HOME ARTICLES HISTORY MARTYRS PHOTOS LINKS ARCHIVES CONTACT  

 

 

06.05.2008

முல்லைத்தீவில் பாதுகாப்பு வலய பகுதியிலும் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தும் உள்ள வன்னி மக்கள் தொடர்பான செய்திகள்

 

இடம்பெயர்ந்த மக்களுக்கு அன்புக்கரம் நீட்டுவோம்

 

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டும் காயங்களுக்குள்ளாகி வவுனியா மன்னார் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் உள்ள மக்களின் உணவு உடை மருத்துவம் கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் நாமும் கரம்கோர்த்து எமது பங்களிப்பை வழங்குவது கட்டாய கடமையும் உடனடி தேவையுமாகும்.

சுனாமியால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் துயர் துடைக்க முன்வந்து உதவிய கட்சி தோழர்கள் ஆதரவாளர்கள் நண்பர்கள் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் துன்பங்களை போக்கவும் உங்களால் முடிந்த உதவிகளை வழங்குவதுடன் இடம்பெயர்ந்தவர்கள் மீது அக்கறை கொண்டு உதவ முன்வரும் பொதுமக்களிடமிருந்தும் உதவிகளை பெற்று வழங்குவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு உதவவிரும்பும் அனைவரும் நீங்கள் வாழும் நாடுகளிலுள்ள பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சி பிரதிநிதிகளுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டு;கின்றோம்.

 

கட்சி பொதுச் செயலாளருடன் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் 0094 112 505372 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.


 

தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வி. ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன், பத்மநாபா ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் செயலாளர் தி. சிறிதரன் ஆகிய மூவரும் இணைந்து ஜனாதிபதியை சந்தித்து பேசியசந்தர்ப்பத்தில் அவரிடம் விடுத்த வேண்டுகோள்

கடிதத்தின் முழு விபரம்


 

இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியமர்த்தப்பட வேண்டும்.

ஈ பி ஆர் எல் எப் பத்மநாபா பொதுச்செயலர் ரி. சிறிதரன்.

இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் இயன்றவரை துரிதமாக அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றப்படவேண்டும். இரண்டு லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதை சாதாரணமாக கருத முடியாது. அவர்கள் தொடர்ந்தும் முகாம் வாழ்க்கை வாழ்வது பல வழிகளிலும் அவர்களை பாதிப்படையச்செய்யும் என ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் (ஈ பி ஆர் எல் எப் பத்மநாபா) பொதுச்செயலர் ரி. சிறிதரன் கேசரி வார இதழுக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

 

முழு_விபரம்


 

26.05.2009, 04.30 PM

 

மாணவர்களுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கான பொதுப் பரீட்சைகள் யாவும் 3 மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் நேற்று (25.05.2009) இடம்பெற்ற இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி தொடர்பான விசேட கூட்டத்தின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை, கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை, மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பன பிற்போடப்பட்டுள்ளது. கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலர் நிமல் பண்டா, மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், மற்றும் வலய கல்வ அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

25.05.2009, 04.30 PM

 

இடம்பெயர்ந்த மக்கள் குறித்து விசேட மாநாடு

செட்டிக்குளம் நலன்புரி நிலையத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள் பற்றி ஆராயும் மாநாடு இன்று (25.05.2009) வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் திருமதி பி;. எஸ். எம் சார்ள்ஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் அனைத்து திணைக்களத்தலைவர்கள் உட்பட பாதுகாப்பு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டின் போது திணைக்கள தலைவர்கள் நலன்புரி நிலையத்தின் செயற்பாடுகள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

24.05.2009, 04.30 PM

 

இடம்பெயர்ந்த மக்கள் விரைவில் மீள் குடியமர்த்தப்படுவர்

இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு அவர்களை சொந்த இடங்களில் மீள் குடியமர்த்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இதற்கென மோதல்கள் இடம்பெற்ற பகுதியில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் மிக துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பணிகள் நிறைவடைந்ததும் மக்கள் கட்டம் கட்டமாக அங்கு மீள் குடியமர்த்தப்படுவர் என் அவர் கூறியுள்ளார்.

 

24.05.2009, 08.45 AM

 

இடம்பெயர்ந்த மக்கள் சமைத்து உண்ண நடவடிக்கை

இடம் பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தமக்கு தேவையான உணவை தாமே சமைத்து உண்ணக்கூடியவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. முன்பு இவர்களுக்கு தேவையான உணவு பொதிகளில் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கை தற்பொழுது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் யு எல் எம் கால்தீன் தெரிவித்துள்ளார்.

 

23-05-2009, 04.00 PM

 

ஐநா செயலர் பான்கிமூன் வவுனியாவிற்கு விஜயம்

இலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கிமூன் வவுனியாவிற்கு இன்று (23.05.2009) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது இடம்பெயாந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டுள்ளார். இந்த மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் விரிவாக ஆராய்ந்துள்ளார். இந்த மக்களுக்கான நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் அரசசார்பற்ற பிரதிநிதிகளுடன் அவர் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

 

23-05-2009, 12.30 PM

 

இடம்பெயர்ந்த சிறு பிள்ளைகளுக்கு பால்மா பைக்கட்டுகள்

 

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் தங்கியுள்ள குடும்பங்களில் 5 வயதுக்குட்பட்ட 250 பிள்ளைகளுக்கான பால்மா பைக்கட்டுக்களை நேற்று (22.05.2009) தோழர் கங்கா தலைமையில் சென்ற பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் யாழ் பிராந்திய தோழர்கள் வழங்கியுள்ளனர். கட்சிகள், பொது அமைப்புக்கள் நலன்புரி நிலையங்களுக்கு சென்று அவர்களின் தேவைகள் பிரச்சினைகளை அறிந்து உதவிகளை வழங்குவதற்கான அனுமதி இன்னும் கிடைக்காமையால் இந்த பால்மா பைக்கட்டுக்கள் யாழ் அரசாங்க அதிபர் திரு. கே. கணேஷ் திட்டப்பணிப்பாளர் திரு. பிரதீபன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. தென்மராட்சியில் பாடசாலைகளில் தங்கியிருந்த வன்னியிலிருந்து வந்த மக்கள் நலன்புரிநிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ள அதேவேளை சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அவ்வாறு மாற்றப்படவில்லை எனவும் இதனால் இங்கு தங்கியுள்ள மக்களுக்கு பற்றாக்குறைகள் சற்று அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அங்கு 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பால்மாவிற்கான தேவை இருப்பதாக இந்த பாடசாலையில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் நலன்களை கவனித்துவரும் அரச அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய அங்குள்ள சிறுவர்களுக்கு பால் மா பைக்கட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியுதவியை இங்கிலாந்தில் உள்ள கட்சி தோழர்கள், ஆதரவாளர்கள் சிலர் முன்வந்து வழங்கியிருந்தனர்.

 

23-05-2009, 08.30 AM

 

ஐநா செயலர் இன்று நலன்புரி நிலையங்களுக்கு விஜயம்

ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயம் பான்கி மூன் இன்று (23.05.2009) வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களை பார்வையிடவுள்ளார். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

பான்கிமூன் நேற்று இரவு 11.30 மணியளவில் ஐநா சபைக்கு சொந்தமான பிரத்தியோக விமானத்தில் இலங்கை வந்துள்ளார். இடம்பெயாந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகளை கண்டறியும் நோக்கிலேயே அவர் இங்கு வந்துள்ளதாக ஐநா செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இன்று அவர் கண்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம ஆகியோரையும் சந்தித்து பேச்சுநடத்தவுள்ளார்.

