதலையின் பேரால் மேற்கொள்ளப்படும் அனைத்தும் மக்களின் சுபி;ட்சமான நல்வாழ்வுக்காக அல்ல என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளுதல் அவசியம்.

மக்களின் நல்வாழ்வுக்காகவம், சுபிட்சமான எதிர்காலத்திற்காகவும் போராடிய, அந்த மகத்தான பணியில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நாமும் நினைவு கூருகின்றோம்.

 

மட்டக்களப்பின் கல்வி நடவடிக்கை பாதிப்பு

மட்டக்களப்பில் சதீஸ்குமார் தினுக்ஷிகாவின் கொலைச் சம்பவத்தை கண்டித்து இன்றும (06.05.2009) ; பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன. மட்டகக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் ஓரளவு மாணவர்கள் வரவு இருந்தபோதும் நகரப்பகுதியில் வரவு முற்றாக இல்லாதிருந்தது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து பெற்றோர் தமது பிளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் அச்சமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து பாடசாலை அதிபர், ஆசிரியர், பெற்றோர் மாணவர் உள்ளடங்கய சிவில் பாதுகாப்பு குழு ஒன்றை அமைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியினை வெகுவிரைவில்

அனுப்பி வைக்குமாறு தமிழக முதல்வர் வேண்டுகோள்

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை வெகு விரைவில் அங்கு அனுப்பிவைக்குமாறு தமிழக முதல்வர் மு. கருணாநிதி மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மன்மோகன் சி;ங் அனுப்பியுள்ள பதில் கடடித்தில் இலங்கைக்கு நிதியினை அனுப்பும் அனைத்து நடவடிக்கையையும் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தற்கென தமிழக அரசால் வழங்கப்பட்ட நிதி குறித்து மகிழ்சி அடைவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரும் பிரதிநிதிகள் திருப்தியுடன் செல்கின்றனர்

இலங்கைக்கு தவறான அபிப்பிராயத்துடன் வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் உண்மை நிலையை புரிந்து கொண்டு திருப்தியுடன் செல்கின்றன என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று (06.05.2009) இடம் பெயர்ந்த மக்களுக்கு நிதியமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களில் சேகரிக்கப்பட்ட 25 மில்லியன் ரூபா நிதியினையும் 20 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையும் பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாத்தின் பிடியில் சிக்கியுள்ள ஏனைய அப்பாவி தமிழ் மக்களை மீட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

சோனியா காந்தியின் பிரச்சார கூட்டம் ரத்து

தமிழக்கத்தின் சென்னை, மற்றும் புதுச்சேரி கோவை பகுதியில் இன்று (06.05.2009) நடைபெறவிருந்த இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியின் பிரசாரக் கூட்டம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது. இவருக்கு புலிகளினாலும், புலி ஆதரவாளர்களினாலும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டே இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

 

12.55 PM

 

ஐநா செயலர் ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடல்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்கி மூன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மாதாந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த உரையாடல் குறித்து கருத்து தெரிவித்த பான்கி மூன் இலங்கை நிலவரம் குறித்தும் மற்றும் மோதல் பகுதிகளில் மக்களின் நிலைகுறித்தும் ஆராய்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

மோதல் பகுதியில் கனரக ஆயுதங்களை பிரயோகிக்காமை குறித்த இலங்கை அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த அவர் புலிகள் பலவந்தமாக சிறுவர்களை படையில் சேர்பதை தவிர்க்குமாறும் மோதல் பகுதியில் உள்ள மக்களை வெளியேறுவதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் புலிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மோதல் பகுதியில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கும், அங்குள்ளமக்களுக்கு மருந்து, உணவுப் பொருட்களை வழங்குவதற்கும் இரு தரப்பினரும் மோதல் தவிர்பொன்றை மேற்கொள்ளவேண்டும் என அரசாங்கம் மற்றும் புலிகளிடம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சரணடைபவர்களை எந்த நீதிமன்றத்திலும் ஒப்படைக்கலாம்

யாழ் மாவட்டத்தில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக சரணடைபவர்கள் யாழ்மாவட்டத்தில் உள்ள எந்தஒரு நீதிமன்றத்திலும் கையளிக்கலாம் என யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம் அறிவித்ததாக யாழ் மனிதஉரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி சாவகச்சேரி, மல்லாகம் பருத்தித்துறை, ஊர்காவற்துறை ஆகிய நீதிமன்றங்களில் ஒப்படைக்கலாம். இதுவரை காலமும் யாழ் மனிதஉரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தஞ்சமடைபவர்கள் யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் மாத்திரம் ஒப்படைக்கப்பட்டு வந்துள்ளனர். வன்னியில் இருந்து வந்து பiயினரிடம் சரணடைந்த சிலர் தப்பிச் சென்றதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு;ளது. இவ்வாறு சரணடைபவர்களை மனிதஉரிமை ஆணைக்குழு வாகனத்தில் கொண்டு செல்லாது தனியார் வாகனங்களில் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

12.00 PM

 

வவுணதீவில் ஒருவர் சுட்டுக் கொலை

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இன்று (06.05.2009) காலை 7.30 மணியளவில் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இவர் பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலய ஆசிரியரான மங்கிக்கட்டு பகுதியை சேர்ந்த பாலசிங்கம் ரவீந்திரதாஸ் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோது காயான்மடு விநாயகர் கோவில் அருகே வழிமறித்த ஆயுததாரிகள் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

11.30 AM

 

பிரிட்டிஸ் பாராளுமன்றக் குழு வவுனியா விஜயம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிடிட்டிஷ் பாரளுமன்ற குழு நேற்று (05.05.2009) பிறபகல் 2 மணியளவில் வவுனியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அங்கு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டுள்ளதுடன் அவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்துள்ளனர். அத்துடன் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

11.05 AM

 

புலிகளின் தலைவர் பாதுகாப்பு வலயத்திலேயே உள்ளார்

புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பு வலயத்தின் எஞ்சியுள்ள பகுதியிலேயே உள்ளார் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தினை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் விவாதம் நேற்று (05.05.2009) மாலை பாராளுமன்றத்தில் இடம் பெற்ற போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். புலிகளின் தலைவர் நாட்டை விட்டு வெளியேறமுடியாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு வலயத்தின் எஞ்சியுள்ள பகுதியில் உள்ள மக்கள் மீட்கப்படும் வரை படையினரின் தாக்குதல்கள் தொடரும். சர்வதேச சமூகம் இலங்கை மீது பிரயோகிக்கும் எந்த ஒரு அழுத்தங்களுக்கும் இலங்கை அரசு அடிபணியாது என அவர் மேலும் கூறியுள்ளார்.

புனர்வாழ்வு நிலையத்திற்கு மக்கள் அனுப்பிவைப்பு

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மேலும் சிலர் தெல்லிப்பளையில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு;ள்ளனர். இதற்கு முன்னரும் நூற்றுக்கணக்கானவர்கள் அவர்களது சுயவிருப்பத்தின் பேரில் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

08.45 AM

 

அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று (05.05.2009) மாலை அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாதகாலம் நீடிக்கும் வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது. இதற்கு ஆதரவாக 88 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் கிடைத்துள்ளது இதனை அடுத்து 74 மேலதிக வாக்குகளால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் அரசாங்கம், மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த கட்சிகள், ஜாதிக ஹெலஉறுமய, ஜேவிபி, தேசிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. தமிழ் தேசய கூட்டமைப்பு மாத்திரம் எதிராக வாக்களித்துள்ளது. வாக்கெடுப்பு நடைபெறும்போது ஐக்கிய தேசியக்கட்சி, ஜனநாயக ஐக்கமுன்னணி, மலையக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என்பன சபையை விட்டு வெளியேறியுள்ளன.

தமிழ் அரசில் கட்சிகள் ஜனாதிபதியுடன் பேச்சு

 

தமிழ் அரசில் கட்சிகனின் தலைவர்கள் நேற்று (05.05.2009) மலை அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சனைகள் குறித்து பேச்சு நடத்துவதற்கென தமிழ் அரசில் கட்சிகள் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து உடனுக்குடன் தீர்ப்பதற்கென தமிழ் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சனை குறித்து வாரத்தில் ஒருமுறை கூடி ஆராயந்து அவற்றை பிரசே செயலகங்களின் ஊடாக தீர்த்து வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழ் அரசயல்கட்சிகள் சார்பில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர். த. சித்தார்த்தன், பத்மநாபா ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் செயலாளர் ரி. சிறிதரன், ஈ பி டி பி அமைப்பின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவர் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மலையக மக்கள் முன்னணி பிரதி அமைச்சர் பி. இராதாகிருஸ்ணன், ஆகியோரும்

அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான டி. யு. குணசேகர, மகிந்த சமரசிங்க, நிமால் சிறிபாலடி சில்வா, வஸ்வ வர்ணபால, வினாயகமூர்த்தி முரளிதரன், ஜனாதிபதியின் சிரெஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதபதியின் செயலாளர் லலித்வீரதுங்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ் பி திவாரட்ண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கலந்து கொள்வதற்காக கையொப்பமிட்ட போதும் பின்னர் அதனை நிராகரித்துள்ளனர்.

மேலும் ஒரு மண் அணை படையினரால் மீட்பு


வெள்ளைமுள்ளிவாய்;க்காலின் தெற்கு பகுதியில் புலிகளின் மேலும் ஒரு மண் அணை நேற்று (05.05.2009) இரவு படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக 58வது படைப்பிரிவின் கட்டளையிடும் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இந்த பகுதிகளில் நடைபெற்ற மோதல்களின் போது 50 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்பொழுது புலிகள் 4 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

 

05-05-2009,  10.25 PM

 

கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை

பாதுகாப்பு வலயப்பகுதியில் மனிதநேயப்பணியினை மேற்கொண்டுள்ள இலங்கை படையினர் பாரிய ஆயுதங்கள் மற்றும் வான்தாக்குதல்களை நிறுத்தியுள்ளதாக தெரிவித்த கருத்தை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் இன்று (05.05.2009) கருத்து தெரிவித்த இந்திய உள்த்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இதனை கூறியுள்ளார். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவி செல்வி ஜெயலலிதா இந்தியா பங்களாதேசில் செயற்பட்டது போன்று இலங்கை விடயத்திலும் செயற்படவேண்டும் என தெரிவித்த கருத்தினை வன்மையாக கண்டித்துள்ளார். 1971 ம் ஆண்டு பங்களாதேஸ் உருவான வரலாற்றை ஜெயலலிதா சிறந்த முறையில் உற்று நோக்கவேண்டும்.

அண்மையில் தமிழகத்தின் கோவையில் வைத்து இந்திய இராணுவத்தின் வாகன தெடரணிமீது தாக்குதல் நடத்திய பெரியாhர் திரவிட முன்னேற்றக்கழகம் இந்தியாவில் தடைசெய்யப்படுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்த 6சிறுவர்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

புலிகளின் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த தாய், தந்தையரை இழந்த 06 சிறுவவர்கள் இன்று (05.05.2009) அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறுவர்கள் குறித்து மன்னார் மாவட்ட சிறுவர் நன்நடத்தை அதிகாரி மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மன்னார் மாவட்ட நீதவான் ஏ. யூட்சன் சிறுவர்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதில் ஒன்றரை வயது தொடக்கம் 14 வயது வரையான சிறுவர்கள் அடங்குகின்றனர். இவர்களது உறவினர்கள் யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, திருகோணமலை பகுதியில் இருந்து வந்திருந்தனர்.
 

 03.15 PM

 

தினுஷிக்காவின் கொலை சந்தேகநபர்கள் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சதீஸ்குமார் தினுஷிக்கா (வயது 8) என்ற சிறுமியில் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் 3 பேர் இன்று (05.05.2009) அதிகாலை சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கல்வியங்காடு பாரதி ஒழுங்கை பகுதியை சேர்ந்தவர்களான மகிந்ததாஸ் மயூரன் (வயது 24), எட்வேர்ட் ஜூலியட் ஸ்டனிஸ்லோஸ் (வயது 20), ஏரன்ஸ் ஒழுங்கையைச் செர்ந்த சம்பா எனப்படும் சோமசுந்தரம் அனுஷன் (வயது 19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி மயூரன் என்பவரது வீட்டிலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸாரின் விசாரணையின் போது குறித்த சிறுமியின் பாடசாலை புத்தகங்களை மறைத்து வைத்துள்ளதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர். அந்த இடத்தை அடையாளம் காட்டுவதாக தெரிவித்து பாரதிபுரத்தில் உள்ள முஸ்லீம் மையவாடிப்பகுதிக்கு பொலிஸாருடன் சென்றுள்ளனர். பின்னர் அங்கு மறைத்து வைத்திருந்த ரி56ரக துப்பாக்கியால் பொலிஸாரை தாக்க முற்பட்டுள்ளனர். இதனை அடுத்து பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தினை

மிகவும் சிறந்த முறையில் நடத்துகின்றது

உலகிற்கு அச்சுறுத்தலாக விழங்கும் பயங்கரவாத்திற்கு எதிரான போரை இலங்கை அரசு சிறந்த முறையில் மேற்கொண்டு வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐக்கயநாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பில் பேசிய அவர் ஐநா சபையின் ஒழுங்கு விதிகளுக்குள் இந்த விடயம் குறித்து உள்ளடக்க தேவையில்லை என தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராகவே அங்கு யுத்தம் நடைபெறுகிறது. இது உலகின் பயங்கரவாத்திற்கு எதிராக ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்படும் யுத்தத்திற்கு சமனானது என தெரிவித்துள்ளார்.

கனடா அரசு நிதியுதவி வழங்கவுள்ளது

கனடா அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கென 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை வழங்க கனடா அரசு முன்வந்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடாவின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர் பௌஜரியல் ஒடா இதற்கான உறுதிமொழியை வழங்கியுள்ளார். இந்த நிதி சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட சில அரசார்பற்ற நிறுவனங்களின் ஊடாக பயன்படுத்தப்படவுள்ளது. அத்துடன் புலிகள் அமைப்பை கனடாவில் இயங்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.

வன்னி மக்களுக்கு உணவு வினியோகிக்கப்படுகிறது


வடக்கு மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களுக்கான உணவு வினியோகம் ஒழுங்கான முறையில் நடைபெற்றுவருவதாக உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான துணை இயக்குனர் அபே; அஸ்ரத் அம்மையார் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு போதுமான உணவு இல்லை என புலிகள் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இது உண்மைக்கு புறம்பான கருத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

பாதுகாப்ப வலயப்பகுதிக்கு கடந்த பெப்ரவரி 19ம் திகதி தொடக்கம் ஏப்ரல் 30ம் திகதிவரையான காலப்பகுதியில் 3328 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கடல் மார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டள்ளது. இலங்கை அரசு அந்த பகுதிக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதற்கு தடைகள் எதனையும் விதிக்கவில்லை அவர்களின் அனுமதியுடனேயே அனுப்பப்படுகிறது.