 

22-05-2009, 10.55 PM

 

இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாமில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேம்படுத்தப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக வவுனியா மாவட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் வி. ஆர். எஸ் ஒஸ்வோர்ட் இன்று (22.05.2009) காலை அரசசார்பற்ற நிறுவனங்களை சந்தித்து இது குறித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து வவுனியா வலய கல்விப்பணிப்பாளர் தகவல் தருகையில் சென்றவாரம் வன்னியில் இருந்து வந்த மாணவர்களுக்கனா பாடசாலைகளை ஆரப்பித்து வைத்துள்ளோம். மேலும் அதிகளவான மக்கள் இடம்பெயாந்து வந்துள்ளனர். இவர்கள் இராமநாதபுரம் பகுதியில் குடியமர்தப்படுகின்றனர். இவர்களுக்கான பதிவுகள் முடிவடைந்து தற்காலிக முகாம்களில் குடியமர்தப்பட்டவுடன் இவர்களுக்கான கல்வி நடவடிக்கையினை ஆரம்பிக்கவுள்ளோம். இதன் அடிப்படையில் இராமநாதபுரத்தில் உள்ள முகாம் ஒன்றில் 170 தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு அதில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் இதற்கான நிதியினை அரசசார்பற்ற நிறுவனங்களிடம் கேட்டுள்ளோம். அவர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

 

22-05-2009, 05.15 PM

 

வடக்கின் அபிவிருத்திக்கு ஐநா ஒத்துழைப்பு

வடக்கு மகாணத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண ஒத்துழைப்பு வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார். இன்று (22.05.2009) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளாhர். இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணப்பணிகள் குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துளார்.

 

22-05-2009, 05.15 PM

 

வடக்கின் அபிவிருத்திக்கு ஐநா ஒத்துழைப்பு

வடக்கு மகாணத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண ஒத்துழைப்பு வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார். இன்று (22.05.2009) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளாhர். இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணப்பணிகள் குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துளார்.

 

22-05-2009, 05.15 PM

 

வடக்கின் அபிவிருத்திக்கு ஐநா ஒத்துழைப்பு

வடக்கு மகாணத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண ஒத்துழைப்பு வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார். இன்று (22.05.2009) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளாhர். இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணப்பணிகள் குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துளார்.

 

22-05-2009, 05.15 PM

 

வடக்கின் அபிவிருத்திக்கு ஐநா ஒத்துழைப்பு

வடக்கு மகாணத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண ஒத்துழைப்பு வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார். இன்று (22.05.2009) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளாhர். இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணப்பணிகள் குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துளார்.

 

22-05-2009, 03.20 PM

விஜய் நம்பியார் வவுனியா முகாமிற்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயம் பான்கி மூனின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு நேற்று (21.05.2009) சென்று பார்வையிட்டுள்ளார். இவரை வரவேற்ற மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களின் கல்வி, சுகாதாரம், மற்றும் நிவாரணப்பணிகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.இந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் விழங்கப்படும் அடிப்படை வசிதிகள் குறித்து முகாம்களில் உள்ள பொதுமக்களிடம் நம்பியார் கேட்டு அறிந்துகொண்டுள்ளார்.

 

22-05-2009, 08.40 AM


இந்தியாவின் உதவியுடன் வவுனியாவில் வைத்தியசாலை

இந்தியாவின் உதவியுடன் வைத்தியசாலை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயாந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் நோக்கில் இந்த வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 100 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வகையில் இந்த வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது. இந்த வைத்தியசாலைக்கு தேவையான மருந்துப் பொருட்களுடன் இந்திய வைத்தியர் குழு ஒன்றையும் இந்திய அரசு இன்று (22.05.2009) இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென இந்தியா 500 கோடி ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக இந்த வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது.

 

22-05-2009, 08.05 AM

செட்டிக்குளம் முகாமை ரிசாத் பதியுதீன் பார்வையிட்டுள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கென அமைக்கப்பட்டுள்ள 5வது முகாமை அனர்த்த நிவாரண மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பததியுதீன் நேரில் சென்று பார்வையட்டுள்ளார். இங்கு 35 000 பேர் வரையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் தமக்கு தேவையான உணவை தாமே சமைத்து உண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரமளவில் இதற்கான பொருட்கள் அந்த மக்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

21-05-2009, 09.45 PM

வடக்கு மாகாணத்தை 180 நாட்களில் மீளகட்டியெழுப்பவேண்டும்

ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்று (21.05.2009) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு செயலணியின் தலைவர் பரில் ராஜபக்ச தலைமை தாங்கியுள்ளார். இந்த செயலணி வடக்கு மாகாணத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கென ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய பசில் ராஜபக்ச வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பு முக்கிய கவனத்தில் கொள்ளப்படவேண்டும். 180 நாட்களில் வடக்கு மாகாணம் மீள கட்டியெழுப்பப்படவேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் வடக்கு மாகாண அபிவிருத்தியுடன் சம்மந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலர்கள் கலந்துகொண்டனர்.

 

21-05-2009, 03.00 PM

 

உணவு வினியோகிக்கும் நிறுவனங்களே இடம்பெயர்ந்த

மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு செல்ல முடியும்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினருக்கு வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மெனிக்பாம் முகாமிற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே உட்செல்ல படையினரால் அனுமதிக்கப்பட்டுள்ளது. எமது நிறுவனம் உணவு வினியோகம் செய்வதில்லை இதனால் அங்கு அங்குள்ள மக்களுக்கு தமது பணியாளர்கள் ஏனைய சேவையினை வழங்க முடியாமல் போயுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஜெனிவாவில் உள்ள பேச்சாளரான மார்சல் இசாட் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

 

21-05-2009, 09.40 AM

பான்கிமூனை வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள்

தங்கியுள்ள முகாம்களுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை

இலங்கைக்கு நாளை (22.05.2009) விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கிமூனை இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு அழைத்து செல்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மற்றும் மனிதஉரிமைகள் அமைச்சர் மகிந்தசமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பான்கிமூனுக்கு நேரடியாக தெரிவிக்கும் நோக்கிலேயே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இலங்கை வரும் பான்கிமூன் ஜனாதிபதி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

20-05-2009, 10.20 PM

 

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ் போதனா

வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உதவி

 

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து யாழ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நலன்புரி நிலையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் 97 பேர் யாழ் போதனாவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை இன்று (20.05.2009) நேரில் சென்று பார்வையிட்ட பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் யாழ் பிராந்திய தோழர்கள் அவர்கள் அனைவருக்கும் பால்மா, பிஸ்கட், சவர்காரம் என்பன அடங்கிய பொதிகளை வழங்கினர். இந்த நோயாளர்களில் அனேகமானவர்கள் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்திலுள்ள கட்சி தோழர்கள் ஆதரவாளர்கள் சிலர் வழங்கிய நிதி உதவியை கொண்டு இந்த பொருட்கள் வழங்கப்பட்டன. யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் அறிவுறுத்தலின் படி இப்பொருட்கள் இடம்பெயர்ந்து வந்து சிகிச்சை பெற்றவரும் கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள் மற்றும் நோயளிகளுக்கு வழங்கப்பட்டது.

 

20-05-2009, 09.45 PM

இந்திய வைத்தியர்கள் வவுனியா முகாமிற்கு சென்றுள்ளனர்.