குறித்த பகுதியில் உணவுப் பொருட்களை சேமிப்பதற்கு இடங்கள் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக அதிகளவில் உணவுப் பொருட்கள் எடுத்து செல்ல முடியவில்லை. இதற்கென 200 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையில் கப்பல் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை அந்த பகுதிகளுக்க 674 மெற்றிக் தொன், கொதுமை மா 1074 தொன், 29 தொன் காய்கறி மற்றும் பருப்பு, சீனி, எண்ணெய், சோளம் சோயா போன்றவை என்பன அனுப்பப்பட்டுள்ளது

பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்சவுடன் பேசியதை அடுத்து பெரிய கப்பலில் உணவுப் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டு பின்னர் சிறு மீன்பிடி படகுகள் மூலம் கரைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இங்கு உணவு சிறந்த முறையில் வினியோகிக்கப்படுகிறது என கூறியுள்ளார்

 

12.55 PM

 

புத்தல பகுதியில் கிளைமோர் தாக்குதல்

மொனறாகல வெலியற புத்தல பகுதியில் இன்று (05.05.2009) காலை 10.30 மணியளவில் புலிகள் கிளைமோர் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியால் சென்றுகொண்டிருந்த பெலவத்த சீனித் தொழிற்சாலைக்கு நீர் வினியோகம் செய்யும் ரைக்ரர் ஒன்று தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இந்த சம்பவத்தில் குறித்த ரக்ரரின் சாரதி கொல்லப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பொலிஸாரும் படையினரும் இணைந்து தேடுதல் நடத்தி வருகின்றனர்.

புலிகளுக்கு ஆதரவாக கோசம் எழுப்பிய நபர் கைது

தமிழகத்தின் காரைக்குடி பகுதியில் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொண்ட கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாக கோசமிட்ட இளைஞர் ஒருவர் இந்திய மத்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பெரியார் நகரை சேர்ந்த சாயல்ராம் (வயது 35) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி சிவகங்கை மாவட்டத்தின் காங்கிரஸ் மகளிர் அணியின் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ப. சிதம்பரம் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது குறித்த இளைஞர் மரக்கட்டை ஒன்றை சிதம்பரத்தை நோக்கி வீசிவிட்டு புலிகளுக்கு ஆதரவாக கோசமிட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸார் இவரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். அமைச்சர் மீது வீசப்பட்ட கட்டை படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை விசாரணைகள் எதுவுமின்றி விடுதலை செய்யுமாறு ப.சிதம்பரம் பொலிஸாரை கேட்டுள்ளார். இவர்மீது காரைக்குடி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

 

 09.30 AM

 

பிரிட்டன் நாடாளுமன்றக் குழு ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது

இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள 5பேர் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றக் குழு இன்று (05.05.2009) பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது. மேலும் இந்த குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, சர்வகட்சிக்குழுத்தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண ஆகியோரையும் சந்தித்து பேச்சுநடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவின் இடம்பெயர்ந்து வந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிடவுள்ளனர்.

புலிகள் பாரிய மண்ணரண்களை அமைத்துள்ளனர்.

நான்கரை சதுர கிலோமீட்டருக்குள் முடக்கப்பட்டுள்ள புலிகள் பாதுகாபப்பு வலயப்பகுதியில் 200 மீட்டருக்கு ஒரு மண் அரண்ரணை அமைத்துள்ளதாக மனிதாபிமான பணியில் ஈடுப்பட்டுள்ள படையினர் தெரிவித்துள்ளனர். படையினரின் முன்னேற்ற முயற்சியையும், பொதுமக்கள் படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்வதையும் தடுக்கும் நோக்கில் இவை அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் கூறியுள்ளனர். இந்த மண் அரண்களில் பெருமளவிலான மிதிவெடிகள், பொறிவெடிகள், கண்ணிவெடிகள் என்பன புதைக்கப்பட்டுள்ளது.

இங்கு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள படையினர் கடந்த இரு நாட்களில் வெள்ளிமுள்ளிவாய்காலுக்கு தெற்காக உள்ள புலிகளின் பாரிய மண் அரண்கள் இரண்டை மீட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

புலிகளின் புலனாய்வு ஆவணங்கள் படையினரால் மீட்பு

புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் சேகரித்த ஆவணங்கள் பல படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. புதுமாத்தளன் பாதுகாப்பு வலயப்பகுதியில் முன்னேற்ற முயற்சியினை மேற்கொண்டிருந்த படையினரே இதனை மீட்டுள்ளனர்.

இதில் பலமுக்கியஸ்தர்கள், புலிகளால் படுகொலை செய்யப்பட்ட அரசியல் தவைர்கள், மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், புலிகள் இலக்குவைத்துள்ள அரசியல், பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் குறித்த தகவல்கள் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்துவருகின்றனர்.

புலிகள் தொடர்ந்தும் சிறுவர்களை படையில் சேர்த்து வருவதாக இந்தியாவில் வெளிவரும் ரைம்ஸ் ஒவ் இன்டியா என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புலிகள் பெண்பிள்ளைகள் உப்பட 16 வயதிலும் குறைந்த சிறுவர்களை போர்முனைக்கு அனுப்புகின்றார்கள். புலிகளின் சின்னம் மற்றும் சயனைட் வில்லை என்பன இவர்களது கழுத்துகளில் தொங்கவிடப்பட்டுள்ளது. இலங்கை 57வது படைப்பிரிவின் கட்டளை தளபதி ஜெகத் ஜெயசூரியவை மேற்கோள் காட்டி இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.

மட்டக்களப்பில் கர்த்தால் தொடர்கிறது.

மட்டக்களப்பில் இன்றும் (04.05.2009) கர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுசிக்கா (வயது 8) என்ற மாணவியின் கொலையை கண்டித்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

நேற்றைய கர்த்தால் நடவடிக்கையினால் மட்டக்களப்பு நகரில் பாடசாலை, கடைகள், அரச அலுவலகங்கள் எவையும் முழுமையாக இயங்கவில்லை. அத்துடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு மருந்து

பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு இன்று (05.05.2009) கப்பல் மூலம் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு எடுத்து செல்லப்பட்டு பின் அங்கிருந்து பாதுகாப்பு வலயத்திற்கு அனுப்பப்படும். இங்கு ஏப்ரல் மாதம் இரு தடவைகள் மருந்து பொருட்கள் அனுப்பி வைத்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோக பிரிவின் பணிப்பாளர் சரத் வீரபண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் வவுனியா முகாம்களில் உள்ள மக்களுக்கென 3 லொறிகளில் நேற்று மருந்துப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

04-05-2009,  05.30 PM

 

இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளவர்களின் விபரம்

வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் தொடர்பான விபரங்களை யாழ் மாவட்ட அரச அதிர் கே. கணேஸ் வெளியிட்டு;ள்ளார். இதில் மக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் 3825 குடும்பங்களை சேர்ந்த 11079 பேர் 12 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

 

நலன்புரி நிலையங்களின் விபரம் வருமாறு

 