புல்மோட்டை களவைத்தியசாலையில் கடமையாற்றிய இந்திய வைத்தியர்கள் இன்று (20.05.2009) வவுனியா முகாம்களுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் நோக்கிலேயே அவர்கள் அங்கு சென்றுள்ளனர். ஒரு தொகுதி மருந்துப் பொருட்களையும் இவர்கள் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

20-05-2009, 02.15 PM

செஞ்சிலுவை சங்கம் இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவை

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தாம் தொடர்ந்தும் சேவைகளை வழங்கவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. மன்னார் வைத்தய சாலையில் தமது பணியாளர்கள் வைத்திய பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். இந்த மக்களுக்கென மேலும் 17300 பேருக்கு தற்காலிக குடியிருப்புக்களையும், 20700 பேர் பயன்படுத்தும் வகையில் கழிவறை வசதிகளையும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் ஊடக பேச்சாளர் சரசிவிஜயரத்ன தெரிவித்துள்ளார்.

 

20-05-2009, 09.30 AM

 

இடம்பெயர்ந்த மக்களுக்கென யப்பான் நிதிஉதவி

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென யப்பான் 50 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிதியினை யப்பான் அரச பிரதிநிதியான குளியோஅகாசி ஜனாதிபதியின் சிரெஸ்ட ஆலோசகர் பசில்ராஜபக்சவிடம் கையளித்துள்ளார். இந்த மக்களுக்கென யப்பான் அரசு வழங்கியுள்ள உதவிப் பொருட்களில் 560 கூடாரங்கள், 10 ஆயிரம் பாய்கள், 4 ஆயிரம் பிளாஸ்ரிக் விரிப்புக்கள், 30 ஆயிரம் செரிகொள்கலன்கள், ஆயிரம் நுளம்பு வலைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் உணவுப் பொருட்களும் இந்த மக்களுக்கு வழங்கவுள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இதன் படி 6255 மெற்றிக்தொன் அரிசி, 132 மெற்றிக் தொன் ரின்மீன் என்பன வழங்கப்படவுள்ளது. இவை விரைவில் கொழும்பிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

20-05-2009, 09.15 AM


முகாமில் மக்கள் தங்கவைக்கப்படவுள்ளனர்.

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை செட்டிக்குளம் பகுதியில் புதிதாக அமைக்கபட்ட 5 வது நிவாரண கிராமத்தில் குடியமாத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிவாரண கிராமத்திற்கென 300 ஏக்கர் காணி துப்பரவு செய்யப்பட்டுள்ளதாகவும் இங்கு கூடாரங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அனர்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் கால்தீன் தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்தப்படும் வரை இந்த முகாம்களில் தற்காலிகமாக குடியமர்தப்படுவர் என அவர் மேலும் கூறியுள்ளார்.

 

20-05-2009, 08.15 AM

 

இ.பெயர்ந்த மக்களுக்கான தேவைகளை அரசுவழங்கியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான அனத்து தேவைகளையும் அரசாங்கம் சிறந்த முறையில் வழங்கி வருவதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் வடபகுதியில் 13 நலன்புரி நிலையங்களிலும், 2 நிவாரண கிராமங்களிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 900ம் பேர் வரையில் அவர்களது உறவினர்களுடன் முகாமிற்கு வெளியே சென்று வாழ்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. மேலும் உறவினர்கள் அல்லாத முதியவர்கள் மன்னாரில் உள்ள வயோதிபரில்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்தும் பணி இந்த வருடத்திற்குள் நிறைவடையும் என அவர் கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கென நலன்புரி நிலையங்களில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது

 

19-05-2009, 03.45  PM

நோயாளர்கள் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றம்

திருகோணமலை பதிவிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இடம்பெயர்ந்த மக்கள் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 3 பஸ்களில் சிறுவர் மற்றும் வயோதிபர் உட்பட 115 பேர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

19-05-2009, 08.30 AM


புலிகளின் பிடியில் 15000 சதுர கிலோமீட்டர் இருந்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு காலப்பகுதியில் 15 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவு புலிகளின் கட்டுபாட்டில் இருந்துள்ளது. தற்பொழுது அவை முழுமையாக கைப்பற்றப்பட்டு நாடு ஒரு கொடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டை மீட்கும் பணியில் படையினரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாவிலாறு பகுதியில் அரம்பிக்கப்பட்ட மனிதாபிமான படைநடவடிக்கை அனைத்தும் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான படை நடவடிக்கை மூலம் 2007ம் ஆண்டு யூலை மாதம் 11ம் திகதி முற்று முழுதாக விடுவிக்கப்பட்டிருந்தது.

 

19-05-2009, 09.10 AM

இதுவரை 251,861 பொதுமக்கள் மீட்பு

புலிகளின் பிடியில் பணயக்கைதிகளாக இருந்த பொதுமக்கள் அனைவரும் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரை 2 இலட்சத்து 51 ஆயிரத்து 861 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு தேவையான அடிப்படை வசத்திகள் அனைத்தும் அரசங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மக்கள் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்தப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
 

18-05-2009, 08.15 AM

 

இடம்பெயர்ந்த மக்களுக்கு பிரிட்டன் உதவி

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு பிரிட்டன் உதவி வழங்க முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில் 50 இலட்சம் பவுன்ஸ் நிதியினை வழங்கவுள்ளது. இந்த மக்களுக்கு உணவு, உறைவிடம், மற்றும் மருந்துப்பொருட்கள் உடனடியாக வழங்கப்படவேண்டும் மேலும் இந்த மக்கள் தமது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்தப்படவேண்டும் என பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சர் டக்ளஸ் அலக்சான்டர் தெரிவித்துள்ளார்.

 

17-05-2009, 09.57 PM

 

இடம்பெயர்ந்த மக்களை ரிசாத் பதியுதீன் பார்வையிட்டுள்ளார்.

புலிகளின் பிடியில் இருந்து தப்பித்து வரும் மக்களை அனர்த்தநிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்று (17.05.2009) ஓமந்தைக்கு சென்று பார்வையிட்டுள்ளார். அந்தமக்களின் குடிநீர்வசதி, மற்றும் உணவு ஏனைய விடயங்கள் குறித்தும் அமைச்சர் பார்வையிட்டுள்ளதுடன் இவர்களுக்கு தேவையான அனத்து அடிப்படைவசதிகளையும் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

 

17-05-2009, 02.30 PM

 

புலிகளின் பிடியில் இருந்து மக்கள் முற்றாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

 

புலிகளின் பிடியில் இருந்து இன்று (17.09.2009) அனைத்து பொதுமக்களும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கடந்த 14ம் திகதி தொடக்கம் இன்றுவரை 50,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்களை படையினர் மீட்டுள்ளனர். இந்த மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை படையினர் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலிகள் வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் 800 சதுர மீற்றர் பரப்பிற்குள் முடக்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் இங்கு மோதல்கள் இடம்பெற்று வருகிறது.

 

16-05-2009, 03.00 PM

 

புலிகளின் பிடியில் இருந்து இன்றும் மக்கள் வருகை
 

 


புலிகளின் பிடியில் இருந்து தப்பித்து இன்று (16.05.2009) 4568 பொதுமக்கள் படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுப்ட்டுள்ள 53வது படைப்பிரிவினரிடம் 2500 பேரும், 58வது படைப்பிரிவினரிடம் 1488 பேரும், 580 பேர் 59வது படைப்பிரிவினரிடமும் தஞ்சமடைந்துள்ளனர். தப்பித்து வந்த மக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சிலர் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த 14ம் திகதி தொடக்கம் இன்றுவரை 17000 பொதுமக்கள் வரை அரச கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளனர். இதன்படி கடந்த 14ம் திகதி 4909 பேர் 53வது படைப்பிரிவினரிடமும், 15ம் திகதி 4300 பேர் 58வது படைப்பிரிவினரிடமும், 757 பேர் 59வது படைப்பிரிவினரிடமும் தஞ்சமடைந்துள்ளனர்.

 

16-05-2009, 11.05 AM

 

புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் பணிதொடர்கிறது

 

 

பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை மீட்கும் மனிதாபிமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த இருதினங்களுக்குள் 15000 இற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் நந்திக்கடல் களப்பு வழியாக வந்தவண்ணமுள்ளனர். வரும் போது புலிகளின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தவர்களுக்கு இராணுவத்தினர் முதலுதவி வழங்குவதுடன் அவர்கள் அனுராதபுரம் மற்றும் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கும் விமானப்படையினரின் ஹெலிகொப்டர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டள்ளது.

 

16-05-2009, 10.40 AM

 

இருமுனைகளில் முன்னேறிய படையினர் இணைந்துள்ளனர்.

முல்லைத்தீவு வட்டுவாய்கால் பகுதியின் வட்கு நோக்கி கடற்கரை ஓரமாக மனிதாபிமான நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த பிரிகேடியர் பிரசன்ன சிலவ்வா தலைமையிலான 59வது படையணியும் கரையமுள்ளிவாய்க்கால் பிரதேசத்திலிருந்து தெற்கு நோக்கி மனிதாபிமான நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான 58வது படையணியினரும் இன்று (16.05.2009) கலை ஒன்றாக இணைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த இணைவு முழு இடங்களையும் கைப்பற்றுவதற்கான ஓர் அடையாளமென தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை அடுத்து கடற்புலிகளின் கடல்மார்கமான தொடர்புகள்; துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் தற்கொலை தாக்குதல்

வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று (15.05.2009) பிற்பகல் 5 மணியளவில் புலிகள் படையினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு டபிள் கப் வாகனம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் தாக்குதல் நடத்த வந்த 4 புலி உறுப்பினர்களும் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

16-05-2009, 09.00 AM

 

புலிகளின் தலைவர் பாதுகாபப்பு வலயத்திலேயே உள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன், கடற்புலிகளின் தலைவர் சூசை, புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் படையினரால் மீட்கப்படாது எஞ்சியுள்ள பகுதியிலேயே உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று (15.05.2009) மீட்கப்பட்ட சூசையின் மனைவி இந்த தகவலை தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

சூசையின் குடும்பத்தினரிடமிருந்து 6 லட்சம் ரூபா பணமும், 2 கிலோக்கிராம் தங்கமும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமான்டர் டி. கெ. பி. தஸநாயக்க தெரிவித்துள்ளார். சூசையின் குடும்பத்தினர் மீட்டப்பட்டமையானது முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை பலனளித்துள்ளதை எடுத்து காட்டுவதாக தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர்கள் எவரும் இந்த பகுதியால் தப்பித்து செல்லமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

15-05-2009, 10.30 PM

 

மூன்று புலிஉறுப்பினர்கள் படையினரிடம் சரண்

முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் இன்று (15.05.2009) பிற்பகல் 2 மணியளவில் 3 புலி உறுப்பினர்கள் 58வது படைப்பிரிவினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மூவரும் 15, 16, 17, வயதையுடைய சிறுவர்கள் எனவும் இவர்கள் தற்கொலை படைப்பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் குடுப்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு புலிகள் இயக்கத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் தப்பித்து வந்த மக்ளுடன் வந்த இவர்கள் படையினரிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 

15-05-2009, 09.45  PM

 

பாதுகாப்பு வலயத்தில் சுனாமி கிராமம் படையினரால் மீட்பு

முல்லைத்தீவு பகுதியில் மனிதாபிமான நடவடிக்கையினை மேற்கொண்டுவரும் படையினர் அங்கிருந்த சுனாமி கிராமத்தை கைப்பற்pயுள்ளனர். இங்கிருந்து பொதுமக்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுமார் 1590இற்கும் அதிகமான மக்கள் குடியிருந்துள்ளனர். இங்கிருந்த வீடுகளில் புலிகள் கனரக ஆயுதங்களை பொருத்தியிருந்தாhக படையினர் தெரிவித்துள்ளனர்.

 

15-05-2009, 07.30 PM

 

தப்பிச்சென்ற சூசையின் மனைவி பிள்ளைகள் மீட்பு

பொதுமக்களுடன் படகு ஒன்றில் பயணித்த கடற்புலிகளின் தலைவர் சூசையின் குடும்பத்தினரையும் நெருங்கிய உறவினர்களையும் மற்றும் சுதாமாஸ்டர் என்பவரது குடும்பத்தினரையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்;. சூசையின் மனைவி சத்தியதேவி, சூசையின் மகன் சுரேஸ் (வயது 16), சூசையின் மகள் மதி (வயது 17) மற்றும் சுதாமாஸ்டர் என்பவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் உட்பட 11 பேர் இன்று (15.05.2009) காலையில் படகில் தப்பிச் சென்றுகொண்டிருக்கும் போது கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். படகு ஒன்று செல்வதை அவதானித்த படையினர் அதனருகில் சென்று அந்த படகில் இருந்தவர்களை மீட்டுள்ளனர் இதன் போது சூசையின் குடும்பத்தினரும் சூதாமாஸ்டரின் குடும்பத்தினரும் அதில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தையும் நகைகளையும் கைபற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

15-05-2009, 07.30 PM

 

தப்பிச்சென்ற சூசையின் மனைவி பிள்ளைகள் மீட்பு

பொதுமக்களுடன் படகு ஒன்றில் பயணித்த கடற்புலிகளின் தலைவர் சூசையின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். சூசையின் மனைவி சத்தியதேவி, சூசையின் மகன் சுரேஸ் (வயது 16) சூசையின் மகள் மதி (வயது 17) இன்று (15.05.2009) காலையில் 11 பேர் பயணம் செய்த படகு ஒன்றை மீட்ட கடற்படையினர் அப்படகில் சூசையின் குடும்பத்தினரும், உறவினர்களும் பயணிப்பதை அடையாளம் கண்டுகொண்டனர். இவர்களிடமிருந்து பொருந்தொகை பணத்தையும் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

15-05-2009, 05.00 PM

 

நலன்புரி நிலையங்களுக்கு தொலைபேசி வங்கி வசதிகள்

யாழ் மாவட்டத்தில் வன்னியில் இருந்து இடம்பெயாந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கு தொலைபேசி சேவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு மொத்தமாக உள்ள 12 நலன்புரி நிலையங்களில் 8 நலன்புரி நிலையங்களுக்கு சிடிஎம்ஏ தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தபால் மற்றும் வங்கிச் சேவைகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 11 ஆயிரத்தி 79 பேர் இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

15-05-2009, 04.50 PM


செஞ்சிலுவைச்சங்கத்தின் செயற்பாடுகள் நிறுத்தம்

புலிகளின் பிடியில் ஏஞ்சியுள்ள பகுதியில் தமது செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அங்குள்ள பொதுமக்களுக்கான உணவுப் பொருட்கள், மருந்துபொருட்கள் போன்றவற்றை கொண்டு செல்லுதல் மற்றும் அங்குள்ள நோயாளர்களை அழைத்து வருவது போன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு மோதல்கள் இடம்பெற்று வருவதனால் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் செயற்படுவதற்கு சாதகமான சூழ்நிலை இல்லாமையின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான ஊடக இணைப்பாளர் சரசி விஜயரத்ன தெரிவித்துள்ளார். எனினும் பாதுகாப்பான சூழல் ஒன்று ஏற்படும் பட்சத்தில் அங்கு சென்று தமது பணிகளை தொடர செஞ்சிலுவை சங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 