திருநகர் நலன்புரி நிலையத்தில் 30 குடும்பங்களை சேர்ந்த 72 பேரும்
கோப்பாய் நலன்புரி நிலையத்தில் 200 குடும்பங்களை சேர்ந்த 483 பேரும்
மிருசுவில் RCTMS நலன்புரி நிலையத்தில் 580 குடும்பங்களை சேர்ந்த 1773 பேரும்
கொடிகாமம் GTMS நலன்புரி நிலையத்தில்; 306 குடும்பங்களை சேர்ந்த 1004 பேரும்
கைதடி சிறுவர் இல்லத்தில் 76 குடும்பங்களை சேர்ந்த 214 பேரும்
கைதடி பல்கலைக்கழக விடுதியில் 420 குடும்பங்களை சேர்ந்த 1101 பேரும்
கைதடி PRI-A  நலன்புரி  நிலையத்தில் 247 குடும்பங்களை சேர்ந்த 715 பேரும்
கைதடி PRI-B  நலன்புரி நிலையத்தில் 213 குடும்பங்களை சேர்ந்த 626 பேரும்
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 431 குடும்பங்களை சேர்ந்த 1270 பேரும்
கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்தில் 386 குடும்பங்களை சேர்ந்த 1176 பேரும்
சாவகச்சேரி இந்து மகளிர் கல்லூரியில் 460 குடும்பங்களை சேர்ந்த 1395 பேரும்
நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் 473 குடும்பங்களை சேர்ந்த 1250 பேரும்

இந்த மக்களுக்கு தேவையான உணவு, நீர்வினியோகம், சுகாதாரவசதிகள், கல்வி, அரசஊழியர்கள் மற்றும் ஊதியம் பெறுவோர், வங்கி செயற்பாடுகள், வயது முதிர்ந்தோர் சிறுவர்கள் விடுவிப்பு, என்பன அரசசர்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அரச சார்பற்ற அமைப்புக்களான ஆகிய அமைப்புக்கள் யாழ் மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் கடந்த 02ம் திகதி பேச்சு நடத்தியதை அடுத்து நலன்புரி நிலையங்களுக்கு நேரடியாக சென்று மக்களுக்கு சேவையினை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நலன்புரி நிலையங்களில் உள்ள உறவினர்களை சந்திக்க விரும்புபவர்கள் இரண்டு பேர் வீதம் வாரத்தில் இரண்டு நாட்களில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசக்கூடிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருபவாகள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும் அத்துடன் புகைப்படக்கருவி, கையடக்க தொலைபேசி, சமைத்த உணவுகள் என்பவற்றை தவிர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டள்ளார்.

மக்கள் நலன்புரி நிலையத்தில் உள்ள தமது உறவினர்களை தொடர்பு கொள்ளும் நோக்கில் தொலைபேசி மற்றும் தபால் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு;ள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் புதன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 10 மணி தொடக்கம் மலை 4 மணிவரை தமது அழைப்புக்களை ஏற்படுத்த முடியும். உரையாடுபவர்கள் தமது விபரங்களை பதிவு செய்யவேண்டிய தேவை இருப்பதனால் நலன்புரி நிலையத்தின் பொறுப்பதிகாரி கேட்கும் விபரங்களை வழங்குதல் அவசியமாகும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இன்று (04.05.2009) காலை 7.45 மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஜாமி அத்துல் ஜமாலியா அரபு கல்லூரியின் அதிபரான சேகு முகமது மீரான் முபீன் (வயது 65) அவரது சகோதரரான சேகு முகமதது மர்ஜான் (வயது 60) மற்றும் இவர்களின் மருமகனான கனிகா சாஜஹான் (வயது 38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மரணமடைந்த சாயஹான் என்பவர் மாமனாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவருவதாக பொலிஸார் கூறுகின்றனர். இவர் பயன்படுத்திய ரி56 ரக துப்பாக்கி சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த கொலையாளியின் மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டு பின்பக்கமாக தப்பி ஓடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் கர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது

மட்டக்களப்பில் இன்று (04.05.2009) கர்தால் போராட்டம் நடத்தப்படுவாதா தெரிவிக்கப்பட்டு;ளது. கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுசிக்கா (வயது 8) என்ற மாணவியின் கொலையை கண்டித்தே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. மட்டக்களப்பு நகரில் பாடசாலை, கடைகள், அரச அலுவலகங்கள் எவையும் முழுமையாக இயங்கவில்லை. அத்துடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் இலங்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களபில் இந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
 

 08.30 AM

 

வருடஇறுதிக்குள் 80 சதவீதமானோர் மீள்குடியமர்த்தப்படுவர்

வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் 80 சதவீதமானோரை இந்த வருட இறுத்திக்குள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இங்கு உட்கட்டமைப்பு வசதிகளும் அபிவிருத்தி செய்யப்படும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீள் குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் இரண்டாம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் மன்னார் முசலி பிரதேசத்தில் எஞ்சியிருந்த 8 கிராமங்களிலும் மக்கள் மீள் குடியமர்தப்படவுள்ளனர்.

இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு கல்வி நடவடிக்கை

புலிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சிறுவர்களுக்கு சிறந்த கல்வியினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் சிரெஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு யுனிசெப் அமைச்சின் உதவி கோரப்படவுள்ளது. 40 ஆயிரம் வரையிலான சிறுவர்கள் இவ்வாறு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர். அண்மையில் மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் மெற்கொண்ட பசில் ராஜபக்ச அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இதனை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேல்மாகாணசபையின் பதவியேற்பு வைபவம் இன்று

மேல்மாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான பதயேற்கும் வைபவம் அலரிமாளிகையில் இன்று (04.05.2009) காலை 10 மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் இடம்பெறவுள்ளது. அண்மையில் நடைபெற்ற மேல்மாகாண சபை தேர்தலில் வெற்றியீட்டிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இவ்வாறு பதயேற்கவுள்ளனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குளை பெற்ற பிரசன்ன ரணதுங்க மேல் மாகாணசபையின் முதலமைச்சராக பதவியேற்கின்றார். கொழும்பு மாவட்டத்தின் உதயகம்மன்வில, சுனில்ஜெயமினி, கம்பஹா மாவட்டத்தின் நிமால்லான்சா, களுத்துறை மாவட்டத்தின் ரஞ்சித் சோமவன்ச ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

 

03-05-2009,  09.20 PM

 

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான விபரங்கள்

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து 1,82,480 பேர் வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,67,330 பேர் வவுனியா மாவட்டத்தில் உள்ள 24 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தோர் தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகத்தினால் கடந்த 30ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் தங்கியுள்ள இடம்பெர்ந்தவர்களின் விபரம்.

வவுனியா அரவிந்தோட்ட சைவ வித்தியாலயத்தில் 365 குடும்பங்களை சேர்ந்த 1183 பேரும்
ஆனந்த குமாரசாமி வலயம் ஒன்றில் 11600 பேரும்
கதிர்காமம் கிரமத்தில் 5904 குடும்பங்களை சேர்ந்த 22,143 பேரும்
அருணாசலம் கிராமத்தில் 10,831 குடும்பங்களை சேர்ந்த 37,873 பேரும்
செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் 550 குடும்பங்களை சேர்ந்த 1793 பேரும்
பிள்ளையார்குளம் பாடசாலையில் 491 குடும்பங்களை சேர்ந்த 1575 பேரும்
முதலியார்குளம் பாடசாலையில் 288 குடும்பங்களை சேர்ந்த 817 பேரும்
ராமநாதன் வலயம் இரண்டில் 52,000 பேரும்
பம்பைமடு விடுதியில் 1421 குடும்பங்களை சேர்ந்த 4569 பேரும்
நெலுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் 1519 குடும்பங்களை சேர்ந்த 3491 பேரும்
சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் 1375 குடும்பங்களை சேர்ந்த 3437 பேரும்
தமிழ் மகாவித்தியாலயத்தில் 1808 குடும்பங்களை சேர்ந்த 4929 பேரும்
வவுனியா முஸ்லிம் வித்தியாலயத்தில் 509 குடும்பங்களை சேர்ந்த 1526 பேரும்
காமினி மகா வித்தியாலயத்தில் 734 குடும்பங்களை சேர்ந்த 1645 பேரும்
கோவில்குளம் மகா வித்தியாலயத்தில் 562 குடும்பங்களை சேர்ந்த 1829 பேரும்
கல்வியியற் கல்லூரியில் 1944 குடும்பங்களை சேர்ந்த 5990 பேரும்
பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் 570 குடும்பங்களை சேர்ந்த 1669 பேரும்
தமிழ் மகாவித்தியாலயத்தில் 465 குடும்பங்களை சேர்ந்த 1237 பேரும்
கந்தபுரம் வாணிவித்தியாலயத்தில் 1073 பேரும்
பூவரசங்குளத்தில் 994 பேரும்
தாண்டிக்குளம் பாடசாலையில் 561 குடும்பங்களை சேர்ந்த 1492 பேரும்
புதுக்குளம் பாடசாலையில் 989 குடும்பங்களை சேர்ந்த 3124 பேரும்
ரம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்தில் 1350 பேரும்
கோமராசன்குளம் மகாவித்தியாலயத்தில் 2150 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 3 பாடசாலைகளில் 4000 பேர் தங்கி உள்ள தாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான விபரம் வருமாறு