15-05-2009, 04.15 PM


புலிகளின் பிடியிலிருந்து மக்கள் வந்தவண்ணமுள்ளனர்

பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து தொடர்ந்து பொதுமக்கள் வந்துகொண்டிருப்பதாக படையினர் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நேற்று (14.05.2009) 3675 பொதுமக்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவர்களில் 3250 பேர் நந்திக்கடல் களப்பு ஊடாக வந்துள்ளனர் ஏனையோர் வெள்ளைமுள்ளிவாய்கால் பகுதிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படையினர் மக்கள் பாதுகாப்பாக வெளியேறக்கூடிய வகையில் இரு முனைகளில் முன்னேறி சென்று பாதுகாப்பான பாதை ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனூடாக பொதுமக்கள் தற்பொழுதும் வந்தவண்ணமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

15-05-2009, 03.40 PM


வன்னி மக்களுக்கு உதவுவதற்கு அமெரிக்க கடற்படை தயார்

இலங்கையில் புலிகளிடம் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் அமெரிக்க கடற்படையினர் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்து இது சம்மந்தமாக ஆராய்ந்து அமெரிக்க அரசிடம் அறிகக்கை சமர்ப்பித்திருப்பதாக அமெரிக்க பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் தொவித்துள்ளார். இது குறித்து இலங்கையில் உள்ள அமெரிக் தூதரகம் ஊடாக ராஜாங்க திணைக்களத்திற்கு அறிககை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

15-05-2009, 03.30 PM

 

கடற்புலிகளின் பாரிய தளம் மீட்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு கரியமுள்ளிவாய்க்கால் பகுதியின் தெற்குப் பக்கமாகவுள்ள கடற்புலிகளின் பாரிய தளம் ஒன்றை படையினர் இன்று (15.05.2009) கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முகாமில் நடத்தப்பட்ட தேடுதலின் போது கடற்புலிகளின் பெரியளவிலான 12 தற்கொலை படகுகள் உட்பட பெருந்தொகையான படகுகள் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 3, ராடர்கருவிகள் என்பன மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் நேற்றைய மோதலில் கொல்லப்பட்ட 30 புலி உறுபப்பினர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

15-05-2009, 10.55 AM

 

பொருட்கள் இறக்கமுடியாது கப்பல்கள் திரும்பியுள்ளது

வன்னியில் புலிகளின் பிடியில் உள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்து சென்ற கிறின் ஓசோன் கப்பலும், உலக உணவு திட்டத்தின் 500 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களை கொண்டு சென்ற ஓரியன்டல் பிரின்ஸஸ் என்ற இரு கப்பல்களும் இன்று (15.05.2009) காலை திருகோணமலைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. வன்னி பகுதியில் மோதல்கள் நடைபெற்று வருவதினால் ஆழ்கடல் பகுதியில் இரு கப்பல்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கரைக்கு சென்று பொருட்களை இறக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லாதபடியினாலும் இவை திருகோணமலைக்கு திரும்பியுள்ளன.

புலிகளின் பகுதியில் உள்ள நோயாளர்களையும் அரச கட்டுபாட்டு பகுதிக்கு கொண்டு வரமுடியாதுள்ளதாகவும் செஞ்சிலுவை சங்கம் மேலும் கூறியுள்ளது.

 

15-05-2009, 10.00 AM

 

முகாம்களுக்கு அருகில் “லக்சதோச” திறக்கப்படவுள்ளது.

வவுனியாவில் நலன்புரி நிலையங்களுக்கு அருகில் லக்சதோச நிலையங்களை திறக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணரத்ன தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் நலன்புரி நிலையம் ஒன்றிற்கு அருகில் கிளை ஒன்று திறக்கப்பட்டுள்ளதோடு செட்டிக்குளம் மனிக்பாம் பகுதியில் மேலும் ஒரு கிளை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்த வாரமளவில் இது நிறைவடையும் என அவர் கூறினார்.

 

15-05-2009, 09.05  AM

 

புலிகளின் பகுதியில் பாரிய வெடிச்சத்தம்

புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள இடத்தில் புலிகளின் தலைவர்கள் மறைந்திருக்கும் பகுதியில் நேற்று (14.05.2009) மாலை பாரிய குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதுடன் கரும்புகையும் வெளிவந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள படையினர் இதனை அவதானித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து புலிகளின் வானொலி செயற்பாடுகள் அனைத்தும் செயற்படவில்லை என படையினர் கூறுகின்றனர்.

 

14-05-2009, 10.00  PM

 

பெருமளவு மக்கள் படையினரிடம் தஞ்சம்

 

புலிகளின் பிடியில் இருந்து இன்று (14.05.2009) 3300ற்கும் அதிகமான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படையினர் புதிய பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களை மீட்கும் இறுதி கட்ட நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். இதனை அடுத்தே இந்த பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டிற்குள் வந்தவண்ணமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிந்தி கிடைத்த செய்தியின் படி 6000 இற்கும் மேற்பட்ட பெதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தவண்ணமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

தப்பித்து வந்த பொதுமக்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் விமானப்படையினரின் ஹெலிகொப்டர் மூலம் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
 

14-05-2009, 03.15  PM


புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மக்கள் வருகை

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மேலும் ஒருதொகுதி மக்கள் நேற்று (13.05.2009) படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். 39 குடும்பங்களை சேர்ந்த 104 பேர் இவ்வாறு வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். இவர்களிடம் விசாரணைகளை நடத்திய இராணுவத்தினர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

14-05-2009, 02.55  PM

 

பிரதமநீதியரசர் வவுனியாவிற்கு விஜயம்

பிரதமநீதியரசர் சரத் என். சில்வா உடப்ட நீதியமைச்சின் அதிகாரிகள் சிலர் இன்று (14.05.2009) காலை வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு வவுனியா முகாம்களில் இடம்;பெயர்ந்து தங்கியுள்ள மக்களை சந்தித்து பேசியுள்ளார். அத்துடன் படையினரிம் சரணடைந்த புலி உறுப்பினர்கள், மற்றும் சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வு குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

14-05-2009, 09.30  AM

 

இடம்பெயர்ந்த மக்களுக்கென புதிய செயலணி

வடக்கு மாகாணத்தி;லிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள குடியமர்த்துவதற்கென ஜனாதிபதி குழு ஒன்றை நியமித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று (13.05.2009) இந்த செயலணியை உருவாக்கியுள்ளார். இதன் தலைவராக ஜனாதிபதியின் சிரெஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஸவும் செயலாளராக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ் பி திவாரட்ணவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் மக்களை மீளகுடியமர்த்துதல், அந்தமக்களின் பாதுகாப்பு, மற்றும் அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகள் இந்த குழுவனரால் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

13-05-2009, 04.50  PM

 