அரபாத் நகர் முஸ்லீம் வித்தியாலயத்தில் 1560 பேரும்
முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் 1797 பேரும்
சிங்கள மகாவித்தியாலயத்தில் 643 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர் ஐம்பதாயிரம் பேரை தவிர ஏனையோர் தாமே சமைத்து உண்கின்றனர். அவர்களுக்கு அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நலன்புரி நிலையத்திற்கும் நிரந்தர மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நடமாடும் வைத்திய சேவைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 350 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கு எம்மாலான அதை;து வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதைத்தவிர யாழ் மாவட்டத்திலும் 3791 குடும்பங்களை சேர்ந்த 11,150 பேர் தங்கியுள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

கல்முனைப் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

 

கல்முனை கடற்கரைப்பள்ளி பகுதியில் இன்று (03.05.2009) காலை விசேட அதிரடிப்படையினர் தேடுதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன் போது ஆயுதங்களும் வெடிபொருட்களும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதில் மைக்ரோ ரக பிஸ்டல் 01, அதற்கான ரவைகள் 60, கைக்குண்டுகள் 02, என்பன மீட்கப்பட்டுள்ளது. அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு புதுநகர் பகுதியில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றிலிருந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலின் படி 81 எம் எம் மோட்டார் குண்டுகள் 16 மீட்கப்பட்டள்ளது.

முகாம்களில் இருந்து வயோதிபர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.

புலிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களில் வயோதிபர்களை முகாம்களுக்கு வெளியே செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகாம்களில் வயோதிபர்களுக்கு போதுமான கவனிப்பும் போசாக்கின்மையும் காணப்படுகிறது. இங்கு ஏற்பட்ட 30 மரணங்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வவுனியா மாவட்ட நீதிமன்றம் அரச அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் ஒருபகுதி படையினரால் இன்று மீட்கபப்பட்டுள்ளது

முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்தில் புலிகளால் அமைப்பப்பட்ட 500 மீட்டர் நீளமான மண் அரண் ஒன்றை இன்று (03.05.2009) காலை 53வது படைப்பிரிவினர்; கைப்பற்றியுள்ளனர். இது ஏ35 வீதிக்கு தெங்கு பக்கமாவும் நந்திக்கடல் களப்பிற்கு வடக்குப்பமாகவும் அமைந்துள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சரணடையும் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படலாம்

இலங்கை அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையும் புலி உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது என மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03.05.2009) ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். இருப்பினும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவர் சரணடைந்தாலும் பொது மன்னிப்பு வழங்கப்படமாட்டாது. அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

 05.30 PM

 

மட்டக்களப்பு பகுதியில் ஒருவர் கைது

மட்டக்களப்பு பகுதியில் நேற்று (02.05.2009) மாலை சிதம்பரப்பிள்ளை சந்திரவேலு எனும் ஆட்டோ சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வேலை நிமித்தம் சுவிஸ் கிராமத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் உள்ள சோதனை சாவடியில் பொலிஸாரால் இவரது ஆட்டோ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன் போது ஆட்டோவிலிருந்து ஒன்றரை கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இவர் தற்பொழுது மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு இலவச சிகை அலங்கரிப்பு

வவுனியவில் இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் இன்று (03.05.2009) முதல் இலவசமாக சிகைஅலங்காரங்களை செய்யமுடியும் என வவுனியா தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன்சிகேரா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்;தின் பிரதி பொலிஸ்மா அதிபர் எல். ஜி குணதிலக இதனை ஏற்பாடு செய்துள்ளார். இந்த நடைமுறையானது இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதன் அடிப்படையில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயம், மற்றும் காமினி வித்தியாலயத்தில் உள்ள மக்களுக்கு வவுனியா மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இடம் பெயர்ந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மக்களுக்கும் இன்று சிகையலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தனியார் பேருந்து சங்கத்தினர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த வவுனயா மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஸ்டீபன் தமது சங்க உறுப்பினர்கள் 18 பேர் இன்று இந்த சேவையில் ஈடுப்பட்டுள்ளதாகவும். எதிர்வரும் காலங்களில் இடம் பெயர்ந்த மக்களுக்கு என பிரதி ஞாயிறு தோறும் இந்த சிகைஅலங்கரிப்பு பணி இலவசமாக தொடரும் என தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கா பகுதியில் பொலிஸார் தேடுதல்

கட்டுநாயக்கா உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் பொலிஸார் நேற்று (02.05.2009) தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன் போது 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் கட்டுநாயக்கா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பகுதியில் தாக்குதல்

 

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பகுதியில் நேற்று (02.05.2009) மாலை விசேட அதிரடிப்படையினா புலிகள் மீது தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் பரமானந்தம் மாஸ்டர், வேதநாயம், சத்தியபவன், கலைவேந்தன் ஆகிய 4 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. மோதலை அடுத்து அந்த பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது புலிகளின் 4 சடலங்கள், ரி56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள், கைக்குண்டுகள், மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் உணவுப் பொருட்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வலயத்தில் செல் தாக்குதல் நடத்தப்பட்டதாக

வெளிவந்த செய்தியினை படைத்தரப்பு மறுத்துள்ளது.

பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள முள்ளிவாய்கால் பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது நேற்று (02.05.2009) காலை செல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் 64 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பாதுகாப்பு தரப்பினர் முற்றாக மறுத்துள்ளது. மக்களின் நலன் கருதி தாம் வான் தாக்குதல்களையும், கனரக ஆயுத பாவனையையும் மேற்கொள்வதில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

 

09.30 AM

 

இலங்கை தூதரகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது

வெநாடுகளில் இருக்கும் இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்தானிகராலயம் என்பவற்றிற்கு இலங்கை அரசு பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது. புலிகள் தோல்வியடையும் இந்த நேரத்தில் வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் இலங்கை தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதை அடுத்தே இந்த நடவடிக்;கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென அந்ததந்த நாடுகளில் உள்ள பாதுகாப்பு வீரர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் உள்ள மக்களை பார்வையிட அனுமதி

வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மக்களை பார்வையிட பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனை அடுத்து நேற்று (02.05.2009) இவர்களை பார்வையிட்ட கண்டி வர்த்தகர்கள் இவர்களுக்கு சிறிய அளவிலான உதவி பொருட்களையும் வழங்கியுள்ளனர். இங்கு 150 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜப்பானின் தூதுவர் யசூசி அகாசி நாடுதிரும்பியுள்ளார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று (03.05.2009) அதிகாலை நாடு திரும்பியுள்ளார். இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது இடம் பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் பாராட்டத்தக்கது. இருப்பினும் இவர்களது தேவைகள் அதிகரித்திருப்பதினால் உதவிகளும் அதிகரிக்கப்படவேண்டும் என கூறியுள்ளார். மேலும் ஜப்பானால் வழங்குவதாக தெரிவித்த 40 லட்சம் அமெரிக்க டொலர் நிதியினை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் குற்றச்சாட்டு நிராகரிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு வலயப்பகுதியில் படையினர் கனரக ஆயதங்களினால் தாக்குதல் நடத்துகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் செய்மதி படங்களை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இணையத்தளங்களிலும் மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சியிலும் இப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இதனை இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ளது. மக்களை மீட்கும் பணியின் போது படையினர் எதுவித கனரக ஆயுதங்களையும், வான் தாக்குதல்களையும் பயன்படுத்துவதில்லை என பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையிடம் தெரிவித்துள்ளார்.

மாத்தையாவின் மனைவிபிள்ளைகள் அரசகட்டுப்பாட்டிற்குள்

புலிகளின் பிரதி தலைவராக இருந்து புலிகளினால் கொல்லப்பட்ட கொபால்சாமி மகேந்திரராஜாவின் (மாத்தையா) மனைவி மற்றும் 3 பிள்ளைகள் நேற்று முன்தினம் (01.05.2009) படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளதாக கொழும்பில் வெளிவரும் ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டு;ள்ளது. இந்திய புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கொடுத்ததாக தெரிவித்தே மாத்தையா புலிகளினால் கொல்லப்பட்டிருந்தார்.

 

02-05-2009,  09.30 PM

 

மக்கள் மீள்குடியமர்த்தப்படதற்கு ஐநா பாராட்டு

வடக்கு மாகாணத்தில் மக்களை மீள்குடியமர்த்தும் அரசாங்கத்தின் திட்டத்தினை ஐக்கியநாடுகள் சபை பாராட்டியுள்ளது. வடக்கில் மக்களை மீள்குடியமர்த்தும் பணிகளின் முதற்கட்டமாக மன்னார் முசலி பகுதியில் கடந்த 30ம் திகதி மீள் குடியேற்றப்பணிகள் இடம்பெற்றுள்ளன. இது சிறிய பகுதியானாலும் இது வரவேற்கத்தக்க விடயம் என ஐக்கிய நாடுகள் உயர்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் இரண்டு வருடங்களின் பின்னர் 122 குடும்பங்களை சேர்ந்த மக்கள் குடியமர்தப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் மீள் குடியமர்வதற்கு மக்கள் தமது விருப்பங்களை தெரிவித்துள்ளனர். இதே போன்று வடக்கு மகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் அனைவரும் மீள் குடியமர்தப்படவேண்டும். மக்கள் மீள்குடியமர்தப்படும் பகுதிகளில் அவர்களின் பாதுகாப்பு கருதி ஐநா கண்காணிப்பாளர்கள் அங்கு பணிகளை மேற்கொள்வதாக ஐநா உயர்தானிகராலய இலங்கைக்கான பிரதிநிதி அமீன் அவாத் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவ வாகன தொடரணிமீது தாக்குதல்

இந்தியாவின் தமிழ்நாடு கோவை மாவட்டத்தின் அருகே இன்று (02.05.2009) பிற்பகல் இந்திய இராணுவத்தினரின் வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டு;ள்ளது. 300 இந்திய இராணுவத்தினர் கைதராபாத்தில் தமது பயிற்சிகளுக்காக சென்றுவிட்டு 60 வாகனங்களில் மீண்டும் கோவை திரும்பிக்கொண்டிருந்தபோது இலங்கை இராணுவத்தினருக்கு ஆயுதங்கள் எடுத்து செல்வதாக தெரிவித்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இந்திய இராணுவத்தினரின் வாகனங்கள் சில சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இச்த சம்பவத்தில் 20 பேர்வரை காயமடைந்துள்ளனர்.

கோவையின் நீலம்பூர் பகுதியில் பெரியார் திராவிட முன்னேற்ற கழகம், மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக ஆதரவாளர்கள் சுமார் 200 பேர் வரையில் கூடியுள்ளனர். அதன் போது அங்கு வந்த இராணுவத்தினரின் வான தொடரணியை மறித்து அதில் ஆயுதங்கள் இருப்பதாவும் அவை கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லவதற்காக இந்த வாகனங்கள் மூலம் இவை எடுத்து செல்வதகவும் தெரிவித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பெரியார் திராவிட முன்னேற்ற கழக தலைவர் ரமகிருஸ்னன் உட்பட பலர் கைது செய்துள்ளனர். இவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு;ள்ளனர்.

 

05.55 PM

 

மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் காணாமல் போயிருந்த சதீஸ்குமார் தினுசிகா (வயது 8) எனும் சிறுமி இன்று (02.05.2009) மட்டக்களப்பு கல்வியங்காடு பகுதியில் வளவு ஒன்றில் உள்ள கைவிடப்பட்ட கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த கிணற்றில் சிறுமியின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சிறுமியின் தாயாரால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் அணிந்;திருந்த சீருடை குறித்த கிணற்றிற்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் 3ல் கல்விபயிலும் இந்த சிறுமி கடந்த 28ம் திகதி பாடசாலை சென்றதன் பின்னர் மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார். சடலம் மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் தந்தையான சதீஸ்குமார் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்தப்பட்டு காணாமல் போயிருக்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெவிலியாமடுவில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லையில் உள்ள கெவிலியாமடு கிராமத்தில் முன்னதாக நடைபெற்றுள்ள அத்துமீறிய குறியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கிழக்கு மாகாணசபை அமைச்சரும் ஈ பி ஆர் எல் எப் பத்மநாபா அமைப்பின் முக்கிய உறுப்பினருமான இரா. துரைரட்ணம் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இந்த கிராமத்தில் 1990ம் ஆண்டிற்கு முதல் 106 தமிழ் குடும்பங்களுக்கு மேல் வசித்து வந்துள்ளனர். எனினும் பின்னர் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் அங்குள்ள குடும்பங்கள் அனைத்தும் இடம் பெயர்ந்து களுவாஞ்சிக்குடி பகுதியில் தமது உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கின்றனர்.

இந்த மக்கள் விவசாயம், மீன்பிடி, கால்நடைவளர்ப்பு போன்ற தொழில்களை பிரதானமாக செய்து வந்துள்ளனர். இங்கு இவர்களது குடியிருப்புக்களும், விவசாய காணிகளும் அழிக்கப்பட்டு காடு போன்று காட்சியளிக்கின்றது. இந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இங்கு சில நிறுவனங்களினால் குடியிருப்புக்கள் ஏற்படுத்தப்பட்டும், சில வயல்நிலங்கள் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. இவை அனைத்து சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட விடயங்களாகும் என அவர் குறிபப்பிட்டுள்ளார்.