கிறின் ஓசோன் கப்பல் மீண்டும் முல்லைத்தீவு சென்றுள்ளது

பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கான உணவுப் பொருட்களுடன் கிறீன் ஓசோன் கப்பல் இன்று (13.05.2009) புல்மோட்டையில் இருந்து முல்லைத்தீவை நோக்கி சென்றுள்ளதாக சென்சிலுவை சங்க ஊடகப் இணைப்பாளர் சரசிவிஜயரத்தன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கடற்பிராந்தியத்திற்குள் கப்பல் பிரவேசித்த போதும் அங்கு பொருட்களை இறக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவாக காணப்படுவதாகவும் இது குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் நேற்றும் அந்த பகுதிக்கு சென்று பொருட்களை இறக்க முடியாது புல்மோட்டைக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

13-05-2009, 04.30  PM


புலிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு சர்வார்தோட்டம் பகுதியில் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். 4 தற்கொலை படகுகள் 15 தற்கொலை குண்டுதாரிகள் சகிதம் 200இற்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக பிரிகேடியர் பிரசன்ன சில்வா தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை 59வது படைப்பிரிவினர் முறியடித்துள்ளனர். இந்த தாக்குதல் நேற்று (12.05.2009) இரவு தொடக்கம் இன்று (13.05.2009) அதிகாலை வரை தொடர்ந்துள்ளது. சர்வர்தோட்டம் பகுதியை கைப்பற்றும் நோக்கிலேயே புலிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் புலிகளின் 3 தற்கொலை படகுகள் படையினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. மோதலை அடுத்து நடத்தப்பட்ட தேடுதலின் போது புலிகளின் படகு 1 மீட்கப்பட்டுள்ளதுடன் புலிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

13-05-2009, 04.00  PM


புதிய பாதுகாப்பு வலயத்தின் 550 மீட்டர் படையினர் வசம்

புதிய பாதுகாப்பு வலயப்பகுதியின் 550 மீட்டர் பகுதியை இன்று (13.05.2009) காலை 58வது படைப்பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீட்பதற்கான மோதலில் புலிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதலில் புலிகளின் 35 சடலங்களும் 58 ரி56 ரக துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.

 

13-05-2009, 02.30  PM

 

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வவுனியாவிற்கு விஜயம்

இலங்கைக்கு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்று (13.05.2009) காலை வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள் இடம்பெயர்ந்து வந்து நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை பார்வையிடவுள்ளதுடன் அரசாங்கம் அங்கு மேற்கொண்டுள்ள அடிப்படை வசதிதகள் குறித்தும் ஆராயவுள்ளனர்..

 

13-05-2009, 11.00  AM

 

சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கென வடமேல்மாகாண முதலமைச்சின் கீழ் சேகரிக்கப்பட்ட உலர் உணவு நிவாரணப்பொருட்கள் இன்று (13.05.2009) காலை முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லொறிகள் மூலம் எடுத்து செல்லப்படும் இந்த பொருட்கள் அங்குள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலர்உணவுப் பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள், உடைகள் என்பன அடங்குகின்றன. இந்த பொருட்கள் அனைத்தும் ஒருகோடி ரூபா பெறுமதியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

13-05-2009, 10.45  AM


கிறின் ஓசோன் கப்பல் புல்மோட்டைக்கு திரும்பியுள்ளது

பாதுகாப்பு வலயத்திற்கு நேற்று (12.05.2009) கலை உணவுப் பொருட்களை கொண்டு சென்ற கிறீன் ஓசோன் கப்பல் அங்கு ஏற்பட்ட சீரற்ற நிலமை காரணமாக உணவுப் பொருட்கள் இறக்க முடியாது புல்மோட்டைக்கு திரும்பியுள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் ஊடக இணைப்பாளர் சரசு விஜயரத்ன தெரிவித்துள்ளார். முள்ளிவாய்கால் பகுதிவரை இதந்த உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படவிருந்தது. உணவுப் பொருட்களை இறக்கிவிட்டு நோயாளர்களை புல்மோட்டைக்கு அழைத்து வர திட்டமிடப்படவிருந்தது. உலக உணவுத்திட்டதினால் வழங்கப்பட்ட 25 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் இவ்வாறு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
 

13-05-2009, 10.40  AM


வைத்தியசாலையில் இருந்து நோயாளர்கள் மாற்றம்

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து திருகோணமலை பதவிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பொதுமக்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 52 நோயாளர்கள் இவ்வாறு மேலதிக சிகிச்சை காரணமாக அம்புலன்ஸ் வண்டிகள் மூலம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

12-05-2009, 04.45  PM

 

புதிய பாதுகாப்புவலயத்தினுள் படையினர் பிரவேசித்துள்ளனர்

முல்லைத்தீவில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் படையினர் இன்று (12.05.2009) பிரவேசித்துள்ளதாக தேசிய பாதகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதியில் புலிகளின் பணயக்கைதிகளாக இருந்த மக்கள் படையினரிடம் தஞ்சமடைந்து வருவதாக தேசிய பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கரையாமுள்ளிவாய்க்கால் பிரசேத்தை கைப்பற்றிய 58வது படைப்பிரிவினர் தொடர்ந்தும் முன்னேறி இந்த பிரதேசத்திற்குள் முன்னேறி சென்றுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.

வட்டுவாய்க்கால் பாலம் படையினர் வசம்

படையினர் முல்லைத்தீவு நகருக்கு வடக்கு பக்கமாக உள்ள வட்டுவாய்க்கால் பாலத்தை இன்று (12.05.2009) முழுமையாக கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இது வட்டுவாய்கால் பகுதியையும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ளது. குறித்த பகுதியில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 59வது படைப்பிரிவினர் இதனை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் பதிவுகள் நடைபெறவுள்ளன.

வடக்கு மாகாணத்தில் இருந்து இடம்பெயாந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பிறப்பு, இறப்பு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக பிறப்பு இறப்பு பதிவுகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது சம்மந்தமாக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் இ. எம். குணசேகர தெரிவித்துள்ளார். மக்கள் இடம்பெயர்ந்த பின்னர் ஏற்பட்ட பிறப்பு இறப்பு போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இந்த மக்களில் சிலருக்கு உரிய பதிவுள் இல்லாதபோதும் அவர்களுக்கு இந்த பத்திரங்களை பெற்று கொடுப்பதற்கு புதிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தமது பதிவுகளை வவுனியாவின் காணி மற்றும் மேலதிக மாவட்ட பதிவாளரிடம் மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். இவர் முகாம்களுக்கு நேரடியாக சென்று தகவல்களை திரட்டவுள்ளதாக பாதிவாளர் நாயம் மேலும் கூறியுள்ளார்.

படையினரிடம் 4 புலிஉறுப்பினர்கள் சரணடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதியில் நேற்று (11.05.2009) படையினரிடம் 4 புலி உறுப்பினர்கள் சரணடைந்துள்ளனர். இவர்களில் 3 பேர் 16 வயது தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் எனவும் மற்றயவர் 24 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சின்னராஜா, திலீபன், நடேசு மயூரன், நித்தியவேல் சிறிதரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் நலன்புரி நலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வலயத்தில் இருந்து பொதுமக்கள் வருகை

பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து நேற்று (11.05.2009) மேலும் ஒரு தொகுதி மக்கள் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இதன் அடிப்படையில் 79 பேர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 60 பேர் வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்தும் மற்றயவர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்தும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களை மீட்ட படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

09.45  AM

 

இலங்கை தொடர்பில் உத்தியோகபூர்வமற்ற விவாதம்.

அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள ஐக்கியநாடுகள் தலைமையகத்தில் நேற்று (11.05.2009) நடைபெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் இலங்கை குறித்து உத்தியோக பூர்வமற்ற கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டன் வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபான்ட், மற்றும் பிராஸ் வெளிவிவகார அமைச்சர் பேனாட் குஷ்னரும் ஐநா பாதுகாப்பு சபையில் இலங்கை குறித்து உத்தியோகபூர்வமான விவாதம் நடத்த கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த முயற்சி தோல்வி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் நேற்று நடைபெற்ற உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலில் ஐநா பாதுகாப்பு சபைக்கு தலைமை வகிக்கும் ரஷ்யா உட்பட சீனா, வியட்நாம் ஆகிய நாடுகள் கலந்துகொள்ளவில்லை. இலங்கையில் தற்போதைய நிலமை சர்வதேச சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாதகமாக அமையவில்லை என குறித்த நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை குறித்து பேசுவதற்கு வாக்களிப்பு நடத்தப்படவேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இடம்பெயர்ந்த பெண்கள் சிறுவர்களுக்கென விசேட திட்டம்

இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக சிறுவர்அபிவிருத்தி மற்றும் மகளிர் நலமேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கென சிறுவர்களின் கல்வியினை மேம்படுத்தல், பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்தல், தொழில் வழிகாட்டல்களை வழங்குதல், பெண்களும், சிறுர்களும் போரினால் ஏற்பட்ட உளவியல் தாக்கத்தில் இருந்து மீள உதவுதல் போன்றவை உட்பட பல திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. இதில் புலிகள் இயக்கத்தில் இருந்து படையினரிடம் சரணடைந்த பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென யுனிசெவ் நிறுவனத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐநா பேச்சாளரின் கருத்து குறித்து கண்டனம்

இலங்கை தொடர்பில் ஐக்கியநாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின் பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் எவையும் ஆதரம் அற்றவை என மனிதஉரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசி;ங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (11.05.2009) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அண்மையில் வடக்கு மகாணத்தில் 100 சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக ஐநா பேச்சாளர் தெரிவித்தமை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். புலிகளினால் வெளியிடப்பட்ட கருத்தை மாத்திரம் கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். புலிகள் தோல்வியடைந்துவரும் நிலையில் தாம் தப்பித்து கொள்ளும் நோக்கில் சர்வதேச சமூகத்தின் பார்வையை தம்மீது திருப்பும் நோக்கிலேயே இவ்வாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் செயலர் பாலித கோகண கோடன் வைஸ{டன் பேச்சு நடத்தியுள்ளார். இவரின் இந்த கருத்திற்கு கடும கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை விமர்சிப்பதும் ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுவதும் ஐநா சபையின் பணி அல்ல என தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பாலித கோகண தெரிவித்துள்ளார்.

 

11-05-2009, 10.00  PM

 

மக்கள் நலன்புரிநிலையத்திற்கு மாற்றம்

திருகோணமலை புல்மோட்டை முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் இன்று (11.05.2009) புல்மோட்டை 13ம் கட்டையில் உள்ள நலன்புரி நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 498 குடும்பங்களை சேர்ந்த 1732 பேர் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளனர். நலன்புரி நிலையத்தில் இந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கரையாமுள்ளிவாய்க்கால் படையினர் வசம்

முல்லைத்தீவு கரையாமுள்ளிவாய்கால் பகுதியை படையினர் இன்று (11.05.2009) காலை முழுமையாக கைப்பற்றியுள்ளனர். 58வது படைப்பிரிவினர் நேற்று இரவு தொடக்கம் இந்த பகுதியில் மோதலில் ஈடுபட்டதை அடுத்து இந்த பகுதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் நடந்த மோதலின் போது 43 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இது புலிகளின் தொலைத்தொடர்பு உரையாடலை இடைமறித்து கேட்டபோது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களும், மற்றும் விமானத்தை தாக்கக்கூடிய ஆயுதங்கள் உட்பட பல ஆயுதங்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

 

04.30  PM

 

யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு கல்வி

இடம்பெயர்ந்து யாழ்மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இன்று (11.05.2009) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வகுப்பறைகளை அமைப்பதற்கு யுனிசெவ், மற்றும் இலங்கை சிறுவர் பாதுகாப்பு நிதியம் என்பன உதவிகளை மேற்கொண்டு;ள்ளன. இந்த மாணவர்களுக்குரிய இலவச சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 2500 மாணவர்களும் 96 ஆசிரியர்களும் முகாம்களில் தங்கியுள்ளதாக தென்மராட்சி கல்விவலய பணிப்பாளர் கே. பிறேமகாந்தன் தெரிவித்துள்ளார்.

கொடிகாமம் நாவலடி தமிழ்கலைவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட தற்காலிக வகுப்பறைகளில் 262 மாணவர்கள் கல்வி நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இங்கு 6 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கைதடி நாவற்குளி பகுதியில் தங்கியுள்ள 613 மாணவர்களுக்கான தற்காலிக வகுப்புக்கள் கைதடி அரசினர் வைத்தியசாலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் மிருசுவில் பகுதியில் றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை நலன்புரி நிலைய வளாகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாகவும் அவர் கூறினார்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மகளிர் கல்லூரிகளில் உள்ள 902 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

புல்மோட்டையில் நலன்புரி நிலையம் அமைக்கப்படவுள்ளது

திருகோணமலை புல்மோட்டை பகுதியில் நலன்புரி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து வரும் மக்களின் தேவைகளை இலகுபடுத்தும் நோக்கத்துடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராயவென கொழும்பில் இருந்து குழு ஒன்று வரவுள்ளது. இடம் பெயர்ந்து வரும் மக்கள் வவுனியா நலன்புரிநிலையத்திற்கு அனுப்பப்படும் வரை இந்த நலன்புரி நிலையத்திலேயே தங்கவைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

01.50  PM

இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு வைரஸ் தடுப்பு மருந்து

புலிகளின் பிடியில் இருந்து தப்பித்து வரும் மக்களுக்கு வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. சுகாதார அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் பணிப்பின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இருந்து வரும் மக்களில் பலர் சின்னம்மை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு வந்த மக்களில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவiர் 8 ஆயிரம் பேர் வரையில் இந்த தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதார பராமரிப்பு போசாக்குத்துறை அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வவுனியா பூவரசங்குளம் வைத்தியசாலை பிரத்தியோகமாக ஒதுக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நோய் முகாம்களில் உள்ள மக்களுக்கு தொற்றாது இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
 

09.30  AM

 

பாதுகாப்பு வலயத்தில் இருந்து தாக்குதல்

பொதுமக்களின் நலன் கருதி புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து நேற்று (10.05.2009) படையினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் இருந்து 1 மணிநேரத்திற்கு மேலாக மோட்டார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

புலிகள் கடல்வழியாக தப்பி செல்ல முடியாது

புலிகளின் தரைவர் பிரபாகரன் உட்பட எந்தஒரு புலி உறுப்பினரும் கடல்மார்க்கமாக தப்பிச் செல்வதற்கான வழிகள் எவையும் இல்லை என கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையினர் பருத்தித்துறை தொடக்கம் முல்லைத்தீவு வரை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கென அதி நவீன தொழில் நுட்பத்தையும், சக்திவாய்ந்த ராடர்கருவிகளையும் பயன்படுத்துவதாக கடற்படை பேச்சாளர் மகேஸ் கருணாரத்ன தெரிவித்துள்ளார். வெகமாக சென்று தாக்கக்கூடிய கப்பல்களும் இங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டுள்ளன. புலிகளுக்கு கடல் வழியாக தப்பிக்க முயற்சிக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களை மீட்கும் பணி தொடர்கிறது