உகணை பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த கிராமம் மீண்டும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்கப்பட்டு சட்டவிரோத குடிகள் அகற்றப்பட்டு அந்த கிராமவாசிகள் மீள்குடியமர்த்தப்படவேண்டும். இந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்து கொடுக்கப்படுவதுடன் நஸ்டஈடும் வழங்கப்படவேண்டும்;. அத்துடன் அவர்களது தொழில் விருத்திக்கென உதவிகள் வழங்கப்படவேண்டும் என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யசூசி அகாசி ஜனாதிபதியை சந்தித்து பேச்சு

இலங்கைவந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று (02.05.2009) காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது புலிகளின் பிடியில் இருந்து வந்த மக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் நாட்டின் தற்போதைய நிலைகுறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மக்களுக்கு வைத்தியசேவை வழங்க பிரன்ஸ் முன்வந்துள்ளது

பிரான்ஸ் அரசும் மற்றும் எம் எஸ் எப் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து வன்னியில் இருந்து இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது சம்மந்தமான உடன்படிக்கை நேற்று (01.05.2009) கைச்சாத்திடப்பட்டதாக வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் டபிள்யு. எம். டி வன்னிய நாயக்க தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் செட்டிக்குளத்தில் 100 மில்லியன் ரூபா செலவில் 35 படுக்ககைகளை கொண்ட வைததியசாலையையும், எம் எஸ் எப் நிறுவனம் மெனிக் பாமில் 100 படுக்கைகளை கொண்ட வைத்தியசாலை ஒன்றையும் அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற குழு இலங்கை வரவுள்ளது

பிரித்தானியாவின் நாடாளுமன்ற குழு ஒன்று இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் அழைப்பின் பேரிலேயே 5 பேர் அடங்கிய குழு வரவுள்ளது. இவர்கள் ஜனாதிபதி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களை சந்திப்பதோடு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான நடவடிக்கை குறித்தும் விரிவாக ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை மீள்குடியமர்துவதற்கு இந்தியா உதவி

வடக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு இந்திய அரசு உதவிகளை வழங்கவுள்ளது. இதன் அடிப்படையில் மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கென இந்தியாவில் இருந்து குழுவொன்று விரைவில் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் படையினரால் மீட்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த பணியினை மேற்கொள்ளவுள்ளனர்.

புலிகள் தப்பித்து செல்ல முடியாது

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்களும் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என இந்திய கடலோர காவல்படை கட்டளை அதிகாரி எம். ஜெயரட்ணம் தெரிவித்துள்ளார். மீறி வெளியேறும் பட்சத்தில் அவர்களின் செயற்பாடுகள் ராடர் கருவி மூலமகாக அவதானிக்கப்படும். மேலும் முல்லைத்தீவு கடற்பரப்பில் 4 பிரிவுகளாக பாதுகாப்பு நடவடிக்கையும் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இதிலிருந்து அவர்கள் தப்பித்து செல்ல முடியாது என கூறியுள்ளார்.

முல்லைத்தீவு வலைஞர் மடம் பகுதியில் மோதல்

முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் நேற்று (01.05.2009) மோதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் 14 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வலைஞர் மடம் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் தொடர்ந்தும் தமது மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
 

09.30 AM

 

சர்வதேசகொள்கை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படாது

சர்வதேச அரசியல் கொள்கைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு தனது அரசு ஒருபோதும் இடமளிக்காது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் தொழிலாளர் பிரதிநிதிகளை நேற்று (01.05.2009) சந்தித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் பாதகமான எந்த ஒரு சக்திக்கும் இடமளிக்கப்படமாட்டாது. நாட்டில் கலவரங்களோ, போராட்டங்களோ மக்கள் அரசுடன் இருப்பதால் நடைபெறுவதில்லை. படையினரின் உயிரை பணயம் வைத்து நாட்டைக்காக்கும் பணியினை அனைவரும் முன்மாதிரியாக எடுத்து கொள்ளவேண்டும். தொழிலாளர்கள் அர்ப்பணிப்புடன் வேலை செய்தால் இலங்கையை சிறுகாலத்திலேயே அபிவிருத்தி அடையச் செய்யலாம்.

பொதுமக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கும் பாரிய பொறுப்பு அரசிற்கு உள்ளது. அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கு முன்பு அவர்களை மீட்பதே அவசியமானது. பயங்கரவாதத்திற்கு முன்பு துணை நின்றவர்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். சில நாடுகள் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்யும் வேளை எமது அரசு புதிதாக வேலைவாய்ப்புக்களை வழங்கிவருவதாக அவர் கூறியுள்ளார்.

விசேட மருத்துவ பரிசோதனை நடைபெறவுள்ளது

வவுனியா முகாம்களில் உள்ள பொதுமக்களுக்கு உதவிகளை மேற்கொள்ள தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் கடுமையான வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கு பண்டி காய்ச்சல் தொற்று உள்ளதா என்பதை கண்டறிவதே இதன் நோக்கமாகும் என சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அஜித் மென்டிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் விமான நிலையத்திலும் இந்த வைத்திய பரிசோதனை நடைமுறைபப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மக்களுக்கான மருத்துவ சேவையை வழங்குவதற்கு ஜெயராஜ் பெனான்டோ புள்ளே மன்றம் முன்வந்துள்ளது. இதற்கான முதல் கட்ட நடவடிக்கை நேற்று (01.05.2009)மெனிக்பாம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

யசூசி அகாசி வவுனியாவிற்கு விஜயம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி நேற்று (01.05.2009) வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மக்களை சென்று பார்வையிட்டுள்ளார். இவரை அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீனும், அரச அதிபர் பி எஸ் எம் சாள்ஸ் ஆகியோர் வரவேற்றுள்ளனர். செட்டிக்குளம் முகாம், இராமநாதன், கதிர்காமர் நலன்புரி கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். அத்துடன் குறித்த மக்களுக்கு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

பதிக்கப்பட்ட மக்களுக்கு அரசினால் மேற்கொள்ளப்பட்ட உதவிகள் குறித்து அகாசி பாராட்டு தெரிவித்துள்ளார். மீள் குடியமர்த்தும் பணிகளுக்கு இலங்கை அரசிற்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.
 

01-05-2009

 

சோசலிச மக்கள் முன்னணியின் மேதினம்
 

 

சோசலிச மக்கள் முன்னணியின் மேதின பொதுக்கூட்டம் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் உள்ள அரங்கில் இடம்பெற்றது. மேற்படி அமைப்பின் மேதின ஊர்வலம் பூங்காவை வந்தடைந்ததும் கூட்டம் ஆரம்பமானது. ஊர்வலத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி மு;னனணி ஆகிய கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர். பிற்பகலில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ விதாரன, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராஜா கொலுரே, பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் சிறிதரன் ஆகியோர் உட்பட மேலும் பல தொழிற்சங்க தலைவர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர், அமைச்சர் டியூ.குணசேகர அவர்களும் இக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தார். அங்கு உரைநிகழ்த்திய அனைவரும் விலைவாசி உயவர்வாலும், யுத்த சூழலாலும் தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டினர். நாட்டில் யுத்தம் நிரந்தரமாக முடிவுக்கு வருவதற்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியம் என்பதை வலியுறுத்தினர் அரசியல் தீர்வு அவசியம் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுதப்பட்ட பாதாகைகளும் பொதுக் கூட்டம் இடம்பெற்ற வளாகத்தில் கட்டப்பட்டிருந்தன.

 

10.45 PM

 

புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரண்

புலி உறுப்பினர்கள் 58 பேர் படையினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. 14 வயது தொடக்கம் 18 வயதையுடைய 38 ஆண்களும், 20 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் படையினரால் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இவர்களை அம்பேபுஸ்ஸவில் உள்ள சீர்திருத்த நிலையத்திற்கு அனுப்பிவைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் சென்ற படகு கவிழ்ந்து 9பேர் மரணம்

தமிழகத்திற்கு அகதிகளாக சென்றவர்களின் படகு கடலில் மூழ்கியுள்ளது. இதில்; பயணம் செய்த 9 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒரு படகில் சென்ற 10 பேர் ஆந்திர மானிலத்தின் கடற்கரையோரத்தில் நேற்று முன்தினம் (29.04.2009) கரையொதுங்கியதை அடுத்து ஆந்திரா மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கடந்த 12 நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தின் இணையத்தளம் துண்டிக்கப்பட்டது

சிறிலங்கா இராணுவத்தினரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான றறற.யசஅல.டம உலக வலையமைப்பில் இருந்து இன்று (01.05.2009) புலி ஆதரவாளர்களினால் துண்டிக்கப்பட்டிருந்ததாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது புலிகளின் இணையத்தள பயங்கரவாதத்தை எடுத்து காட்டுகிறது. படையினரின் வெற்றிகளையும், அவர்களின் மனிதாபிமான நடவடிக்கையினையும் வெளிஉலகிற்கு மறைக்கும் நோக்கிலேயே புலி ஆதரவாளர்கள் இதனை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். தற்பொழுது அந்த இணையத்தளம் வழைமைபோல் செயற்படத் தொடங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஒருவர் வெட்டிக்கொலை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை 8ம் கட்டை பகுதியில் இன்று (01.05.2009) அதிகாலை ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் 8ம் கட்டையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான புனிதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது அங்கு வந்த சிலர் இவரை வெட்டி கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

09.00 AM

 

மேதினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது

உலக தொழிலாளர் தினம் இன்று (01.05.2009) உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள செய்தியில் புதியதொரு இலங்கையை கட்டியெழுப்புவதற்கு உழைத்த அனைத்து தொழிலாளர்களுக்கும் தேசத்தின் கௌரவம் உரித்தாகும் என கூறியுள்ளார். உலக பொருளாதார சிக்கலுக்குள் முகம் கொடுத்து நாட்டை அபிவிருத்தி பாதையில் அரசு கொண்டு செல்கிறது. இதில் அனைத்துப்பங்கும் தொழிலாளர்களையே சாரும். இலங்கை தற்போது வெற்றி பாதையை நோக்கி செல்கிறது. இதனால் தொழிலாளர்கள் எதிர்காலத்தில் பல நன்மைகளை அடைவர் என தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு இந்தியா உதவி பொருட்கள் வழங்கியுள்ளது

வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கென இந்திய அரசு மேலும் ஒரு தொகுதி பொருட்களை வழங்கியுள்ளது. மக்களுக்கு வழங்கவென 40 ஆயிரம் பொதிகளை இலங்கைக்கான இந்திய தூதுவர் ஆலோக் பிரசாத் நேற்று (30.04.2009) கொழும்பில் வைத்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் வழங்கினார். இலங்கை மக்களில் இந்தியா கொண்டிருக்கும் அக்கறையை இது வெளிப்படுத்தும் என இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார்.

வடக்கின் மீள் குடியேற்றப்பணிகள் ஆரம்பம்

வடமாகாணத்தில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மக்களை மீள் குடியமர்த்தும் பணி நேற்று (30.04.2009) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 20 கிராம சேவையாளர் பிரிவில் 12 கிராம சேவையாளர் பிரிவுகளில் 122 குடும்பங்களை சேர்ந்த 409பேர் மீள குடியமர்த்தப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது. இங்கு அபிவிருத்தி பணிகளும் முன்னெடுத்து செல்லப்படுகிறது. ஏனைய 8 கிராமங்களில் கண்ணிவெடி அகற்றும் பணி முடிவடைந்துள்ளமையினால் இரண்டாம் கட்டமாக மே மாதம் 11ம் திகதி 520 குடும்பங்களை சேர்ந்த 2100 பேர் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர்.

மீள்குடியிற்ற பணிகளின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியின் சிரெஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச, அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், வினாயகமூர்த்தி முரளிதரன், டக்ளஸ் தேவானந்தா, மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் வினாயகமூர்த்தி சந்திரகாந்தன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றிய பசில் ராஜபக்ச அவர்கள் படையினர் தமது உயிர்களை பணையம் வைத்து மக்களையும் நாட்டையும் மீட்டுள்ளனர். அந்த மக்களை அரசு சிறந்த முறையில் பாதுகாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை பெருமளவான மக்கள் அரச கட்டுப்பாட்டிற்கு வருகை

புலிகளின் பிடியில் இருந்து இதுவரை 1,88,535 மக்கள் அரச கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வழித்துணையுடன் 12393 பொதுமக்கள் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பிரமுகர்களின் விஜயம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் மாநாடு நேற்று (30.04.2009) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்குள்ள மக்களின் தேவைகளை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது. இடம் பெயாந்து வந்தமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு மேலும் பல முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கப்பல் மூலம் மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து நேற்று (30.04.2009) ஒரு தொகுதி மக்கள் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வழித்துணையுடன் 343 காயமடைந்த மற்றும் அவர்களது உறவினர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புல்மோட்டை தள வைத்தியசாலையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் சிலர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை, பதவிய அனுராதபுரம் ஆகிய வைத்தயிசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அண்மையில் நோர்வேயில் இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ளார்.
 

 

குமுறும் மலையகம்

எங்கள் சின்னம்

 

அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகள்

 

தேர்தல் திணைக்களத்தால்

03 ஜுலை 2008 இல் வெளியிடப்பட்டது

 

 

 

 

அவுஸ்;திரேலியாவில வெளிவரும் உதயம் மாத இதழில் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவர்கள் எழுதிய 13வது அரசியல் யாப்பு திருத்தம், அதன் அமுலாக்கம் குறித்த கட்டுரை தொடர்
 

 

கூட்டமைப்பு

 

01 ஆகஸ்ட் 2008
த.வி.கூ புளொட்

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
 


அறிக்கைகள்

 

01 மே 2007
ஈ.பி.ஆர்.எல்.எவ்

 


கட்சியின் விளக்கம்

 

10 நவம்பர் 2006
இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு தொடர்பாக எமது கட்சியின் விளக்கம்
 

இணைத்தலைமை
 

22 நவம்பர் 2006
 


ஜெனீவா பேச்சுவார்த்தை
 


மத நிறுவனங்கள்

 

08 ஏப்ரல் 2007
 


 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரேரணைகள்
 

Proposal for the Political Solution to the Ethnic Conflict in Srilanka
EPRLF seeks merger of Sri Lanka's north-east Indo-Asian News Service 30 March 2007

Indian backing proposals styled on the Indo-Lanka Accord The Island, March 26, 2007  

Moderate Tamils' constitutional proposal  Hindustan Times 23 March 2007

FRATERNAL PAGE

LSSP demands 13th Amendment be implemented
 

 

தோழர் றொபேட்
50வது பிறந்தநாள் நினைவு
 

மார்கழி 13
ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல்
khh;fop 13

<gpMh;vy;vt; kPJ jhf;Fjy;

 

Appeal to the leaders of  Political Parties and the People of  Tamil Naad 14 October 2008

 

 

 

மட்டக்களப்பு மாவட்ட உள்ள+ராட்சி தேர்தல்கள்- 2008
 

வாக்களிப்பு மற்றும் கட்சிகளுக்குக் கிடைத்த ஆசனங்கள்
 

மட்டக்களப்பு மாநகர மேயர் பத்மினி 13.03.2008 அன்று அளித்த செவ்வி
 

 

கிழக்கு மாகாணசபை தேர்தல் ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் வழங்கிய (14.03.2008) செவ்வி

 

 

 
     
 

 'ehk; kf;fSf;fhfg; NghuhLtnjd;gJ vk;kPJ Rkj;jg;gl;l flikNa jtpu vkf;F toq;fg;gl;l mjpfhuky;y"  Njhoh; f.gj;kehgh