படையினர் மக்களை மீட்கும் இறுதி நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். இந்தபகுதியில் படையினரின் தாக்குதல்களினால் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவதாக புலிகளின் ஆதரவாளர்கள் மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களை பாதுகாப்பு அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது. படையினரின் தாக்குதல்களில் தோல்வியடைந்து வரும் புலிகள் இயக்கதை;தை பாதுகாக்கும் நோக்கிலேயே சர்வதேச சமூகத்திற்கு இவ்வாறான பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புலிகளே பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த பேராயுதங்களை உபயோகித்து வருகின்றனர் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நலன்புரி நிலையங்கள் சிறந்த முறையில் உள்ளது

இடம்பெயர்ந்து வந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்கள் சிறந்த முறையில் உள்ளதாக பிரித்தானியாவின் பாராளுமன்றத்தின் வெளிநாட்டு அபிவிருத்திக் குழுவின் தலைவர் மல்கம் புறூஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி வெளியிடும் சில வெளிநாட்டு ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடுகின்றன. பொதுமக்கள் சிலர் புலிகளிடம் இருந்து தப்பித்து வந்தது மகிழ்சி அழிப்பதாக தெரிவித்துள்ளனர் என கூறியுள்ளார்.

மீள்குடியேற்ற பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இன்று (11.05.2009) இரண்டாம் கட்டமாக நடைபெறவிருந்த மக்களை மீள்குடியமர்த்தும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 8 கிராமங்களில் மக்கள் இன்று மீள்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஐநா சபையில் இலங்கை நிலவரம் குறித்து பேச்சு

ஐக்கியநாடுகள் நாடுகள் சபையில் இன்று (11.05.2009) இடம்பெறவுள்ள பாதுகாப்பு சபைகூட்டத்தில் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கையினை அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரன்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேனாட் குஷ்னர் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

10-05-2009, 09.30  PM

 

புலிகளின் பிடியில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்

புலிகளின் பிடியில் இருந்து 700 பொதுமக்கள் இன்று (10.05.2009) காலை 10 மணியளவில் படையினரால் மீட்கப்படட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 685 பொதுமக்களை 58வது படைப்பிரிவினர் மீட்டுள்ளதுடன், 59வது படைப் பிரிவினர் 15 பொதுமக்களையும் மீட்டுள்ளனர். இந்த பொதுமக்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் அனுராதபுரம் வைததியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

 

05.55 PM

 

வவுனியாவில் மேலும் ஒரு கள வைத்தியசாலை

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு வைத்திய சேவைகள் வழங்குவதற்கு வவுனியா மனிக்பாம் பகுதியில் புதிய களவைத்திசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் வைத்திய நிறுவனமாகிய எம்.எஸ்.எவ் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானசேவை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இடம் பெயர்ந்த மக்களுக்கு வைத்திய சேவையை வழங்கிவரும் இந்த நிறுவனம் இந்த புதிய வைத்தியசாலையை அமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

முகாம்களில் இருந்த 200 புலிகள் படையினரிடம் சரண்

இடம்பெயர்ந்து வந்து வவுனியா முகாமில் தங்கியிருந்த புலிகளுடன் இணைந்து செயற்பட்ட 200 பேர் படையினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவர்களை பொறுப்பேற்றுக் கொண்ட பாதுகாப்பு தரப்பினர் 15 பஸ்களில் தென்பகுதியில் உள்ள புனர்வாழ்வு மையங்களுக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது. கடந்த வாரம் குறித்த பகுதிக்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விஜயம் செய்ததை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

10-05-2009, 05.00 PM

 

இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு சின்னமுத்து

இடம் பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் சிலர் சின்னமுத்து நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளவென பூவரசங்குளம் ஆதார வைத்திய சாலை விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நோய்கு உள்ளான மேலும் சிலர் நேற்று (09.05.2009) இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை கட்டுப்படுத்தும் மருந்து வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதுடன் முகாம்களில் உள்ள மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் புலிகளின்கட்டுப்பாட்டில் இருந்து வந்த மக்களில் சிலருக்கு தோல் சம்மந்தமான தொற்று ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வவுனியா முகாம்களில் மக்களிடையே பரவக்கூடிய தொற்று நோய் குறித்து ஆராய்வதற்கென வைத்தியர்கள் குழுஒன்றை வவுனியாவிற்கு அனுப்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.
 

ஒருதொகுதி மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து மேலும் ஒரு தொகுதி மக்கள் நேற்று (09.05.2009) இரவு புல்மோட்டைக்கு கிறின் ஓசோன் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்கள் உட்பட 500 பேர்வரையில் வந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். வந்தவர்களில் 200 பேர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

09.45 AM

 

இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை

இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கை குறித்து கூடியி கவனம் செலுத்தி வருவதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நலன்புரி நிலையங்களில் வகுப்புக்கள் நடைபெறுவதற்குரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள ஆசிரியர்களை கொண்டு இந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் வேறு இடங்களில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
 
 

 

 

குமுறும் மலையகம்

எங்கள் சின்னம்

 

அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகள்

 

தேர்தல் திணைக்களத்தால்

03 ஜுலை 2008 இல் வெளியிடப்பட்டது

 

 

 

 

அவுஸ்;திரேலியாவில வெளிவரும் உதயம் மாத இதழில் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவர்கள் எழுதிய 13வது அரசியல் யாப்பு திருத்தம், அதன் அமுலாக்கம் குறித்த கட்டுரை தொடர்
 

 

கூட்டமைப்பு

 

01 ஆகஸ்ட் 2008
த.வி.கூ புளொட்

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
 


அறிக்கைகள்

 

01 மே 2007
ஈ.பி.ஆர்.எல்.எவ்

 


கட்சியின் விளக்கம்

 

10 நவம்பர் 2006
இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு தொடர்பாக எமது கட்சியின் விளக்கம்
 

இணைத்தலைமை
 

22 நவம்பர் 2006
 


ஜெனீவா பேச்சுவார்த்தை
 


மத நிறுவனங்கள்

 

08 ஏப்ரல் 2007
 


 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரேரணைகள்
 

Proposal for the Political Solution to the Ethnic Conflict in Srilanka
EPRLF seeks merger of Sri Lanka's north-east Indo-Asian News Service 30 March 2007

Indian backing proposals styled on the Indo-Lanka Accord The Island, March 26, 2007  

Moderate Tamils' constitutional proposal  Hindustan Times 23 March 2007

FRATERNAL PAGE

LSSP demands 13th Amendment be implemented
 

 

தோழர் றொபேட்
50வது பிறந்தநாள் நினைவு
 

மார்கழி 13
ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல்
khh;fop 13

<gpMh;vy;vt; kPJ jhf;Fjy;

 

Appeal to the leaders of  Political Parties and the People of  Tamil Naad 14 October 2008

 

 

 

மட்டக்களப்பு மாவட்ட உள்ள+ராட்சி தேர்தல்கள்- 2008
 

வாக்களிப்பு மற்றும் கட்சிகளுக்குக் கிடைத்த ஆசனங்கள்
 

மட்டக்களப்பு மாநகர மேயர் பத்மினி 13.03.2008 அன்று அளித்த செவ்வி
 

 

கிழக்கு மாகாணசபை தேர்தல் ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் வழங்கிய (14.03.2008) செவ்வி

 

 

 
     
 

 'ehk; kf;fSf;fhfg; NghuhLtnjd;gJ vk;kPJ Rkj;jg;gl;l flikNa jtpu vkf;F toq;fg;gl;l mjpfhuky;y"  Njhoh; f.gj;kehgh